புதன், 30 நவம்பர், 2016

பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்த வீட்டில் மகன் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை: டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ. 30 டில்லியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அம் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

பெற்றோர்களுடன் தங்கு வதற்குசட்டப்படியானஉரிமை இல்லை என்ற கீழமை நீதிமன் றத்தின் உத்தரவை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய் துள்ளனர்.

முன்னதாக, டில்லியைச் சேர்ந்த இணையர் கீழமை நீதிமன்றத்தில் தங்களுடைய மகன்கள் மற்றும் மருமகள்கள் மிகவும் சுமையாக இருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தனர். தாங்கள் சம்பாதித்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற் றுமாறு அந்த மனுவில் தெரி வித்து இருந்தனர். அதற்கு முன்பு காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித் திருந்தனர்.

இந்தவழக்கில்ஆஜரான மகன்கள்மற்றும்மருமகள் கள் தாங்களும் பெற்றோர் கள் வீட்டின் பங்கு உரிமை யாளர்கள்தான் என்று வாதிட் டனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்து பெற்றோர்களுடன் தங்குவதற்கு சட்டப்படியான உரிமை இல்லை என்று கூறி விட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மகன்கள் மற்றும் மருமகள்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா ரானி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் தன்னுடைய தீர்ப் பில் நீதிபதி கூறியதாவது:-

பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்த வீட்டில் மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும், இல்லை என்றாலும் சட்டப்படி அங்கு தங்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. பெற் றோர்கள் கருணையின் அடிப் படையில் அனுமதிக்கும் காலம்வரை அந்த வீட்டில் மகன் இருக்கலாம்.

மகன் உடனான உறவு சுமூகமாக இருக்கும் வரை பெற்றோர்கள் மகனை வீட்டில் இருக்க அனுமதிக்கலாம். இறுதி வரை பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு நீதிபதி தெரி வித்தார்
-விடுதலை,30.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக