செவ்வாய், 1 நவம்பர், 2016

விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி

ரூ.350 ஆக நிர்ணயம்
மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி, அக்.29 மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விவசாய கூலி தொழிலா ளர்களின் (சி பிரிவு) தினக்கூலி ரூ.350 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
இது சர்வதேச அடிப்படையிலானது. இது விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசாக அமைகிறது” என கூறினார்..
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிக்கை, நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அனைத்து பிரிவிலான தொழிலாளர்களின் தினக்கூலி ரூ.160 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மேலும் கூறியதாவது:-
சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்துவதற்கான மசோதா கொண்டு வரப்படும். அதற்கு முன்பாகவே சர்வதேச அளவிலான குறைந்தபட்ச கூலியை அமல்படுத்து மாறு அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை கூறப்படும். அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவு பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் எனது தலைமையில் அமைக்கப் பட்டுள்ள குழு கவனித்து வருகிறது. நாங்கள் சந்தித்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்தோம். அதில்தான், ஒரு குழுவை நியமிக்க முடிவு எடுத்தோம். அந்த அடிப்படையில்தான் இப் போது குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை செயலாளர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் ஆகியோரை கொண்டுள்ள குழு, தனது அறிக்கையை தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலாளரிடம் வழங்கும். அவர் அதன் பேரில் தனது பரிந்து ரைகளை அரசுக்கு வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,29.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக