திங்கள், 18 பிப்ரவரி, 2019

கணவன் - மனைவி பிரிய 6 மாதம் காத்திருக்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கணவன் - மனைவி இருவரும் நண்பர்களாக பிரிய 6 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை 'என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாங்ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவருக்கும் அவரது கணவர் அனுபம் மாத்தூருக்கும் இடையே விவாகரத்து வழக்கு ஆனந்த் தலைமை நீதித்துறை நடுவர் முன்பாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், புதுடில்லி துவாரகா நீதிமன்றத்தில் தொடரப் பட்ட இன்னொரு மனுவை ஆனந்த் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆகாங்ஷா கூறியிருந்தார். இந்த மனுவின் ஒரு பகுதியாக தனக்கும் தன் கணவருக்கும் இடையே சுமுகமாக பிரிவது குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளபோதே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே சுமூக பிரிவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் இணைந்து மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் நன்கு படித்தவர்கள். இருவரிடமும் நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம்.

அவர்கள் இருவரும் நண்பர்களாக பிரிவது என்று நல்ல சுயசிந்தனையுடன் முடிவு எடுத்துள்ளதை அறிகிறோம். இந்நிலையில், இந்து திருமணச் சட்டம், பிரிவு 13(பி)-யின் படி அவர்கள் விவாகரத்திற்காக 6 மாதங்கள் காத்திருப்பது தேவையற்றது. எனவே, இந்த காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப் படுகிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப்படுகிறது. இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை ஆகாங்ஷா பெற்றுக் கொண்டார். இருவர் மீதும் உள்ள துவாரகா நீதிமன்ற வழக்கு மற்றும் ஆனந்த் நீதிமன்ற வழக்குகள் ரத்து செய்யப்படு கின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், 6 மாத காத்திருப்பு தேவையில்லை என்று நீதிமன்றம் கருதினால், அதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது புதிய தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- நன்றி: சட்டக்கதிர், ஜனவரி 2019
- விடுதலை ஞாயிறு மலர், 16.2.19

புதன், 6 பிப்ரவரி, 2019

சபாஷ் சரியான தீர்ப்பு: தேர்வுகளில் தவறான விடைகளுக்காக மதிப்பெண்களைக் குறைக்கக்கூடாது: நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி உத்தரவு கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வாதிட்ட வழக்கில் வெற்றி

சென்னை, பிப்.4 கலக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் நெல்சன் பிரபாகரன் கடந்த 2013ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப் படிப்புக்காக அய்.அய்.டி.யில்  நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தேர்வெழுதினார். முதன்மைத் தேர்வில் 50 மதிப்பெண் கள் பெற்றால் தேர்ச்சி என்கிற நிலையில், மாணவன் நெல்சன் பிரபாகரன் 47 மட் டுமே பெற்றதாக குறிப்பிட்டு, முதன் மைத் தேர்வில் பங்குபெற்ற நிலையில், அட்வான்ஸ்டு தேர்வில் அவரைத் தேர்வு செய்யவில்லை. அவர் முதன்மைத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

அதுகுறித்து நெல்சன் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் தான் எழுதிய எழுத்துத் தேர்வின் விடைத்தாளை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

நீதிபதிகே.கே.சசீதரன்30.5.2013 தேதியிட்ட உத்தரவில் தேர்வெழுதுவ தற்கு  மாணவன் நெல்சன் பிரபாகரனுக்கு  அனுமதி அளிக்கவில்லை.

2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை 2018இல் நீதிமன்றத்தில்வந்தது.அப்போது,மாண வர்நெல்சன்பிரபாகரனின்விடைத் தாள்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட் டன. அதன்படி, அம்மாணவன் சரியான விடைகளை எழுதி பெற்ற மதிப்பெண்கள் 72 என்றும், தவறான பதில்களுக்காக நெகட்டிவ் மதிப்பெண்கள் என்று தவறாக அளிக்கப்பட்ட பதில்களுக்கு குறைக்கப்பட்ட மதிப்பெண்களின் எண் ணிக்கை  25 என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் வாதிட்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி நெகட்டிவ்  மதிப் பெண்கள் முறை சட்டப்படி கிடையாது  என்றும், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள் ளிட்ட வளர்ந்த நாடுகளிலெல்லாம் இதுபோன்று நெகட்டிவ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதற்கான ஆதா ரங்கள் கிடையாது என்றும், இளம் மாணவர்களைஅடக்குமுறைக்குஉள் ளாக்கும்வகையில் இதுபோன்ற நெகட் டிவ்மதிப்பெண்முறை மிகவும்கொடுங் கோன்மையுடன் உள்ளது என்று குறிப் பிட்டார்.

சிபிஎஸ்இ தரப்பில் வழக்குரைஞர் ஜி.நாகராஜன் வழக்கில் நெகட்டிவ் மதிப் பெண் முறையை ஆதரித்து வாதிட்டார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பில் கூறுகையில், சிபிஎஸ்இ அல்லது தேர்வு நடத்துகின்ற எந்த அமைப்பாக இருந்தாலும் நெகட்டிவ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

- விடுதலை நாளேடு, 4.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க தாமதித்தால் அபராதம் மாநில தகவல் ஆணையர்கள் தகவல்

வேலூர், பிப்.1  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதாரர் கோரும் கேள்விக்கு பதில் அளிக்க தாமதிக்கும்,  தவறான தகவல்கள் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதாக மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரதாப் குமார், எஸ்.டி.தமிழ்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து அரசுத் துறைகளிலும், சார்நிலை அலுவலகங்களிலும் தகவல்கள் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரதாப்குமார், எஸ்.டி.தமிழ்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்து பேசியது: இந்திய ஜனநாயக நாட்டில் அனைவரும் பல்வேறு அரசு துறைகளில் தேவைப்படும் பதில்களைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண தகவல் அறியும் உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. தகவல் அறியும் உரிமை சட் டத்தில் மனுதாரர் கோரும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு பொது தகவல் அலு வலர்கள் காலம் தாழ்த்தாமலும், ஒளிவு மறைவின்றியும் பதில் வழங்க வேண்டும். மனுதாரருக்கு பதில்களை வழங்குவதில் அலைக்களிப்பு செய்யக் கூடாது.

மேலும், மனுதாரருக்கு பொது தகவல் அலுவலர்களின் பதில்கள் அதிக பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், அத்தனை பக்கங்களையும் கட்டாயமாக வழங்க வேண்டும். பொது தகவல் அலுவலர்கள் தன்னிடம் தகவல் இல்லை என்றால் தகவல் இருக்கும் அதிகார அமைப்புக்கு மனு பெற்ற 5 நாள்களுக்குள்  அனுப்பி வைக்க வேண்டும்.

தகவல்களை தவறானதாகவும், காலம் தாழ்த்துவதும் இருக்கும்பட்சத்தில் பொது தகவல் அலுவலருக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் விதி உள்ளது.  எனவே, பொது தகவல் அலுவ லர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான நேரத்திலும், உண்மையான தகவல்களை யும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றனர்.
-  விடுதலை நாளேடு, 1.2.19