ஞாயிறு, 12 ஜூன், 2016

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்


மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்
லக்னோ, ஜூன் 12 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து மதவழிபாட்டு இடங் களையும் அகற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோவின் மொகல்லா தாடா கேரா பகுதியில் பொது வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலாகா பாத் உயர்நீதிமன்றத்தில் 19 பேர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக் கள், லக்னோ உயர்நீதிமன்றத் தில் நீதிபதிகள் சுதீர் அகர்வால், ராகேஷ் சிறீவாஸ்தவா ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், நடமாடுவதற் கான அடிப்படை உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமை, பொது இடத்தில் விதிமுறைகளை மீறும் சிலரால் பாதிக்கப்படு வதை அனுமதிக்க முடியாது.
ஆகையால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக் குப் பிறகு, பொதுச் சாலை களிலோ அல்லது நடைபாதை களிலோ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட அனைத்து மத வழிபாட்டு இடங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள், சாலைகளைப் பராமரிக்கும் துறைகளின் அதிகாரிகள் ஆகி யோருக்கு மாநில அரசு குறிப்பு அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மாநில அரசிடம் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதேசமயம், 2011ஆம் ஆண் டுக்கு முன்பு, மேற்கண்ட இடங் களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மதவழிபாட்டு இடங்களை 6 மாதங்களுக்குள் தனியார் நிலத்துக்கு அப்புறப் படுத்த வேண்டும்; அல்லது அகற்றவேண்டும்.
நெடுஞ்சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சந்துகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன் படுத்தும் சாலைகளில் எந்த வகையிலும் மதவழிபாட்டு இடங்கள் அமைக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறு திப்படுத்த வேண்டும். இதற் காக மாநில அரசு தனித்திட் டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாதது தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக எடுத் துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
-விடுதலை,12.6.16