புதன், 1 செப்டம்பர், 2021

இலங்கை அகதிகள் முகாமை இனிமேல் "மறுவாழ்வு முகாம்" என அழைக்க அரசாணை வெளியீடு


பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,  ஆக. 29 சட்டப்பேரவையில், திருவாரூர் திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் நேற்று (28.8.2021) பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் அவர் களுக்கான அடிப்படைதேவைகள், கல்வி உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பி னர் பேசும்போது, இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று குறிப் பிட்டார். இன்றுமுதல் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் என்று கூறாமல், "மறுவாழ்வு முகாம்" என்று கூற வேண்டும். அவர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல; அவர்க ளுக்கு துணையாக நாம் இருக்கி றோம். எனவே, அகதிகள் முகாம் என்று அழைக்காமல் "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்" என்று அழைக்க வேண்டும்என்று அர சாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம், வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கடலூர் தொகுதி திமுக உறுப்பினர் அய் யப்பன் பேசும்போது, முதலமைச் சர் உள்ளிட்டவர்களை பாராட் டினார்.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறுக்கிட்டு, உறுப்பினர் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மனதில் வைத்துக்கெண்டு பேச வேண்டும். நேற்று (28.8.2021)கூட புகழ்ந்து பேசுவதை ஓரளவு குறை வாக வைத்துக் கெள்ளுங்கள் என்றுகட்டளையாகவே கூறியிருக் கிறேன். இப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். அதனால் தயவுசெய்து விவாதத்துக்கு செல்லுங்கள். விரை வாகப் பேசி முடியுங்கள் என்று கேட்டுக் கெண்டார்.