வியாழன், 30 ஜூலை, 2015

மணமான பிறகும் மனைவியுடன் கட்டாய உடலுறவு குற்றமே! நீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஜூலை 17_ டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மணமான பின் னர் மனைவியுடன் கட் டாய உறவு கொள்ளும் பாலியல் வன்செயலைக் குற்றமாக அறிவித்திட வேண்டும் என்று கோரப் பட்டது.
அவ்வழக்கில் மனைவி யிடம் பாலியல் வன்செய லில் ஈடுபடும் கணவன்மீது இந்திய தண்டனைச் சட் டத்தின்படி குற்றமாகக் கருதி தண்டனை அளிக் கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது
தன்னைவிட வயதில் குறைவான மனைவியிடம் உறவு கொள்வதை பாலி யல் வன்செயலாகக் கருதிட முடியாது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாது ரையில் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் ஜயந்த் நாத் ஆகியோர் கூறுகையில், இந்தப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையே இவ்வழக் கிலும் தொடருகிறது. ஆகவே, இவ்வழக்கினுள் நாங்கள் நுழைய விரும்ப வில்லை. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது போன்றே இப்போது இம் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப்பாலியல் வன் கொடுமைகுறித்த வழக்கைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு திருத்தப் பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375இன்கீழ் விதிவிலக்கினை அளிப்ப தற்கானத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து ரிட் பவுண் டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுநல வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. அம்மனுவில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 15வயதுக்கு மேற்பட்ட மனைவியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் கணவனைக் காப்பதாகவே உள்ளது. இது அரசமைப் புக்கு விரோதமானது. அரசமைப்பின் பிரிவு 14இன்கீழ் மணமான ஒரு பெண்ணுக்கு உறுதி அளிக் கப்பட்டுள்ள சம உரிமை யினை மீறுவதாக இருக் கிறது. பாலியல் வன்செயல் களில் அரசமைப்பு பாகு பாடுகளைக் கொண்டுள் ளதாக இருக்கக் கூடாது. பாதிக்கப்படுபவர் மண மான மனைவி என்பதா லேயே கணவன் தப்பிக்கக் கூடாது.
மத்திய அரசின்சார்பில் வாதுரைத்த அரசு வழக் குரைஞர் சஞ்சய் ஜெயின் கூறும்போது, இதே போன்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் மண மானபின்னர் தம்பதியரில் கட்டாயமான உறவுகொள் வது என்கிற பாலியல் வன்செயல் குற்றமே என்று குறிப்பிட்ட ஜெ.எஸ். வர்மா குழுவின் பரிந் துரை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள்குறித்து விசா ரணை மேற்கொள்வதற் காக வெர்மா குழு அமைக் கப்பட்டது.
மணமான பின்னர் பாலியல் வன்செயல் என்பதைக் குற்றம் என்று அமெரிக்க அய்க்கிய நாடு கள், அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா மற்றும் கனடா உள்-ளிட்ட பல்வேறு நாடு களில் பன்னாட்டளவில்  குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரின் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டது.

-விடுதலை,17.7.15

.

புதன், 29 ஜூலை, 2015

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை
உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 8_ பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப் பதை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு  பிறப் பித்துள்ளது. இது தொடர் பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசு களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில்  கூறப்பட்டுள்ளதாவது: திருமண உறவைத் தாண்டியும் சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர்.
அல்லது சில பெண்கள் தாங்கள் மட்டுமே குழந் தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது. அதனால் தாயின் அடை யாளம் கண்டிப்பாக தெரியும்.  சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை சேர்க்க தாய் விரும்பாமல் இருக்கலாம்.
இதுபோன்ற  கார ணங்களால் ஒரு குழந்தை யின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பி டப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. சட்டங்கள் மிகவும் வலு வானவை, அடிப்படையா னவை. அதே நேரத்தில் மாறி வரும் காலசூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை. நாட்டில்  பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப் பட வேண்டும்.
எந்தக் கார ணம் கொண்டும் பிறப்பை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது. இதை  அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். குழந் தையின் பிறப்பு சான்றித ழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று  கட்டாயப்படுத்தக் கூடாது. அது அக்குழந்தையின் தாயின் விருப்பமாகவே இருக்க வேண்டும். இவ் வாறு உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
-விடுதலை,8.7.15

சனி, 25 ஜூலை, 2015

33ஆயிரம் கோடி கடவுள்கள்- உச்ச நீதி மன்றம் கருத்து



-தினத்தந்தி,25.7.15

கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு



சென்னை, ஜூலை 24- கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை யிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.சந்தோஷ் யாதவ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டப்படிப்பை முடித்து விட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக் குரைஞராக பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் விண்ணப்பம் செய்தேன். ஆனால் என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் கொடும்பாவி எரித்த வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணம் கூறி என் விண்ணப்பத்தை பார் கவுன்சில் நிராகரித்துவிட்டது. ஆகை யால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-இன் கீழ் மனுதாரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, தீ மற்றும் எரிபொருட் கள் மூலம் பொதுமக்களுக்கு காயத்தை உருவாக்குதல் அல்லது அபாயத்தை ஏற்படுத்தல் குற்றம் என்று கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை கவனத்துடன் பரிசீலிக்கும்போது, கொடும்பாவியை எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்பது தெளி வாகிறது. எனவே கொடும்பாவி எரிப்பதற்கு தண்டனை எதுவும் இல்லாததால், தீ மற்றும் எரிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு காயம், அபாயம் ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கொடும்பாவி எரிப்பது என்பது இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, கொடும்பாவி எரிப்பது என்பது சட்டப்படி குற்றம் இல்லை. அதனால், மனுதாரர் மீதான வழக்கின் அடிப்படையில் அவர் குற்றப் பின்னணி கொண்ட நபர் என்று கூற முடியாது. இந்த மனுவை ஏற்றுக் கொள்கிறோம். அவரது விண்ணப் பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள் ளனர்.
-விடுதலை,24.7.15

திங்கள், 20 ஜூலை, 2015

பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு

பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயதுக் குழந்தையின் திருமணத்தை பன்வாரி தடுத்து நிறுத்தினார். அந்த ஆசாமியோ அந்தப் பகுதியில் பிரபலமானவர், விளைவு, பன்வாரி தன் கணவரின் எதிரிலேயே கொடுரமான முறையில் அய்ந்து கொடியவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். (1992  செப்டம்பர்). பி.ஜே.பி. ஆட்சி இதனைக் கண்டுகொள்ளவேயில்லை. கடும் எதிர்ப்புக் கிளர்ந்து எழுந்த பிறகே அய்ந்து மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய்யப்-பட்டனர். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பன்வாரி கிராமத்திலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதோ 1994 அக்டோபரில். டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சொன்னது என்ன தெரியுமா? பான்வாரியை  உயர்ஜாதி பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? என்பதுதான் அந்தக் கேள்வி. வழக்கு தள்ளுபடியும் செய்யப்-பட்டது. (Economic Political Weekly 25.11.1995)
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (10.1.1996)

வெள்ளி, 10 ஜூலை, 2015

அறிவோம் சட்டம் - (4) மணக்கொடை (வரதட்சணை) தடுப்புச் சட்டம், 1961



விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர். அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள். 
4. மணக்கொடை (வரதட்சணை) தடுப்புச் சட்டம், 1961
மணக்கொடை கொடுப்பதையோ, வாங்குவதையோ தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. மணக்கொடை என்பது திருமணம் தொடர்பாக தரப்படும் சொத்து அல்லது மதிப்பு மிக்க கடனீட்டு ஆவணங்கள் ஆகும், ஆனால் பரம்பரை பரம்பரையாக மணமகளின் பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ திருமணத்தின்போது அளிக்கும் அன்பளிப்புகள் மணக்கொடை என கருத முடியாது. முகம்மதியர் கொடுக்கும் டோவர் அல்லது மஹர் மணக்கொடை ஆகாது.
யாரேனும் ஊடகங்களின் வாயிலாகவோ அல்லது மணமகள் உறவினர் வேறு வகையிலோ, திருமணத்திற்காக சொத்தோ அல்லது பணமோ கேட்டு விளம்பரம் செய்தால் ஆறுமாதத்திலிருந்து அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து தண்டனைக்குள்ளாவார்கள். அவ்வாறு விளம்பரம் செய்தது தண்டனைக்குரிய குற்றமாகும். மணக்கொடை தர அல்லது பெற ஏதேனும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் சட்டத்தின் பார்வையில் அது செல்லாததாகும். எனவே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மணக்கொடையாக கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பித்தரக்கோரி வழக்குப் போட முடியாது. திருமணம் நடைபெறவில்லையென்றாலும் கூட அப்பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
மணக்கொடையாக பெறப்பட்ட பணத்தை வாங்கிய நாளிலிருந்து அல்லது திருமண நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வாங்கியவர் மணப்பெண்ணிடம் தந்து விட வேண்டும். மணக்கொடை என்பது மணப்பெண் அல்லது அவளது வாரிசுகளின் நலனுக்காகத்தான் இருக்க வேண்டும்., அவ்வாறு திருப்பித்தராவிட்டால் சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டனைக்குள்ளாக நேரிடும். அவ்வாறு தண்டனை அளிக்கப்பட்ட பின்னரும் கூட மணக்கொடை பொருட்களை கேடடு உரிமையியல் வழக்கு தொடரலாம். அவ்வாறு மணக்கொடையை திரும்பப் பெற உரிமையுள்ள மணப்பெண்.
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான முறையில் இறக்க நேரிட்டால், மணக்கொடை அவளின் குழந்தைகளுக்கோ குழந்தைகள் இல்லையென்றால் அவளின் பெற்றோருக்கோ அளிக்கப்படவேண்டும். மணக்கொடை பெற்றதாக அல்லது அதற்குத் துண்டியதாக எவர்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டால் அந்த நபர், தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டவராவார்.
மணக்கொடை தடுப்புச் சட்டம் 1961-ல் இயற்றப்பட்டாலும் கூட அதன் பின்னரும், கணவனாலும், அவனது உறவினராலும் பெண்ணுக்கு வன்கொடுமைகள் அதிகரித்த தாலும், பரிதாபத்திற்குரிய பெண்கள் தற்கொலை செய்ய நேரிட்டதாலும், அவ்வாறான மணக்கொடை மரணங்களை தடுப்பதற்காகவும் கணவனின் உறவினர்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுப்பதற்காகவும், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாடசியச் சட்டம் ஆகியவற்றில் பொருத்தமான திருத்தங்களை அரசு கொண்டு வந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(ஆ) மற்றும் பிரிவு 498 (அ) ஏற்படுத்தப்பட்டது. பிரிவு 304(ஆ) என்பது ஒரு பெண் திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தீக்காயங்கள் அல்லது உடலில் காயங்கள் ஏற்பட்டு அசாதாரணமான சூழலில் இறக்க நேரிட்டால் அது மணக்கொடையால் ஏற்பட்ட மரணம் எனக் கருதப்படும். கணவன் அல்லது அவனது உறவினர்களால் அம்மரணம் ஏற்பட்டதாகவும் கருதப்படும். இயற்கைக்கு மாறான சூழலில் மரணம் ஏற்பட்டிருந்தாலும் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியமல்ல. தற்கொலையாக இருந்தாலும் கூட அது பிரிவு 306(ஆ)-ன் படி மணக்கொடை மரணம்என்றே கருதப்படும். அப்பிரிவு 1896-இல் புதிதாக இணைக்கப்பட்ட சட்டத்திருத்தமாகும்.
ஒரு கர்ப்பிணிபெண் 100% தீக்காயங்களால் நடு இரவில் கணவன் வீட்டில் எவ்வித அலறல் சத்தமும் இல்லாமல் இறக்க நேரிட்டால் அது தற்கொலையல்ல கொலையே என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு பெண்ணை அவளது மாமியாரோ, நாத்தனாரோ மணக்கொடை குறைவாக கொண்டு வந்ததாகவோ பெண் குழந்தை பெற்றதற்காகவோ அவமானப்படுத்தி தற்கொலைக்குத் துண்டினால் அது மணக்கொடை மரணம் என்றே கருதப்படும்.
ஒரு பெண் மரண வாக்குமூலம் தரும்போது நீதித்துறை நடுவரிடம் வாய் பேச முடியாத நிலையில் தலையசைப்பு மூலமோ செய்கைகளின் மூலமாகவோ, தான் கணவனால் எரிக்கப்பட்டதாகவும் விபத்து அல்ல என்றும் தெரிவித்தால் அந்த மரண வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிரிக்குத் தண்டனை வழங்கலாம்.
அப்பெண்ணின் மரணவாக்குமூலம் தன்னிச்சையாகவும் நம்பும் வகையிலும் இருந்தால், அதனடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும். திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் இயற்கைக்கு மாறான வகையில் தண்ணீரில் மூழ்கியோ, விஷமருந்தியோ, தீக்காயங்களாலோ, துக்கிலிட்டோ, கழுத்து நெரிக்கப்பட்டோ இது போன்ற முறைகளில் இறந்தால் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியமல்ல, அது பிரிவு 304 ஆ-ன் படி மணக்கொடை மரணம் என்றே கருதப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (அ) என்பது 1983-இல் செய்யப்பட்ட சட்டத்திருத்தமாகும்.
இப்பிரிவின்படி ஒரு பெண்ணை அவளது கணவரோ அல்லது கணவரின் உறவினரோ மணக்கொடை தொடர்பாக வன்கொடுமை செய்தால் அவர்கள் மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.
குடிபோதையில் இருப்பது, தாமதமாக வீட்டிற்கு வருவது போன்ற பழக்கங்களோடு, மனைவியை அடிப்பதும் மணக்கொடை கேட்பதும் வன்கொடுமையாகும்.
ஆனால் கணவன் குடிப்பழக்கம் உள்ளவர் மற்றும் தாமதமாக வீட்டிற்கு வருபவர் என்பது மட்டுமே வன்கொடுமை ஆகாது. கணவர் அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்யத் தூண்டினார் அல்லது மணக்கொடைக்காக வற்புறுத்தினார் என்பதை குற்ற முறையிடுவோர் தெளிவாக நிரூபிக்க வேண்டும். திருமணம் ஆகாமலேயே ஒரு ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் இது போன்ற வன்கொடுமையோ துன்புறுத்தலோ ஏற்பட்டால் பிரிவு 304(ஆ) இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம்.
வன்கொடுமைக்கோ, துன்புறுத்தலுக்கோ, ஆளான பெண் தன் கணவனோடு இணைந்தபின் புகாரைத் திரும்பப் பெற்று சமரசமாகப் போவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கலாம். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (அ) தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்துகிற சந்தர்ப்பங்களும் உண்டு. பிரிவு 498(அ)-ம் பிரிவு 304(ஆ) தனித்தனியான வேறுபட்ட சட்டப்பிரிவுகளாகும்.
திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஏற்படும் வன்கொடுமை பற்றி இருபிரிவுகளும் விவரித்தாலும், பிரிவு 304(ஆ) பிரிவின் கீழ விடுதலையான நபர் 498(அ) பிரிவின் கீழ் தண்டனை பெற வாய்ப்பு உண்டு. 304(ஆ) பிரிவின் கீழான குற்றசசாட்டிற்கு மணக்கொடை கேட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
 (தொடரும்)

அறிவோம் சட்டம் (2) - பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான வழமுறைகள்




விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்றவைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.
2. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான வழமுறைகள்
இதற்கான சட்ட விதிகள் தமிழ்நாடு நகர காவல் சட்டம் (1888) காவல் சட்டம் (1861) மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் (1859) ஆகிய சட்டங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. தமிழ்நாடு நகர காவல் சட்டம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி,
போன்ற பெருநகரங் களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அந்தப் பெருநகரங்களில் உள்ள காவல்துறை ஆணையர்களுக்கு கூட்டங்கள் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்துகின்ற அதிகாரம் பிரிவு 41 தமிழ்நாடு நகர காவல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகளும் உண்டு.
ஆணையரின் உத்தரவுப்படி மேற்கண்ட அதிகாரத்தை தலைமைக் காவலர் தகுதிக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தலாம். கூட்டங்கள், ஊர்வலங்கள். ஆர்ப்பாட்டங்களுக்கு பொது அமைதி, பாதுகாப்பு கருதி காவல்துறை ஆணையர் தடை விதிக்கலாம். அத்தகைய தடை அரசின் அனுமதியின்றி 15 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.
அத்தகைய தடை நடைமுறையில் உள்ள காலத்தில் யாரேனும் கூட்டங்கள், ஊர்வலங்கள், நடத்த விரும் பினால் 5 நாட்களுக்கு முன்பாக ஆணையரிடம் விண்ணப்பம் தர வேண்டும். பொது அமைதி பொது பாதுகாப்பு ஆகியவற்றை உடனடியாக கட்டிக் காக்க வேண்டும் என்கிற அவசியம் இருந்தால் ஆணையர் அனுமதி மறுக்கலாம்.
ஆனால், அவ்வாறு அனுமதி மறுப்பதற்கு முன் விண்ணப்பதாரரையோ அல்லது அவரது வழக்கறிஞரையோ அழைத்து அனுமதி ஏன் மறுக்க கூடாது என்பதற்கான காரணங்களை கேட்டு அதன் பின் எழுத்து பூர்வமான அனுமதி மறுப்பு உததரவை பிறப்பிக்க வேண்டும்.
ஆணையரின் தடையாணை நடைமுறையில் இருந்தால் மட்டுமே கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவேண்டும் என்பதும், தடையாணை இல்லாத காலங்களில் அது போனறு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும்.
ஆனால் ஊர்வலங்கள் நடத்த விரும்பினால் 24 மணி நேரத்திற்கு முன் தலைமைக் காவலர் தகுதிக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரியிடம் ஊர்வலப் பாதை, நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும். அனுமதி கோர வேண்டியதில்லை. ஊர்வலம் தொடங்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தான் மேற்கூறிய அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
ஆணையர் அத்தகைய கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை கண்காணித்து அறிக்கை தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றாமல், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை மீறினால் ஆயிரம் ரூபாய் வரை அபரா தமோ ஒருமாதம் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டனைக்குள்ளாக நேரிடும்.
மேற்கண்ட விதிகள் மதம், விளையாட்டு திருமணம், இறப்பு நிகழ்ச்சி அல்லது இல்ல நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது. சட்டபூர்வமான நிறுவனங்கள் அல்லது மாநில அரசால் விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங் களுக்கும் மேற்கண்ட விதிகள் பொருந்தாது.
அதோடு மாநகரங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள நகரங்கள், ஊர்களுக்கு மேற்கண்ட சட்டபபிரிவுகள் பொருந்தாது. தமிழ்நாடு மாவட்ட சட்டம், 1859 தான் பொருந்தும். மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள். ஊர்வலங்கள் நடத்த மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
துணைக் கண்காணிப் பாளர் தகுதிக்கு குறையாத காவல்துறை அதிகாரி, பொது நலன்கருதி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அனுப்புவார்.
மதம், விளையாட்டு, திருமணம், இறப்பு நிகழ்ச்சி அல்லது இல்ல நிகழ்ச்சி களுக்கும், சட்டபூர்வமான நிறுவனங்கள் மற்றும் மாநில அரசால் விதிவிலக்கு பெற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளை அனுப்ப வேண்டியதில்லை.
கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் அல்லது சார்பு கோட்ட நிர்வாக நடுவர் கூட்டங்கள், ஊர்வலங்கள் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தால் சட்டம் ஒழுஙகு கெடும் என்று கருத்துரை, வழங்கியிருந்தால் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அல்லது அவருக்கு மேல் நிலை அதிகாரி கூடடங்கள் ஊர்வலங்கள் நடத்து வோருக்கு அறிவிப்பு அனுப்பி மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு உரிமம் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தலாம். (காவல்துறை நிலையாணை 702 மற்றும் (மத்திய அரசு) காவல் சட்டம் 1861, பிரிவு 30)
இந்தச் சட்டங்கள் எல்லாம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1859, 1861, 1858 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆடசிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்டவை. நமது தேசம் 1947-இல் சுதந்திரம் அடைந்து, அரசியல் சட்டத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை,
எழுத்துரிமை போன்ற உரிமைகள் அடிப்படை உரிமை களாக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் எவ்வித சிந்தனை யுமின்றி மேற்கண்ட காலனி ஆதிக்கச் சட்டங்களை பின்பற்றுவது கேவலத்திற்குரியது. இந்த விசயம்பற்றி உரத்த சிந்தனைகள் உருவாகவேண்டும்.
(தொடரும்)



    அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்




    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.

    அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.

    கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்றவைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவர்கள்.

    1. தகவல் அறியும் உரிமைச் சட்டம்

    இந்தச் சட்டம் 15.06.2005 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    இந்தியா மக்களாட்சிக் குடியரசு நாடாக இருப்பதாலும் ஆட்சி அதிகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழலை கட்டுப்படுத்தி அரசும், அரசு எந்திரங்களும் குடிமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதாலும், நடைமுறையில் உள்ள சில விவரங்கள் மற்ற பொது நலன்கள் திறமையான ஆட்சி,

    போதுமான நிதி ஆதாரங்கள் மற்றும் உணர்வு பூர்வ தகவல்களின் ரகசியக் காப்பு ஆகியவைகளோடு முரண்படக் கூடியது என்பதாலும், முரண்பட்ட நலன் களை கட்டுப்படுத்துவதோடு, மக்களாட்சிக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

    இச்சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனும் தகவல் அறியும் உரிமையைப் பெறுகிறார். அதனால், ஒவ்வொரு பொது அதிகாரியும் தகவல் அளிக்கவேண்டும். தகவல் பெற விரும்பும் ஒவ்வொருவரும் எழுத்துமூலமாக அல்லது மின்னணு மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்.

    அந்தந்த வட்டார மொழியிலோ, ஆங்கிலத்திலோ இந்தியிலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.10/- மற்றும் பக்கத்திற்கு 2 ரூபாயும் ஆய்வுக்கட்டணம் செலுத்தப்பட வேண்டும். 

    என்ன காரணத்திற்காக தகவல் தேவைப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டிய தில்லை. எழுத்துமூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலரிடம் வாய்மொழியாக விண்ணப்பிக்கலாம். அவர் அதை எழுத்து வடிவில் உருவாக்க உதவி செய்வார்.

    தகவல் கோரி விண்ணப்பம் அளித்த நாளிலிருந்து 30 நாள்களுக்குள் பொது தகவல் அலுவலர் தகவல் தர வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, இராணுவ ரகசியம் அரசின் அறிவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வெளிநாட்டு உறவு, ஆகியவைகளைப் பாதிக்கிற அல்லது குற்றத்தை  தூண்டுகிற விபரத்தை பொது தகவல் அலு வலர் தெரிவிக்க கடமைப்பட்டவரல்ல, நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட அல்லது நீதிமன்ற அவமதிப்புக் குள்ளாகின்ற விவரங்களை தெரிவிக்கவும் அவர் கடமைப்பட்டவரல்ல.

    நாடாளுமன்ற சட்டமன்ற உரிமைகளை பாதிக்கின்ற விவரங்களையும் தர வேண்டியதில்லை. பொது நலன் பெரிதும் உள்ளது என்ற காரணம் இருந்தாலொழிய மற்ற சூழ்நிலைகளில் வியாபார நம்பிக்கை, தொழில் ரகசியம் அல்லது அறிவுசார் சொத்து பற்றிய தகவலை அளிக்கவேண்டியதில்லை.

    வெளி நாட்டிலிருந்து நம்பிக்கையில் கிடைக்கப் பெற்ற தகவல் மற்றவருடைய உடலுக்கான பாதுகாப்பை பாதிக்கக்கூடிய தகவல், புலன் விசாரணையை பாதிக்கின்ற தகவல், அமைச்சரவை ஆவணங்கள் மற்றும் பொது நடவடிக்கை உரிமை ஆகியவற்றிற்கு தொடர்பு இல்லாத தகவல்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை.

    அதோடு தகவல்களைத் தான் கேட்டுப் பெறமுடியுமே தவிர ''விளக்கங்களை'' கேட்டு பெற முடியாது. தகவல் கோரி விண்ணப்பம் அனுப்பி 30 நாள்களுக்குள் பதில் வரவில்லையென் றாலோ, அல்லது தகவல் தர மறுத்து உத்தரவு பிறப்பிக் கப்பட்டாலோ அந்த நாளிலிருந்து 30 நாள்களுக்குள் பொது தகவல் அலுவலருக்கு மூத்த அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

    அந்த முறையீட்டிலும் தகவல் கிடைக்காவிட்டால் 90 நாள்களுக்குள் மத்திய தகவல் ஆணையம் அல்லது மாநில தலைமை ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இந்த ஆணையங்களின் முடிவே இறுதியானது. பொது தகவல் அலுவலர். போதிய காரணமன்றி தகவல் தர மறுத்தால் அல்லது தவறான தகவல் தந்தால் தகவல் ஆணையம் அந்த அலுவலருக்கு ஒரு நாளுக்கு ரூ.250/- வீதம் ரூ.25000/-க்கு மிகாமல் அபராதம் விதிக்கலாம்.

    இந்தச் சட்டத்தின் பிரிவுகள் கீழ்க்கண்ட அமைப்பு களுக்குப் பொருந்தாது.

    1. Intelligence Bureau
    2. Research and Analysis Wing of the Cabinet Secretariat.
    3. Directorate of Revenue Intelligence Bureau.
    4. Central Economic Intelligence Bureau.
    5. Directorate of Enforcement.
    6. Narcotics Control Bureau.
    7. Aviation Research Centre of the Cabinet Secretariat.
    8. Special Frontier Force of the Cabinet Secretariat.
    9. Border Security Force.
    10. Central Reserve Police Force.
    11. Indo-Tibetan Border Police.
    12. Central Industrial Security Force
    13. National Security Guards
    14. Assam Rifles
    15. Sashtra Seema Bal.
    16. Directorate General of Income-tax (Investigation)
    17. National Technical Research Organisation
    18. Financial Intelligence Unit, India.
    19. Special Protection Group.
    20. Defence Research and Development Organisation
    21. Border Road Development Board.
    22. National Security Council Secretariat.
    23. Central Bureau of Investigation
    24. National Investigation Agency.
    25. National Intelligence Grid.

    - தொடரும்

    ஞாயிறு, 5 ஜூலை, 2015

    அறிவோம் சட்டம் -(3) பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்



    விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
    அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது. கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.
    3. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்
    பெண்களின் பாதுகாப்புக்காக தனிச்சட்டங்கள் பல உள்ளன என்பதையும் பிற சட்டங்கள் பலவற்றில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், பல சட்டப்பிரிவுகள் உள்ளன என்பதை பொதுவாக  நாம் அனைவரும் குறிப்பாக பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தனிச்சட்டங்கள் இயற்ற, அரசியல் சட்டப்பிரிவு 15(3) வகை செய்கிறது, அதனடிப் படையில் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், முன்னேற்றத் திற்காகவும் கீழ்க்கண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன.
    1. குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாது காத்தல் சட்டம், 2005,
    2. வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961
    3. The Immoral Traffic (prevention) Act
    4. Muslim Women Protection of Rights on Divorce Act 1986
    5. Family Couts Act 1984
    6. National commission for Women Act 1990
    7. Commission of Sati (prevention) Act 1987
    8. Human Rights Act 1993
    9. Women's Rights to property Act 1937.
    10. The Divorce Act 1869.

    இந்த சட்டங்கள் தவிர அரசியல் சட்டம், திருமணம் சட்டம், வாரிசு சட்டம், சுவிகாரச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சாட்டம், கருக்கலைப்பு சட்டம், தொழிற்சாலைகள் சட்டம், பணியாளர் காப்பீட்டுச் சட்டம், போன்ற பல சட்டங்களிலும், பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. இனி ஒவ்வொரு சட்டங்களையும் தனித்தனியாக பார்ப்போம்.
    1) குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம் - 2005 ஒரு பெண்ணுடைய உடல் நலம், பாதுகாப்பு, உயிர், உடல், உறுப்பு அல்லது நல வாழ்வுக்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஊறு விளைவித்தல் அல்லது காயப்படுத்துதல் அல்லது அவ்வாறு செய்ய முயற்சித்தல், தகாத உடலுறுப்பு உணர்வுகளைப் புண்படுத்துதல், பொருளாதார ஊறு விளைவித்தல் அல்லது மதிப்புமிக்க காப்பீட்டு ஆவணங்களைப் பெறும் நோக்கத்தில் ஒரு பெண்ணை அல்லது அவரது உறவினரை மிரட்டும் வகையில் துன்புறத்துதல், தீங்கு செய்தல், காயம் ஏற்படுத்துதல் அல்லது பயமுறுத்துதல் ஆகியவை குடும்ப வன்முறையாகும்.
    மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான பாதுகாப்பு அலுவலர்களை பணியமர்த்தும். அவர்கள் கூடுமானவரையில் பெண்களாக இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணுக்கு குடும்ப வன்முறை செய்யப்பட்டால் அவர் இந்தப் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தரவேண்டும். அந்த தகவலைப் பெற்ற அலுவலர் ஒரு அறிக்கையினை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் அனுப்ப வேண்டும்.
    பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தின் பேரில் ஒரு பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து அதன் விவரங் களை குற்றவியல் நடுவருக்கும் காவல் நிலையத்திற்கும் பாதுகாப்பு அலுவலர் அறிக்கை தரவேண்டும். அப் பெண் ணுக்கு தேவையான மருத்துவப் பரிசோதனையும் அந்த அலுவலர் செய்வார்.
    இந்த பாதுகாப்பு அலுவலர் குற்றவியல் நடுவரின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் பணிபுரிய வேண்டும். இந்தச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட உதவி, மருத்துவம், நிதி மற்றும் இதர உதவிகளைச் செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண் குற்றவியல் நடுவரிடம் புகார் செய்யலாம். அப்புகாரைப் பெற்ற குற்றவியல் நடுவர் விசாரணை நாள்பற்றிய அறிவிப்பை பாதுகாப்பு அலுவலர் மூலமாக எதிர்வாதி மற்றும் பிற நபர்களுக்கு சார்வு செய்ய ஆணையிடலாம், குற்றவியல் நடுவர் இரு தரப்பாரையும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த உறுப்பினரிடம் ஆலோ சனை பெற உத்தரவிடலாம். வழக்கு விசாரணை குற்றவியல் நடுவரின் தனியறையில் நடத்தலாம்.
    குடும்ப உறவு முறையிலுள்ள பெண் ஒருவருக்கு பங்கீடு செய்யப்பட்ட வீட்டில், உரிமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்குவதற்கு உரிமை உண்டு. அவ்வீட்டிலிருந்து அவரை சட்டப்படியில் அல்லாது வெளியேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சீதனம் அடங்கிய சொத்துக் களை உரிமை மாற்றம் செய்ய, வங்கி பாதுகாப்பு பெட்டகங்களை வங்கி கணக்குகளை பயன்படுத்த குற்றவியல் நடுவர் தடை விதிக்கலாம்.
    குடும்ப வன்முறை தொடரவும் தடைவிதிக்கலாம். குடும்ப வன்முறை செய்யாமல் இருக்க எதிர்வாதியிடமிருந்து வாக்குறுதிப் பத்திரம் தருமாறு குற்றவியல் நடுவர் கோரலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உத்தரவிடலாம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குழந்தைக்கும் இழப்பீடு தர எதிர்வாதிக்கு குற்றவியல் நடுவர் உத்தரவிடலாம். இழப்பீடு வழங்க உத்தரவிடும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கைத் தரம், மன உளைச்சல், உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கிய காயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
    இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கவும் குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் உண்டு, குற்றவியல் நடுவரின் ஆணைகளின் நகல்கள், புகார் கொடுத்தவர், எதிர்வாதி, காவல் நிலையம், தொண்டு நிறுவனம் ஆகிய வற்றிற்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு ஆணையை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை எதிர்வாதி மீறினால் ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.
    குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட பாதுகாப்பு ஆணை அல்லது இடைக்கால பாதுகாப்பு ஆணையை நிறைவேற்றத் தவறும் பாதுகாப்பு அலுவலர் ஓராண்டு வரை நீடிக்கக் கூடிய சிறைத்தண்டனை அல்லது இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டனைக்குள்ளாவார்.             (தொடரும்)

    -விடுதலை,21.6.15

    வியாழன், 2 ஜூலை, 2015

    பாலியல் வன்முறை வழக்குகளில் சமரச முயற்சியை ஊக்குவிப்பது சட்ட விரோதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு



    புதுடில்லி, ஜூலை, 2-_ பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரு தரப்பினருக்கு மிடையில் சமரசம் செய்து வைக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவது சட்ட விரோ தமானது என்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
    மத்திய பிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கிய மதன்லால் என்ப வருக்கு கீழ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதற்கு எதி ரான அப்பீல் வழக்கை மத்திய பிரதேச உயர்நீதி மன்றம் விசாரித்தது.
    குற்றவாளிக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் இடையே சமரசம் உருவானது. அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளி என்ற தீர்ப்பையும், 5 ஆண்டு சிறை  தண்டனையையும் நீதிபதி ரத்து செய்தார். சிறுமியை மான பங்கம் செய்த வழக்குக்காக மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.
    இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பிரதேச மாநில அரசு, உச்சநீதிமன் றத்தில் மேல் முறையீடு செய்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத் தில் தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணை நடத்து மாறு உத்தரவிட்டது. குற்றவாளியை கைது செய் யுமாறும் அறிவுறுத்தியது.
    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதா வது: பாலியல் வ கொடுமை புரிந்த குற்றவாளி, பாதிக் கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து வைக்க சமரசம் ஏற்பட்டதை அடுத்து அந்தக் குற்ற வாளியை விடுதலை செய்து உத்தரவு பிறப் பித்து இருப்பது உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள முடி வாகும்.
    பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிரான வழக்குகளில் எவ்வகை யான மென்மையான அணுகுமுறையும் எடுக்க முடியாது. சில உயர் நீதிமன்ற நீதிபதிகளே மென்மை யான அணுகு முறையை கடைபிடிப்பது வேதனை அளிக்கிறது. அப்படி கடை பிடிப்பது, பட்டவர்த்தனமான தவறாகி விடும். பாலியல் வன்கொடுமை குற்றங் களுக்கு எதிரான வழக்கு களில் குற்றவாளி தரப்புக் கும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்கும் சமாதானம்

    -விடுதலை,2.7.15