உடன்படிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடன்படிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூன், 2024

பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

 



 பிப்ரவரி 01-15, 2024

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் விருப்பக் குறிப்பேடு ஆகியவையும் சேர்ந்து ஆக அய்ந்து ஆவணங்களும் சேர்ந்த தொகுதி சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. பார் முழுதும் மனித உரிமைகளைப் பரப்பவும் பாதுகாக்கவும் தளம் அமைத்துத்தரும் இந்த அய்ந்தொகையே அடிப்படை ஆவணமாகும். பன்னாட்டுப் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை அய்.நா. பொதுச் சபையால் 16.12.1966 அன்று நிறைவேற்றப்பட்டது. 3.1.1976 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து சில பகுதிகள்:

முகப்புரை:

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், அய்.நா. மன்ற அமைப்புத் திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
– இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

– மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குதன் மூலமே அடையப்பட முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும், அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும்.

தனிமனிதன் பிற தனிமனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.

பகுதி 1
விதி 1

1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம்போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக் கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.

2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் நமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பகுதி 2
விதி 2
1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் சர்வதேசக் கூட்டுறவு உதவியோடும் தன்னனளவிலும், தன் சக்திக்கு உயர்ந்த பட்சம் முடிந்த அளவுக்கு படிப்படியாக இவ்வுரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு இசைவாக சட்டமியற்றுதல் உள்ளிட்ட இயன்ற வகை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்று உறுதி பூணுகிறது.
2. அத்துடன் இதில் கூறப்படும் உரிமைகள் யாவும் இனம், நிறம், பால், மொழி, மதம் என்ற எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல், அரசியல், கொள்கை பேதங்களும் பாராமல் தேசியம் எது எந்த சமூகம் என்றும் பிரிக்காமல் பிறப்பு சொத்து, சமூக நிலை எதையும் பாராமல் நிறைவேற்றப்பட உத்தரவாதமும் அளிக்கிறது.
3. பொருளாதார உரிமைகளைப் பொறுத்தவரை, வளரும் நாடுகள் மனித உரிமைகளையும் கருத்தில்கொண்டு தத்தம் தேசிய பொருளாதாரத்துக்கும் உரிய கவனம் செலுத்தி, இங்கு கூறப்பெறும் பொருளாதார உரிமைகளை பிறநாட்டவருக்கு எந்த அளவு அனுமதிப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

விதி 3

இதில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இங்கு இடம்பெறும் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் அனைத்தையும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக அனுபவிப்பர் என்று உத்தரவாதமளிக்கிறது.

விதி 4

இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இதன்படி தான் வகை செய்யும் சுதந்திரங்களை அனுபவிப்பதில் அந்த உரிமைகளுக்கு ஒரு ஜனநாயக நாட்டின் பொது நன்மையைப் பேணுவதற்கு மட்டுமே- அந்த உரிமைகளோடு ஒத்திசைவு கொண்ட அளவு மட்டுமே- அதுவும் சட்டபூர்வமாக மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறது.

பகுதி 3
விதி 6

1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் வேலைசெய்யும் உரிமையை ஒப்புக்கொள்கிறது. அதில் ஒவ்வொருவரும் தான் விருப்பப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட வேலையைச் செய்து அதன்மூலம் வாழ்வு நடத்திக்கொள்ளும் உரிமையும் அடங்கும். இவ்வுரிமையைப் பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
2. இந்த உரிமையை மக்கள் முழுதாய் அனுபவிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தொழில்நுட்பம், செய்வினை ஆகியவற்றில் வழிகாட்டல் பயிற்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல், சமூக- கலாச்சார வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், தொழில்நுட்பம் ஆகியவையும் அடிப்படையான அரசியல் பொருளாதார சுதந்திரங்களைப் பாதுகாக்கும் சூழலில் பயனுள்ள முழு வேலை வாய்ப்புக்கு வகை செய்யும்படி செய்தல், ஆகியவையும் அடங்கும்.

 

விதி 7

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள நியாயமான, கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமையை ஒப்புக் கொள்கின்றன. அந்தச் சூழல் குறிப்பாக-

அ. ஊதியம் எல்லாருக்கும் குறைந்த பட்சமாக
(I) நியாயமான ஊதியமாயும், சமவேலைக்கு சம ஊதியமாயும் அமைய வேண்டும்; எந்தவித பேதமும் இருக்கக்கூடாது. குறிப்பாக, ஆண்களுக்குக் கிடைக்கும் கண்ணியமான சூழலுக்குக் குறைவானதாகப் பெண்களுக்கு இருக்கக்கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் அவர்களுக்கும் வேண்டும்.
(II) இவ்வுடன்படிக்கைக்கு இணங்க, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நாகரிகமாக வாழப் போதுமானதாக இருக்கவேண்டும்.
ஆ. பாதுகாப்பும் ஆரோக்கியமும் காப்பற்றப்பட வேண்டும்.
இ. இருக்கும் நிலையிலிருந்து நியாயப்படியான பதவி உயர்வுகளுக்கான வழிவகைகளை எல்லாருக்கும் செய்யப்பட வேண்டும். தகுதி, வேலையில் அனுபவம் தவிர வேறு எந்தக் காரணத்தாலும் பேதம் பாராட்டப்படக்கூடாது.
ஈ. ஓய்வு, பொழுதுபோக்கு, வேலைநேரம் பற்றிய நியாயமான வரம்புகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பொதுவிடுமுறை நாட்களுக்கு ஊதியம் ஆகியவற்றுக்கு உறுதியளிக்க வேண்டும்.

விதி 8

அ. ஒவ்வொருவருக்கும் தனது சமூக பொருளாதார உரிமைகளைப் பேணவும் பெறவும் வேண்டி தொழிற்சங்கம் அமைக்கவோ, தனக்குப் பிடித்த சங்கத்தில் சேரவோ உரிமை உண்டு; தான் சார்ந்துள்ள நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக இல்லாமலிருந்தால் சரி.
ஆ தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் சம்மேளனங்களாகவோ கூட்டமைப்பாகவோ இயங்கவும், அவை சர்வ தேசிய அளவில் கூட்டமைப்பாக இயங்கவும் உரிமை உண்டு.
இ. தேசப் பாதுகாப்பு நலன்கள், பொது அமைதி, மற்றவர்களின் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடுக்கண் வராமல் பார்த்துக்கொள்ள ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டம் விதிக்கக்கூடிய தேவையான கட்டுப்பாடுகள் தவிர வேறு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இயங்க தொழிற்சங்கங்களுக்கு உரிமையுண்டு.
ஈ. குறிப்பிட்ட நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை உண்டு.
இங்குக் கூறிய (அ) முதல் (ஈ) வரையான உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கவும் இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன.

விதி 9

ஒவ்வொருவருக்கும் சமூகக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புரிமை இருப்பதை இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் அங்கீகரிக்கின்றன.

விதி 10

அ. சமூகத்தின் அடிப்படையான, இயற்கையான மூலக்கூறான குடும்பத்துக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பும் உதவியும், அளிக்கப்படுதல்; குறிப்பாக குடும்பம் அமைக்கப்படுவதில் சிறு குழந்தைகளின் நலத்துக்கும் கல்விக்கும்கூட அரசு பொறுப்பு. திருமணம் என்பது இருவரின் கருத்தொருமிப்போடுதான் நிகழவேண்டும்.

. மகப்பேறுக்கு முன்பும் அதன்பின்பும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தாய்மார்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அந்தக் காலகட்டத்தில், பணியாற்றும் தாய்மார்களுக்கு ஊதியத்தோடு விடுமுறையோ போதுமான சமூகப் பாதுகாப்பு வசதிகளோ இருக்கவேண்டும்.

இ. பிறப்பினாலோ வேறு எக்காரணத்தாலுமோ வேறுபாடுகள் பார்க்காமல் குழந்தைகள், இளைஞர்கள் அனைவருக்கும் பாதுகாப்பும் உதவியும் தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமூக- பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவேண்டும். அவர்களது ஆன்மிக வளர்ச்சி, சுகாதாரம் முன்னேற்றம், உயிர் ஆகியவற்றுக்கு ஊறுவிளைக்கக்கூடிய தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். அரசுகள் குறைந்தபட்ச வயது வரம்பு சட்டங்கள் இயற்றி, அந்த வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாளர்களாக நடத்துவதையும் தடைசெய்து தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்.

விதி 11

1. இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், உணவு, உடை, உறையுள் உட்பட தனக்கும் குடும்பத்துக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்துக்கும் வாழ்நிலைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் அனைவருக்கும் உரிமை உண்டென்று அங்கீகரிக்கின்றன. இவ்வுரிமை நடைமுறைப்படுத்தப்படவும் அவை உரிய நடவடிக்கைகள் எடுக்கும். சம்மதத்துடன் கூடிய பன்னாட்டுக் கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் அவை உணர்ந்துள்ளன.

2. தனி ஒருவனுக்கு உணவில்லை எனும் கொடுமையிலிருந்து ஒவ்வொருவனுக்கும் பாதுகாப்பு உரிமை உண்டென்பதையும் ஏற்று இவ்வரசுகள் தன்னளவிலும், பன்னாட்டுக் கூட்டுறவோடும் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக திட்டவட்டமான நடவடிக்கைகளும் பிற செயல்பாடுகளும் மேற்கொள்ளும்:

அ. தொழில்நுட்ப அறிவியல் கல்வியை முழுதும் பயன்படுத்தி உணவு உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம் ஆகியவற்றின் முறைகளில் முன்னேற்றம் காணுதல், சத்துணவுத் தத்துவங்கள் பற்றிய அறிவினைப் பகிர்ந்து கொள்ளுதல் இயற்கை வளத்தை உயர்ந்தபட்ச அளவு வளப்படுத்தவும் பயன்படுத்தவும் உதவும் வண்ணம் வேளாண்மை முறைகளைச் சீர்திருத்துதல், நவீனமாக்குதல்.

. உணவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யும் நாடுகள் என்ற இருபாலாருக்கும் சிரமமில்லாத வகையில் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைத் தேவைக்கேற்ப நியாயமாகப் பங்கீடு செய்தல்.

விதி 12

1. ஒவ்வொருவருக்கும் உயர்ந்தபட்ச உடல்நலம், மனநலம் அனுபவிக்க உள்ள உரிமையையும் இவ்வுடன்படிக்கையில் ஈடுபடும் அரசுகள் அங்கீகரிக்கின்றன.
2. அதை மக்கள் அனுபவிக்க இசைவாக இந்த அரசுகள் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

. இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைச் சாவுகள் ஆகியவற்றைக் குறைத்தல்- குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி.

. சுற்றுச்சூழல், தொழிற்சாலை, சுகாதாரம் ஆகியவற்றை அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றுதல்

. தொற்றுநோய்கள், கொள்ளை நோய்கள், தொழில் தொடர்பான நோய்கள் முதலியவற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், சிகிச்சை வசதி பெருக்குதல்,

. வியாதிகளுக்கு மருத்துவர் கவனிப்பு உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் நிச்சயம் கிடைக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல்.

விதி 13

1. இவ்வரசுகள் ஒவ்வொருவருக்கும் உள்ள கல்வி உரிமையை அங்கீகரித்து கல்வி மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கும் மானிட மாண்புக்கும் அடிகோலுவதுடன், மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றன. ஒரு சுதந்திர சமுதாயத்தில் பலனுள்ள முறையில் பங்களிப்புச் செய்யவும் நாடுகளுக்கிடையிலும் எல்லா இன, கலாச்சார, மதப்பிரிவின் மக்களிடையிலும் சகிப்புத்தன்மையும் நட்பும் துளிர்க்கவும், உலக சமாதானத்துக்காகன அய்.நா. முயற்சிகள் வலுப்பெறவும் வையத்து மாந்தருக்கெல்லாம் கல்வி வழி காட்டித்தரவேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கின்றன.

2. மேற்படி உரிமை முழுவதும் செயல்படுத்தப்பட கீழ்க்கண்ட பணிகள் செய்யப்பட வேண்டுமென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன:-

அ. கட்டாய ஆரம்பக் கல்வி எல்லாருக்கும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என்பதையும்,
. இரண்டாம் நிலைக்கல்வி- தொழில்நுட்பம், வேலைவாய்ப்புக் கல்வி உள்பட பொதுவாக எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாயும், செலவு கட்டுப்படியாகக் கூடியதாயும் அமைய வேண்டும். படிப்படியாக இடைநிலைக் கல்வி முழுவதையுமே அரசு செலவில் கிடைக்கச் செய்வது உள்பட இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இ. இதேபோல் உயர்கல்வியும் தகுதிக்கேற்ப எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஈ. ஆரம்பக்கல்வி பெறாதவர்கள் அல்லது முடிக்காதவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஆதாரக்கல்வி தீவிரப்படுத்தப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உ. எல்லா நிலையிலும் கல்விக்கூடங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவேண்டும். போதுமான ஆசிரியர் குழுக்கள் வேண்டும். தொடர்ந்து ஆசிரியர்களின் பணிநிலைச்சூழல் வலுப்படுத்தப்படவேண்டும்.

3. பெற்றோர் அல்லது காப்பாளர் தம் குழந்தைகளுக்காக, அரசு நடத்தும் பள்ளிகளுக்கு வெளியேகூட பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டென்பதை இவ்வரசுகள் மதிக்கின்றன. அவை அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சக் கல்வித்தரம் உள்ளவையாக இருக்கவேண்டும். தத்தம் மதத்துக்கு ஏற்ற தார்மீகக் கல்விக்காக பெற்றோர் இத்தகைய பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. இவ்விதியின் எந்தப் பகுதியும் தனியாரோ, நிறுவனங்களோ பள்ளிகள் நிறுவவும், நடத்தவும் கொண்டுள்ள உரிமைகளில் குறுக்கிடும் வகையில் பொருள் கொள்ளப்படக்கூடாது.
ஆனால், இவ்விதியின் பகுதி (1)இல் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும்; அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சத் தரம் கொண்டிருக்க வேண்டும்- அவ்வளவுதான்.

விதி 15

1. (அ) கலாச்சார வாழ்வில் பங்கேற்கவும், (அ) அறிவியல் முன்னேற்றம், அதன் விளைவுகள் ஆகியவற்றால் பயன்பெறவும் (இ) தன் பொறுப்பில் உருவான எந்த அறிவியல், இலக்கிய, கலைத்துறை சாதனையிலிருந்தும் பொருளாதார வகையிலோ தார்மிக ரீதியாகவோ பலனடைவதற்கான பாதுகாப்பும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை இவ்வரசுகள் ஒப்புக்கொள்கின்றன.

2. அறிவியலையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும், வளர்க்கவும், பரப்பவும் தேவையான நடவடிக்கைகள் உள்பட இந்த உரிமையை மெய்ப்படவைப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் இவ்வரசுகள் செய்யவேண்டும்.

3. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், படைப்பு முயற்சிகளுக்கும் இன்றியமையாததான சுதந்திரத்தையும் இவ்வரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

4. அறிவியல்- கலாச்சாரத் தளங்களில் சர்வதேசத் தொடர்பு ஒத்துழைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படக்கூடிய ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடிய நற்பயன்கள் பல உண்டென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன. 

திங்கள், 24 ஜூன், 2024

சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை


அய்.நா. பொதுச்சபையால் 10.12.1984 அன்று ஏற்கப்பட்டு 26.6.1987 அன்று நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்:
இந்த உடன்படிக்கையில் பங்கேற்கும் அரசுகள்: அய்.நா. அமைப்புத் திட்டத்தின் தத்துவங்கள், நோக்கங்கள் ஆகியவை சொல்வது போல மானிடக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தான மாற்ற முடியாத சமானமான உரிமைகளை ஒப்புக்கொள்வதே உலகில் சுதந்திரமும் சமாதானமும் நீதியும் நிலவ வழி என்பதைக் கருத்திலிருத்தியும், மனிதப்பிறவியின் உள்ளார்ந்த மாண்பிலிருந்து அவ்வுரிமைகள் பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

_அய்.நா. திட்டத்தில் குறிப்பாக விதி 55இன் கீழ் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உலகம் முழுவதிலும் மதிக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் வகை செய்ய அரசுகளின் கடப்பாட்டைக் கருத்திலிருத்தியும்,

_சர்வதேசிய மனிதவுரிமைப் பிரகடன விதி 5, குடியுரிமையும் அரசியலுரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையின் விதி 7 ஆகிய இரண்டுமே எவரும் சித்திரவதை, கொடுமையான மனிதத்தன்மையற்ற அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல், அத்தகைய தண்டனை ஆகிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்று கூறுவதை மதித்தும்,

_அய்.நா. பொதுச்சபை 9.12.1975இல் ஏற்றுக்கொண்ட சித்திரவதை முதலிய கொடுமையான மனிதத்தன்மையற்ற அவமதிக்கும் வகையில் நடத்தப்படுதல் அத்தகைய தண்டனைகள் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படுவதிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது பற்றிய பிரகடனத்தை மதித்தும்,

_ உலகெங்கும் சித்திரவதை முதலிய கொடுமையான மனிதத் தன்மையற்ற அவமதிக்கும் வகையில்
நடத்தப்பட்டால், அத்தகு தண்டனைகளுக்கெதிரான போராட்டத்தை இன்னமும் வலுவாக்க விரும்பி கீழ்க்கண்டவாறு ஒப்பந்தம் செய்து
கொள்கின்றன.

பகுதி 1

விதி 1

இந்த உடன்படிக்கையைப் பொறுத்த வரையில் ‘சித்திரவதை’ என்ற சொல் ஒருவருக்கு, அவரிடமிருந்தோ, மூன்றாவது ஆளிடமிருந்தோ தகவல்களையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெறுவதற்காக மனதார தெரிந்தே உடலுக்கோ, மனதுக்கோ கடும் வலியையோ, துன்பத்தையோ ஏற்படுத்தக்கூடிய செயலைச் செய்தல் என்று பொருள். அவரோ, மற்றவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படுகிற ஒரு குற்றத்துக்குத் தண்டனையாக அச்செயல் அமைந்தாலோ, அவரையோ வேறொருவரையோ அச்சுறுத்தவோ கட்டாயப்படுத்தவோ செய்யப்பட்டாலோ அல்லது பாகுபாடு காரணமாக அமைந்தாலோ கூட அது ‘சித்திரவதை’தான். அரசு அதிகாரி அல்லது அரசினால் அதிகாரம் தரப்பட்ட ஒருவரால் அந்த வலியோ, துன்பமோ இழைக்கப்பட்டால் அல்லது அவரது அனுமதி, தூண்டுதல்
அல்லது அவருக்குத் தெரிந்து இழைக்கப்பட்டால் இந்த உடன்படிக்கையின்படி அது ”சித்திரவதை’என்று பொருள். ஆனால், அத்தகைய வலியோ
துன்பமோ சட்டபூர்வ தண்டனைகளாக அமைந்தாலோ, அத்தகைய சட்டபூர்வ தண்டனைகளின் பகுதியாகவோ, தொடர்புடையதாகவோ அமையும்போது அது இந்த வரையறையுள் வராது…

விதி 2

1. ஒவ்வொரு அரசும் தனது கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் சித்திரவதைக் கொடுமை நிகழ்வதைத் தடுக்க சட்டமியற்றல், நிர்வாக ஆணை, நீதித்துறை நடவடிக்கை உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளையும் பயனுள்ள வகையில் எடுக்கும்.

2. சித்திரவதையை நியாயப்படுத்துவதற்காக போர், போர் அச்சம் ஏற்படுத்தும் சூழல் எந்தவித பொதுவாழ்வு நெருக்கடி நிலைமையும் உட்பட எந்தவித அசாதாரண சூழ்நிலையையும் காரணம் காட்டக்கூடாது.

3. சித்திரவதையை நியாயப்படுத்த மேலதிகாரியின் ஆணையையோ ஒரு பொது அதிகாரியின் ஆணையையோ காட்ட முடியாது.

விதி 3

1. ஒரு மனிதரை தன் நாட்டிலிருந்து வெளியேற்றவோ, திருப்பியனுப்பவோ, இன்னொரு நாட்டிற்கு விசாரணைக்காக அனுப்பவோ இந்த அரசுகள் நினைக்கும் வேளையில், அவ்வாறு அனுப்பப்படக்கூடிய நாட்டில் அந்த மனிதர் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்படக்கூடிய ஆபத்திருக்கிறது என்று நம்புவதற்கு வலிய காரணங்கள் இருந்தால் அவர் அப்படி வெளியேற்றப்படக்கூடாது.

விதி 4

1. ஒவ்வொரு அரசும் எல்லா சித்திரவதை நடவடிக்கைகளும் தனது குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றங்கள் என்று நிர்ணயிக்கப்
படுவதை உறுதி செய்யும். சித்திரவதை செய்வதற்கான முயற்சியில் இறங்குவதும், சித்திரவதையில் பங்கேற்றல் அல்லது ஒத்துழைத்தல் ஆகியவையும் அதே விதமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யும்.

2. இவ்வரசுகள் இக்குற்றங்களின் தீவிரத் தன்மையையும் கணக்கிலெடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான தண்டனைகளை நிர்ணயிக்கும்.

விதி 10

1. சித்திரவதைக்கு எதிரான தடை பற்றிய கல்வியும் தகவலும் சட்டத்தை நிலைநாட்டும் பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் இருசாராரும் பெறும் பயிற்சிகளில் முழு இடம் பெறும். மருத்துவப்பணியில் உள்ளோர், பொது நிருவாகிகள், மற்றபடி கைது, சிறைவைப்பு- அடைப்பு முதலியவற்றோடு பணி நிலைத் தொடர்புடையோர் அனைவரது பயிற்சிகளும் அப்படியே. இது விடுபட்டு விடாமல் இவ்வரசுகள் பார்த்துக்கொள்ளும்.

2. மேற்கண்ட பணி செய்வோரின் பணி
களும் கடமைகளும் பற்றிய விதிகள் நியதிகள் ஆகியவற்றில் இத்தடைபற்றிக் குறிப்பிடப்படும்.

விதி 11

எவ்வித கைது- _ சிறைவைப்பு அடைக்கப்படல் ஆகியவற்றுக்கு ஆட்படும் நபர்கள் எப்படி
வைத்துக்கொள்ளப்பட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விசாரணை விதிகள், நியமங்கள், முறைகள், பழக்கங்கள், ஏற்பாடு
கள் ஆகியவற்றை தத்தம் நாட்டில் இவ்வரசுகள் சீரான விமர்சனங்களுக்கு உட்படுத்தும்.

விதி 12

தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் எங்கேனும் சித்திரவதைச் செயல் ஏதும் நடந்திருக்கலாம் என்று நம்ப நியாயமான காரணங்கள் இருந்தால் அங்கெல்லாம் இதற்குத் தகுந்த தனது அதிகாரிகள் உடனே, நேர்மையான விசாரணை நடத்துவார்கள் என்பதற்கும் இவ்வரசுகள் உறுதி செய்யும்.

விதி 13

இவ்வரசுகள் ஒவ்வொன்றும் அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தான் சித்திர
வதை செய்யப்பட்டதாகக் கூறும் எவருக்கும் அதன்கீழ் பணியாற்றும் தகுந்த அமைப்பிடம் முறையீடு செய்யவும், வழக்கு விரைவாகவும் நியாயமாக விசாரிக்கப்படவும் உறுதி செய்ய வேண்டும். அந்தப் புகாரினாலோ, அதில் சாட்சியாக வந்ததனாலோ அவரோ மூன்றாவது நபரோ அச்சுறுத்தப்படவோ அநியாயமாக நடத்தப்படவோ பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதி 14

1. இவ்வரசுகள் ஒவ்வொன்றும் தனது சட்ட அமைப்புமூலம், சித்திரவதைக்கு ஆளான ஒருவர், பரிகாரம் பெறவும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு மறு சீர்மை உட்பட இழப்பீடு பெறவும் நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய உரிமையை உறுதிப்படுத்தும். சித்திரவதையால் ஒருவர் உயிரிழந்தால் அவரைச் சார்ந்திருந்தவர்கள் இழப்பீடு பெறுவர்.

2. இவ்விதியில் கண்ட எதுவும் பாதிக்கப்பட்டவரோ மற்றவர்களோ தத்தம் தேசியச் சட்டத்தின்கீழ் இழப்பீடு பெறும் உரிமையைப் பாதிக்காது.

விதி 15

சித்திரவதை செய்யப்பட்டு ஒரு வாக்குமூலம் பெறப்பட்டது என்று நிறுவப்பட்டுவிட்டால், அந்த வாக்குமூலம், சித்திரவதை செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர்க்கு எதிராக அன்னியில், எந்த விசாரணையிலும் சாட்சியாக ஏற்கப்பட முடியாதென்பதையும் இவ்வரசுகள் உறுதி செய்யும். ♦


ஞாயிறு, 23 ஜூன், 2024

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை


2023 அக்டோபர் 16-31, 2023 உண்மை Unmai
சென்ற இதழ் தொடர்ச்சி…
விதி 12
1. ஓர் அரசின் நில எல்லைக்குள் சட்டப்படி வாழும் எவருக்கும் அந்த நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக, வர உரிமை உண்டு. எங்கு வசிக்கவும் சுதந்திரம் உண்டு.
2. எவரும், தாயகம் உள்பட எந்த நாட்டை விட்டும் விருப்பம் போல் வெளியே போகலாம்.
3. அவ்வுரிமைக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளின்றி கட்டுப்பாடு கூடாது _ கட்டுப்பாடுகள், தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், பொது ஒழுக்கம் மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதற்காக சட்டபூர்வமாக மட்டுமே விதிக்கப்படலாம். இந்த உடன்படிக்கையில் காணப்படும் பிற உரிமைகளுக்கு இசைவாக அவை அமைய வேண்டும்.
4. ஒருவர் தாயகத்துக்குள் நுழைவதை யாரும் சட்டவிரோதமாகத் தடுக்கக் கூடாது.
விதி 14
1. நீதிமன்றங்கள் முன்பும் தீர்ப்பாயங்கள் முன்பும் அனைவரும் சமம். ஒருவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பற்றியோ, அவரது உரிமைகள்- _ கடமைகள் பற்றிய வழக்கிலோ, நேர்மையான வெளிப்படையான விசாரணை என்பது அனைவருக்கும் உரியதாகும். அந்த விசாரணை சட்டப்படி உருவான சுயேச்சையான, பாரபட்சமற்ற நீதிமன்றத்தால் நடத்தப்பட வேண்டும்.
2. குற்றம் சாட்டப்படும் எவரும் சட்டபூர்வமாக அக்குற்றம் நிறுவப்படும் வரை நிரபராதி என்றே கருதப்பட உரிமையுள்ளவர் ஆவார்.
3. குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்-பெற்ற ஒருவருக்கு வேறு யாருக்கும் சமமாக, கீழ்க்கண்ட குறைந்தபட்ச உத்தரவாதங்களுக்கு உரிமையுண்டு:-_
அ. அவர் மீதான குற்றச்சாட்டின் இயல்பு, அது சுமத்தப்படுவதன் காரணமும், அவருக்குப் புரிகிற மொழியில் விரிவாகவும் விரைவாகவும் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆ. தனக்குப் பிடித்த வழக்குரைஞரைக் கலந்துகொள்ளவும், தனது வாதங்களைத் தொகுத்துக் கூற போதிய நேரமும் வாய்ப்பும் பெறவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
இ. விரைவான விசாரணை.
ஈ.  விசாரணை அவர் முன்னிலையில் நடக்க வேண்டும்; தானே நேராகவோ தான் விரும்பும் வழக்குரைஞர் மூலமோ அவர் வாதிக்கலாம்.
எ. யாரும் தனக்கே விரோதமாகச் சான்றளிக்-குமாறோ, குற்ற அங்கீகாரம் தருமாறோ கட்டாயப்படுத்தப்படக்கூடாது.
4. சிறுவர்களென்றால், அவரது வயது, அவரைச் சீரமைத்து புனர்வாழ்வளித்தலின் அவசியம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டே நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
விதி 16
சட்டத்தின்முன் ஒரு மனிதராக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உரியது.
விதி 17
1. எவரது தனிமையும், குடும்பமும், வீடும், கடிதங்களும் குறுக்கீடுகளுக்கு இடமாகக் கூடாது. எவரது பெருமையும் மரியாதையும் சட்டவிரோதப் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது.
2. அத்தகைய மீறல்களுக்கும் பாதிப்புகளுக்கும் எதிரான பாதுகாப்பு எல்லாருக்கும் உரிய உரிமையாகும்.
விதி 18
1. எல்லாருக்கும் சிந்தனை சுதந்திர உரிமையும், மத உரிமையும் மனச்சான்று உரிமையும் உண்டு; தான் விரும்பும் மதம் அல்லது தர்மத்தைத் தொடரவோ, ஏற்றுக்கொள்ளவோ உள்ள உரிமையும் தனியாகவோ பிறருடன் சேர்ந்தோ, தனியிடத்திலோ_ பொதுவிலோ, தனது நம்பிக்கையையோ மதத்தையோ கடைப்பிடித்தல், தொழுதல், வாழ்தல் கற்பித்தல் ஆகிய உரிமைகளும் அடங்கும்.
2. தனது மதம், நம்பிக்கை இவற்றில் ஒருவர் கொண்டுள்ள உறுதியை மாற்றிக்கொள்ள எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
3. தன் மதம் பற்றியோ நம்பிக்கைகள் பற்றியும் பேசும் உரிமை , பொதுப் பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம், நியமங்கள் மற்றவர்களின் அடிப்படை உரிமைகள்_ சுதந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்கிறபோது மட்டுமே, அதுவும் சட்டம் கூறுகிற வகையில் மட்டுமே கட்டுப்படுத்தப்படலாம்.
4. தத்தம் நம்பிக்கைகளுக்கேற்ற மதக் கல்வி, தார்மீகக் கல்வி தம் குழந்தைகளுக்குக் கிடைக்க உறுதியாக வழிசெய்துகொள்ள பெற்றோர் அல்லது காப்பாளருக்கு உள்ள உரிமையை மதிப்போமென்று இவ்வுடன்படிக்கையினை ஏற்கும் அரசுகள் உறுதியளிக்கின்றன.
விதி 19
1. ஒவ்வொருவரும் எதைப்பற்றியும், குறுக்கீடுகளின்றி தனக்கென்று கருத்துகள் கொண்டிருப்பதற்கு உரிமை உண்டு.
2. கருத்து வெளியிடும் உரிமையும் அனைவருக்கும் உண்டு. அதிலேயே எல்லாவிதச் செய்திகளையும் கருத்துகளையும் தேடிச் செல்லவும், பெறவும் பரப்பவும், எல்லை தொடர்பான தடைகளின்றி, பேச்சு, எழுத்து, கலைகள் உள்ளிட்ட விரும்பும் எந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உள்ள உரிமையும் அடங்கும்.
3. இதற்கு முந்தைய பத்தியில் கூறப்பெறும் உரிமைகளை அனுபவிப்பதில் சில குறிப்பான கடமைகள்_ பொறுப்புகள் ஆகியவையும் இருக்கின்றன. எனவே அவற்றுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அக்கட்டுப்பாடுகள்
அ. மற்றவர்களின் உரிமைகளுக்கும் மரியாதைக்கும் தேவையானவையாகவும்,
ஆ. தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் தேவையான அளவு மட்டுமே அதுவும் சட்டத்தின் மூலமாக மட்டுமே விதிக்கப்படலாம்.
விதி 20
1. போர்ப் பிரச்சாரம் யாவும் சட்டப்படி தடுக்கப்படும்.
2. பாரபட்சம், பகை, வன்முறை ஆகியவற்றைத் தூண்டக் கூடியதாக அமையும் தேசிய வெறுப்பு. இனவெறுப்பு, மதவெறுப்பு ஆகியவற்றுக்கான ஆதரவுப் பிரச்சாரம் சட்டப்படி தடுக்கப்படும்.
விதி 21
அமைதியாகக் கூடிப் பேசும் உரிமை அங்கீகரிக்கப்படும். ஒரு ஜனநாயக சமுதாயத்தில் தேசியப் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, பொது அமைதி, பொதுச் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இதமாக எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் அதுவும் சட்டத்துக்கு இசைந்து இவ்வுரிமை கட்டுப்படுத்தப்படலாம்.
விதி 22
1. தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவர்களோடு சேர்ந்து தொழிற்சங்கம் உள்பட எவ்வித சங்கமும் அமைக்கும் உரிமை அனைவருக்குமுண்டு.
விதி 23
1. குடும்பமே இயல்பான, அடிப்படையான சமூக உறுப்பாகும். அதற்கு சமூகம், அரசு ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உரிமை உண்டு.
2. மண வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மணம் புரியவும் குடும்பம் நிறுவவும் உள்ள உரிமை அங்கீகரிக்கப்படும்.
3. மணந்துகொள்வோரின் சுயேச்சையான முழுச் சம்மதமின்றி ஒரு திருமணமும் நடைபெற இயலாது.
4. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் தம்பதிகளுக்குச் சமமான உரிமைகளும் கடமைகளும் திருமணம் செய்து கொள்வதிலும் மணவாழ்விலும் மணவிலக்குப் பெறுவதிலும் கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்.
விதி 24
1. இன, நிற, மத, பால், மொழி, தேசிய வம்சாவழி, சமூகவம்சாவழி காரணமான எவ்வித பேதமுமின்றி, ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தை என்ற நிலையில் தேவைப்படும் பாதுகாப்பு உரிமைக்கான செயல்களைக் குடும்பம், சமூகம், அரசு ஆகியவற்றிடமிருந்து பெறும் உரிமை இருப்பது அங்கீகரிக்கப்படும்.
2. ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பெயர் இருக்கும்.
3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தேசிய சார்புக்கான உரிமை உண்டு.
விதி 25
விதி2இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவித பேதமுமின்றியும், நியாயமற்ற எவ்வித நிபந்தனைகளுமின்றியும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கீழ்க்கண்ட உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்.
அ. பொது நிருவாகப் பணிகளில் நேரடியாகவோ, சுயேச்சையாகத் தேர்ந்தெடுத்த பிரதிநிதிமூலமோ _ பங்கெடுத்துக் கொள்ளுதல்;
ஆ. குறிப்பிட்ட காலப்படி நிகழும் மெய்யான தேர்தல்களில் நிற்கவும் வாக்களிக்கவும் அனைவருடைய சமஉரிமைகளுக்கும் அத்தேர்தல்கள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் நடைபெறும். அதில் வாக்காளருக்கு தன் விருப்பத்தைச் சுதந்திரமாக வெளியிட உத்தரவாதம் உண்டு.
இ. தன்நாட்டு அரசுப் பணிகளில், பொதுவாக சமமான உரிமைப்படி, சேரும் வாய்ப்பு.
விதி 26
சட்டத்தின்முன் அனைவரும் சமம்; எந்தப் பேதமுமின்றி சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்கும். அந்த வகையில் சட்டமே சகலவித பேதங்களையும் நிராகரிக்கும். இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து, பிற கொள்கைகள், தேசிய வம்சாவழி, சமூக வம்சாவழி, சொத்து, பிறப்பு, அல்லது வேறு நிலை என்ற எந்த அடிப்படையில் பேதம் காட்டப்படுவதிலிருந்தும் எல்லாருக்கும் சமமான பாதுகாப்புக்குச் சட்டம் உத்தரவாதம் தரும்.
விதி 27
மதம், மொழி, கலாச்சாரம் என்பனவற்றில் எந்த அடிப்படையிலேனும் சிறுபான்மையோரையும் கொண்ட நாடுகளில், அவ்வகை சிறுபான்மையினருக்கும் தம்மைச் சார்ந்த மற்றவர்களுடன்கூட, தமது கலாச்சாரத்தை ரசிக்கவும், தமது மதத்தைக் கடைப்பிடிக்கவும் சார்ந்தொழுகவும், தம் மொழியைப் பயன்படுத்தவும் உள்ள உரிமை மறுக்கப்படாது.
பகுதி 4
விதி 40
1. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் இதில் கூறப்பெறும் உரிமைகள் இடம்பெற தாம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும், அவற்றை அனுபவிப்பதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் அறிக்கைகள் அளிக்கவும் உத்தரவாதம் தருகின்றன. ♦

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை


விழிப்புணர்வு – 

2023 அக்டோபர் 1 - 15, 2023

அய்.நா. பொதுச்சபை 16.12.1966 அன்று ஏற்றுக்கொண்டதும், 23.12.1976 முதல் நடைமுறைக்கு வந்ததுமான குடிஉரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்.

முகப்புரை

இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள்

  • – அய்.நா. மன்ற அமைப்புத்திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
    – இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,
    -மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே அடைய முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும்,
    – அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் குடியுரிமையும் அரசியல் உரிமையும்… ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும் தனி மனிதனும் பிற தனி மனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.
    பகுதி 1 – விதி 1
    1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம் போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக்கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.
    2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் தமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
    3. சுய ஆட்சி பெறாத பகுதிகள், அறங்காவலர் முறையில் ஆளப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அரசுகள் உள்பட இவ்வுடன்படிக்கையில் இணையும் அரசுகள் அனைத்தும் சுயநிர்ணய உரிமையை அனைவரும் அடைவதைப் பரப்பவும் அய்.நா. பிரகடன விதிகளுக்கு ஏற்ப அவற்றை மதிக்கவும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றன.பகுதி 2
  • விதி 21. தனது எல்லைக்குள்ளும் அதிகார எல்லைக் குள்ளும் உள்ள அனைவருக்கும் இனம், நிறம், பால், மொழி, மதம் அரசியல் கருத்து அல்லது வேறு வித கருத்துக்கள், தேசிய அல்லது சமூகத் தோற்றம், பிறப்பு, சொத்து அல்லது அதுபோன்ற கவுரவங்கள் என்ற எவ்வகை பேதமுமின்றி இவ்வுடன்படிக்கையில் அடையாளங் காட்டப்
    பெறும் அனைத்துரிமைகளும் உண்டென்பதை மதித்து அவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதென்று இவ்வுடன்படிக்கையில் சேரும் அனைத்து அரசுகளும் வாக்குக் கொடுக்கின்றன.2. சட்டத்தின் மூலமோ வேறு வகையாகவோ ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிராவிட்டால், தத்தம் பகுதிகளில், தத்தம் அரசியலமைப்புக்கும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கும் ஏற்ப, இந்த அரசுகள் தம் நாடுகளில் இவ்வுடன்படிக்கையில் காணப்பெறும் உரிமைகள் எளிதில் நடைமுறையில் கிடைக்க, சட்டமியற்றியோ வேறு வழியிலோ தேவையான நடவடிக்கைகள் எடுப்போமென்றும் உறுதியளிக்கின்றன.

    3. (அ) யாரைப் பொறுத்தேனும் இங்கு அங்கீகரிக்கப்படும். உரிமையோ சுதந்திரமோ மீறப்படுமானால், அந்த மீறல் அரசின் சார்பாக ஒருவரால் எடுக்கப்படும் நடவடிக்கையாயிருப்பினும்கூட, பாதிக்கப்பட்டவருக்கு பயனுள்ள நிவாரணம் கிடைக்கவும்.
    (ஆ) அப்படி பரிகாரம் தேடுகிறவர், அவருடைய உரிமையை நிர்ணயிக்க நீதிமன்றம், நிருவாகத்துறை, சட்டமன்றம் அல்லது அவ்வரசின் அமைப்பியல் உருவாக்கியுள்ள வேறு எந்த அமைப்பின் உதவியைப் பெறும் உரிமையையும், குறிப்பாக நீதித்துறையில் இதற்கான வழிவகைகளை உருவாக்கவும், ஆவன செய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன.

  • விதி 3
    இவ்வுடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பெறும் குடிஉரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை ஆண்களோடு பெண்களும் சரிநிகர்சமானமாக அனுபவிக்க வகைசெய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன.
  • விதி 4
    1. தேசத்தின் உயிரையே பாதிக்குமளவிலான பொது நெருக்கடி நிலை நிலவி, அதிகாரபூர்வமாக அத்தகு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இவ்வரசுகள் நிலைமையின் தீவிரம் எவ்வளவு தேவை என்று காட்டுகிறதோ அந்த அளவு மட்டுமே, இவ்வுடன்படிக்கையின்படி அவற்றின் கடமைகளாய் அமைகின்றவற்றுக்கு குடியுரிமையும் அரசியல் உரிமையும்…
    எதிரான நடவடிக்கைகளில் இறங்கலாம். அப்போதும்கூட சர்வதேசச் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு உள்ள கடமைகளை மீறாமலும் இனம், நிறம், பால், மொழி, மதம், எந்த சமூகத்தினன் என்பது போன்ற எந்தவிதமான பேதங்களும் காட்டப்படாமலும் அந்நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
  • பகுதி 3 – விதி 6
    1. உயிர்வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே உரியது. அதற்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும். யார் உயிரும் சட்டவிரோதமாகப் பறிக்கப்படலாகாது.
    2. மரணதண்டனை ஒழிக்கப்படாத நாடுகளில், மிகமிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். அதுவும் குற்றம் நடந்த காலத்திய சட்டத்தின் படியும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கோ, இனக்கொலை பாதகத் தடுப்பும் தண்டனையும் பற்றிய கொள்கையின் விதிகளுக்கோ முரணாக அது அமைந்திடக்கூடாது.
    4. மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்புக்கோரவும் தண்டனைக் குறைப்பு கோரவும் உரிமையுண்டு. எந்த வழக்கிலும் பொதுமன்னிப்பு அல்லது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம்.
    5. பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், கர்ப்பமாயிருப்போர்க்கும் மரணதண்டனை வழங்கப்படலாகாது.
  • விதி 7
    1. யாரும் சித்திரவதைக்கோ, கொடுமையாக அல்லது மனிதத் தன்மையின்றி அல்லது கண்ணிய
    மற்ற முறையில் நடத்தப்படலாகாது; யாரும் அவரது சுதந்திரமான ஒப்புதலின்றி மருத்துவ சோதனைகளிலோ அறிவியல் சோதனைகளிலோ ஈடுபடுத்தப்படக்கூடாது.
  • விதி 8
    1. யாரும் அடிமைப்படுத்தப்படக்கூடாது. அனைத்துவித அடிமை முறையும் அடிமை வணிகமும் ஒழிக்கப்படவேண்டும்.
    2. யாரும் கொத்தடிமைகள் வைத்துக்கொள்ளலாகாது.
    3. (அ) யாரையும் கட்டாயப் பணியாளராகவோ, நிர்பந்தப் பணியாளராகவோ வைத்திருத்தல் கூடாது.
  • விதி 9
    1. ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்துக்கும் உடல் பாதுகாப்புக்கும் உரிமை உண்டு. யாரும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படவோ, சிறைவைக்கப்படவோ ஆகாது. சட்டம் விதித்துள்ள காரணங்கள் அன்றியோ, அது கூறும் முறைகளில் அல்லாமலோ யாருடைய சுதந்திரமும் பறிக்கப்படலாகாது.
    2. ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமும், அவர் செய்ததாகக் கருதப்படும் குற்றம் என்ன என்பதும், அவருக்குக் கூறப்பட வேண்டும்.
    3. குற்றச்சாட்டின்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டாலோ, சிறைப்பிடிக்கப்பட்டாலோ குறித்த காலத்துக்குள் நடுவர் முன்னிலையிலோ அல்லது
    சட்டப்படி இதற்கான அதிகாரம் பெற்ற நீதித்துறையாளர் முன்போ அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
    நியாயமான காலவரையறைக்குள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.
    4. கைது செய்யப்பட்டோ சிறை செய்யப்பட்டோ தன் உரிமையை இழக்கும் ஒருவர் நீதிமன்றத்துக்குத் தன் குறையை எடுத்துச் செல்ல உரிமை உண்டு. நீதிமன்றம் தாமதமின்றி அந்தக் கைது சட்டப்படி செல்லுமா என்று தீர்மானிக்க அது உதவும் தவறென்று தீர்மானித்தால் நீதிமன்றமே அவரை விடுவித்து ஆணையிடும்.
    5. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கோரவும் உரிமை உண்டு.
  • விதி 10
    1. கைதாகும் எவரும் மனிதப் பண்போடும் மனிதப் பிறவிக்கே உரிய உள்ளார்ந்த மதிப்புக்கான மரியாதையோடும் நடத்தப்படவேண்டும்.
    2. (அ) விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர பொதுவாக எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டிக்கப்பட்டவர்களும் தனித்தனியே தான் வைத்திருக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட்டவரல்ல என்ற தகுதிக்கேற்ப அதற்குரியபடி வித்தியாசமான முறையிலேயே நடத்தப்பட வேண்டும்.
    ஆ. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள், சிறுவர்களும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, நடுவர் முன்பும் கூடியவரை தனிதனியாகவே அழைத்துச் செல்லப்படவேண்டும்.
    3. சிறைச்சாலை முறையானது கைதிகளைச் சீர்திருத்துவதையும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையுமே நோக்கமாக வைத்து அவர்களை நடத்தவேண்டும். இளங்குற்றவாளிகளும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, அவர்களுடைய வயதுக்கும் சட்ட அந்தஸ்துக்கும் ஏற்ப நடத்தப்படவேண்டும்.