திங்கள், 30 அக்டோபர், 2017

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் பார்வையில்...




சமீப காலங்களில் பரஸ்பர புரித லின் பேரில் ஒருவருக்கு ஒருவர் விட் டுக் கொடுத்து வாழ வேண்டிய கண வன் மனைவி, விவாகரத்து என்ற மாயச் சூழலில் சிக்கி சிதைந்து விடு கின்றனர்.

இந்து திருமணச் சட்டப்பிரிவு 13 விவாகரத்து பெறுவதற்கென்று பல் வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையின் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். உதாரணத்திற்கு ராஜா - மீனா (கற் பனை பெயர்கள்) திருமணமான ஆரம் பத்தில் இருந்தே எலியும் பூனையுமாக வாழ்ந்து வருகின்றனர். ராஜா தன் மனைவியை கடுமையான முறையில் கொடுமைப்படுத்துகின்றார். மீனா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திடும் அள விற்கு மனதளவில் கொடுமைப்படுத் துகிறார். நன்றாக கவனியுங்கள். அவன் செய்யும் கொடுமைகள் எல்லாம் மீனாவை மனதளவில்தான் தாக்கு கின்றன. சரியான உணவுகூட தன் மனைவிக்கு கொடுப்பதில்லை. ஆனால் அவன் வெளி உலகத்தில் ஏழைக ளுக்கு உதவிடும் ஒரு சமூக சிந்தனை உள்ளவனாக ஒரு பசுத்தோல் போர்த் திய புலியாக விளங்குகின்றான். அவ னைச் சார்ந்த நண்பர்களோ, உறவினர் களோ ராஜா தன் மனைவியை கொடு மைப்படுத்துகிறான் என்பதை நிச்சயமாக நம்பிட மாட்டார்கள். இந்த நிலையில் மீனா தன் கணவனுக்கு எதிராக விவா கரத்து வழக்கு தொடர்கிறார்.

நீதிமன்றத்தில் அதற்குரிய காரணங் களை கணவன் செய்யும் குற்றங்களை நிரூபித்திட வேண்டும் அல்லவா? பல் வேறு விசாரணைகளுக்கு பிறகு மீனாவால் தன் கணவனுக்கு எதிரான குற்றச்சாட்டு களை நிரூபிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்து திருமணச்சட்டம் பிரிவு 13 விதிகளின்படி விவாகரத்து மனு நிராகரிக் கப்பட்டால் மீனா தன் கணவனுடன் வாழ்ந்தே ஆகவேண்டும். சட்டத்தின் பார்வையில் அந்த தீர்ப்பு நியாயமானதே. ஆனால் நடைமுறையில் மறுபடியும் மீனா சரியாக உணவுகூட அளித்திடாத அந்த இரக்கமற்ற மனித மிருகத்துடன் வாழ்ந்திட முடியுமா. இந்த பிரச்சினைக் குத்தான் உச்சநீதிமன்றம் RAJIV.R. HIRENATH VS. UMA (2000) 10 SCC 303 என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு தீர்ப் பளித்துள்ளது. அதாவது இந்து திருமணச் சட்டம் 13 பிரிவின்படி விவாகரத்து கிடைக்கபெறாத கணவன் - மனைவி - இந்து திருமணச் சட்டம் 13தீ பிரிவின்படி பரஸ்பரசம் மதத்தின் பேரில் விவாகரத் துக்கு மனுச் செய்து விவாகரத்து பெற்றி டலாம். இதனால் நடைமுறைச் சிக்கல் கள் குழப்பங்கள் இல்லாத வகையில் இருவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என உச் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

- தகவல்: ‘லாயர்ஸ் லைன்’
-விடுதலை ஞாயிறு மலர், 28.10.17

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வழக்குரைஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்


சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.20 வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்களின் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். அதை வைத்து ஒருவருடன் எனக்கு பதிவுத்திருமணம் நடந்துள்ளதாகக் கூறி போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். எனவே எனக்கும் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது வழக்குத் தொடர்ந்த அந்த பெண், ‘வழக்குரைஞர் அலுவலகத்தில் தனது விருப்பப்படி தான் அந்த நபருடன் திருமணம் நடந்தது’ என முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தார்.

இதனால் அப்பெண் தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அப்பெண்ணின் கணவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் இந்து பாரம்பரியத்தின் அடிப்படையில் 2 நபர்களின் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லும். அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு சிலராக இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. 

அந்த வேறு சிலரில் வழக்குரைஞர்களும் அடக்கம். அப்படியிருக்கும்போது வழக்குரைஞர் அலுவலகத்தில் வழக்குரைஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் செல்லாது என மனுதாரர் கோர முடியாது’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் வழக்குரைஞர் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்கள் முன்னிலையில் மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் திருமணம் நடந்துள்ளது.

அதனடிப்படையில் பின்னர் அந்த திருமணம் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திருமணம் நடந்ததாக வழக்குரைஞர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு கொடுத்த கடிதமும் சட்டப்படி செல்லும்’’ என உத்தரவிட்டனர்.

- விடுதலை நாளேடு,20.10.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

வாகன விபத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?



நம் நாட்டில் தினமும் சுமார் 400 நபர்கள் வாகன விபத்துகளினால் இறக்கின்றனர். 2015ஆம் ஆண்டு சுமார், 1,46133 நபர்கள் வாகன விபத்துகளினால் இறந்துவிட்டனர். இந்தப் புள்ளிவிபரம் நம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய அறிக்கையில் உள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1939 939 Motor Vehicles Act பல்வேறு மாற்றங்களுடன் 1988ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஜூலை 1989 முதல் அமலுக்கு வந்தது. இது 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 269 சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வழங்குதல் வாகனங்கள் பதிவு செய்தல், தகுதிச் சான்று வழங்குதல், இன்ஸூரன்ஸ், வாகன விபத்திற்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்குதல் போன்ற எல்லா அம்சங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கிட 1959ஆம் ஆண்டு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையோர் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவல்துறை, விசாரணை, நீதிமன்றம் என்று அலைய வேண்டி வரும் என்று தவறாக எண்ணி, முறையாக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் தகுந்த நிவாரணம் பெற்றிட சட்டம் எல்லா வழிகளிலும் நமக்குத் துணை புரிகிறது.

இதுபற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள டெல்லியில் நடந்த ஒரு வாகன விபத்தின் வழக்கு பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

காஜல் சர்மா என்பவர் தனது கணவருக்குச் சொந்தமான வாகனத்தை புதுடெல்லி பெருநகர ரெயில்வே நிலையம் அருகே அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி வந்து வாதிகள் அம்ரஜித் / நஹித் மாலிக் மற்றும் அப்ரஷ் அகமது ஆகியவர்கள் வந்த ஆம்னி வாகனத்தின்மேல் மோதி காயமடையச் செய்தார். இது பற்றிய வழக்கு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்திற்கு வந்தது.

பொதுவாக இதுபோன்ற வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய சட்டவிதிகள்: வாகனத்தை ஓட்டி வந்த நபர் அலட்சியமாக அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மோதியது பற்றி பாதிக்கப்பட்ட நபர் எந்த வகையிலும் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. ஒரு வேளை வாகனத்தை ஓட்டிவந்தவரும் நீதிமன்றத்தில் தான் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிடவில்லை என்று வாதாட முடியாது.

காவல்துறை முறையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் பிரதிவாதியின் குற்றத்தை நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற வழக்குகளைப் போல் குற்றம் நடந்ததா என்பதை முழுமையாக விசாரணை நடத்த வேண்டியத் தேவையும் இல்லை. இதுபற்றிய முழு விளக்கத்தை இன்ஸுரன்ஸ் நிறுவனம் (எதிர்) புஷ்பா ராணி என்ற வழக்கில் தெளிவான தீப்பினை வழங்கி உள்ளது.

அதாவது வாகன விபத்துகளின் வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை முழுமையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்ட பிறகு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரின் குற்றத்தை பாதிக்கப்-பட்டவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை.

நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் R.D. HATTAGADI Vs. PEST CONTROL (INDIA) PVT LTD. AR 1995/SC/755 என்ற வழக்கின் தீர்ப்பின் மூலம் விபத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த முறையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

வாகன விபத்தின் பாதிப்புகளை 2 வகையாகப் பிரிக்கலாம்:

பொருளாதார ரீதியான பாதிப்பு: (Pecuniary Damage): பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவுகள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை மாத வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவைகள் Pecuniary Damage என்று அழைக்கப்படும். Non Pecuniary Damage (மனரீதியான பாதிப்பு): மனரீதியான பாதிப்புகள், உடல் ஊனமடைவதால் ஏற்படும் பாதிப்புகள், அதாவது நடக்கமுடியாமை, கைகள் செயல்பட முடியாமை போன்ற பாதிப்புகள் Non Pecuniary Damage என்று அழைக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு பாதிக்கப்பட்டவருக்கு முறையான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதிபட அறிவுறுத்தி உள்ளது.

கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வழக்கில் மோட்டார் வாகன விபத்தில் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது.

அதாவது விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் 4 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 120 நாட்கள் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு ஓரளவிற்கு குணமடைந்து உள்ளார்.

மருத்துவமனையில் செலுத்திய தொகை ரூ.5242/_க்கு முறையாக ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார்.

தன்னுடைய ஓட்டுநர் பணி செய்திடாமல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தன்னுடைய மாத வருமானம் 20,000 ரூபாய் நஷ்டமடைந்துள்ளது என்று கூறியுள்ளார். அதற்குச் சரியான ஆதாரத்தை அவர் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, அவரது மாத வருமானத்தை 12,000 ரூபாயாகக் கணக்கிட்டு வாகன உரிமையாளர் பிரதிவாதி ரவி சர்மா விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் என்பவருக்கு 1,98,000/_ ரூபாய் நஷ்ட ஈடு வழங்கிட மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. வழக்குப் பதிவு செய்த நாளில் இருந்து மேற்கூறிய தொகையை 9 சதவீத வட்டியுடன் அளித்திட உத்தரவிட்டது.

நஷ்ட ஈட்டுத் தொகையை முறைப்படி கட்டத் தவறினால் 12 சதவிகித வட்டியும் சேர்த்து செலுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

SOUTH DISTRICT,
SAKET COURTS - NEW DELHI,
Suit No. 107/15

சில சமயங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிடும் வாகனங்கள் உண்டு அல்லவா!

அதுபோன்ற சமயங்களில் விபத்து பற்றி முழு விபரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்து நிச்சயமாக 25,000/_ நஷ்டஈடு பெற்றிடலாம். அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று தோன்றினால் உயர் நீதிமன்றத்தில் அதுபற்றி மறுஆய்வு மனுதாக்கல் செய்திடலாம்.
நன்றி: ‘லாயர்ஸ் லயன்’, ஜூலை 2017

 -உண்மை,16-31.7.17


வியாழன், 20 ஜூலை, 2017

ஷரியா சட்டத்தில்...


According to Sharia law:
• Theft is punishable by amputation of the right hand (above).
• Criticizing or denying any part of the Quran is punishable by death.
• Criticizing Muhammad or denying that he is a prophet is punishable by death.
• Criticizing or denying Allah is punishable by death (see Allah moon god).
• A Muslim who becomes a non-Muslim is punishable by death (compulsion in religion).
• A non-Muslim who leads a Muslim away from Islam is punishable by death.
• A non-Muslim man who marries a Muslim woman is punishable by death.
• A man can marry an infant girl and consummate the marriage when she is 9 years old.
• Girls' clitoris should be cut (Muhammad's words, Book 41, Kitab Al-Adab, Hadith 5251).
• A woman can have 1 husband, who can have up to 4 wives; Muhammad can have more.
• A man can beat his wife for insubordination (see Religion of Peace).
• A man can unilaterally divorce his wife; a woman needs her husband's consent to divorce.
• A divorced wife loses custody of all children over 6 years of age or when they exceed it.
• Testimonies of four male witnesses are required to prove rape against a woman.
• A woman who has been raped cannot testify in court against her rapist(s).
• A woman's testimony in court, allowed in property cases, carries ½ the weight of a man's.
• A female heir inherits half of what a male heir inherits (see Errors in Quran).
• A woman cannot walk along with a man, as it leads to fitnah (upheaval).
• A woman cannot speak alone to a man who is not her husband or relative.
• Meat to eat must come from animals that have been sacrificed to Allah - i.e., be "Halal".
• Muslims should engage in Taqiyya and lie to non-Muslims to advance Islam.
-முகநூல் பதிவு(இரத்னவேல் சேர்வை)

வியாழன், 29 ஜூன், 2017

சட்டம் - முக்கிய குறிப்புகள்...

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

-முகநூல்

புதன், 7 ஜூன், 2017

ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கும் வாரிசுரிமை இருக்கிறதா?



சொத்துக்களைப் பிரிக்கும்போதும் பெண்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். பல்வேறு காலகட்டங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) உருவாக்கப்பட்டு ஆண்களுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டு பெண்ணுக்கு சொத்துக்களில் உரிய வகையில் பங்கு கிடைக்காத நிலையே இருந்தது. இறுதியாக ஒரு சரித்திரப் புரட்சியாக 50 வருடங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005இல் புதிய திருத்தங்களுடன் அமலுக்கு வந்தது.

விவசாய நிலங்கள்.

இந்துக் கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்கள்.

பெற்றோர்கள் வாழும் வீடு

விதவைகளுக்கான உரிமைகள்.

ஆகியவைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதை புதிய இந்து வாரிசுரிமைச் சட்டம் உறுதி செய்கிறது.

திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் (2005) எந்த வகையில் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது. அதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்களிலும் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பது ஒரு அற்புதமான சட்டத்திருத்தம். முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 4(2) விதியை ரத்து செய்து புதிய வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கு முழு உரிமையை அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான சட்டவிதிகள் அமைந்து இருந்தன. அவைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்படி பெண்களுக்கு விவசாய நிலத்தில் பங்கு கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம் உருவானது. கேரளாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கின்படி கணவன், மனைவிகளை கொடுமைப்படுத்துவது 48 சதவீதமாக இருந்தது 18 சதவிகிதம் குறைந்துள்ளது.

விவசாய நிலங்கள் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் என பல பாகங்களாகப் பிரித்தால் அது விவசாயத் தொழிலைப் பாதிக்கும். கூட்டுறவுப் பண்ணை என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என ஒரு சிலர் இந்தச் சட்டத்தைக் குறை கூறுகின்றனர். இது தவறான வாதம். ஆண் வாரிசுகளுக்கு, விவசாய நிலங்களைப் பிரிக்கும்பொழுதுகூடத்தான் நிலங்களின் அளவு குறைத்திட வாய்ப்புண்டு.

கூட்டுக் குடும்பச் சொத்துகளில் பெண்களுக்குரிய உரிமை

கூட்டுக் குடும்பச் சொத்தில் ஒரு குடும்பத் தலைவரின் மகன்களுக்கு முழு உரிமை இருந்து வந்தது. பெண்களுக்கும் அதிலும் திருமணமான பெண்களுக்கும் குடும்பச் சொத்தில்பங்கு உண்டு என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நிச்சயமாக நல்லதொரு தன்னம்பிக்கையை பெண்களுக்கு கொடுத்திடும். அதாவது முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மகனுக்கு நேரடியாக வாரிசுரிமையில் ஒரு பங்கு கிடைத்து வந்தது. ஆனால், பெண்களுக்கும் தற்போது வாரிசு உரிமை கிடைக்கிறது.

இது நிச்சயம் அவளுக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பை அளித்திடும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு குடும்பச் சொத்தை சம பங்காக ஆணுக்கு இணையாக பெண் வாரிசுக்கும் கொடுத்திட வேண்டும் என்பது சரியான சட்ட விதியாகும். நிச்சயம் கள்ளிப் பால் கொடுத்து பெண் சிசுவைக் கொல்லும் செயலும் அரிதாகிவிடும். ஆக ஒரு பெண்ணுக்கு தான் பிறந்த வீட்டிலும் சொத்தில் பங்கு உண்டு. கணவன் வகையில் வரும் சொத்துக்கும் உரிமை உண்டு.

குடும்பச் சொத்தான பரம்பரை வீட்டில் பெண்ணுக்குரிய பங்கு

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 23இல் குறிப்பிட்ட சட்ட விதிகளை ரத்து செய்து குடும்பத்தின் சொத்தான ஒரு பொது வீட்டில் ஆண்மகனைப் போலப் பெண் மகளுக்கும் முழு உரிமை உண்டு என திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் வழி வகுத்துள்ளது. திருமணம் ஆகாமல் இருந்தாலும், திருமணம் ஆகி இருந்தாலும் சம்பந்தப்பட்ட வீட்டில் பெண்கள் வாழ்ந்திட முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் உரிமை உண்டு.

ஒரு சிலர் இதனால் இறந்துவிட்ட குடும்பத் தலைவரின் விதவை மனைவி, அவளின் தாயாருக்கு வீட்டில் உள்ள சொத்தின் பல மடங்கு குறைந்துவிடும் என வாதாடுகின்றனர். ஆனால், இந்தப் புதிய விதியின்படி ஒரு வீட்டில் பிறந்து, வளர்ந்து ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தன் சகோதரர் அனுமதித்தால்தான் அந்த வீட்டிற்கு வந்து வாழ வேண்டிய தர்மசங்கடம் இப்போது இல்லை. உரிமையுடன் தன் பிறந்த வீட்டிற்கு இந்த சட்டத்தினால் வந்து வாழ முடியும் அல்லவா?

பெண்ணுக்கு வாரிசுரிமை சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது திடீரென்று அமல்படுத்தப்படவில்லை. நெடுங்கால போராட்டத்திற்குப் பின் முதலில் 2004ஆம் ஆண்டு சட்டக் கமிஷன் 174ஆவது பரிந்துரைகள், ராஜ்ய சபையில் சமர்ப்பிக்கப்-பட்டு நீண்ட விவாதங்களும், கூச்சல்களும், ஒத்திவைப்புகளும் நடந்தும் ஒரு முடிவு பிறக்கவில்லை. மக்கள் இயக்கங்கள் பலவித-மாகப் போராடியது. பல்வேறு மாதர் சங்கங்கள், மனித உரிமைக் கழகம், மாண்புமிகு முன்னாள் நீதியரசர்கள், நாட்டின் பல்வேறு சிறந்த வழக்குரைஞர்கள் ஆகியோர்களின் தொடர் போராட்டத்தால் ஒரு வழியாக 2005 இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.

 -உண்மை,1-15.17