திங்கள், 1 ஜூலை, 2019

சுயமரியாதை திருமணம் சட்டப்படியானதுதான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை

உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை, ஜூன் 22, -ஜாதி மறுப்புத் திருமணம்  செய்து கொண்ட மூன்று தம்பதிக ளுக்கு சாதி மறுப்புத் திருமண ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக சட்ட மன்ற முன்னாள் உறுப் பினரும் வழக்குரைஞருமான ஆர்.கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:  திருநெல்வேலி மாவட்டம் கம்மங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் நிவேதா வையும், சாத்தூரைச் சேர்ந்த செல்வின் தியாகராசன் என்பவர் சரண்யா கனிமொழி யையும், நாகர்கோவிலைச் சேர்ந்த நடேஷ் -மணி கண்டீஸ் வரியையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். மத்திய அரசின் சமுகநீதித் துறையின் சார்பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நிறு வனம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுகத் தைச் சேர்ந்தவர் என்றால் அந்தத் இணையருக்கு ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்குகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இணையர்களும் முறை யாக சான்றுகள் பெற்று ஊக்கத்தொகை பெறுவதற்கு மனு செய்திருந்தனர். ஆனால் அந்தத் திரும ணங்கள் சாத்திர, சம்பிரதாயங் களுடன் உள்ள இந்து முறை திருமணம் அல்ல என்று டாக்டர் அம்பேத்கர் நிறுவ னத்தால் அவர்களது கோ ரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டன.

எனவே, இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு, இந்து திருமணம் சாத்திர, சம் பிரதாயங்களுடன்தான் இருக்க வேண்டும் என்பது  அவசியமில்லையென சட்டத் திருத்தம் செய்துள்ளது. மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் அணிந்து கொள் வது, தாலி கட்டுவது போன்ற முறைகளில் சீர்திருத்த திரு மணம், சுயமரியாதை திரு மணமும் இந்து சட்டப் படியான திருமணம்தான் என்பதை சுட்டிக்காட்டி சம் பந்தப்பட்ட மூன்று இணை யர்களுக்கும் ஊக்கத் தொகை யை எட்டு  வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இவ்வாறு கடந்த ஜூன் 4- ஆம் தேதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு 22. 6 .19