தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2025

50 ஆண்டுகள் வசித்தாலும்… வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 


புதுடில்லி, நவ.13- வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் வாடகை வீட்டில் அய்ந்து ஆண்டுகள் வசித்தாலும் சரி, அய்ம்பது ஆண்டுகள் வசித்தாலும் சரி, அதை ஒருபோதும் சொந்த வீடாக உரிமைகோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாடகை வீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து இருந்தாலும் அதை உரிமை கோர முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இது பல காலமாக இருந்த குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது..

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஒரு நபர், உரிமையாளரின் அனுமதி யுடன் மட்டுமே அந்தச் சொத்தில் (வீட்டில்) வசிக்கிறார்; எனவே, ‘அட்வெர்ஸ் பொசசன்’ (adverse possession) விதி இங்குப் பொருந்தாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜோதி ஷர்மா என்ற வீட்டு உரிமையாளர், தனது வீட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த விஷ்ணு கோயல் என்பவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். 30 ஆண்டுகளாக வாடகைக்கு இருக்கும் கோயல் இப்போது வீட்டைச் சொந்தம் கொண்டாடுவதாகவும் இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

பின்னணி

கோயல் தனது வாதத்தில், 1980கள் முதல் அவர் தொடர்ந்து அங்கு வசித்து வருவதாகவும், வாடகை செலுத்துவதை நிறுத்திய பிறகும் வீட்டு உரிமையாளர் தன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், அட்வெர்ஸ் பொசசன் விதியின் கீழ் தான் அந்தச் சொத்து தனக்கே சொந்தம் என வாதத்தை முன்வைத்தார்.

லிமிட்டேஷன் சட்டம், 1963இன் கீழ், ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து மற்றும் வெளிப்படையாக உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு இடத்தில் வசித்து அல்லது ஆக்கிரமித்திருந்தால், அந்த நபரே அந்தச் சொத்தின் உரிமையைக் கோர முடியும். இந்த சட்டத்தை மேற்கோள் காட்டியே கோயல் வீடு தனக்கே சொந்தம் என்ற வாதத்தை முன்வைத்தார்.

சட்டம் பொருந்தாது

இருப்பினும், இதைத் திட்ட வட்டமாக மறுத்த ஷர்மா, தொடக்கம் முதலே கோயல் வாடகை கொடுத்தே வசித்து வந்தார் என்றார். மேலும், தனது அனுமதி உடனேயே வசித்து வந்ததால் இந்த இடத்தில் ‘அட்வெர்ஸ் பொசசன்’ சட்டத்தின் கீழ் உரிமையாளராக மாற முடியாது என்று வாதிட்டார். இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் ஆரம்பித்து இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஒவ்வொரு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் கே. வினோத் சந்திரன் இதில் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கினர்.

உச்ச நீதிமன்றம்

வீட்டின் உரிமையாளரான ஷர்மாவுக்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. அதில் வாடகை என்பது சட்ட உறவு என்றும் உரிமையாளரின் சம்மதத்துடனேயே ஒருவர் வசிப்பதால், இது ‘அட்வெர்ஸ் பொசசன்’ கீழ் வராது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீண்ட காலம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார் என்பதாலேயே… அவர் அந்த வீட்டின் உரிமையாளராக மாற்ற முடியாது என்பதை நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.

பல்வந்த் சிங் Vs பஞ்சாப் மாநிலம் (1986) மற்றும் ரவீந்தர் கவுர் கிரேவால் Vs மன்ஜித் கவுர் (2019) போன்ற வழக்குகளிலும் ‘அட்வர்ஸ் பொசசன்’ கீழ் வர வேண்டும் என்றால் ஒருவர் உரிமையாளர் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட சொத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது வாடகை வீடு தொடர்பான விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான உரிமை கோரல் வழக்குகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-விடுதலை நாளேடு,13.11.25

சனி, 1 நவம்பர், 2025

குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது கட்டாய மத நடைமுறை அல்ல! -கேரள உயர்நீதி மன்ற தீர்ப்பு

 

கேரள உயர்நீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!


குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது

கட்டாய மத நடைமுறை அல்ல!

திருவனந்தபுரம், அக். 25- “அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்வது அரசியலமைப்பு கூறும் சமத்து வத்தை உறுதி செய்யும். ஜாதிக்கும் பாரம்பரி யத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், இதுதொடர் பான விவகாரத்தில், அகில கேரள தந்திரி சமாஜம் (AKTS) தாக்கல் செய்த ரிட் மனு வையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

2023-2024ஆம் ஆண்டில் 75 பகுதி நேர சாந்திகள் (அர்ச்சகர்கள்) நியமன நட வடிக்கைகளை கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் (KDRB) மேற்கொண்டது. அப்போது பகுதிநேர சாந்திகளாக நியமிக்கப்படு வதற்கு, எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியுடன், திருவாங் கூர் தேவசம் வாரியம் (TDB) மற்றும் கேரள தேவசம் ஆட் சேர்ப்பு வாரியத்தால் அங்கீ கரிக்கப்பட்ட தந்திர வித்யா பீடங்கள் வழங்கும் அனுபவச் சான்றிதழ்கள் போதுமானது என்று அறிவித்திருந்தது.

பாரம்பரிய வேதப் பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் விடுபடுவார்கள் என்று தந்திரி சமாஜம் கவலை தெரிவித்தபோது, அந்த மாணவர்களும் விண்ணப்பிக்க அரசு அனுமதித்தது. எழுத்துத் தேர்வுக்கு கூடுதலாக, சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிய அறிவை மதிப்பீடு செய்து குறுகிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.

கடந்த 22.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது

இதனிடையே, அர்ச்சகர் பணிக்கு ‘தந்திர வித்யாலயாக்கள்’ வழங்கும் அனுபவச் சான்றி தழை அங்கீகரிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம் (TDB), கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் ஆகியவற்றின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில கேரள தந்திரி சமாஜம் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் வி. ராஜா விஜயராகவன், நீதிபதி கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வில் கடந்த 22.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் கே.ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். “கேரளத்தில் உள்ள சுமார் 300 பாரம்பரிய தந்திரி குடும்பங்களை உள்ளடக்கிய பதிவு செய்யப்பட்ட சங்கமான அகில கேரள தந்திரி சமாஜ மான தாங்கள் தான், தலைமுறை தலை முறையாக அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஆனால் பாரம்பரிய தந்திரி சமூகம் உள்ளிட் டோரை ஆலோசிக்காமல் தந்திர வித்தியா பீடம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. தாந்ரீகக் கல்வியை வழங்கும் நிறுவன ங்களை மதிப்பிடுவதற்கோ அல்லது அங்கீகரிப்பதற்கோ கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியத்திற்கு நிபுணத்துவம் இல்லை” என்று அவர்கள் வாதங்களை வைத்தனர்.

திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் சார்பில் வழக்குரைஞர்  ஜி. பிஜு, கேரள தேவ சம் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் வி.வி.நந்தகோபால் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்கள், “அர்ச்சகர் பணியில், ஒதுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும், அவர்களை அர்ச்சகர் பணிக்கு தயார்ப்படுத்துவதற்கான பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாததை கவனத்தில் கொண்டே தந்திரி கல்வியை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை விரிவுபடுத்த முடிவு செய்தது.

ஓர் ஆண்டு பாடத் திட்டம்!

அதன்படி, தந்திரிகளைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவின் மூலம், ஓர் ஆண்டு பாடத்திட்டத்தை வகுத்து பயிற்சி அளிக்கும் ‘தந்திர வித்யா பீடங்கள்’ போன்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கேரள தந்திரி சமாஜத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும், அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கவும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய நடைமுறைகளை ஒழிக்காமல், அதேநேரத்தில் தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ள அகில கேரள தந்திரி சமாஜம் என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் அமைப்பாகும்.

கேரள அரசுத் தரப்பில்…

அர்ச்சகர்கள் நியமனத்தை தங்களின் பரம்பரை பாத்தியதையாக கருதும் இந்த அமைப்பு, குறிப்பிட்ட பிரிவினரை அர்ச்ச கர்களாக நிலை நிறுத்தும் நோக்கத்தின் அடிப்ப டையிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளது. தகுதியைக் கருத்தில் கொள்ளாமல், ஏழு தலைமுறைகளாக தாந்ரீக பூஜை செய்து வரும் தந்திரி குடும்பங்களுக்கே அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்” என்று கேரள அரசுத் தரப்பில் வாதங்களை வைத்தனர்.

இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், “அர்ச்சகர்கள் நியமனத்திற்குத் தகுதி பெற ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்து வதை, ஓர் அத்தியாவசிய மத நடைமுறை, சடங்கு அல்லது வழிபாட்டு முறையை வலியுறுத்துவதாகக் கருத முடியாது.

அரசியலமைப்பிற்கு முந்தைய காலத்தி லிருந்தே எந்தவொரு வழக்கமோ அல்லது பழக்கவழக்கமோ இருந்தாலும், அது மனித உரிமைகள், கண்ணியம் அல்லது சமூக சமத்து வத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதனை அங்கீகரிக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின்
அங்கீகாரத்தைப் பெற முடியாது

அடக்குமுறையான, தீங்கு விளைவிக்கும், பொதுக் கொள்கைக்கு முரணான அல்லது நாட்டின் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு வழக்கமோ அல்லது நடைமுறையோ, அரசிய லமைப்புச் சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.

எங்களைப் பொறுத்தவரை, கோயிலில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தகுதியானவர்கள் என சான்ற ளிக்கும் தந்திர வித்யாலயா முறை ஒரு முழுமையான செயல்முறையாகவே தோன்றுகிறது. பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், கோயில் கடமைகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தயார்நிலை யைக் குறிக்கும் வகையில், தீட்சை விழாக்க ளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும், அத்தகைய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கூட, இறுதித் தேர்வு மற்றும் முறையாக அமைக்கப்பட்ட குழு வால் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படு கின்றனர்.

இதில் கற்றறிந்த அறிஞர்களைத் தவிர, ஒரு புகழ்பெற்ற தந்திரி குழுவும் அடங்கும். இந்தப் பின்னணியில், பாரம்பரிய அர்ச்சர்களின் கீழ் பயிற்சி பெற்ற நபர்களை மட்டுமே சாந்திகளாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது’’ என்று தீர்ப்பளித்தனர்.

- விடுதலை நாளேடு,25.10.25

சனி, 8 ஜூன், 2024

திருமணம் ஆகாத பெண்ணின் கருக்கலைப்பு உரிமை, நீதிமன்ற தீர்ப்பு


தலையங்கம் : பெரியாரின் முன்னோக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

2022 அக்டோபர் 16-30 2022 தலையங்கம்

மகளிர் உரிமைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கடந்த 29.9.2022 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கொடுத்த ஒரு தீர்ப்பு, சிறந்த அமைதிப் புரட்சிக்கு அடிகோலும் ஓர் அரிய தீர்ப்பாகும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜஸ்டிஸ் D.Y. சந்திரசூட், ஜஸ்டிஸ் A.S.போப்பண்ணா, நி.ஙி.பர்தீவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அது!
திருமணம் ஆகாத பெண்கள் கருவுற்றாலும்கூட அந்தக் கருவை குறிப்பிட்ட கால அளவு -_ கரு வளர்ச்சி அடைந்தாலும், சட்டப்படி பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பை விரும்பாது கருவைக் கலைக்க விரும்பினால் அப்படிச் செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை சட்டப்படி உண்டு என்ற புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்! இது பாராட்டுக்குரியதாகும்.

ஏற்கெனவே, திருமணம் என்ற ஒன்றைச் செய்து-கொள்ள விரும்பாமல், இருவரும் இணைந்து வாழும் _ ‘இணைந்து வாழ்தல்’ (Living together) என்பதற்கு உரிமை உண்டு என்ற முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பெண்ணுரிமையைக் காக்கும் புரட்சிகரமான தீர்ப்பாகும்!
அப்படிக் கூடிவாழும் இணையருக்கு குழந்தை கருத்தரித்த நிலையில், அது தேவையில்லை என்று அந்தத் தாய் கருதுவாரேயானால், அப்படிச் செய்ய அவருக்கு உரிமை தராவிட்டால் அது, திருமணம் செய்துகொண்டு வாழும் இணையருக்கு கருத்தரித்த நிலையில், அக்குழந்தை தேவையில்லை என்று முடிவு செய்து கருக் கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி உரிமை இருக்கும்போது, திருமணம் என்ற ஒரு சடங்கு இருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு வகையில் பாரபட்சம் _ வேற்றுமைப்படுத்தல் (Discrimination) சட்டப்படி என்று நீதிபதிகள் மிகவும் தெளிவாக இந்தப் புதிய தீர்ப்பில் பொருத்தமாக _ எவரும் மறுக்க முடியாத _ பேதமில்லாது சீர்மையுடன் சட்டம் இருக்க வேண்டும் என்பதால் திருமணமாகாமல் இணைந்து வாழும் இவர்களில் மகளிர் விரும்பும்போது ஏன் மறுக்க வேண்டும்? என்ற நெற்றியடிக் கேள்வியை நீதிபதிகளின் தீர்ப்பு எழுப்புகிறது!
மதங்களின் மூடநம்பிக்கை _ ஆண்டவன் கொடுக்கிறான்; மனிதன் அந்தக் கருவைக் கலைக்கலாமா என்று பத்தாம் பசலித்தன நம்பிக்கை அடிப்படையிலான கேள்வி, கருக்கலைப்புச் சட்டம் முன்பு நம் நாட்டில் வந்தபோது கேட்கப்பட்டது.

இன்றும் வளர்ந்த நாடுகள் என்று தங்களைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் கிறித்துவம் மற்ற மதவாதிகள் _ குறிப்பாக கத்தோலிக்க நர்சுகள்கூட கருக்கலைப்பு செய்ய மறுத்து ஸ்காட்லாந்தில் ஒரு பரபரப்பான வழக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தது!
மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு _ குடும்பக் கட்டுப்பாடு _ கர்ப்ப ஆட்சி என்பதைத் தந்தை பெரியார்தான் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியும் பேசியும் நம் நாட்டு மக்களுக்குப் புரியச் செய்ததை ஏற்று, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது!
ஆண்டவன் கொடுத்த பிள்ளை, கடவுள் தந்த சொத்தல்லவா என்றெல்லாம் கூறியது பகுத்தறிவுக்கு விரோதமானது.

டெஸ்ட் டியூப் பேபி _ சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுதல், ‘வாடகைத்தாய்’ இப்படி நடைமுறை மாற்றங்கள் என்று மாறுதல் வெகுவேகமாக வந்துவிட்ட பிறகு, ஏன் இனியும் பழமைக் குட்டையில் ஊறவேண்டும், சனாதனத்தில் விழுந்து புரள வேண்டும்? என்ற கேள்விக்குச் சரியான விடைதான் உச்சநீதிமன்றத்தின் முற்போக்குத் தீர்ப்பாகும்!
தந்தை பெரியாரின் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களின் பல்வேறு செயலாக்க வடிவமும், அதனை சட்டப்படி ஏற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காலத்தை வென்றவர் பகுத்தறிவுப் பகலவன் என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு அல்லவா?
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி! அந்த விஞ்ஞானியின் விவேகத்தை எவராலும் புறந்தள்ளிவிட முடியாது. வெல்வது பெரியாரே! என்பது இப்போது புரிகிறதல்லவா?

– கி.வீரமணி
ஆசிரியர்


வெள்ளி, 7 ஜூன், 2024

ஆக்கிரமிப்புக் கோயில், வழிபாட்டு இடமா? அருமையான தீர்ப்பு!


தலையங்கம் : 

2022 அக்டோபர் 01-15 2022 தலையங்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 23.9.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் எஸ்.வைத்தியநாதன், ஜஸ்டிஸ் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது!
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில், பொதுவழித் தடத்தை மறித்து ஆக்கிரமிப்பாகக் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒன்றை இடித்துத் தள்ளிட மேலும் இரண்டு மாத அவகாசத்தைக் கொடுத்துள்ளனர்!

ஏற்கெனவே இந்த வழக்கினை விசாரித்து ஓர் அமர்வு _ அதில் ஜஸ்டிஸ் தமிழ்ச்செல்வி அவர்களும் இடம் பெற்ற அமர்வு _ அஞ்சலை அம்மாள் என்பவர் தனது வழித்தடத்தை மறைத்து, கட்டப்பட்டுள்ளதாகக் கூறும் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றிட _ ஆணை பிறப்பித்தும் அவ்வாணைகள் செயல்படுத்தப்படாமல் அப்படியே ‘கிணற்றில் போட்ட கல்லாக’ கிடந்த நிலையில் சென்னை மாநகராட்சி, காவல்துறை, ஆணையர்கள் மீது அவதூறு வழக்கும் தொடுக்கப்பட்ட இந்த ரிட் மனுவின் மீது தீர்ப்புக் கூறப்பட்டது.
மிக அருமையான கருத்தினை நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“எந்தக் கடவுளும் யார் வீட்டுக் கதவையும் தட்டி, பொதுச் சொத்தினை ஆக்கிரமித்து எங்களுக்குக் கோயில் கட்டித் தாருங்கள்’’ என்று கோயிலையோ, சர்ச்சையோ, மசூதியையோ கட்டித் தர வேண்டுகோள் விடுக்கவில்லை!
முன்பு கடவுளைக் கும்பிடச் சொல்வோருக்கு மன அமைதி விரும்பிச் சென்ற இடங்களாக இருந்த கோயில்கள் இப்போது _ அண்மைக் காலத்தில் _ பேதங்களை நிலைநாட்டும் இடங்களாகவும், தங்களது அதிகாரங்களைக் காட்டும் மய்யங்களாகவுமே
(கோயில்கள்) பயன்படும் நிலை உள்ளது!

அதைவிட, தற்போது வழிபாட்டு இடங்கள், பிரச்சாரத்திற்கு உரியவைகளாகவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் அமைக்க, வன்முறை, பயங்கரவாதம் இவைகளை ஏற்படுத்தி விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலி கொள்வதாகவும் சொத்துகளை நாசப்படுத்தவுமான சூழ்நிலையே பெரிதும் நிலவுகிறது.
வழிபாட்டு இடங்கள், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் இடங்களாகவும் சட்ட விரோதச் செயல்களின் கூடாரமாகவும் இருக்கும் நிலையே காணப்-படுகிறது.
பல இடங்களில் பொது இட ஆக்கிரமிப்புகளை மறைப்பதற்கு (கோயில்கள் போன்ற) வழிபாட்டு இடங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அதனை மூடி மறைக்கும் உபாயமாகவும் பயன்படுத்ப்படுகின்றன _ ஆக்கிரமிப்பாளர்களால். இதனால்தான் முன்பு இதே நீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் அந்த ஆக்கிரமிப்புக் கோயிலை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தும் அதனை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினர்.
இப்போது நாங்கள் இரண்டு மாதத் தவணை தருகிறோம்; அதற்குள் இடித்து அப்புறப்-படுத்த வேண்டும் என்று திட்டவட்டமான ஆணையை தீர்ப்பின் மூலம் வழங்கியுள்ளதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தமிழ்-நாட்டில்தான் அதிகமான ஆக்கிரமித்த நடைபாதைக் கோயில்கள் 36,000க்கும் மேல் உள்ளன என்று கூறி அகற்றிட தலைமைச் செயலாளருக்கு ஆணை பிறப்பித்தும், முந்தைய ஆட்சியில் அதை அகற்றும் பணி நடைபெறவே இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆகம விதிகள் பற்றி ஆலாய்ப் பறக்கும் சனாதன வக்காலத்து வீரர்கள், கோயில் பாதுகாப்புக் குழு என்கிற போர்வையில் திடீர் அவதாரம் எடுத்த பெரிய மனிதர்கள் கூறட்டும் இதுபோன்ற கோயில்களும் அவற்றில் நடைபெறும் பூஜைகளும் ஆகம விதிகளின்படிதான் நடைபெறுகின்றனவா?

ஆகம விதிகள்படியா இவை கட்டப்-பட்டன? (அப்படிக் கட்டப்பட்டதாக வாதத்திற்காகச் சொல்லப்பட்டாலும் சட்டம் ஏற்கக் கூடியதா?) அல்ல என்னும்போது அவர்கள் அல்லவா முதலில் இத்தகைய நடைபாதை ஆக்கிரமிப்புப் கோயில்கள் மற்றும் வழிபாட்டு நிலையங்கள் பற்றிக் குரல் எழுப்பி ‘இயக்கம்’ நடத்த முன்வரவேண்டும்?
எப்படி இருந்தாலும் அருமையான கருத்துகளை சட்டபூர்வமாக எடுத்து வைத்து நீதிபதிகள் தீர்ப்பு _ ஆணைக்காக பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மற்ற தனிநபர் ஆக்கிரமிப்புகளைப் பற்றி அதிகம் பேசுவோர், ஓங்கிக் குரல் எழுப்ப இதில் ஏன் மவுனசாமியார்களாக உள்ளனர் என்பதே நமது நியாயமான கேள்வியாகும்.

– கி.வீரமணி
ஆசிரியர்

வியாழன், 6 ஜூன், 2024

தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40 மதிப்பெண் கட்டாயம்; அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

5-6

அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

சென்னை, ஜூன் 6 டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணிகளுக்கான தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியா ளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி, கடந்த ஜனவரி யில் வெளியிட்டது. இந்த அறி விப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு,திறனறிவு தேர்வுத் தாள் மதிப்பீடுசெய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் உள்ளிட்ட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு ஏற்கெனவே விடுமுறை கால அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாகதொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்றும், இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த அரசாணைப்படி ஏற்கெனவே பல தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது.அரசுப்பணிகளுக்கு தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்ற அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளு படி செய்தனர்.

புதன், 10 ஜனவரி, 2024

மதவாத சக்திகளுக்குச் சரியான பாடம்! பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுவித்தது செல்லாது : விடுவிக்கப்பட்ட 11 பேரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும்


4-17

புதுடில்லி, ஜன.9- பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தாக்குதலில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த வன்முறையில் அய்ந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனையே மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறை நன்னடத்தையை அடிப் படையாக் கொண்டு குஜராத் அரசு தண்டனைக் காலம் முடிவடைதற்கு முன்பே விடுதலை செய்து அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கோத்ரா வன்முறையின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, தனது குடும்ப உறுப் பினர்களைக் கொன்ற 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அவர் களுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தும் சிறை நன்னடத்தை எனக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுவித்துள்ளது.
குறிப்பாக சம்பவம் நடந்தது குஜராத் என்றாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியது மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம்தான். அதனால் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் குற்றவாளி களின் அனைவரது விடுதலையையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதேப்போன்று பல பொதுநல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் நேற்று (8.1.2024) வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவின், குற்றவாளிகளுக்கு எதிரான ரிட் மனு விசாரணைக்கு உகந்ததாகும். மேலும் பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து அந்த மாநில அரசுதான் முடிவெடுக்க வேண் டும். பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு செல்லாது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்ட வர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் பெண்களின் மரியாதையும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இதில் தன்னிச்சையான உத்தரவுகளை விரைவில் சரி செய்து, பொதுமக்களின் நம்பிக்கையின் அடித் தளத்தை தக்கவைத்துக் கொள்வது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். குறிப்பாக தண்டனை என்பது பழிவாங்குவதற்காக கிடையாது. அது சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பல உண்மைகளை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிவித்தும் குஜராத் அரசே முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்ற ஆணையை பெற்றுள்ளனர். அது செல்லாது அதனால் கோத்ரா வன்முறையின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 முக்கிய குற்றவாளிகளின் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. அவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் சிறையில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

சட்டத்தின் ஆட்சியில் இரக்கத்திற்கு இடம் கிடையாது

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பில் பிளாட்டோ உள்ளிட்ட தத்துவஞானிகளின் கோட்பாடுகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில்,‘‘தண்டனை என்பது சீர்திருத்தத்திற்காகத் தானே தவிர பழிவாங்குவதற்காக கிடையாது. ஒரு குற்றவாளியை குணப்படுத்த முடிந்தால் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவத் துறையின் குணப்படுத்தும் கோட்பாட்டை நீதித்துறையுடன் சேர்த்து இணைக்கிறது. ஆனால் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்பதும் மிக முக்கியம். பெண்கள் மரியாதை பெறுவதற்கு உரியவர்கள்.
ஆனால் அதே பெண்களுக்கு எதிராக இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இவை அனைத்தையும் தான் இந்த வழக்கின் சாரம்சமாக நாங்கள் கையாண்டிருக்கிறோம். அதன்படி பார்த்தால் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது. ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சிதான் நிலைநாட்டப்பட வேண்டும். இங்கு அனுதாபத்திற்கும், இரக்கத்திற்கும் எந்த இடமும் கிடையாது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் நீதிமன்றங்களால் நீதியை நிலை நாட்டவே முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத் அரசுக்கு கண்டனம்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பில்கிஸ் பானு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மகாராட்டிரா மாநில அரசுக்குதான் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் அரசு சரியாக வாதிட்டுள்ளது. ஆனால், பொய்யான தகவல்களை கூறி முன்கூட்டி விடுதலை குறித்து குஜராத் அரசு முடிவெடுக்கலாம் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகு குஜராத் தனது நிலையை மாற்றிக் கொண் டுள்ளது. குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராட்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

மாலை போட்டு வரவேற்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கின் கொடூர பி.ஜே.பி. குற்றவாளிகள்!

கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உள்பட 14 பேரை துடிக்க துடிக்கக் கொலை செய்த குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களைச் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் தவறான முடிவை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு – உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர்.

5-15-300x200
சிறையிலிருந்து வெளிவந்தவர் களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க. பிர முகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தியது நினைவில் இருக்கலாம்.
அதே போல் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையில் சில நாட்களே இருந்தனர். பெரும்பாலான நாட்கள் பிணையில் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருந்தனர்.
பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க.வினர், ஒன்றிய அமைச்சர்கள் ஆகவில்லையா?
இதெல்லாம் பா.ஜ.க., சங் பரிவார்க் கூட்டத்தில் சாதாரணம்தானே!

புதன், 25 அக்டோபர், 2023

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  

இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த வழக்கை இன்று   (22.8.2023) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும்  என்றும்,  ஆகமங்களைப் பயின்ற யார் வேண்டுமா னாலும்  அர்ச்சகர் ஆகலாம்  என்றும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது .

சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி - சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!

 

 4

புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் வகையில், இந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ரவிந்த் குமார் அடங் கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலான சென்னை உயர்நீதிமன்றத்தின் பார்வை குறுகியது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்துத் திருமணச் சட்டத்தில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மூலம் உட்பொதிக்கப்பட்ட பிரிவு 7A-, சுயமரியாதைத் திருமண முறையை அடிப்படையாகக் கொண் டது. இந்த பிரிவின்படி, இரண்டு இந்துக்கள் சடங்குகளைப் பின்பற்றாமல் அல்லது ஒரு மதத் தலைவரால் நிச்சயிக்கப்படாமல், தங்கள் நண்பர் கள் அல்லது உறவினர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் திருமணத்தை அறிவித்து, திருமணம் செய்து கொள்ளலாம். இது அய்ம்ப தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலும் உள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த நடைமுறைக்கு எதிராக அமைந்தது.

"வழக்குரைஞர்கள் செய்துவைக்கும் திரு மணங்கள் செல்லாது; என்றும் சுயமரியாதைத் திருமணம் (சுயமரியாதைத் திருமணம்) இரகசி யமாக நடத்தப்பட முடியாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யும் கடந்த 2023 மே 5 அன்று தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் 2023 ஏப்ரலில் திருப்பூரில், வழக்குரைஞர்கள் முன்னிலையில் தனது தோழியை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் பெற் றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “வழக்கு ரைஞர்கள் முன், அவர்களின் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது" என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும், "மனுதாரருக்கு சுயமரியாதை திரு மணம் நடந்ததாக சான்றளித்த வழக்குரைஞர்க ளிடம் பார் கவுன்சில் மூலமாக விளக்கம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும்; "இது போன்ற திருமணம் ஏதாவது நடந்ததாக சான் றிதழ் வழங்கியிருந்தால் அவர்களுக்கும் நோட் டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து, இளவரசன் உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு விசாரித்து திங்களன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 7கி-இன் (தமிழ்நாட்டில் பொருந்தும்) படி, சுயமரி யாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சிறப்பு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நாக லிங்கம் எதிர் சிவகாமி வழக்கிலும் (2001) "7 ஷிசிசி 487' மூலம் பிரிவு 7கி' உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, இதன் அடிப்படை யிலான சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவையில்லை, என்று முக்கியமான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "ஒவ்வொரு திருமணத்திற்கும் பொது நிச்சய தார்த்தம் அல்லது பொது அறிவிப்பு தேவை என்ற சென்னை உயர் நீதிமன்றம் பார்வை, அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாக வும்; திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள், குடும்ப எதிர்ப்பு அல்லது தங்களின் பாதுகாப்பு குறித்த பயம் போன்ற பல்வேறு காரணங்களால் பொது அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்; அதையும் மீறி, இது போன்ற சந்தர்ப்பங்களில், பொது அறிவிப்பைச் செயல் படுத்துவது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்.

வயது வந்த இருவர்- சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்கு குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது கடினம் அல்ல. அதனை நீதிமன்றங்கள் பார்க்காமல் விடுவது, அரசியல மைப்பின் 21-ஆவது பிரிவு வழங்கும்-வாழ்க் கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "வழக்குரைஞர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தின் அதி காரிகளாக, ஆலோசகராக, வழக்குரைஞராகச் செயல்படும்போது, திருமணங்களை முன்வந்து நடத்திவைக்கக் கூடாது. அதேநேரம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்கள், உறவினர்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் திருமணங்களில் பங்கு வகிக்க உரிமை உண்டு" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்'' -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

 

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!

பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!

1

சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம்.  தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைத் திரு மணத்தை அறிமுகப்படுத்தினார் -  இடையில் கூடத் தடை ஏற்பட்டாலும், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது; காரணம், பெரியார் ஒரு விஞ்ஞானம் - அதுவே இறுதியில் வெல்லும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங் களுக்குப் பொது அறிவிப்புத் தேவையில்லை.''

‘‘இந்து திருமணச் சட்டம் 1955-இன்படி, வழக்குரைஞர் களின் அலுவலகத்தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது  (சில மாதங்களுக்குமுன் வந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு). தற்போது வழக்குரைஞர்கள் அலுவலகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்'' என்று மிக அருமையான, முற் போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உருவாக்கிய வாழ்க்கை இணையேற்பு விழா - எளிய முறையில் இரண்டு சாட்சியங்களோடு நடத்திக் கொள்ள லாம். ஆண் - பெண் சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு, நட்பாளர்களாக வாழ்விணையர்கள், ஜாதி, மதச், சடங்குகளுக்கு இடமில்லாத ஒருவித அன்பும், புரிதலும் மிக்க எளிய மணமுறைதான் அமைதிப் புரட்சி பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்த சுயமரியாதைத் திருமண முறை.

இந்தத் திருமண முறை செல்லாது என்று 1953 இல் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் (உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்) தந்தை பெரியாரே சாட்சியம் கூறிய வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை - பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். (தெய்வானை ஆச்சி க்ஷிs சிதம்பரம் வழக்கு).

அத்தீர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமலேயே பல்லாயிரக்கணக்கானத் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்களாகத் தொடர்ந்து நடந்தே வந்தன!

1967 இல் சுயமரியாதைத் திருமணத்துக்கு 

சட்ட வடிவம் கொடுத்தார் அறிஞர் அண்ணா

1967 இல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமை யிலான அமைச்சரவை சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் (இந்துத் திருமணச் சட்டத் திருத்தம் 7Aஎன்ற புதிய பிரிவு இணைப்புமூலம்) என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, அதற்குப் பின்னோக்கிய கால அதிகாரத்தையும் (with retrospective effect) அளித்து தந்தை பெரியார் மகிழ, அவருக்கே காணிக்கையாக்கி, அறிஞர் அண்ணாவின் தி.மு.க. அரசு செய்து புதிய வரலாறு படைத்தது!

அதன்பின்னர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் அத்திருத்தம் செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்; அதனையும் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றே அருமையான தீர்ப்பினை வழங்கினர்!

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமை, புரட்சி, பொதுக்கூட்ட மேடைகளில்கூட எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது - சிக்கனமும், எளிமையும் கலந்த முறையில். இப்போது 70 ஆண்டுகளில் என்னே வெற்றியின் விரிவு - வெளிச்சம்!

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தலாம் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

2

திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலை யில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன் னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்'' என்ற மிக முற் போக்கான தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையாக அர சமைப்புச் சட்ட 21 ஆவது பிரிவின்படி சிறப்பான தீர்ப்புத் தந்துள்ளனர்.

‘‘வயது வந்த இருவர், சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்குக் குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது, கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது, அரசமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்'' என்று இந்த நீதிபதிகள் பழைமையின் - சனாதனத்தின் மண்டையில் ஓங்கி நீதியைத் தட்டி தட்டித் தந்துள்ளனர்!

பெரியார் அன்று சொன்னார் - 

உச்சநீதிமன்றம் இன்று சொல்லுகிறது!

இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், அவருக்கே உரிய பாணியில், ‘‘வயது வந்த ஒரு ஆணும் - பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி முடிவு செய்யும்போது, அதில் மூன்றாவது நபர் குறுக்கிடுவது அதிகப்பிரசங்கித்தனம் - ஆணவம் கலந்த அகம்பாவ எஜமானத்தனம்'' என்று கூறி, சுயமரியாதைச் சூடு போட்டார்!

இன்று உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக இதனைக் கூறும் அளவுக்கு பெரியார் கொள்கை வெற்றி பெற்று தகத்தகாய ஒளிவீச்சுடன் உலா வருகிறது!

‘‘எனது கொள்கை ஒருபோதும் தோல்வி அடையாது; வேண்டுமானால், வெற்றிகள் காலதாமதம் ஆகலாம்'' என்றார் தந்தை பெரியார்.

அது எவ்வளவு சரியான முன்னோட்ட முத்தான பிரகடனம் பார்த்தீர்களா? அதுபோலவே,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - நிறைவேற்றம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை 55 ஆண்டுகளான நிலையில், உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால இரண்டு தீர்ப்புகள் - கடந்த வாரத்தில் தொடர்ந்து, ‘‘ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செல்லாது'', ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் - தகுதியுடன் நியமனம் செய்யப்படுவது தொடருவதற்கு எத்தடையும் இல்லை'' என்று கூறி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களது ‘திராவிட மாடல்' ஆட்சியில், அரை நூற்றாண்டாக சட்டப் போராட்டத்திலிருந்த ஜாதி - தீண்டாமை ஒழிப் புக்கான இந்த  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமன வெற்றி!

பெரியார் கொள்கை ஒரு விஞ்ஞானம் - 

அதுவே இறுதியில் வெல்லும்!

தந்தை பெரியாரின் வெற்றி!

திராவிட இயக்கத்தின் வெற்றி!

நூற்றாண்டு விழா நாயகர் கலைஞரின்

முழு வெற்றியாக இப்போது ஜொலிக்கிறதே!

‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

பேரெதிர்ப்பால் பெருங்கொள்கை (திராவிடம்) தோற்பதுண்டோ?'

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! - புரிகிறதா?

இதனை ஊர் அறிகிறது!

உலகம் அறிந்து மகிழ்கிறது, வரவேற்கிறது!

எனவேதான், சனாதனம் அலறுகிறது;

ஆரியம் பதறுகிறது!

பெரியார் - திராவிடர் கொள்கை என்றும் வெல்லும்!

காரணம், இது ஒரு ‘‘விஞ்ஞானம் - மெய்ஞானம்!''

உண்மை அறிவு - அனுபவம் கலந்த வெற்றி!

அறிவியல் - உண்மை அறிவும் சொத்து!

புரிந்துகொள்வீர்! பகிர்ந்து கொள்வீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023

சனி, 5 ஆகஸ்ட், 2023

பாராட்டத்தக்க தீர்ப்பு கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் நுழையக் கூடாதா?


- உயர்நீதிமன்றம் சரியான கேள்வி

சென்னை, ஆக 5  கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக் குள் நுழைய அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட் டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த பெண், தங்கமணி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,"ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுக்காவில் பெரிய கருப்பராயன் கோயில் உள்ளது. எனது கணவர் இந்த கோயிலில் பூசாரியாக இருந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார். தற்போது, இந்த கோயிலில் ஆடி திருவிழா வரும் 9 மற்றும் 10ஆ-ம் தேதிகளில் நடக்கிறது. இந்தத் திருவிழாவில் நானும் எனது மகனும் கலந்து கொள்ளவிருந்தோம். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் நான் கணவரை இழந்தவள் என்பதால் என்னை கோயிலுக்குள் வரக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். இத னால் நான் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.எனவே, எனக்கும் என்னுடைய மகனுக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நேற்று (4.8.2023) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணவரை இழந்தவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இது தவறானது. மனுதாரரை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பது நியாயமற்றது. எனவே அவரை கோயில் திரு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அவருக்கு உரிய காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

திங்கள், 26 ஜூன், 2023

உயிரற்ற உடலோடு உடலுறவு கொள்வது பரிகாரமாம் - கடுமையான தண்டனைக்கு சட்டமியற்ற உயர்நீதிமன்றம் அறிவுரை - பாணன்




18
எரியும் சிதையிலிருந்து சிறுமி பிணத்தை இழுத்துப்போட்டு பாலியல் வன்கொடுமை

நெக்ரோபிலியா

ரங்கராஜு வாஜபேயி ஸ்s கருநாடகா மாநிலம் வழக்கில் கருநாடக உயர்நீதிமன்றம் கூறுகையில், “நெக்ரோஃபிலியா” என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான ஈர்ப்பு என்று குறிப்பிட்டது. 

இந்தியாவில் நெக்ரோபிலியா 

ஒரு குற்றமா?

இன்றுவரை, அய்.பி.சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் குற்றங்களின் கீழ் “நெக்ரோபிலியா” ஒரு குறிப்பிட்ட குற்றமாக பட்டியலிடப்படவில்லை, ஆனால் நீதிமன்றம் 297 இன் கீழ் சட்டம் கொண்டுவரலாம் எனக் குறிப்பிட்டது. மனித சடலத்திற்கு அவமதிப்பு என்ற 297ஆவது பிரிவில் சட்டம் கொண்டு வரலாம் எனக் கூறியது இந்தியாவில் பிணங்களோடு உடலுறவு கொள்வது சடங்காகவும் பரிகாரமாகவும் கருத்தப்படுகிறது. சாஸ்திரங்களிலும் உள்ளதாக சாமியார்கள் கூறுவார்கள்

17

இடுகாட்டில் இறந்த பெண்ணின் உடலோடு இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை

இறந்துபோன வயதுக்கு வராத சிறுமிகளின் உடலை சிதையிலிருந்து இழுத்துப் போட்டு பாலியல் ரீதியில் அந்த உடலோடு தொடர்பு கொள்ளும் கொடூரம் ஒன்றும் உத்தரப்பிரதேசம், அரியானா, மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகளில் நடக்கிறது. 

2015ஆம் ஆண்டு குடும்பத்தகராற்றில் தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடலோடு சில சாமியார்களும் அவர்களோடு வந்தவர்களும் பாலியல் உறவு கொண்ட செய்தி வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதே காசியாபாத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதே போன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் இதை மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்கள் இவ்வாறு செய்தனர் என்று செய்திவந்தது. 

அரியானா மாநிலத்தில் சில நபர்கள் இறந்த வயதுக்கு வராத சிறுமியின் உடலை எரியும் சிதையிலிருந்து இழுத்து வெளியே போட்டு பாலியல் ரீதியான உறவு கொண்டனர் என்ற செய்தி 02.05.2023 அன்று வெளிவந்தது. ஊர்மக்கள் அவ்வாறு செய்த 5 பேரைப்பிடித்து காவல்துறையிடம் கொடுத்தனர். 

ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று பார்த்தால்... 

திருமணமாகாத, குழந்தைப்பேறு இல்லாத, மற்றும் அதிக நாள் பாலியல் ரீதியில் உல்லாசமாக இருக்க சாஸ்திரங்களில் இறந்துபோன கர்ப்பிணிப்பெண், வயதுக்கு வராத சிறுமி, திருமணமாகாத பெண் போன்றோர்கள் இறந்த பிறகு அவர்களின் உடலோடு உறவு கொண்டால் திருமணம் நடக்கும், குழந்தை பேறு உண்டாகும், நீண்ட நாள் பாலியல் ரீதியில் உல்லாசமாக வாழலாம் என்று சாமியார்கள் கூறுவதை வைத்து சுடுகாடுகளில் சாமியார்களோடு பெரும் செல்வந்தர்கள் சுற்றித்திரிவார்கள். அவர்களுக்கு இவ்வாறு இறந்துபோன பெண்களின் விவரம் கிடைத்தால், அந்த இடத்திற்குச் சென்று இடுகாட்டை பராமரிக்கும் நபர்களுக்கு பெரும் தொகை கொடுத்து இவ்வாறு செய்வது அடிக்கடி நடக்கும் ஒரு கொடூரம்.. அவ்வப்போது இது செய்தியாக வெளிவருகிறது. 

16

 காசியாபாத்தில் கல்லறையில் இருந்த கர்ப்பவதி உடலோடு பாலியல் வல்லுறவு

தமிழ்நாட்டில் கூட சமீபத்தில் ஒரு அகோரி சாமியார் பிணத்தின் மீது அமர்ந்து பூஜைகள் செய்தார் என்ற செய்தி வெளியானது. இவ்வாறு நடக்கும் நிகழ்வு தமிழ்நாட்டிலும் அடிக்கடி செய்தியாக வருகிறது. மக்கள் கூட்டம் இருக்கும்போதே பிணத்தின் மீதமர்ந்து பூஜை செய்பவர்கள் தனிமையில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது பெரும் கேள்வியாகும்.

நெக்ரோபிலியாவை 

தடை செய்த நாடுகள்?

நெக்ரோபிலியாவைத் தண்டிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட விதியும் இந்தியாவில் இல்லை என்றாலும், ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச் சட்டம், 2003, பிரிவு 70 இன் கீழ் நெக்ரோபிலியா, குற்றம் என சட்டம் இயற்றி உள்ளது. இதற்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இது தவிர, கனடா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவும் பல்வேறு சட்டங்களின் கீழ் நெக்ரோபிலியாவைத் தடை செய்கின்றன.

கருநாடக நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது என்ன?

அய்பிசி 377ஆவது பிரிவின் கீழ் விதிகளை திருத்தியமைக்க வேண்டிய நேரம் இது என நீதிமன்றம் வலியுறுத்தியது. அதே நேரம் புதிய விதியை இயற்றலாம் எனவும் பரிந்துரைத்தது. அதில் நெக்ரோபிலியா குற்றத்திற்கு அபராதத்துடன், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கலாம் என பரிந்துரைத்தது.

கருநாடக உயர் நீதிமன்றத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது.

மே 30 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது. இந்திய தண்டனைச் சட்டம் 376ஆவது பிரிவின் கீழ் தண்டனை பெறாது. ஏனெனில் அதற்கு சட்டத்தில் எந்த விதியும் இல்லை என்று கூறியது.

மேலும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பி.வீரப்பா மற்றும் வெங்கடேஷ் நாயக் அடங்கிய அமர்வு, இறந்தவர்களின் கண்ணியத்தை காக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரை செய்தது, அய்பிசி 377ஆவது பிரிவின் கீழ் திருத்தம் செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறியது. மேலும் இது ஒன்றிய அரசு திருத்தம் செய்வதற்கான நேரம் என்றும் கூறியது.

கருநாடக உயர் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு என்ன?

ஜூன் 25, 2015 அன்று, 21 வயதான பெண் தனது கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட ரங்கராஜு அந்த பெண்ணைப் பிடித்து இழுந்து வாயை மூடி, அருகிலுள்ள புதருக்கு இழுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து, அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது அய்பிசி பிரிவு 302 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். பிறகு அவர் அந்த பெண்ணை “பாலியல் வன்கொடுமை” செய்தார்.

காவல்துறையினர் ரங்கராஜு மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அய்பிசி பிரிவு 302 மற்றும் 376 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சாட்சியங்களை ஆராய்ந்த செஷன்ஸ் நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணை கொலை செய்து பின்னர் அப்பெண்ணின் உடலை “பாலியல் வன்கொடுமை” செய்தார் என்பது சந்கேத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆனதாக தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுங் காவல் சிறைத்தண்டனையும், கொலை குற்றத்திற்கு ரூ. 50,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, ரங்கராஜுக்கு மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ரங்கராஜு கருநாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

அய்பிசியின் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை “பாலியல் வன்கொடுமை” செய்ததற்காக 376ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. உயிரற்ற உடலை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 376ஆவது பிரிவின் கீழ் தண்டனை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறியது.

“குற்றம் சாட்டப்பட்டவர் உயிரற்ற உடலில் உடலுறவு கொண்டார்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், இது பிரிவுகள் 375 (பாலியல் வன் கொடுமை) மற்றும் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) ஆகியவற்றின் கீழ் குற்றமாகுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்றனர்.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 மற்றும் 377 பிரிவுகளின் விதிகளை கவனமாகப் படித்தால், இறந்த உடலை மனிதனாகவோ அல்லது நபராகவோ அழைக்க முடியாது என்பது தெளிவா கிறது. இதனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 அல்லது 377 இன் விதிகள் ஈர்க்கப் படாது, ”என்று நீதிமன்றம் கூறியது.

பிரிவு 376 (பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) கீழ் தண்டனைக் குரிய எந்த குற்றமும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், “இறந்த உடலில் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா தவிர வேறில்லை” என்று தெளிவுபடுத்தியது.