வியாழன், 22 ஜூலை, 2021

மருத்துவ படிப்புகளில் அ.இ.ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்

 

 சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னைஜூலை 19 மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 69 சதவீதத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுகஉள்ளிட்ட கட்சி களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண் டும் என 2020 ஜூலையில் உத்தரவிட்டதுஅதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுதமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என பரிந்துரை அளித்தும்உச்சநீதிமன் றத்தில்  நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போதுதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன்உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும்உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத் தரவு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்தும்அதை அமல்படுத்த வில்லை எனவும்இது  நீதிமன்ற  அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார்.

ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் மற்றும் ஒன்றிய அரசு வழக் குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர்மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டுதற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும்இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்

மேலும்எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும்இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஒன்றிய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டதுஇதையடுத்துஉயர்நீதிமன்ற உத்தர வின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் எப்படி அமல் படுத்தப்படும்இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுவிசார ணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத ஒதுக்கீடு!

 

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரைஜூலை 21- குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20% ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த டிஎன்பி எஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு முடிவு களை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற் பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன்புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்ததுஅப்போது அரசு தரப்பில்ஜனவரி 2020இல் குரூப் 1 தேர்வுக்கு முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளதுமீண்டும் உயர்நீதமன்ற உத்தரவின்படி குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின் பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப் பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், 2020 பிப். 9 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சிவெளியிட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவில் இருந்தும் விலக்கு தர முடியாது என்றும்ஆங்கிலவழியில் பள்ளி படிப்பை முடித்து விட்டுபட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யலாமாஎன கேள்வி எழுப்பினர்தொடர்ந்துமதுரை காம ராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்களில் தமிழ் வழி யில் படித்ததற்கான சான் றிதழை முறைகேடாக பெற்று வேலைக்கு சேர் கின்றனர் அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசு பணியா ளர் தேர்வாணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 2020 டிஎன்பி எஸ்சி குரூப் 1 முடிவிலி ருந்து 1 வகுப்பு முதல் பட் டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த டிஎன்பி எஸ்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்!!

 

புதுடில்லிஜூலை 21 தமிழ் நாட்டில் மருத்துவப் படிப் பில் அரசு பள்ளி மாண வர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர் கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்ததுநீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்ததுஇதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவித உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

ஆனால் இந்த சட்டத் திற்கு எதிராக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்க ளுக்கும் இதே உள் ஒதுக் கீட்டை வழங்க வேண்டும் என பல கல்வி நிறுவனங் கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதுஆனால் இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வாதங்களை ஏற் றுக்கொண்ட நீதிமன்றம், 7.5சதவீத  உள்ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை தள் ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதி ராக புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜஸ்சிறீ என்ப வர் தரப்பில் உச்ச நீதிமன் றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட் டதுஅதில்,’ 12ஆம் வகுப்பு மட்டுமே அரசு பள்ளியில் படித்திருந்தாலும் அந்த மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்மேலும் திருச்சியைச் சேர்ந்த ஜோனிஸ்ராஜ் என்பவர் தரப்பிலும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டதுஅதில்,’ தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்  ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசமைப்புக்கு எதிரானதுஅதனால் இந்த சட்டத்தை உடன டியாக ரத்து செய்யவேண் டும் எனத் தெரிவித்திருந் தார்.

இந்த நிலையில் மேற் கண்ட மனு உச்ச நீதிமன் றத்தின் நீதிபதிகள் நாகேஸ் வராவ் மற்றும் அனுருத்தா போஸ் அமர்வில் விசார ணைக்கு வந்ததுஅப் போது நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில்,’  அரசு பள்ளியில் படித்த மாண வர்களுக்கு மட்டும் மருத் துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை சார்ந்ததுஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதனால் மேல்முறை யீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம்,’என்று தெரிவித்தனர்இதைத் தொடர்ந்து ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள்முத லில் உயர்நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துனர்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு (அரசின்மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது - உச்சநீதிமன்றத் தீர்ப்பு)


 அரசின்மீதான விமர்சனம் தேசத் துரோகம் ஆகாது - உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் நேற்று (3.6.2021) ஜஸ்டீஸ்   U.U. லலித்ஜஸ்டீஸ் வினீத் சரண் ஆகியோரைக் கொண்ட அமர்வுஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது.

தேசத்துரோக வழக்கு செல்லாது

ஜனநாயகத்தில்அரசியல் சட்டம் அளித்துள்ள கருத்துரிமைஎழுத்துரிமைபேச்சுரிமை என்பதையொட்டி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வினோத் துவா என்ற பத்திரிகையாளர்மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா..அரசின் 'கோவிட்என்ற கரோனா தொற்றில் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றியும்கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் புல்வாமாபாலாகோட் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றியைக் காட்டி வாக்குச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்ட பிரச்சார நடவடிக்கைகள் என விமர்சித்து, 2020 மார்ச் 30ஆம் தேதி (30.3.2020) எழுதப்பட்ட கருத்துகளுக்காகஅப்பத்திரிகையாளர்மீது 124A செக்ஷன் (Sedtion) என்ற  தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது செல்லாதுபிரதமர் மோடி அரசின் செயல்பாடு குறித்து பத்திரிகையாளர்  விமர்சிப்பது தேசத்துரோகத்தின் கீழ் ஒரு போதும் வராது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பதுஉடனடியாக அதற்குத்தக்க பரிகாரம் தேவைநிலைமைகளைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தானே தவிரவேறு நோக்கத்தோடு அல்லஎனவேஅது ஒரு போதும் அரசுக்கு எதிரான தேசத் துரோகக் குற்றம் ஆகாது என்பதும்இமாச்சல அரசின் இதன் மூலம் மக்களிடையே இவர் பீதியைக் கிளப்பினார் என்ற குற்றச்சாட்டு ஏற்கக் கூடியதல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தைக் கூறிய பத்திரிகை யாளர் வினோத்துவாமீதுவீடியோ பரப்பிய 37 நாள்களுக்குப் பிறகு பா..அரசில் ஒருவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டது.

.பி.கோ 124A  மற்றும் அவதூறு பிரிவுகள் .பி.கோ. 501, 505 ஆகிய செக்ஷன்களின் கீழ் இப்படி வழக்குப் பதிவு செய்தது செல்லாதுஇந்த நீதிமன்றம் (உச்சநீதிமன்றம்அதனை ரத்து செய்கிறது.

1962லும் தீர்ப்பு....

1962ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் கேதார்நாத்சிங் என்பவர் வழக்கில் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தேசத் துரோகக் குற்றச்சாற்றுகள் பற்றிய வழக்கில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையிலும்அதையொட்டி வந்த பல தீர்ப்புகளின் அடிப்படையிலும் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர் வன்முறையை தூண்டுபவராக  அரசுக்கு எதிராக அவர் கருத்து அமைந்தால் மட்டுமே குற்றச்சாற்றாக ஏற்க இயலும்.

அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்க எந்த  குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் தெளிவாக விளக்கியிருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண்

ஜனநாயகம் என்ற மக்களாட்சியில்ஆளுவோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்அவர்கள் பாதை தவறும் போதோ அல்லது அதிகார அத்துமீறலுக்கு ஆளாகும் நிலைகளை எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும்போதோஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகள்ஊடகங்கள் எடுத்து வைக்கும் விமர் சனங்களையெல்லாம் எடுத்த எடுப்பிலேயே 124A தேசத் துரோகம் - அரசுக்கு எதிராக 501, 505 போன்ற .பி.கோபிரிவுகளின்கீழ் வழக்குகள் போடுவது ஏற்புடைத்தல்ல.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும். (குறள் - 448)

ஆளுவோர் - அவர்கள் எக்கட்சியின ராக இருந்தாலும்உள்நோக்கம் இல்லாமல் செய்யப்படும் வரை எந்த விமர்சனங்களையும் அவை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் - குற்றமாக அதைக் கருதக் கூடாது வரவேற்கவே வேண்டும்தங்களது போக்கில்நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால்தான்உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும்.

கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை

கருத்துச் சுதந்திரம் அடிப்படை உரிமையாக ஒவ்வொரு குடிமகனுக்கும் - மகளுக்கும் வழங்கியுள்ள அரசியல் சட்டத்தின் மீது ஆட்சிப் பொறுப்பேற்கும் ஆளுவோர் அரசியல் சட்டம்மீது பிர மாணம் எடுப்பதன் தத்துவம் அப்போதுதான் பொருள் உள்ளதாக அமையும்

சிறப்பான தீர்ப்பு இதுஉச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்துள்ளதுஜனநாயக காப்புரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பை வரவேற்கிறோம்.

 கி.வீரமணி

 தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை     

4.6.2021