செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, டிச.8 கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவை (தெற்கு) வட்டாட்சியர், பீளமேடு காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதியில் தங்கியிருப்பவர் களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்டவிரோதமாக ஒன்றாக தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக 'சீல்' வைத்து இழுத்து மூடினர்.

இதையடுத்து, சீலை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த விடுதியை நடத்தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந் தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் பரவிய செய்தி களின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள் ளனர். சீல் வைப்பதற்கு முன்பு விளக்க தாக்கீது கூட கொடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரம், மனுதாரர் திருமணம் ஆகாத இணை களை விடுதி அறையில் தங்க வைப்பது ஒழுக்கக் கேடனாது என்று சமூக வலைதளங் களில் தகவல் பரவியதால், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோதமா? என்று இந்த உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் பதில் இல்லை. ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்று சட்டமோ, விதிகளோ இல்லை. அதுமட்டு மல்ல, திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்கிற போது, ஒரு அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்றமாகும்?. எனவே, ஒரு அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார்கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு சீல் வைப்பது என்பது சட்ட விரோதமாகும். மொத்தத்தில், மனுதாரர் விடுதி மீது அதிகாரிகள் எடுத்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் சட்டவிரோத மானது. சீல் வைப்பதற்கு முன்பு விடுதி நிர்வாகத்துக்கு சட்டப்படி விளக்கம் கேட்டு தாக்கீது வழங்கவில்லை. மேலும் விடுதி நடத் துவதற் கான படிவம் டி உரிமம் அந்த கட்ட டத்துக்கு இல்லை என்று அரசு தரப்பில் 3ஆ-வது குற்றச்சாட்டை கூறினாலும், அதுவெல் லாம் தீவிர குற்றச்சாட்டு இல்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு, சரி செய்துகொள்ளக்கூடிய பிரச்சினைதான். எனவே, விடுதியில் திரு மணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக ஒரு அறையில் தங்கினார்கள் என்பதும், மது பாட்டில்கள் வைத்திருந்தனர் என்பதும் குற்றம் அல்ல. எனவே, விடுதி நிர்வாகம் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். இந்த உத்தரவு நகல் கிடைத்து 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தீர்ப்பில் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு 8 12 19