ஞாயிறு, 27 நவம்பர், 2016

பெண்களுக்கு சொத்தில் உள்ள சமபங்கு உரிமை

பெண்களுக்கு சொத்தில் உள்ள சமபங்கு உரிமையை மறுக்க முடியாது: மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 26_ மதுரை முடக்குச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி ஆசிரியையாக பணி யாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது சுய சம்பாத்தியத் தில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள் ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சுமதி, தான் இறந்த பின்பு, தனது சொத்துக்களை யார் அனுபவிக்க வேண் டும் என்று உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து விட்டார்.
சுமதியின் சுய சம்பாத் திய சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தங்கள் சகோதரர்கள் பிரித்துத் தர மறுப்பதாகவும், சொத் தில் தங்களுக்கு உரிய பங்கை பிரித்துத் தர உத் தரவிட வேண்டும் என் றும் சுமதியின் 2 மகள் களும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோன்று, சுமதி யின் கணவருக்கு உள்ள பூர்வீக சொத்துக்களை ஆண் வாரிசு என்ற அடிப் படையில் சுமதியின் மகன் கள் சொந்தம் கொண்டா டுவதாகவும், அந்த சொத் துக்களிலும் தங்களுக்கு உரிய பங்கை வழங்க உத் தரவிட வேண்டும் என் றும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுடன் சேர்ந்து தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சுமதி யின் கணவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மதுரை 5- ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.
சுமதியின் கணவர், 2 மகள்கள் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர் ஒய். ஜேக்கப் கூறியதாவது:-
உயில் போன்ற ஆவ ணங்கள் எழுதாமல் இறந்து போன ஒரு இந்து பெண்ணின் சுய சம்பாத் திய சொத்து அவருடைய மகன், மகள், கணவருக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்து வாரிசுரி மைச் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, தந்தைக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பாட்டனாரின் பூர்வீகச் சொத்திலும் மகனைப் போன்று மக ளுக்கும் சம பங்கு உரிமை உள்ளது என்று இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பாகத்தை பிரித்துக் கேட் கும் சமயத்தில் தந்தை உயி ருடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் உள்ளது. அதேபோன்று, 9.9.2005-ஆம் ஆண்டுக்குப் பின்பு பெற்றோர் வாழ்ந்து வரும் வீட்டிலும் சம பங்கு கேட்க பெண்க ளுக்கு உரிமை உள்ளது என்று மத்திய அரசு உரிய சட்டப்பிரிவை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டப்படி, சுமதியின் சுய சம்பாத்திய சொத்து, சுமதியின் கண வருக்குக் கிடைத்த பூர் வீகச் சொத்து ஆகியவற் றில் சுமதியின் கணவர், அவருடைய மகள்கள் ஆகியோருக்கு சம பங்கு உள்ளது. எனவே, அந்த சொத்துக்களில் சமபங்கை பிரித்துக் கொடுக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு வழக்குரை ஞர் ஒய்.ஜேக்கப் கூறினார்.
சுமதியின் மகள்களுக்கு திருமணத்தின்போது செய்யவேண்டிய அனைத்து சீர்வரிசைகளையும் சுமதி யின் மகன்கள் தான் செய் துள்ளனர் என்றும், அவர் களுக்கு சொத்தில் கிடைக்கவேண்டிய பங்கை விட அதிகமாக திருமணத் துக்கு செலவு செய்துள்ள தாகவும், எனவே, சுமதி யின் சுய சம்பாத்திய சொத்து,
சுமதியின் கண வருக்குக் கிடைத்த பூர் வீகச் சொத்து ஆகியவற் றில் சம பங்கு கேட்க சும தியின் மகள்களுக்கு உரிமை இல்லை என்றும் சுமதியின் மகன்கள் தரப் பில் ஆஜரான வழக்கு ரைஞர் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதி மன்றம் பிறப்பித்த உத்தர வில் கூறி இருப்பதாவது:-
ஆண் பிள்ளைகளுக்கு சொத்துக்களில் என்ன பங்கு, உரிமை உள்ளதோ, அதே பங்கு மற்றும் உரிமை பெண் பிள்ளை களுக்கும் சட்டப்படி கிடைக்கக்கூடியதாகும். சுமதியின் சுய சம்பாத்திய சொத்து, சுமதியின் கண வருக்கு கிடைத்த பூர்வீகச் சொத்து ஆகியவற்றில் சுமதியின் மகள்களுக்கு சட்டப்படி சமபங்கு வழங் கப்பட வேண்டும்.
சுமதி யின் மகள்களுக்கு திரு மணத்தின் போதும், அதற்கு பின்பும் செய்ய வேண்டிய நகை உள் ளிட்ட அனைத்து சீர் வரி சைகளையும் செய்துள் ளோம் என்று கூறி, அவர்களுக்கு சொத்தில் கிடைக்க வேண்டிய சம பங்கை மறுக்க முடியாது.
எனவே, சுமதியின் மகள்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கை பிரித்துக் கொடுக்க வேண் டும். அதேபோன்று, சுமதி யின் கணவருக்கும் சொத் துக்களில் சமபங்கு பிரித் துக் கொடுக்கப்பட வேண் டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,26.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக