வியாழன், 29 டிசம்பர், 2016

ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் 


ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியம் குறைவாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 12_ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழான சம்பளமானது, மாநில அரசுகள் நிர்ண யித்துள்ள, குறைந்தபட்ச சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது.

மேல்முறையீடு

ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் சம்பளம், விவசாய தொழிலாளர் களுக்காக, கருநாடக மாநில அரசு நிர்ணயித் துள்ள, குறைந்தபட்ச சம்பளத்தைவிட, குறை வாக இருக்கக் கூடாது என, 2011 செப்டம்பர், 23 இல், கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில், உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப் பட்டது.

குறைந்தபட்ச சம்பளத்தைவிட குறைவாக இருக்கக் கூடாது

இந்த மனுவை விசா ரித்த, நீதிபதிகள் முகோ பாத்யாய் மற்றும் பாப்டே ஆகியோர் அடங்கிய, அமர்வு பிறப்பித்த உத் தரவு வருமாறு:

விவசாய தொழிலாளர் களுக்காக, ஒவ்வொரு மாநில அரசும், குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ண யித்துள்ளன. அதனால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரி வோருக்கு வழங்கப்படும் சம்பளமானது, மாநில அரசுகளால் நிர்ணயிக் கப்பட்டுள்ள, குறைந்த பட்ச சம்பளத்தை விட குறைவாக இருக்கக் கூடாது. இவ்வாறு, நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரி வோருக்கு, மத்திய அரசு வழங்கும் சம்பளமானது, 118 ரூபாய் முதல் 181 ரூபாய் என்ற அளவில், மாநிலத் திற்கு மாநிலம் வேறுபடு கிறது.

இந்தச் சம்பள மானது, ஆறு மாநிலங் களில், அம்மாநில அரசு களால், விவசாய தொழி லாளர்களுக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ள, குறைந்த பட்ச சம்பளத்தை விட குறைவாக உள்ளது. அதே நேரத்தில், 14 மாநிலங் களில், மத்திய அரசு வழங்கும் சம்பளமானது, அதிகமாக உள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,12.7.14

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு: திருமணமான மகளுக்கும் உரிமை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 12-_ கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர் பாக திருமணமான பெண் ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத் தைச் சேர்ந்த பி.உஷா ராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

எனது தந்தையின் பெயர் எஸ்.பரமசிவம். கடந்த 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தமிழக அரசின் வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கிராம உதவியாள ராக பதவி உயர்த்தப்பட் டார். அவர் பணியில் இருக்கும் போது ராஜேந் திரன் என்பவருடன் எனக்கு திருமணம் நடந் தது. இந்த நிலையில் பணி யில் இருக்கும் போது, நெஞ்சு வலியால் கடந்த 2008-ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார்.

இதையடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி கருணை அடிப்படையில் வேலை வழங்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத் தேன். எனக்கு திருமணம் ஆனதால் கருணை அடிப் படையில் பணி வழங்க முடியாது என 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி எனது விண்ணப்பத்தை நிரா கரித்தார்.

2012- ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஆணை யின் அடிப்படையில் எனது வேண்டுகோளை நிராகரித்ததாக அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட் டது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து விட்டு, கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க உத்தர விட வேண்டும் என மனு வில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன்பு நடந்தது. அப்போது, அரசு தரப் பில் அரியலூர் மாவட் டம், ஜெயங்கொண்டம் தாலுகா வட்டாட்சியர் பதில் மனு தாக்கல் செய் தார். அதில், மனுதாரரின் தந்தை இறப்பதற்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்டார். மனு தாரர் அவரது கணவர் குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதிக்கு முன்பு திரு மணம் முடிந்த பெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள் என 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனு தாரர், எஸ்.ராஜேந்திரன் என்பவரை 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி அவரது தந்தை இறப்பதற்கு முன்பே திரு மணம் செய்து கொண் டார்.

இதனடிப்படையில் மனுதாரர் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு உரிமை வழங்க முடியாது. இந்த காலவரையறையை நிர்ண யித்ததில் எந்த தவறும் இல்லை என அதில் தெரி விக்கப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத் தரவு வருமாறு: ஆணுக்கும்_ பெண் ணுக்கும் எந்தப் பாகு பாடும் இருக்கக்கூடாது. இருவரையும் ஒன்றாகத் தான் கருத வேண்டும். கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பெண்ணுக்கு எந்தக் காலவரையறையும் நிர்ணயிக்க முடியாது.

அதனால், 2012- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை சட்ட விரோ தமானது. அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. எனவே, மனுதாரரின் வேண்டுகோளை பரி சீலனை செய்து மூன்று மாதங்களுக்குள் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை,12.7.14

புதன், 28 டிசம்பர், 2016

பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றுவதைச் சட்டம் தடை செய்யாது

சென்னை உயர் நீதிமன்றம்

நீதிபதி குளுவாடி ஜி.ரமேஷ் & நீதிபதி எம்.வி.முரளிதரன்

நீ.மே. எண் 670/2016 & உப.ம. எண் 8785/2016/10.6.2016

ஆணையர், பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டை, சென்னை-600044.

மேல் முறையீட்டாளர்

எதிர்

1. எஸ்.கே.சையது ரபியுல்லா.2 மாவட்ட ஆட்சியர், ஆட்சியரகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

எதிர் வழக்கீட்டாளர்கள்

பிறப்பு இறப்புச் சட்டம், 1969 (1969இல் 18), பிரிவு 15- பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் - பெயர் மாற்ற அனுமதிக்கான அதிகாரப் பத்திரம்- பிறப்புச் சான்றிதழ் வெளியான பின் மனுதாரரது பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் மாற்றப்பட்ட பெயர் வெளியிடப்பட்டது. பிறப்புச் சான்றிதழில் தேவையான திருத்தம் ஏற்படுத்த நகராட்சி மறுத்தது. ஒரு முறை பிறப்பு சான்றிதழ் வழங்கிய பின்னர் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்பது நகராட்சியின் வாதம்- பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றல் சான்றிதழில் உள்ள பதிவுகளைத் திருத்துவதாக கருதப்பட முடியாது. சான்றிதழில் பெயர் மாற்றுதலைச் சட்டம் தடை செய்யவில்லை - தனி நீதிபதியின் கட்டளை உறுதியானது. நீதிப்பேராணை மேல்முறையீடு தள்ளுபடியானது.

பி.சிறீனிவாஸ், மேல்முறையீட்டாளரது வழக்குரைஞர்

வி.பிரீதா,1ஆவது எதிர்மேல்முறையீட்டாளரது வழக்குரைஞர்

சிறீ ஜெயந்தி, சிறப்பு அரசு வழக்குரைஞர், 2 ஆவது எதிர்மேல்முறையீட்டாளருக்காக

நீ.மே.தள்ளுபடியானது-உப.ம. தள்ளுபடியானது-செலவுத் தொகையில்லை

கோரிக்கை: இந்த நீதின்றம் நீ.ம. எண் 30766/2015இல் வழங்கிய 7.1.2016 தேதிய ஆணையை ஆட்சேபித்து உரிமைப் பட்டய சட்டக்கூறு 15இன் கீழான நீதிப்பேராணை மேல் முறையீடு.

நீதிபதி குளுவாடி ஜி.ரமேஷ்

1. மே.மு. பல்லாவரம் நகராட்சி ஆணையரது வழக்குரைஞர், 1ஆவது எ.மே.மற்றும் 2ஆவது எ.மே. வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்தோம்.

2. நீதிப் பேராணை மனுவை அனுமதித்தும், மே.மு.இன் ஆணையை நீக்கறவாக்கி , 1.11.2012 அன்று பிறந்த இங்குள்ள 1ஆவது எ.மே.இன் மகன் பெயரை ஆர். அமானுல்லா என 9.10.2013 தேதிய அரசிதழில் பிரசுரமானவாறு திருத்தி நான்கு வார காலவரையறைக்குள் பிறப்புச் சான்றிதழ் வழங்க குறையுறு ஆணையிட்ட தனி நீதிபதியின் கட்டளை பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969 பிரிவு 15இன் கீழ் அத்தகைய திருத்தம் ஏற்படுத்த முடியாது மற்றும் பிற அடிப்படையில் ஆட்சேபிக்கப்படுகிறது.

3. மேல்சொன்ன சட்டப் பிரிவு 15இன் கீழ், பதிவாளரிடம் இருக்கும் பதிவேட்டில் பிறப்பு அல்லது இறப்பு பற்றிய குறிப்பு வடிவத்தில் அல்லது விஷயத்தில் தவறாக அல்லது மோசடியாக அல்லது முறையற்று செய்யப்பட்டிருந்ததாகப் பதிவாளர் ஏற்கும்படி நிரூபிக்கப்பட்டால், அத்தகைய பதிவுகளைத் திருத்துதல் அல்லது ரத்தாக்குதல் ஆகியவற்றிற்கு வேண்டிய சூழல்களையும், நிபந்தனைகளையும் மாநில அரசு நிறைவேற்றும் விதிகளுக்குட்பட்டு, பொருத்தமான திருத்தத்தை அல்லது நீக்கலை மூலப்பதிவில் மாற்றமில்லாது ஓரத்தில் ஏற்படுத்திப் பதிவில் திருத்தம் அல்லது நீக்கல் தேதியுடன் கையெழுத்திட வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தகைய விண்ணப்பம் மீது பதிவாளர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மேற்சொன்ன பிரிவு வகைப் படுத்துகிறது.

பொருத்தமானத் திருத்தத்தை அல்லது நீக்கலை மூலப் பதிவில் மாற்றமில்லாது ஓரத்தில் ஏற்படுத்தி பதிவில் திருத்தம் அல்லது நீக்கம் செய்த தேதியுடன் கையெழுத்திடும் அதிகாரம் அவருக்கிருக்கிறது. மாற்றம் இல்லாது பதிவைச் செய்ய முடியாது என்ற பொருளை இது தராது. பதிவாளர் மனநிறைவடையும் போது அவர் குறிப்புக்குப் பதிலாக ஒரு ஓரத்துக் குறிப்பை மட்டுமே ஏற்படுத்தலாம், மூலப் பதிவை அல்ல என்பதே கருத்தாகிறது.

4. ஆனாலும், பிறப்பு அல்லது இறப்பு தேதி மாற்றம் அல்லது திருத்தம் பற்றிய கேள்வியாக இந்த வழக்கு இல்லை; இது அரசிதழில் வெளியான இளவர் குழந்தையின் பெயர் மாற்றம் குறித்ததாகும். ஆகையால், பெயரைத் திருத்தி புதிதாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரியது. இவ்வாறு செய்தல் மேற்சொன்ன சட்டப் பிரிவு 15 அய் மீறுவதாகாது. எனவே, பல்லாவரம் நகராட்சி ஆணையரது மேல் முறையீட்டில் எந்தத் தகுதிப்பாடும் இல்லாததால் அதனை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.

5. அதற்கேற்ப, நீதிப் பேராணை மேல்முறையீடு தள்ளுபடியாகிறது. தனி நீதிபதி பணித்தவாறு இன்றிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் பெயரைத் திருத்தி அதே பிறந்த நாளைத் தக்க வைத்துக் கொண்டு புதிதாகப் பிறப்புச் சான்றிதழை வழங்க ஆவன செய்யுமாறு மே.மு. பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு ஆணையிடப்படுகிறது. செலவுத் தொகையில்லை. தொடர்பான பல்வகை மனுவும் முடித்து வைக்கப்படுகிறது.

மொழியாக்கம்: பி. ஞானசேகரன்

- நன்றி: “சட்டக் கதிர்”, டிசம்பர் - 2016

-விடுதலை ஞா.ம.,17.12.16

வெள்ளி, 23 டிசம்பர், 2016

சம வேலைக்கு சம ஊதியம்! தற்காலிகப் பணியாளர்களுக்கும், நிரந்தரப்பணியாளர்களின் ஊதியம்போல் சமமாக வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு


டில்லி, அக்.29 நிரந்தரப் பணி யாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப்போன்றே தற்காலிக பணியாளர்களுக்கும் வழங்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் அரசு சார் துறைகளில்  லட்சக்கணக்கில் தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரு கிறார்கள். சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கைக் கேற்ப, அரசுப்பணிகளில் நிரந் தரப் பணியாளர்களுக்கு அளிக் கப்படுகின்ற ஊதியத்தைப் போன்றே தற்காலிகப் பணியா ளர்களுக்கும் வழங்கிட வேண் டும் என உச்சநீதிமன்ற நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கையின் அடிப் படையில் அனைத்து பணியா ளர்களுக்கும் சம அளவில் ஊதிய விகிதம் அளிப்பதுகுறித்த தெளிவான தீர்ப்பை ஜே.எஸ்.கேகர், எஸ்.ஏ.பாப்டி ஆகி யோரைக் கொண்ட அமர்வு அளித்துள்ளது.

இதில் எங்களுடைய பார் வையில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டியதைக் கொடுக்க மறுப்பது செயற்கைத்தனமான அளவீடுகளைக் கொண்ட ஒரு தவறான முடிவாகும் என்ப தாகும்.

ஒருவரைவிட அடுத்த வருக்கு குறைவாக ஊதியம்  கண்டிப்பாக வழங்கிடக் கூடாது. ஏனென்றால், இது மக்கள் நலன் காக்கின்ற அரசு ஆகும். இதுபோன்று வேறுபாடுகளு டன் இருப்பது மனிதகுலத்தின் பெருமையை சீர்குலைத்து விடும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுகுறித்து கொள்கை விளக்கத்தைத் தெளிவுபடுத்தி யுள்ளது.

ஒரேவிதமான பணியை பணியாற்றுவோரிடையே வழங்கப்படுகின்ற ஊதியத்தை ஒப்பிடும்போது குறைத்து வழங்கப்படுகிற செயலானது அடிமைத்தனத்தை கொண்டுள் ளதாக உள்ளது. பணியாற்று வோரிடையே இருவகைகளில் வேறுபடுத்துவதாக உள்ளது. அய்யத்திற்கிடமில்லாமல் அடக்குமுறை, ஒடுக்குமுறை களுடன் கட்டாயப்படுத்தி மக் களின் விருப்பத்துக்கு மாறாக அடிமைப்படுத்தி நிர்ப்பந் திக்கிறது’’ என நீதிபதி கேகர் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் தற் காலிகப் பணியாளர்கள் அளித்த மனுவில் தற்காலிகப்பணியாளர் களின் ஊதியம்  நிரந்தரப் பணியாளர்களின் ஊதியத்துடன் வேறுபாடுகளைக் கொண்டுள் ளதுகுறித்து குறிப்பிட்டார்கள். குறைந்த பட்ச ஊதிய விகிதம் என்பதுகூட நிர்ணயம் செய்யப் படவில்லை என்றுகூறி  நீதி கோரி பஞ்சாப் மாநில தற்கா லிகப் பணியாளர்கள் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம் மற் றும் உச்சநீதிமன்றத்தை நாடி னார்கள்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குறிப்பிடும்போது பன்னாட்டளவில் பொருளா தாரம், சமூகம், கலாச்சார உரி மைகள் குறித்து  உடன்படிக்கை யில் கையொப்பமிட்டுள்ள நிலையில் சம வேலைக்கு சம ஊதியம்Õ என்பது  பின்பற்றப் படவேண்டும் என்று குறிப் பிட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பல் வேறு நிலைகளைக் குறிப்பிட்டு விட்டு, சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலிருந்து விலகிச் செல்ல முடி யாது. அரச மைப்புச் சட்டத்தின் பிரிவு 141இன்படி உச்சநீதிமன் றம் ஏற்கெனவே அளித்துள்ள சட்டப் படியான உத்தரவை பின்பற்ற வேண்டும்.

தற்காலிகப் பணியாளர் அல் லது நிரந்தரப்பணியாளர்  இடையே சம வேலைக்கு சம ஊதியம்Õ என்கிற கொள்கையை தெளி வாகவும், குழப்பமில்லாமலும், ஒவ்வொரு பணியாளர்களிடத் திலும் பின்பற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.
-விடுதலை,29.10.16

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

ஜாதி பாகுபாடு கூடாது

பாராட்டத்தக்க கருநாடக அரசின் ஆணை கோயில்களில் ஜாதி பாகுபாடு கூடாது ஒவ்வொரு கோயிலிலும் விளம்பரப் பலகை

பெங்களூரு, நவ.24 கருநாடக அரசின் முசுராய்த் துறையின் (அறநிலையத் துறை) கீழ் உள்ள 34,453கோயில்களின்நுழைவாயிலில் ‘‘கோயில் களில் ‘கடவுட் காட்சி’ (தர்ஷன்) என்பது ஜாதி, இனம், மதம், பால் கடந்த அனைவருக்கும் பொதுவானது’’ என்று  எழுதப்பட்ட அறிக்கைப் பலகைகளை வைக்க வேண்டுமென்று கருநாடக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கருநாடகத்தில் உள்ள கோயில்கள் சிலவற்றுள், சில ஜாதியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும், சில ஜாதியினருக்கு நுழைவு மறுக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளதாக எழுப்பப்படும் குற்றசாட்டுகள் அரசின் கவனத்திற்கு வருவதன் அடிப்படையிலேயே இந்த  அறிவிப்பு வெளியாகி உள்ளது. முசுராய்த் துறையின் துணை ஆணையர்கள் இதனைத் தங்கள் வரம்பிற்குள் வரும் கோயில்களில் உடனே நிறைவேற்ற வேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது.
”கோயிலினுள் வழிபட வருவோரிடையே எந்தவிதமான பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதும், அனைவரும் சமமாகவே பாவிக் கப்பட வேண்டுமென்பதும், மக்கள் அனை வரும் எந்தவிதத் தடையும், அச்சமும் இன்றிக் கோயில்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே இந்த ஆணையின்  நோக்கம்’’ என்று துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“மாநிலத்தில் உள்ள தனியார் கட்டுப் பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட அனைத் துக் கோயில்களும் மக்கள் இறையுணர்வுடன் வந்து செல்லும் இடங்களே. கடவுளின் அருளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பக்த னுக்கும் உரிமை உண்டு. கடவுளின் முன் னால் அனைவரும் சமமே. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 15 ஆவது பிரிவில்,அரசுகுடிமக்களைமதத்தின்பெய ராலோ,ஜாதியின்பெயராலோ,இனத்தின் பெயராலோ, பாலினத்தின் அடிப்படையிலோ பிறப்பிடத்தின் அடிப்படையிலோ பாகு படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் உள்பட எந்தக் கோயி லாவது எவருக்காவது கோயில் நுழைவைத் தடுக்குமாயின் அது சட்டத்திற்குப் புறம் பானது’’ என இந்த ஆணை எச்சரித்துள்ளது,.
கடந்தஅக்டோபர் திங்களில் உடுப்பி யில் உள்ள கோயிலில் ஜாதிப் பாகுபாடு நிலவுவதைக் கண்டித்து சில முற்போக்கு அமைப்புகள் “சலோ உடுப்பி’’ இயக்கத் தைத் தொடங்கியதை அடுத்தே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.அந்தக்கோயிலைஆளும்மடங் களில்“பங்கிபேதம்’’(பந்தியில்பாகு பாடு) கடைப்பிடிக்கப்பட்டுப் பார்ப்பனர் களுக்கெனத் தனிப் பந்தி ஏற்பாடுகள் நடை முறையில் இருப்பதைக் கண்டித்து அந்த இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பழக்கத்தை மறுக்க முற்பட்ட  அந்த மடங்களின் தலைவரான பெசாவர் மடத் தலைவர் விசுவேச தீர்த்தர்,  உணவுக்கு முன்னர் சில சடங்குகளை மேற்கொள்ளும் சில பிராமணர்கள் தங்களுக்குத் தனிப் பந்தி விரும்பியதாலேயே அந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது என்றும், பொது வாகப் பந்திப் பாகுபாடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
அந்த மடத்தின் நடவடிக்கையை நேரடி யாகக் கண்டிக்காமல், பொதுவாக இந்தப் பழக்கங்களை ஒழித் திடும் வகையில் ஆணையைக் கருநாடகஅரசு பிறப் பித்து, உடுப்பி மடங் களையும் ஆணையின் வரம்புக்குள் கொண்டு வந்து விட்டது.
இத்தகைய பாகுபாடுகளைக் கடைப்பிடிக்கும் கோயில்களுள் மிகப் பெரும்பான்மையா னவை பிஜேபியினர் மிகுதியாக உள்ள தென்கன்னட, உடுப்பி  கடற்கரை மாவட்டங்களிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நிலவிடும் பாகு பாடுகளை மேற்கண்ட ஆணையின்வழி உடைத்து, பிற்படுத்தப் பட்டோர், தலித்துகள், சிறுபான்மையோர் வாக்குகளைக் கவரவே இந்த ஆணையை அரசு பிறப்பித்துள்ளதாகவும் சிலர் கூறுகின் றனர். சித்தராமய்யாவின் அரசுக்குக் களங்கம் கற்பிப்பதில் முக்கியமாக இருக்கும் சங் பரிவாரத்தினர் கூற்றே இது.
இந்த ஆணை முழு முயற்சியுடன் செயற்படுத்தப்படுமானால் வழிபாட்டு முறைகளில் சமூகநீதிக்கு வழி பிறக்கும் என்று நம்பலாம். ஆகமங்களின் பெயரால் இந்த  ஆணைக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கருநாடக அரசின் கடமை  ஆகும்.  கோயில்களில் கடவுள்களின் பெயராலும், சாத்திர- சடங்கு களின் பெயராலும் தலை விரித்தாடும் பார்ப்பன மேலாண்மை தகர்க்கப்படுவதற்கு இந்த ஆணை வழி வகுத்திடுட வாய்ப்பு உண்டு.
தீண்டாமை ஒழிப்புச் சட்டம், பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம், குழந்தைகள் திருமணத் தடுப்புச் சட்டம் போன்ற இன்ன பிற சட்டங்களைப்  போல இந்தச் சட்டமும் அவசியமானதே!
எனினும் மக்களால் நம்பப்படும் கடவுள்களால்  ஒழிக்க இயலாத சமூக அநீதி யையும், பார்ப்பன மேலாண்மையையும் அரசாணைகள் வழித் தொலைத்திட மேற் கொள்ளப்படும் முயற்சிகள் விடவும், சமூகஅநீதிக்குக்காவலரண்களாகத்திகழும் கோயில்களையும்  அங்குக் குடி கொண்டி ருப்பதாக நம்பப்படும் கடவுள்களையும்  புறக்கணிப்பதே உண்மையான மாந்த உரிமைக்கும் சமூகநீதிக்கும்  வழிவகுக்கும் என்பதே பெரியாரியல் காட்டும் நல்வழியாம்.
தகவல்: முத்து.செல்வன்
-விடுதலை,24.11.16

பரவாயில்லையே- பகுத்தறிவு வேலை செய்கிறது

மின்கம்பி அறுந்து விழுந்ததை
‘கடவுளின் செயல்’ எனக் கூற முடியாது:
இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.28 
வீட்டுக்கு எதிரே மின்கம்பி அறுந்து விழுந் ததை கடவுளின் செயல் எனக் கூறுவதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், மின்சாரம் தாக்கி பலியான இளை ஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாங்காட்டை சேர்ந்த ஆர்.குமார் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில், ‘‘எனது மகன் விக்டர்(27) பிளம்பராக பணி யாற்றி வந்தார். கடந்த 2010 செப்டம்பர் 27ஆ-ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் எதிரில் உள்ள காலியிடத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் பாய்ந்து பலியானார்.
மின்வாரியத்தின் பராமரிப்பின்மை மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாகவே எனது மகனைப் பறிகொடுத்துள்ளேன். எனவே ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளித்த மின்வாரியம், “அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெறவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந் ததால் மின்கம்பி அறுந்து விழுந் துள்ளது. இது கடவுளின் செயல்” என தெரிவித்து இருந்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி தனது உத்தரவில், ‘‘மின் கம்பி காற்றில் அறுந்து விழுந் ததைக் கடவுளின் செயல் எனக்கூறுவதை ஏற்க முடியாது. காற்று, மழைக்கு தாங்கும் வகை யில் மின்கம்பிகளை அமைத்து அவற்றை அவ்வப்போது பரா மரிக்க வேண்டியது மின்சார வாரியத்தின் கடமை. மின் கம்பிகளை அமைக்கும் முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற் கொள்ள வேண்டும். மின்கம்பத் தில் முறையாக பொருத்தப் படாததால்தான் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.
எனவே மின்வாரியம் கூறும் காரணங் களை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் இறந்த இளைஞருக்கு 27 வயதுதான் ஆகிறது. அவர் உயிரோடு இருந்தால் மாதம் குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 வருமானம் ஈட்டி இருப்பார். இன்னும் 33 ஆண்டுகளுக்கு அவர் உயிரோடு இருந்திருப்பார். எனவே அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டை 8 வார காலத்துக்குள் வழங்க வேண்டும்’’ என உத்தர விட்டார்.
-விடுதலை,29.10.16

மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து சட்ட விரோதமானது அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு


அலகாபாத், டிச. 9 -“முஸ்லிம்கள் மத்தியிலுள்ள, மும்முறை ‘தலாக்’ கூறி மனைவியை விவா கரத்து செய்யும் நடைமுறை, சட்ட விரோதமானது என்பதுடன், குரான் போதனைகளுக்கே அது எதிரானது” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், “அரசியல் சாசனத்தைக் காட்டிலும், தனி நபர் சட்ட வாரியம் அதிகாரம் பெற்றது அல்ல” என்றும் நீதிபதி சுனீத் குமார் கூறியுள்ளார்.முஸ்லிம் சமு தாயத்தில், மூன்று முறை ‘தலாக்’ கூறி பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. இதை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அங்கீகரிக்கிறது.
ஆனால், தற்போது ‘முத்த லாக்’ முறைக்கு எதிராக, முஸ் லிம் பெண்கள் மத்தியிலேயே விவாதம் எழுந்துள்ளது. ‘முத்த லாக்’ முறை, இஸ்லாமிய பெண் களின் வாழ்க்கையில் ஒரு நிச்சய மற்ற தன்மையை ஏற்படுத்து வதுடன், அவர் களின் உரிமையை அவமதிப்பதாக- பறிப்பதாக உள்ளது என்று மாதர் அமைப்புக் களும் கூறி வருகின்றன. இதை யொட்டி வழக்குகளும் தொடரப் பட்டு உள்ளன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலகா பாத் உயர்நீதிமன்றத் தில் தொட ரப்பட்ட வழக்கு ஒன்று, வியாழ னன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுனீத் குமார், விவாதத்தின் இடையே பேசினார்.அப்போது, “மும்முறை ‘தலாக்’ கூறிவிவா கரத்து செய்யும் முறை, அல்லது ‘உடனடி விவாகரத்து’ முறை யானது மிகவும் கொடூரமானது, நீதித்துறையின் மனசாட்சி, இந்த ‘தலாக்’ முறையினால் தொந்தரவு அடைந்துள்ளது” என்று குறிப் பிட்ட நீதிபதி சுனீத் குமார், “கணவர் ஒருவர்தன்னை விட பாதி வயது குறைந்த வர் மீது கவரப்பட்டுள்ளார் என்றகாரணத் திற்காக, தவறே செய்யாத முதல் மனைவி வேறொரு வாழ்க்கை யை வாழ வேண்டியுள்ளது; முஸ்லிம் கணவர் ஒருவிதமான அதிகாரத்தை தன் கையில் வைத்துக் கொண்டு உடனடி விவாகரத்து என்ற தீமையை பெண்கள் மீது செலுத்துவது இஸ்லாமிய போதனைகளுக்கே விரோத மானது” என்று தெரிவித்தார்.
“இஸ்லாத்தில் விவாகரத்து என்பது மிக மிக அவசரகாலத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது; இருவரையும் சேர்த்து வைக்கும் அனைத்துவிதமான முயற்சிகளும் சாத்தியங் களும் தோல்வியடைந்த நிலையில் மட்டுமே இருதரப்பி னரும் தலாக் முறைக்குச் செல்ல அனுமதிக்கிறது; அப்படியிருக்க, இந்தியாவில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் சட்டம் இறைத்தூதர் அல்லது குரானின் புனித போதனைகளின் உணர்வுகளுக்கு எதிரான திசையில் செல்கிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், “குரான் சட்டங் களின் படி முஸ்லிம் ஆணுக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது என்று ஒரு பொதுப்புத்தியில் பதியப் பட்ட தப்பு அபிப்ராயம்தானே தவிர, உண்மையில், குரான் போத னைகளின்படி இதுபோன்ற மோசமான அதிகாரத்தின் மூலம் திருமணங் களைக் கலைப்பதற்கு இடமே இல்லை” என்ற சுனீத் குமார், “சில பலமதகுருமார்கள், தங்களுக்கு சாதகமாக அளித்துள்ள குரான் விளக்கங் கள் மூலம், இனியும் தந்தை வழிஆதிக்கப் பிடிகளில் பெண் சமு தாயத்தை வைத்திருக்க முடியாது” என்றும் திட்டவட்டமாக கூறினார்.
-விடுதலை,9.12.16

புதன், 30 நவம்பர், 2016

பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்த வீட்டில் மகன் தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை: டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ. 30 டில்லியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அம் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.

பெற்றோர்களுடன் தங்கு வதற்குசட்டப்படியானஉரிமை இல்லை என்ற கீழமை நீதிமன் றத்தின் உத்தரவை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய் துள்ளனர்.

முன்னதாக, டில்லியைச் சேர்ந்த இணையர் கீழமை நீதிமன்றத்தில் தங்களுடைய மகன்கள் மற்றும் மருமகள்கள் மிகவும் சுமையாக இருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தனர். தாங்கள் சம்பாதித்த வீட்டில் இருந்து அவர்களை வெளியேற் றுமாறு அந்த மனுவில் தெரி வித்து இருந்தனர். அதற்கு முன்பு காவல் நிலையத்திலும் இது தொடர்பாக புகார் அளித் திருந்தனர்.

இந்தவழக்கில்ஆஜரான மகன்கள்மற்றும்மருமகள் கள் தாங்களும் பெற்றோர் கள் வீட்டின் பங்கு உரிமை யாளர்கள்தான் என்று வாதிட் டனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாதத்தை ஏற்க மறுத்து பெற்றோர்களுடன் தங்குவதற்கு சட்டப்படியான உரிமை இல்லை என்று கூறி விட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தான் தற்போது மகன்கள் மற்றும் மருமகள்கள் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா ரானி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் தன்னுடைய தீர்ப் பில் நீதிபதி கூறியதாவது:-

பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்த வீட்டில் மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும், இல்லை என்றாலும் சட்டப்படி அங்கு தங்குவதற்கு எவ்வித உரிமையும் இல்லை. பெற் றோர்கள் கருணையின் அடிப் படையில் அனுமதிக்கும் காலம்வரை அந்த வீட்டில் மகன் இருக்கலாம்.

மகன் உடனான உறவு சுமூகமாக இருக்கும் வரை பெற்றோர்கள் மகனை வீட்டில் இருக்க அனுமதிக்கலாம். இறுதி வரை பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு நீதிபதி தெரி வித்தார்
-விடுதலை,30.11.16

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பெண்களுக்கு சொத்தில் உள்ள சமபங்கு உரிமை

பெண்களுக்கு சொத்தில் உள்ள சமபங்கு உரிமையை மறுக்க முடியாது: மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 26_ மதுரை முடக்குச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி ஆசிரியையாக பணி யாற்றி ஓய்வு பெற்ற இவர் தனது சுய சம்பாத்தியத் தில் சொத்துக்கள் வாங்கி இருந்தார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள் ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
சுமதி, தான் இறந்த பின்பு, தனது சொத்துக்களை யார் அனுபவிக்க வேண் டும் என்று உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து விட்டார்.
சுமதியின் சுய சம்பாத் திய சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தங்கள் சகோதரர்கள் பிரித்துத் தர மறுப்பதாகவும், சொத் தில் தங்களுக்கு உரிய பங்கை பிரித்துத் தர உத் தரவிட வேண்டும் என் றும் சுமதியின் 2 மகள் களும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோன்று, சுமதி யின் கணவருக்கு உள்ள பூர்வீக சொத்துக்களை ஆண் வாரிசு என்ற அடிப் படையில் சுமதியின் மகன் கள் சொந்தம் கொண்டா டுவதாகவும், அந்த சொத் துக்களிலும் தங்களுக்கு உரிய பங்கை வழங்க உத் தரவிட வேண்டும் என் றும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுடன் சேர்ந்து தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என்று சுமதி யின் கணவரும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மதுரை 5- ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.
சுமதியின் கணவர், 2 மகள்கள் சார்பில் ஆஜ ரான வழக்குரைஞர் ஒய். ஜேக்கப் கூறியதாவது:-
உயில் போன்ற ஆவ ணங்கள் எழுதாமல் இறந்து போன ஒரு இந்து பெண்ணின் சுய சம்பாத் திய சொத்து அவருடைய மகன், மகள், கணவருக்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்து வாரிசுரி மைச் சட்டத்தில் தெளி வாக கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று, தந்தைக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த பாட்டனாரின் பூர்வீகச் சொத்திலும் மகனைப் போன்று மக ளுக்கும் சம பங்கு உரிமை உள்ளது என்று இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பாகத்தை பிரித்துக் கேட் கும் சமயத்தில் தந்தை உயி ருடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் உள்ளது. அதேபோன்று, 9.9.2005-ஆம் ஆண்டுக்குப் பின்பு பெற்றோர் வாழ்ந்து வரும் வீட்டிலும் சம பங்கு கேட்க பெண்க ளுக்கு உரிமை உள்ளது என்று மத்திய அரசு உரிய சட்டப்பிரிவை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்டப்படி, சுமதியின் சுய சம்பாத்திய சொத்து, சுமதியின் கண வருக்குக் கிடைத்த பூர் வீகச் சொத்து ஆகியவற் றில் சுமதியின் கணவர், அவருடைய மகள்கள் ஆகியோருக்கு சம பங்கு உள்ளது. எனவே, அந்த சொத்துக்களில் சமபங்கை பிரித்துக் கொடுக்க உத்தர விட வேண்டும்.
இவ்வாறு வழக்குரை ஞர் ஒய்.ஜேக்கப் கூறினார்.
சுமதியின் மகள்களுக்கு திருமணத்தின்போது செய்யவேண்டிய அனைத்து சீர்வரிசைகளையும் சுமதி யின் மகன்கள் தான் செய் துள்ளனர் என்றும், அவர் களுக்கு சொத்தில் கிடைக்கவேண்டிய பங்கை விட அதிகமாக திருமணத் துக்கு செலவு செய்துள்ள தாகவும், எனவே, சுமதி யின் சுய சம்பாத்திய சொத்து,
சுமதியின் கண வருக்குக் கிடைத்த பூர் வீகச் சொத்து ஆகியவற் றில் சம பங்கு கேட்க சும தியின் மகள்களுக்கு உரிமை இல்லை என்றும் சுமதியின் மகன்கள் தரப் பில் ஆஜரான வழக்கு ரைஞர் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதி மன்றம் பிறப்பித்த உத்தர வில் கூறி இருப்பதாவது:-
ஆண் பிள்ளைகளுக்கு சொத்துக்களில் என்ன பங்கு, உரிமை உள்ளதோ, அதே பங்கு மற்றும் உரிமை பெண் பிள்ளை களுக்கும் சட்டப்படி கிடைக்கக்கூடியதாகும். சுமதியின் சுய சம்பாத்திய சொத்து, சுமதியின் கண வருக்கு கிடைத்த பூர்வீகச் சொத்து ஆகியவற்றில் சுமதியின் மகள்களுக்கு சட்டப்படி சமபங்கு வழங் கப்பட வேண்டும்.
சுமதி யின் மகள்களுக்கு திரு மணத்தின் போதும், அதற்கு பின்பும் செய்ய வேண்டிய நகை உள் ளிட்ட அனைத்து சீர் வரி சைகளையும் செய்துள் ளோம் என்று கூறி, அவர்களுக்கு சொத்தில் கிடைக்க வேண்டிய சம பங்கை மறுக்க முடியாது.
எனவே, சுமதியின் மகள்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கை பிரித்துக் கொடுக்க வேண் டும். அதேபோன்று, சுமதி யின் கணவருக்கும் சொத் துக்களில் சமபங்கு பிரித் துக் கொடுக்கப்பட வேண் டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,26.6.15

திங்கள், 21 நவம்பர், 2016

அய்க்கிய அரபு நாடுகளில் தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு


அபுதாபி, ஜூன் 1_- ரம லானை முன்னிட்டு வரும்  ஜுன் மாதம் 15ஆ-ம் தேதி யில் இருந்து செப்டம்பர் 15 வரை நேரடியாக வெயி லின்கீழ் வேலை செய்யும் (கட்டுமானப் பணிகள், பெட்ரோல் கிணறு வெட் டுதல்) தொழிலாளிகளுக்கு பிற்பகலில் இரண்டரை மணிநேர ஓய்வு அளிக்கு மாறு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு அய்க்கிய அரபு அமீரக அரசு உத்தர விட்டுள்ளது.
கோடைக் காலத்தில் ரமலான் வருவதால், நேர டியாக வெயிலில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு அனைத்து வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் இந்த இரண்டரை மணி நேர ஓய்வினை கட்டாய மாக வழங்க வேண்டும். அவசர வேலை நிமித்த மாக தொடர்ந்து பணிகள் நடைபெற வேண்டிய சூழ் நிலையில் தொழிலாளிக ளுக்கு தேவையான குடிநீர்,
குளிர்பானம் போன்ற ஏற் பாடுகளை செய்துதர வேண் டும் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டு களாக அமலில் இருந்து வரும் இந்த கட்டாய ஓய்வு அளிக்க தவறுபவர்களை கண்காணிக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓய்வு அளிக்கப்பட வேண் டிய நேரத்தில் தொழிலா ளர்களை வேலையில் ஈடு படுத்துவது தெரியவந்தால் அந்நிறுவன உரிமையாள ருக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படுவ துடன் தொழில் உரிமமும் ரத்து செய்யப்படும் என அய்க் கிய அரபு அமீரக அரசு வெளி யிட்டுள்ள செய் திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,1.6.15

ஞாயிறு, 20 நவம்பர், 2016

சிறாரை கைது செய்யும்போது செய்ய வேண்டியவை என்ன?


1,500 காவல் நிலையங்களில் விளம்பர பலகை வைக்க உத்தரவு

டி. செல்வகுமார்
சிறார்களை கைது செய்யும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 1500 காவல் நிலையங்களில் விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறார் நீதி சட்டப்படி 18 வயதுக்குக் குறைந்தவர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண் டனை வழங்க முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், டெல்லி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் களில் ஒருவரின் வயது குறைவாக இருந்ததால், அவரை சிறார் கூர் நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப் பட்டது. இவ் வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டுமே விதிக்கப்பட்ட தற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி யது. சிறார் நீதி சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கும், பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டத் திருத் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து ஜனவரி 15ஆ-ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து இளம் சிறார்கள் கைது செய்யப்படும்போது அவர் களை காவல்துறையினர் எப்படி நடத்த வேண்டும்? எப்படி நடத்தக் கூடாது? என்பதை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து காவல் நிலை யங்களிலும் விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உத்தரவிட்டார்.
இதை யடுத்து 6 வகையான வண்ண போஸ் டர்களை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு தயாரித் துள்ளது.
இளம் சிறார்களை கைது செய் யும்போது, அவர்களை சிறையில் அடைக்கக் கூடாது, விலங்கிடவோ, சங்கிலியால் பிணைக்கவோ கூடாது. காவல் நிலைய அறை அல்லது சிறையில் வைக்கக் கூடாது. கைது செய்த பிறகு அரு கில் உள்ள குழந்தை நல அதிகாரியிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
விசாரணை மேற்கெள்ள நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தகவலை சிறாரின் பெற்றோருக்கு தெரி வித்தல் வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற் றுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன் கூறியதாவது:
நாங்கள் தயாரித்துள்ள போஸ் டர்கள் 1500 காவல் நிலையங்களிலும், 32 மாவட்ட காவல்
கண்காணிப் பாளர் அலுவலகங்களிலும், 30 மாற்று தீர்வுமுறை மய்யங் களிலும், 32 சட்ட உதவி மய்யங்களிலும், 426 குற்ற வியல் நீதிமன்றங்களிலும் விரைவில் வைக்கப்பட வுள்ளன. காவல் நிலையங் களில் மட்டும் விளம்பரப் பலகையாக வைக்க உத்தர விடப்பட்டுள்ளது. நீதிமன் றங்களில் போஸ்டராக ஒட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை ஞா.ம.,19.3.16

கொலை, கடத்தல், பாலியல் வன்முறை வழக்குகளில் சமரசத் தீர்வை ஏற்க முடியாது

உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கொலை, மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை, லஞ்சம், வழிப்பறி, கடத்தல், சிலை திருட்டு, பெண்களைத் தவறாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் போன்ற வழக்குகளில் சமரச உடன் படிக்கையை ஏற்கக் கூடாது என உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் என்பவரது புகாரின் பேரில் பிரபு, சந்திரமோகன் ஆகி யோர்மீதான வழக்கு, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் மாரியம்மாள் என்பவர் புகாரின் பேரில் வீரபாண்டியன்மீது பதிவு செய்த வழக்கு, திண்டுக்கல் மாவட் டம், சாணார்பட்டியில் கெம்பையா என்பவரின் புகாரின் பேரில் சாகுல் உட்பட 6 பேர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகிய வற்றை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த மனுக்களில், புகார் தாரர், எதிர்தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால், அந்த சமரசத்தை ஏற்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர்கள்மீது பல் வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவற்றில் பல குற்றங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங் களாக உள்ளன.
சிறப்புச் சட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மனுதாரர் களின் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாத நிலை நீதி மன்றத்துக்கு ஏற்பட்டுள் ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பதிவு செய் யப்படும் வழக்குகளைப் பொறுத்தவரை சமரச உடன்படிக்கையை ஏற்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
சொத்து, வணிகம், பங்குதாரர் பிரச்சனை, திரு மணப் பிரச்சினை, வரதட் சணை, குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் சமரசத்தை ஏற்கலாம். அதே நேரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசத்தை ஏற்க முடியாது.
குறிப்பாக கொலை, கொலை முயற்சி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலி யல் வன்முறை, லஞ்சம், போலி ஆவணம் தயாரித்தல், பொய்சாட்சியம் அளித்தல், வழிப்பறிக் கொள்ளை, கடத்தல், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை, சிலை திருட்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை தவ றாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் உள் ளிட்ட பல குற்றங்களில் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாது.
இதுதவிர ஆயுதச் சட்டம், லஞ்ச ஒழிப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், கந்து வட்டி தடைச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங் களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சமரச உடன்படிக்கையை ஏற்று ரத்து செய்ய முடியாது.
அதேநேரத்தில் சமரச உடன்படிக்கையை ஏற்கும் முன்பு குற்றவாளியின் முந்தைய நடத்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும். சமரச உடன்படிக்கையை ஏற்பதில் நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக செயல் படக்கூடாது.
ஏனெனில், சமரச உடன் படிக்கை, அந்த வழக்கில் இருந்து குற்றவாளியை தப்பிக்கச் செய்வதாக மட்டும் இருக்கக்கூடாது. இந்த வழக்குகளை பொறுத்தவரை உசிலம்பட்டி காவல் நிலைய வழக்கை ரத்து செய்ய முடியாது. விருது நகர் மற்றும் சாணார்பட்டி காவல் நிலைய வழக்குகள் திருமணப் பிரச்சினை தொடர்பானது.
அந்த வழக்குகளில் சமரச தீர்வை ஏற்கலாம். அதற்காக அந்த வழக்குகளை 28.1.2016- இல் பட்டியலிட்டு சமரச உடன் படிக்கையை ஏற்க வேண்டும். என்றார் நீதிபதி.
-விடுதலை ஞா.ம.,19.3.16

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

தெரிந்து கொள்வீர்!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான வன்கொடு மைகளை தடுப்பதற்கான சட்டத்தை வலுப்படுத்தும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை தொடர்பான சட்டதிருத்த அவசரச் சட்டம்
1. சட்ட திருத்தத்தின் விபரங்கள் மற்றும் வசதிகள்  தாழ்த்தப்பட் டவர்கள் மற்றும் பழங்குடியினரை அவமானப்படுத்துவதும் அவர்களைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவது
தாழ்த்தப்பட்டவர்களை பலவந்தப் படுத்துவது வாக்களிக்க மிரட்டுவது, அவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது
தாழ்த்தப்பட்டவர்களின் சொத்துக் களை மிரட்டி பலவந்தமாக பிடுங் குவது,
2.    தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்கு எதிரான கொடு மைகள்
பாலியல்வன்கொடுமை மற்றும் துண்புறுத்தல் மேலும் தாழ்த்தப் பட்ட பழங்குடியினப் பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வது,
தகாதவார்த்தைகளில் பாலியல் சைகை முறையில் பெண்களை மனம்புண்படும்வகையில் பேசுவது
தலித் பெண்களை தேவதாசி களாக அல்லது கோவிலகளில் அப்பெண்களை அடிமைகளாக  மாற்ற முயலும் கோவில் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை
நவீன சாதனங்களை (மொபைல் மூலம் தகாதவார்த்தை பேசுவது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது) பயன்படுத்தி தவறாக வார்த்தை களைப் பயன்படுத்துதல்
3. பொது இடங்களில் செருப்பை அணிவதைத் தடுப்பது, மலம் அள்ள வற்புறுத்துவது, மிரட்டிக் கட்டாயப் படுத்துவது, பொது இடங்களில் ஜாதிரீதியாக பேசி அவமானப்படுத்து வது, மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி அவமானப்படுத்தும் விதமாக பேசுவது, சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர்களை ஜாதி குறித்துப் பேசி அவமானப்படுத்துவது மற்றும் அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்லி ஏளனம் செய்வது
4.    வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதி மறுப்பது, பொது இடங்களை பயன்படுத்துவதை தடுப்பது ஆகியவையும் இந்த சட்ட வரம்புக்குள் புதிதாக இணைக்கப்பட் டுள்ளன.
5.    காலதாமதமின்றி வழக்கு விசாரணை நடைபெறுவதற்காக தனி வழக்கறிஞரும் நியமிக்கப்பட இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
6.    தாழ்த்தப்பட்ட பழங்குடியி னரை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் அரசுப் பணியா ளர்களுக்கு பணி நீக்கம் மற்றும் சிறைத் தண்டனை
7.    உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் மற்றும் வாய்மொழியாக வழங்கபப்ட்ட புகாரை பதிவேட்டில் ஏற்றி புகார் கொடுத்தவரின் கையொப்பத்தைப் பெற்று அதன் நகலை புகார் அளித்தவரிடம் அளிக்கவேண்டும்.
8.    மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் நியமித்தல்
9.    இரண்டு மாதத்திற்குள் வழக்கை விசாரித்து நீதி வழங்க
10.    மூன்று மாதங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் இந்த வழக் குகள் தேங்கக் கூடாது,
11.    காலதாமதமின்றி வழக்கு விசாரணை நடைபெறுவதற்காக தனி வழக்கறிஞரும் நியமிக்கப்பட இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
•    புகார் அளிப்பவரை பாதுகாத்தல்
•    சாட்சியளிப்பவர்களைப் பாது காத்தல்
• சாட்சியளிப்பவர்களுக்கும் புகார் அளிப்பவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உரிமைகளை வழங்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்
-விடுதலை ஞா.ம.12.3.16