சனி, 29 ஜூன், 2024

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை-1

 



 பிப்ரவரி 16-29, 2024 

கீழே தரப்பட்டிருப்பது பாரிசில் 1995இல் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 28ஆம் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைத் திட்ட வரையறை’ ஆகும்.

முன்னுரை

1. சர்வதேச கல்வி மாநாட்டின் 44ஆம் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த வரையறையின் நோக்கமாகும். பல்வேறு சமூகங்களின் நிலைமைகளுக்கேற்ப தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைமுறைக்கான உத்திகளாகவும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் மாற்றிக்கொள்ளப்படக்கூடிய வழிகாட்டு நெறிகளை இது முன் வைக்கிறது.

2. இது விரைவான மாறுதல்களும் மாற்றங்களும் நிகழும் காலம். சகிப்பின்மை வெளிப்பாடுகள், இனப் பண்பாட்டின் வெறுப்பின் தோற்றங்கள், தன் அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் பயங்கரவாதத்தின் எழுச்சி, பாகுபாடுகள், போர், ‘அந்நியர்’க்கு எதிரான வன்முறை, செல்வர்க்கும் இல்லார்க்கும் இடையிலான பிளவுகளின் வளர்ச்சி ஆகியவை நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் தோன்றும் காலம். இக்காலத்துக்கேற்ப, அடிப்படை சுதந்திரம், அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றை உறுதி செய்தல் நிலைத்து நிற்கக் கூடியதும் சமத்துவ அடிப்படையிலானதுமான சமூக- பொருளாதார மேம்பாட்டை வளர்த்தல் என்ற இரண்டையும் குறிவைத்து செயல்முறை உத்திகள் உருவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இவை யாவுமே ஒரு சமாதானக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான பங்களிப்பைத் தருவன. அதற்கு மரபுசார்ந்த கல்விப் பணிமுறை
களில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.

3. உலகில் இன்று காணும் சவால்களை எதிர்காணுவதற்குரிய ஒன்றுபட்ட பயனுள்ள வழியில் செயல்பட உதவக்கூடிய ஆவணங்களைத் தனக்காக ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று உலக நாடுகள் அண்மையில் உறுதிபூண்டன. இந்தத் திசையில் மனித உரிமைகள் பற்றிய உலக மாநாட்டில் (வியன்னா, ஜூன் 1993) ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்’ மனித உரிமைகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான சர்வதேசப் பேரவைக் கூட்டத்தில் (மாண்ட்ரியல் நகர் மார்ச் 1993) ஏற்கப்பட்ட ’மனித உரிமகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான உலக நடவடிக்கைத் திட்டம்’, இணைக்கப்பட்ட பள்ளிகள் திட்ட உத்தி மற்றும் நடவடிக்கைத் திட்டம் (1994-2000) ஆகியன உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள், மேம்பாடு இவற்றைப் பேணுவதில் எதிர்கொள்ள நேரும் சவால்களைச் சந்திக்க உதவும் முயற்சிகளாகும்.

4. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறையானது ‘நாடுகளுக்கிடையிலான ஒத்திசைவு, ஒப்புறவு, உலக அமைதி இவற்றுக்கான கல்வி பற்றிய பரிந்துரை’, ‘மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் தொடர்பான கல்வி’ ஆகியவற்றால் உந்தப்பட்டு தனது உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசாங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் முன்பு ‘உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வி தொடர்பான சிக்கல்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் பற்றியும் ஒருங்கிணைவான, நிகழ்நாளுக்குரிய ஒரு பார்வையை முன் வைக்கிறது. பொது மாநாடு தன் 27ஆம் அமர்வில் வேண்டியபடி இதனைச் செய்கையில் நடப்பில் உள்ள நடவடிக்கைத் திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் நடைமுறை முக்கியத்துவம், பயன்தரு வலிமை ஆகியவற்றை வலுப்படுத்துவதே நோக்கமாயிருக்கிறது. எல்லா நாட்டு மக்களுக்கும் கல்வியறிக்கை, புதிய வழிகள் காண்பதற்காக கடந்தகால அனுபவம் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் விழைவு. அதற்குத் தக்க வண்ணம் இந்தத் திட்டவரையறை செயல்பாடுகளுக்கான கோட்பாடுகளையும் இலக்குகளையும் அடையாளம் காட்டுகிறது; ஒவ்வொரு அரசுக்கும் ஏற்ப அது வகுத்துக் கொள்ள வேண்டிய கொள்கைகளை உருவாக்குவோர் கவனத்துக்கு கருத்துரைகளை முன்வைக்கிறது. பிரகடனத்தில் கண்டுள்ள கடப்பாடுகளுக்கேற்ப அத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட நாடுகள் தம்முள் ஒப்புறவுடன் செயல்பட வகை செய்கிறது. ஆய்வுக்குரிய தலைப்புகளை நிர்ணயிக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஒரு இசைவான முழுமைக்குள் இணைத்துக் கொண்டுவர முயற்சிக்கிறது. அனைத்து மட்டங்களிலும் கல்வியை மறு ஒழுங்கு செய்ய முயல்கிறது. முறைகளை மறுசிந்தனைக்குட்படுத்துகிறது; கற்பிக்கும் கருவிகளை மறுபரிசீலனை செய்கிறது. ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆசிரியப் பயிற்சியை மேம்படுத்துகிறது. ஆக, கல்விமுறை மேலும் வெளிப்படையானதாக அனைவரும் பங்கெடுப்பதன் மூலம் உருப்பெற உதவுகிறது.

5. மனித உரிமகள் யாவும் உலகளாவியன, பிரிக்க முடியாதன, ஒன்றையொன்று சார்ந்தன, ஒன்றுக்கொன்று தொடர்பானவையுமாம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்திகள் குறிப்பிட்ட வரலாற்றுபூர்வமான, சமயபூர்வமான, பண்பாட்டியல் பூர்வமான அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியின் இலக்குகள்:

6. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி, ஆகியவற்றுக்கான கல்வியின் இறுதி இலக்கு, ஒவ்வொரு மனிதரின் மனதிலும், அமைதிப் பண்பாட்டுக்கு அடித்தளமாயமைந்துள்ள உலகளாவிய மதிப்பீடுகள், நடத்தைகளையும் விதைப்பதாகும். வெவ்வேறு சமூக- பண்பாட்டுச் சூழ்நிலைகளிலும்கூட உலக முழுவதிலுமே ஒப்புக்கொள்ளப்படக்கூடிய பொதுவான மதிப்பீடுகளை இனங்காண இயலும்.

7. சுதந்திரத்தை மதிக்கவும், அதன் சவால்களைச் சந்திக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவுமான வலிமையை கல்வி தரவேண்டும். சிரமங்களையும் நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள குடிமக்களைப் பழக்குவதும், பொறுப்புகளுக்கும் சுயசார்புக்கும் அவர்களைத் தயார் செய்வதுமே இதன் பொருளாகும். குடிமக்களின் கடப்பாட்டிற்கு உரிய மதிப்பினை ஒப்புக்கொள்வது, சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றவர்களுடன் இணைந்து உழைப்பது, நியாயமும் சமாதானமும் ஜனநாயகமும் நிலவும் ஒரு சமூகத்தைப் படைக்க முயல்வது ஆகியவற்றுடன் சுய பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு இணைந்திருக்கிறது.

8. பால்வேறுபாட்டிலும், சமூகங்களுக்கிடையிலான வித்தியாசங்களிலும் மனிதருக்கு மனிதர் உள்ள வேறுபாட்டிலும், பண்பாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளிலும் காணக்கிடக்கும் மதிப்பீட்டு முறைகளை இனங்காணவும் ஏற்கவும் தேவைப்படும் சக்தியையும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளல், அறிவைப் பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கான வலிமையையும் கல்வியானது தரவேண்டும். மக்கள் தாம் நேர்காணும் நிலைமைகளைப் புரிந்துகொள்ளுவது அவர்களது சொந்த வாழ்வு சமூக வரலாறு பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்வதையும், எனவே சிக்கல்களுக்கான ஒரே தீர்வு என்றெதுவும் எந்த ஒரு தனி மனிதர் கையிலோ, தனி ஒரு குழுமத்தின் கையிலோ இல்லையென்பதையும், ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வு இருக்கமுடியும் என்பதையும் வித்தியாசங்கள் நிறைந்த உலகில் கலாசாரப் பன்முக சமுதாயத்தின் உறுப்பினராக வாழ நேர்ந்துள்ள மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையினாலே, மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும், சமமானவர்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள வேண்டும். பொது அணுகுமுறைகளைக் காண்பது நோக்கமாயிருக்க வேண்டும். இப்படியாக கல்வி, சமூகங்களுக்கிடையேயும், மனிதர்களுக்குள்ளும் சமாதானம், நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்தும் கருத்துகளையும் தீர்வுகளையும் ஒன்றுகூட்டுவதை ஊக்குவிப்பதாக, சுயஅடையாளங்களை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

9. வன்முறையில்லாமல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வலிமையை அது மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் சகிப்புணர்வு, பாசம், பகிர்ந்துகொள்ளுதல், (அடுத்தவர் பற்றிய) அக்கறை போன்ற மாண்புகளை இன்னும் வலுவாக உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படுகிற உள்மன அமைதி மேம்படுவதை வளர்க்க வேண்டும்.

10. அறிவார்ந்த தீர்மானங்கள் எடுக்கவும், சமகால நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் என்று மட்டுமின்றி எதிர்காலம் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் தமது முடிவுகளையும் செயல்களையும் தீர்மானிக்கவும் தேவையான திறமையை, கல்வி மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

11. கல்வியானது குடிகளுக்கு பண்பாட்டு மரபுகளை மதிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் , நிலைத்து நிற்கக்கூடிய (பொருளாதார) மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லக்கூடிய உற்பத்தி முறைகள், நுகர்வு இயல்புகள் ஆகியவற்றைக் கைக்கொள்ளவும் கற்றுத்தர வேண்டும்.
தனியார் மதிப்பீடுகள்- கூட்டு மதிப்பீடுகள் ஆகியவற்றிடையேயும், உடனடியான அடிப்படைத் தேவைகளுக்கும் நீண்டகால அக்கறைகளுக்கிடையேயும் ஒத்திசைவு காணுவதும் தேவையாகும்.

12. சமச்சீரான நெடுங்கால வளர்ச்சிக்கான நோக்கிலமைந்த, சமத்துவத்தையும் ஒற்றுமையையும் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் ஏற்படுத்தத் தேவையான உணர்வுகளை விதைப்பதாயும் கல்வி அமைய வேண்டும்.
உத்திகள்

13. இந்த இலக்குகளை நிறைவேற்ற, கல்வியமைப்புகளின் உத்திகளும் நடவடிக்கை விதங்களும் சீரமைக்கப்படுவதன் தேவை தெளிவானது. கற்பித்தல் முறை, நிறுவன நிருவாகம், இரண்டிலுமே இந்தச் சீரமைப்பு அவசியம் தேவை. மேலும் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி அளிப்பது, உலகளாவிய மனித உரிமை என்பதன் பிரிக்க முடியாத- பிரிக்கக்கூடாத பகுதியான மகளிர் உரிமை பேணுதல் ஆகிய இரண்டும் உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியில் அடிப்படையான அம்சங்களாகும்.

14. உலக அமைதி, மக்களாட்சி, மனித
உரிமைகள் பற்றிய கல்விக்கான உத்திகள்:
அ. விரிவான பார்வை கொண்டமைய வேண்டும். முழுமை கொண்டு விளங்க வேண்டும். அதாவது பலவகை அம்சங்களையும் தழுவி இருக்கவேண்டும். அவற்றில் சில அம்சங்களை பின்வரும் துணைப் பகுதிகளில் விவரமாகக் காண்போம்.
ஆ. அவை எல்லா வகையான, எல்லா நிலைகளுக்குமான, எல்லாவிதமான கல்விகளுக்கும் பொருந்தவேண்டும்.
இ. கல்வித்துறையில் பங்காளிகளாக உள்ள எல்லாரையும், சமூகமயமாக்கும் பணியிலும் உள்ள எல்லா அமைப்புகளையும் சமூக நிறுவனங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
ஈ. நகரளவில், நாட்டளவில், வட்டார அளவில் உலகளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
உ. கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி தரக்கூடிய வகைக்கு மேலான்மை முறைகளையும், நிர்வாகத்தையும், ஒருங்கிணைப்பையும், பணி மதிப்பீட்டையும் ஒழுங்கமைத்தலின்மூலம் அவை குறிப்பிட்ட வகையில் நடவடிக்கைத் திட்டங்களை ஏற்படுத்தவும், உள்ளூர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், மேம்பாட்டு புது உத்திகளை ஊக்குவிக்கவும், நிறுவனத்தின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் செயலூக்கத்தோடு மக்களாட்சி முறையில் பங்களிக்கச் செய்வனவாக அமைய வேண்டும்.
ஊ. யாருக்காகச் செய்கிறாமோ அவர்களது வயது மனநிலை ஆகியவற்றுக்கிசைய அமைய வேண்டும். பயில்வோர் ஒவ்வொருவரின் கற்கும் சக்தியின் பரிணாம வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எ. தொடர்ச்சி உடையனவாயும் முரணற்றவை யாயும் விளங்க வேண்டும். உத்திகளின் தடைகளும் பயன்களும் மதிப்பிடப்பட வேண்டும். மாறிவரும் சூழல்களுக்கேற்ப உத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்த மதிப்பீட்டு முறை உதவும்.
ஏ. பொதுவாக கல்வியிலும், குறிப்பாக ஓரம்கட்டப்
பட்டவர்கள், வசதியற்றோர், கல்வியிலும் மேற்
கண்ட இலக்குகளை அடையத் தேவையான ‘வசதிகள்’ பற்றியும் சிந்திக்க வேண்டும்.

15. மாறுதல்கள் எந்த அளவு தேவை,
செயல்பாடுகளுக்கிடையிலான முன்னுரிமைப் படுத்தல், எந்த வரிசையில் நடவடிக்கைகளை நடைமுறையில் மேற்கொள்ள வேண்டும் ஆகியவை பற்றிய முடிவுகளை இறுதி செய்யும் முன்பாக முடிவெடுக்கும் எல்லா மட்டங்களிலும் மாறுபட்ட வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டியல் மரபுகள், நாடுகள் வட்டாரங்களின் மேம்பாட்டு நிலைகள், நாட்டுக்குள்ளேயே கூட மேம்பாட்டு நிலையில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

16. முறையான கல்வியிலும் சரி, முறைசாராக் கல்வியலும் சரி, முறைசாராக் கல்வியிலும் சரி, எல்லா மட்டங்களிலும் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய பாடங்கள் இடம் பெறுவது தீவிர முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வியின் உள்ளடக்கம்

17. ஒற்றுமை, படைப்புத்திறன், குடிமைப் பொறுப்புணர்வு, வன்முறை தவிர்த்த வழிகளில் பூசல்களுக்குத் தீர்வு காணும் வலிமை, விமர்சன சக்தி போன்ற மாண்புகளை உருவாக்குவதை வலுப்படுத்த, எல்லா மட்டத்திலும் பாடத்திட்டத்தின் உலகளாவிய பரிமாணங்கள் கொண்ட குடிமைக்கல்வி இடம் பெற வேண்டியது அத்தியாவசியமாகும். உலக அமைதியை உருவாக்கும் கூறுகள் பற்றிய அக்கறைகள் கல்விக்கு இருக்க வேண்டும். பல்வேறு மோதல்கள், அவற்றின் காரணங்களும் விளைவுகளும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தையும், மகளிர்க்கெதிரான சகலவகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, குழந்தைகள் உரிமை பற்றிய உடன்படிக்கை, போன்ற தேசிய சர்வதேசிய நிர்ணயிப்புகள் ஏற்பட்ட விதம், மக்களாட்சியின் அடிப்படைகள், இனவாதம், பெண்ணியப் போராட்ட வரலாறு, மற்ற பாகுபாடுகளையும் ஒதுக்குமுறைகளையும் எதிர்க்கும் இயக்க வரலாறுகள் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையும் கல்வியைத் திட்டமிடுவதில் இருக்கவேண்டும். பண்பாடு, மேம்பாடு தழுவிய சிக்கல்கள், இனங்களின் வரலாறுகள், அய்நா. முதலிய உலக அமைப்புகளின் பங்கு பணி பற்றியெல்லாமும் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும். அமைதி, மக்களாட்சி, மனித உரிமை பற்றியெல்லாம் கல்வி அமைய வேண்டும். விசேஷமான பாடங்களுக்கு மட்டுமே அழுத்தம் தருவதாக இருக்கக்கூடாது. கல்வி குறுக்கப் படலாகாது.

இந்தச் செய்திகளைப் பரப்புவதாகவே கல்வி முழுவதும் அமைய வேண்டும். அதுபோலவே பாடநூல் சீர்திருத்தமும் உலக அளவிலும் தேசிய அளவிலும் மற்றவர் பண்பாட்டுக் கூறுகளை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் அறிவைத் திருப்பிவிடும் போக்கில் அமைய வேண்டும். உள்ளூர் சிக்கல்களையும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதையும் இணைப்பதாக பாடநூல்கள் இருக்க வேண்டும் நாட்டுக்கு நாடு மதமும் பண்பாடும் மாறுவதால் அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு எத்தகைய அறநெறிக் கல்வி பொருந்தும் என்பதை நாடுகள் ஒவ்வொன்றும் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிறவனத்தின் சூழ்நிலையும் மக்களாட்சி மாண்புகளுக்கு இசைந்ததாக இருந்திட வேண்டும்.
கற்பிக்கும் கருவிகளும் வசதிகளும்

18. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரிடமும் அவர்கள் வசம் போதுமான கல்விக் கருவிகளும் வசதிகளும் இருக்க வேண்டும். எதிர்மறையான உருவகிப்புகளையும் ‘மற்றவர்கள்’ பற்றிய காமாலைப் பார்வையையும் தவிர்க்கும் வகையில் தேவையான மாற்றங்களைப் பாடநூல்களில் கொண்டு வருவது அவசியம். பாடநூல் தயாரிப்பில் பன்னாட்டுக் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாடநூல்களும் கல்விக் கருவிகளும் பிறவும் புதிதாகத் தயாரிக்கப்படும்போதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழல் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். குறித்த பொருள் பற்றிப் பேசும்போது பாடநூல்கள் அதன் பல பரிமாணங்களையும் பேச வேண்டும். அந்த நூல் எந்தப் பண்பாட்டின்/தேசியத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புலப்படுத்தப்பட வேண்டும். யுனெஸ்கோ, அய்.நாவின் பிற அமைப்புகள் ஆகியவற்றின் ஆவணங்கள் கல்விக்கூடங்களில் பரவலாகப் பரப்பப்படுவதும் பயன்படுவதும் விரும்பத்தக்கதாகும். அதிலும் குறிப்பாக பொருளாதாரக் காரணங்களினால் கல்விக் கருவி உற்பத்தி விரைவாக இல்லாத நாடுகளில் இது மிகவும் விரும்பத்தக்கது.. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி பற்றிய கல்விக்காக தொலைதூரக் கல்விக்கான தொழில்நுட்பங்களும், நவீன தகவல் தொடர்பு முறைகளும் ஏற்படுத்தித் தரப்படவேண்டும். l

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

 



 மார்ச் 16-31, 2024

பிப்ரவரி 16-29 இதழின் தொடர்ச்சி…

அந்நிய மொழிகளைப் படிக்கவும், பயன்படுத்தவும், பேணவுமான திட்டங்கள்

19. உலக அமைதி, மக்களாட்சி. மனித உரிமைகள் பற்றிய கல்வியின் மேம்பாட்டுக்கு எழுத்து, படிப்பு, பேச்சு ஆகியவை தொடர்பான
திட்டங்கள் சரியான அளவு வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம். தகவல் அறியவும்,
நாம் வாழும் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தேவைகளைத் தெரியப்படுத்தவும், சமூக சுற்றுச்சூழலில் நடைபெறும் நடவடிக்கைகளில் பங்கு பெறவும் எப்படி எழுதவும், படிக்கவும், பேசவும் விரிவான பயிற்சி இருப்பது மிகவாக உதவுகிறதோ அப்படி அயல்மொழி அறிவும் மற்றப் பண்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவு பெறவும் ஒரு வழியாகிறது. சமுதாயங்களிடையிலும் நாடுகளிடையிலும் நல்லவிதமான புரிந்துக்கொள்ளுதலை உருவாக்க இது அடித்தளம் அமைக்கிறது. யுனெஸ்கோவின் லிங்குவா பாக்ஸ் (மொழி மூலமாக அமைதி) திட்டம் அந்த வகையில் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

கல்விக்கூடங்கள்

20. கல்வித்துறை மாற்றங்களுக்கு இயல்பான உரிய இடம் பள்ளிகளும் வகுப்பறைகளும் ஆகும். கற்பிக்கும் – கற்கும் முறைகள், நடவடிக்கை முறைகள், நிறுவனக் கொள்கைகள் ஆகியவை உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றை அன்றாட வாழ்வின் பழக்கமாக ஆக்கவேண்டும். கற்றுக் கொள்ளக்கூடிய பாடமாகவும், காட்டவேண்டும். முறைகளைப் பொறுத்தவரை, தீவிர முறைகளைப் பயன்படுத்துதலும், குழுவாக வேலை செய்தலும், தார்மீக விஷயங்களை விவாதித்தலும் நேருக்கு நேராகப் பயிற்றுவித்தலும் ஊக்குவிக்கப்படுவதற்குரியன. அதேபோல், நிறுவனக் கொள்கைகள் தளத்தில் திறமையான மேலாண்மை முறைகளும் பங்கெடுத்தலும் மக்களாட்சி பூர்வமாக பள்ளி நிருவகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர், பெற்றோர், மாணவர் – ஏன் ஒட்டுமொத்த சமூகமும் அதில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

21. வெவ்வேறு நாட்டையும், வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலத்தையும் சேர்ந்த மாணவர், ஆசிரியர், பிற கல்வியாளர்கள் ஆகியோரிடையே நேரடியான சந்திப்புகளும் பரிமாற்றங்களும் ஊக்குவிக்கப்படவேண்டும். பரிசோதனைகளும் புதிய முயற்சிகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இடங்களுக்கு பிறர் சென்று பார்க்க வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் குறிப்பாக பக்கத்து நாடுகளுக்குள் நடத்தப்படுவது நன்று. பொதுவான சிக்கல்களைத் தவிர்ப்பது குறித்து வெவ்வேறு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலும் கல்விக்கூடங்களுக்கு இடையிலும் இணைந்து பணி செய்யும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நோக்கத்தில் ஒன்றுபடும் பள்ளிச் சிறார், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் இணையங்களைச் சர்வதேச அளவில் உண்டாக்க வேண்டும். அத்தகைய இணையங்களில் பாதுகாப்பின்மைக்கோ, தீவிர வறுமைக்கோ ஆளான பள்ளிகள் இடம்பெற முன்னுரிமை காட்டப்படவேண்டும். இதனை நெஞ்சிலிருத்தி யுனெஸ்கோவின் இணைக்கப்பட்ட பள்ளிகள் அமைப்பினை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் அவசியமாகும். இந்தவித நடவடிக்கைகள் யாவும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டங்களின் பகுதியாக இருக்கிற வசதிக்குத் தக்கவாறு துவக்கப்பட வேண்டும்.

22. தேறாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். எனவே, தனியொரு மாணவனின் சக்திக்கேற்ப கல்வி நீக்கப்போக்குடன் கூடியிருக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்ச்சியிலும் கல்வியிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியினை வலுப்படுத்தலும் சமூக ஒருமைப்பாட்டினை அடைவதில் கணிசமான முறையில் அடிப்படைத் தேவைகளாய் உள்ளன. பள்ளிகட்கு அதிக சுயாட்சி என்னும்போது, கல்வியின் வெற்றிக்கு சமுதாயமும் ஆசிரியர்களும் அதிகப்படி பெறுப்பேற்க வேண்டும் என்பதும் உட்பொருளாய் விளங்குகிறது. கல்வி அமைப்புகளின் மேம்பாட்டு அளவுகளுக்கிடையில் வேறுபாடு இருப்பதால் அதை வைத்தே சுயாட்சியின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லையேல் கல்வியின் உள்ளடக்கம் பலவீனமடைய நேரிடலாம்.

ஆசிரியர் பயிற்சி

23. ஆசிரியர், நிர்வாகியர், திட்டமிடுவோர், ஆசிரியப் பயிற்சியாளர்கள் என்று கல்வியமைப்பின் எல்லாத்தளத்தில் பணிபுரிகின்றவர்களுக்கும் தரப்படும் பயிற்சிகளில் சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வியும் இடம்பெறவேண்டும். அத்தகைய பணிக்கு முந்தைய, பணியில் பொதித்த பயிற்சிகள், மறு பயிற்சிகள் ஆகியவை நிகழிடத்தில் உள்ள முறைகள், சோதனைகளைக் கவனித்தல், பயன்களை மறு மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை அறிமுகம் செய்து நடத்திப் பார்க்க வேண்டும். தமது பணிகளைச் செவ்வனே முடிக்க பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், முறை சாராக் கல்வித்திட்டங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர், சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் (அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், சமூக இயல்/மன இயல் அறிஞர்கள் ஆகியோர்) உதவியையும் மனித உரிமைப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் அரசுசாரா அமைப்புகளின் உதவியையும் நாடவேண்டும். எல்லாவித கற்பிப்போர்களுக்கான பயிற்சிகளிலும் ஒரு பகுதியாக மனித சக்திப் பரிமாற்றங்களும் கற்பிக்கும் கலையும் இடம்பெறவேண்டும்.

24. ஆசிரியப் பணியை மேம்படுத்திக்கொள்ளும் விரிவானக் கொள்கையில் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் செவ்வனே பொருந்த வேண்டும். சர்வதேச மேதைகள், ஆசிரியர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஆகியோர் நடவடிக்கை முயற்சிகளை தயாரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களிடையிலேயே அமைதிக் கலாச்சாரத்தைப் பரப்புவதில் அவர்களுக்கெல்லாம் முக்கியப் பங்கு இருக்கிறது.
பலவீனமான பகுதியினருக்கான நடவடிக்கைகள்

25. பலவீனமான பகுதியினர், அண்மையில் பூசல்களுக்கு இடையில் வாழ நேர்ந்தோர், போர்சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டோர் ஆகியோருக்கு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயத்தேவை. விளிம்பில் வாழும் குழந்தைகளும் பால்முறை வன்முறைக்கோ பிற வன்முறைக்கோ ஆளான மகளிர்- சிறுமியர் ஆகியோருக்கும் சிறப்புக் கவனம் அத்தியாவசியம். கல்வியாளர்களுக்கும், போரிடும் குழுக்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக பூசல்களங்களுக்கு வெளியே பயிற்சிப் பட்டறைகளும் சிறப்பு மையங்களும் அமைத்தல், போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் கல்வியாளருக்கு சிறப்புப் பயிற்சி தருதல் ஆகியவற்றை நடைமுறையில் இயலக்கூடிய நடவடிக்கைகளுக்கு உதாரணங்களாகக் கூறலாம். இயன்ற இடமெல்லாம் இத்தகு முயற்சிகளை அரசாங்கக் கூட்டுறவுடன் மேற்கொள்ளல் நலம்.

26. கைவிடப்பட்ட குழந்தைகள், வீதிகளில் உள்ள குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள், பொருளாதார ரீதியாகவோ பால் அடிப்படையிலோ வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள், குழந்தை அகதிகள் முதலியவர்களுக்காக கல்வித்திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுதல் அவசரத் தேவையாகும்.

27. சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும், ஒருங்கிணைவு நடவடிக்கைகளிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பங்கு பெறுவதை வலியுறுத்தும் இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்வதும் அதே அளவுக்கு அவசரமானதாகும்.

28. மேலும், கல்வி பயில்வதில் சிரமங்கள் கொண்டோர் (இது மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறிக்கலாம்)களின் வித்தியாசமான தேவைகள் குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திவிடாமல், ஒருங்கிணைந்த கல்விச் சூழலிலேயே அவர்களுக் குரிய வகையான கல்வியை அளிப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.

29. அத்தோடுகூட சமூகத்தின் பல்வேறு குழுவினர்க்கு இடையிலும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கலாச்சார இன-சமய மொழி சார்ந்த சிறுபான்மையினர், ஆதிகுடிகள் ஆகியோரின் கல்வி உரிமைகளுக்கும் மரியாதை இருக்கவேண்டும். பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், கல்வி வசதி ஏற்படுத்தப்படும் விதம் ஆகியவற்றில் இந்த அக்கறையும் எதிரொலிக்க வேண்டும்.
ஆராய்ச்சியும் மேம்பாடும்

30. சிக்கல்கள் புதியனவாயிருக்கும்போது தீர்வுகளும் புதிதாய்க் காண வேண்டியிருக்கிறது. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமை ஆகியவை பற்றிய கல்வியின் சிக்கலான இயல்பைப் பயனுள்ள முறையிலும் அதற்கேற்ற முறையிலும் எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்துவதற்கான உத்திகளைக் கண்டாக வேண்டும். புதிய கற்பிப்பு முறைகளையும், புது அணுகல் நெறிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். சமூகப் பாடங்களில் ஆய்வு செய்யும் நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றிடையே ஆய்வுக்கான விஷயங்களைத் தெரிந்தெடுப்பதில் ஒருங்கிணைப்பை அதிகப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் (அரசாங்கம், பெற்றோர், ஆசிரியர், இன்ன பிறர்) ‘முடிவெடுத்தல்’ குறித்த ஆய்வுகள் நிகழ்த்தி அதன்மூலம் கல்வி நிருவாகம் பயனுள்ள முறையில் நடப்பதை மேம்படுத்த வேண்டும். மனித உரிமைகள் அதிலும் மகளிர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி மனிதர்களின் அணுகுமுறையை மாற்றுவதற்கான புதிய வழிகளைக் காணுவது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முடிவுகளை அளந்து அறிவிக்கும் காரணிகளையும் அமைப்பையும் உருவாக்குதல்,
அ. புதுமையான பரிசோதனைகள் குறித்து விபர வங்கிகள் அமைத்தல்,
ஆ. ஆராய்ச்சி முடிவுகளையும் பிற தகவல்களையும் பரப்பவும், பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை மூலம் கல்வித் திட்டங்களின் பலாபலன்களை நன்றாக அனுமானிக்கலாம்.

உயர்கல்வி

31. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய கல்வியில் உயர்கல்வி நிறுவனங்கள் பல வழிகளில் பங்களிக்கலாம். இந்தத் துறையில், உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் நியாயம், தொழில் நியாயங்கள், குடிமைக் கடப்பாடுகள், சமூகப்பொறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புள்ள திறமைகள், மதிப்பீடுகள், அறிவு ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும். உலகமே நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசுகள் ஒன்றையொன்று மேன்மேலும் சார்ந்திருப்பதை மாணவர்கள் உணர்வதையும் உயர்கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வித் துறைக்கும் பிற சமூக இயல் ஊக்கிகளுக்கும் ஒருங்கிணைப்பு

32. குடிகளின் கல்விக்குக் கல்வித்துறை மட்டுமே முழுதும் பொறுப்பல்ல. அது இப்பணியினைப் பயனுள்ள முறையில் செய்வதற்கு, குறிப்பாக குடும்பம், மரபுசார் தகவல் அமைப்புகள் உள்ளிட்ட தகவல் ஊடகங்கள், தொழில்துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

33. பள்ளிக்கும் குடும்பத்துக்குமிடையே ஒருங்கிணைவுக்கு, பள்ளி செயல்பாடுகளில் பெற்றோர் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், வயதுற்றோருக்கும் பொதுவாக ஊரார் அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டங்களை வரைந்து செயலாக்குவதும் பள்ளியின் பணியை வலுப்படுத்துவதற்கான அவசியத் தேவையாகும்.

34. குழந்தைகளையும் இளைஞர்களையும் சமூக அங்கமாக ஒருங்கிணைப்பதில் செய்தி ஊடகங்களின் தாக்கத்தை அனைவரும் ஒப்புக்கொள்வது வளர்ந்து வருகிறது. எனவே, விமர்சனக் கண்ணோடு ஊடகங்களின் பணியை அலசவும் அவற்றால் பயனடையவும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதும் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதும் அவசியமாகிறது. இதற்கும் இவ்வூடகங்களினால் பயனடைவதில் திறமையை வளர்த்துவிடவும் சில தெரிந்தெடுத்த திட்டங்கள் தேவைப்படுகின்றன. அதேசமயம், குறிப்பாக வெறுப்பையும், வன்முறையையும், கொடுமையையும், மனித கவுரவத்துக்கெதிரான அவமரியாதையையும் தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் அமைதி, மனித உரிமைக்கு மரியாதை தருதல், மக்களாட்சி, சகிப்புத்தன்மை முதலிய மாண்புகளை வளர்க்குமாறு இவ்வூடகங்களையும் வலியுறுத்தவேண்டும்.

இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் முறைசாராக் கல்வி

35. மனித உரிமைகள், மக்களாட்சி, உலக அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதில், பள்ளிக்கு வெளியே நீண்ட நேரம் செலவிடுவோர், முறையான கல்விக்கான வாய்ப்பற்றோர், தொழில்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பற்றோர், பட்டாளத்தில் உள்ளோர் ஆகியோர் சரியான இலக்காக அமைவர். முறையான கல்விக்கும் தொழிற்பயிற்சிக்கும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, முறைசாராக்கல்வி மூலம் பயனடைவது ஏற்புடையது. அவர்களது தேவைகளுக்கேற்ப உருவமைக்கப்படுமானால், முறைசாராக் கல்வியே அவர்கள் பொறுப்புள்ள
வர்களாக, பயனுள்ள வகையில் குடிமக்கள் என்ற தளத்தில் தம் கடமைகளை ஆற்ற ஆயத்தப்படுத்திவிடும்.
உலக அமைதி, மனித உரிமைகள், சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றை சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகள், சிகிச்சையகங்களில் உள்ள சிறுவர் சிறுமியர்க்கும் கற்றுத்தர வேண்டும்.

36. அரசு சாரா அமைப்புகள் சிறப்பாகப் பங்களிக்கக்கூடியதான முதியோர் கல்வித் திட்டங்கள் உள்ளூர் வாழ்க்கை நிலைமைக்கும் உலகப் பிரச்சினைகளுக்கும் உள்ள சங்கிலியை அனைவரும் உணரச் செய்ய வேண்டும். உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய பாடங்களுக்கு அடிப்படைக் கல்வித் திட்டங்கள் குறிப்பான முக்கியத்துவமளிக்க வேண்டும். நாடோடிக் கதைகள், நாடகங்கள், சமூக விவாத அரங்குகள், வானொலி போன்ற பொருத்தமான கலை வடிவங்கள் யாவும் விரிவான அளவிலான ‘மக்கள் கல்வி’க்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

வட்டார அளவிலும் நாடுகளுக் கிடையிலும் ஒத்துழைப்பு

37. சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வளர்த்தெடுப்பதற்கு, வட்டார ஒத்துழைப்பு, சர்வதேச ஒற்றுமை, சர்வதேச அமைப்புகள் – அரசாங்கம் – அரசுசாரா அமைப்புகள் அறிவியலார் உலகம், வணிகர் வட்டம், தொழில்துறை, தகவல் ஊடகங்கள் ஆகியவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியன தேவைப்படுகின்றன. இந்த ஒன்றுகூடலும் ஒத்துழைப்பும் வளரும் நாடுகள் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றைக் கற்பிப்பதை வளர்ப்பதற்கான தேவையை நிறைவு செய்துகொள்ள உதவ வேண்டும்.

38. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறைக்கு செயல்வடிவம் தரும் முயற்சிகளுக்கு உதவியாக யுனெஸ்கோ தனது நிறுவன ரீதியான திறமைகளைத் தந்துதவ வேண்டும். குறிப்பாக, வட்டார அளவிலும் உலகளவிலுமான தனது புதுமைகள் இணையத்தை இப்பணிக்குப் பயன்படுத்தச் செய்ய வேண்டும். ‘இணைத்துக் கொள்ளப்பட்ட பள்ளிகள் திட்டம்’ யுனெஸ்கோ சங்கங்கள், யுனெஸ்கோ மன்றங்கள், யுனெஸ்கோ கல்வி நிலையங்களுக்கான ஆய்வுரை, அறக்கட்டளை ஏற்பாடுகள், ஆப்பிரிக்கா – ஆசியா பசிபிக் – லத்தீன் அமெரிக்கா – கரீபியன்- அரபுநாடுகள்- அய்ரோப்பா ஆகிய இடங்களுக்கான பெரிய கல்வித்திட்டங்கள், ஜமேதியன் உலக மாநாட்டையடுத்த தொடர் நடவடிக்கைகளுக்கான அமைப்புகள்- குறிப்பாக, கல்வி அமைச்சர்களின் வட்டார மாநாடுகள், உலகளாவிய மாநாடுகள் ஆகியவை குறிப்பான பங்களிப்பு செலுத்த வேண்டும். இம்முயற்சிகளில் – குறிப்பாக தேசிய அளவில் – அந்தந்த நாட்டிலுள்ள யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையங்கள் உத்தேச நடவடிக்கைகளின் பயனுறுத்தன்மையை வளர்க்க ஒரு பெரும் அருட்கொடையாக அமைய வேண்டும்.

39. வட்டார அளவிலும், உலகளவிலும் நிகழவிருக்கும் உச்சநிலைக் கூட்டங்களில் இந்தத் திட்டவரையறையைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை யுனெஸ்கோ எழுப்ப வேண்டும்; கல்வியாளர்களின் பயிற்சிக்கான திட்டங்களை வரைய வேண்டும்; நிறுவனங்களின் இணையங்களை உருவாக்க வேண்டும் – வலுப்படுத்த வேண்டும்; கல்வித்திட்டங்கள், முறைகள், கருவிகள் பற்றியெல்லாம் ஒப்பீட்டுமுறை ஆராய்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவை பற்றிய கல்வி மீதான பிரகடனத்தில் பேசப்பெறும் கடப்பாடுகளுக்கு ஏற்ப திட்டங்கள் முறையாக கால ஒழுங்குப்படி மதிப்பீடு செய்யப்படவும் வேண்டும்.

40. உலகளாவிய நடவடிக்கைத் திட்டமொன்றை உருவாக்க வசதியாயும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னுரிமை வேலைகளை முடிவு செய்ய வசதியாகவும் இந்தத் துறையிலும் அய்.நா.வின் ‘உலக அமைதிக்கான செயல்நிரல்’, ‘மேம்பாட்டுக்கான செயல் நிரல்’, ‘செயல் நிரல்-21’, ‘’, ‘மகளிர் பற்றிய நான்காவது உலக மாநாடு’ ஆகியவற்றின் வரிசையில் அய்.நா. சார்ந்த மற்ற நிறுவனங்களின் உதவியுடனும் பிற வட்டார சர்வதேசசமூக உச்ச மாநாடு நிறுவனங்களின் உதவியுடனும் இந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்ப முயற்சிகளைத் துவக்க வேண்டும். அவற்றில் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய கல்விக்கான பன்னாட்டுக் கூட்டுறவுக்காக யுனெஸ்கோ மேலாண்மையின்கீழ் ஒரு நிதியம் அமைக்கலாம்.

41. இந்தச் செயல்திட்ட வரையறையை நடைமுறைப்படுத்துவதில் தேசிய அளவிலான அரசுசாரா அமைப்புகளும் உலகளாவிய அரசுசாரா அமைப்புகளும் தீவிரமாக பங்கெடுப்பது ஊக்குவிக்கப்படவேண்டும். 

பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

 



 பிப்ரவரி 01-15, 2024

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் விருப்பக் குறிப்பேடு ஆகியவையும் சேர்ந்து ஆக அய்ந்து ஆவணங்களும் சேர்ந்த தொகுதி சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. பார் முழுதும் மனித உரிமைகளைப் பரப்பவும் பாதுகாக்கவும் தளம் அமைத்துத்தரும் இந்த அய்ந்தொகையே அடிப்படை ஆவணமாகும். பன்னாட்டுப் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை அய்.நா. பொதுச் சபையால் 16.12.1966 அன்று நிறைவேற்றப்பட்டது. 3.1.1976 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து சில பகுதிகள்:

முகப்புரை:

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், அய்.நா. மன்ற அமைப்புத் திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
– இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

– மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குதன் மூலமே அடையப்பட முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும், அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும்.

தனிமனிதன் பிற தனிமனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.

பகுதி 1
விதி 1

1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம்போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக் கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.

2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் நமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

பகுதி 2
விதி 2
1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் சர்வதேசக் கூட்டுறவு உதவியோடும் தன்னனளவிலும், தன் சக்திக்கு உயர்ந்த பட்சம் முடிந்த அளவுக்கு படிப்படியாக இவ்வுரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கு இசைவாக சட்டமியற்றுதல் உள்ளிட்ட இயன்ற வகை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என்று உறுதி பூணுகிறது.
2. அத்துடன் இதில் கூறப்படும் உரிமைகள் யாவும் இனம், நிறம், பால், மொழி, மதம் என்ற எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல், அரசியல், கொள்கை பேதங்களும் பாராமல் தேசியம் எது எந்த சமூகம் என்றும் பிரிக்காமல் பிறப்பு சொத்து, சமூக நிலை எதையும் பாராமல் நிறைவேற்றப்பட உத்தரவாதமும் அளிக்கிறது.
3. பொருளாதார உரிமைகளைப் பொறுத்தவரை, வளரும் நாடுகள் மனித உரிமைகளையும் கருத்தில்கொண்டு தத்தம் தேசிய பொருளாதாரத்துக்கும் உரிய கவனம் செலுத்தி, இங்கு கூறப்பெறும் பொருளாதார உரிமைகளை பிறநாட்டவருக்கு எந்த அளவு அனுமதிப்பது என்பதைத் தீர்மானிக்கும்.

விதி 3

இதில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இங்கு இடம்பெறும் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் அனைத்தையும் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக அனுபவிப்பர் என்று உத்தரவாதமளிக்கிறது.

விதி 4

இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் இதன்படி தான் வகை செய்யும் சுதந்திரங்களை அனுபவிப்பதில் அந்த உரிமைகளுக்கு ஒரு ஜனநாயக நாட்டின் பொது நன்மையைப் பேணுவதற்கு மட்டுமே- அந்த உரிமைகளோடு ஒத்திசைவு கொண்ட அளவு மட்டுமே- அதுவும் சட்டபூர்வமாக மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறது.

பகுதி 3
விதி 6

1. இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் ஒவ்வொரு அரசும் வேலைசெய்யும் உரிமையை ஒப்புக்கொள்கிறது. அதில் ஒவ்வொருவரும் தான் விருப்பப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட வேலையைச் செய்து அதன்மூலம் வாழ்வு நடத்திக்கொள்ளும் உரிமையும் அடங்கும். இவ்வுரிமையைப் பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
2. இந்த உரிமையை மக்கள் முழுதாய் அனுபவிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தொழில்நுட்பம், செய்வினை ஆகியவற்றில் வழிகாட்டல் பயிற்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல், சமூக- கலாச்சார வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், தொழில்நுட்பம் ஆகியவையும் அடிப்படையான அரசியல் பொருளாதார சுதந்திரங்களைப் பாதுகாக்கும் சூழலில் பயனுள்ள முழு வேலை வாய்ப்புக்கு வகை செய்யும்படி செய்தல், ஆகியவையும் அடங்கும்.

 

விதி 7

இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள நியாயமான, கண்ணியமான வேலைச் சூழலுக்கான உரிமையை ஒப்புக் கொள்கின்றன. அந்தச் சூழல் குறிப்பாக-

அ. ஊதியம் எல்லாருக்கும் குறைந்த பட்சமாக
(I) நியாயமான ஊதியமாயும், சமவேலைக்கு சம ஊதியமாயும் அமைய வேண்டும்; எந்தவித பேதமும் இருக்கக்கூடாது. குறிப்பாக, ஆண்களுக்குக் கிடைக்கும் கண்ணியமான சூழலுக்குக் குறைவானதாகப் பெண்களுக்கு இருக்கக்கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் அவர்களுக்கும் வேண்டும்.
(II) இவ்வுடன்படிக்கைக்கு இணங்க, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நாகரிகமாக வாழப் போதுமானதாக இருக்கவேண்டும்.
ஆ. பாதுகாப்பும் ஆரோக்கியமும் காப்பற்றப்பட வேண்டும்.
இ. இருக்கும் நிலையிலிருந்து நியாயப்படியான பதவி உயர்வுகளுக்கான வழிவகைகளை எல்லாருக்கும் செய்யப்பட வேண்டும். தகுதி, வேலையில் அனுபவம் தவிர வேறு எந்தக் காரணத்தாலும் பேதம் பாராட்டப்படக்கூடாது.
ஈ. ஓய்வு, பொழுதுபோக்கு, வேலைநேரம் பற்றிய நியாயமான வரம்புகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, பொதுவிடுமுறை நாட்களுக்கு ஊதியம் ஆகியவற்றுக்கு உறுதியளிக்க வேண்டும்.

விதி 8

அ. ஒவ்வொருவருக்கும் தனது சமூக பொருளாதார உரிமைகளைப் பேணவும் பெறவும் வேண்டி தொழிற்சங்கம் அமைக்கவோ, தனக்குப் பிடித்த சங்கத்தில் சேரவோ உரிமை உண்டு; தான் சார்ந்துள்ள நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக இல்லாமலிருந்தால் சரி.
ஆ தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய அளவில் சம்மேளனங்களாகவோ கூட்டமைப்பாகவோ இயங்கவும், அவை சர்வ தேசிய அளவில் கூட்டமைப்பாக இயங்கவும் உரிமை உண்டு.
இ. தேசப் பாதுகாப்பு நலன்கள், பொது அமைதி, மற்றவர்களின் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடுக்கண் வராமல் பார்த்துக்கொள்ள ஒரு ஜனநாயக அமைப்பில் சட்டம் விதிக்கக்கூடிய தேவையான கட்டுப்பாடுகள் தவிர வேறு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இயங்க தொழிற்சங்கங்களுக்கு உரிமையுண்டு.
ஈ. குறிப்பிட்ட நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு வேலை நிறுத்தம் செய்யவும் உரிமை உண்டு.
இங்குக் கூறிய (அ) முதல் (ஈ) வரையான உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கவும் இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் பொறுப்பெடுத்துக் கொள்கின்றன.

விதி 9

ஒவ்வொருவருக்கும் சமூகக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புரிமை இருப்பதை இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள் அங்கீகரிக்கின்றன.

விதி 10

அ. சமூகத்தின் அடிப்படையான, இயற்கையான மூலக்கூறான குடும்பத்துக்கு உயர்ந்த பட்ச பாதுகாப்பும் உதவியும், அளிக்கப்படுதல்; குறிப்பாக குடும்பம் அமைக்கப்படுவதில் சிறு குழந்தைகளின் நலத்துக்கும் கல்விக்கும்கூட அரசு பொறுப்பு. திருமணம் என்பது இருவரின் கருத்தொருமிப்போடுதான் நிகழவேண்டும்.

. மகப்பேறுக்கு முன்பும் அதன்பின்பும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தாய்மார்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அந்தக் காலகட்டத்தில், பணியாற்றும் தாய்மார்களுக்கு ஊதியத்தோடு விடுமுறையோ போதுமான சமூகப் பாதுகாப்பு வசதிகளோ இருக்கவேண்டும்.

இ. பிறப்பினாலோ வேறு எக்காரணத்தாலுமோ வேறுபாடுகள் பார்க்காமல் குழந்தைகள், இளைஞர்கள் அனைவருக்கும் பாதுகாப்பும் உதவியும் தர சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சமூக- பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவேண்டும். அவர்களது ஆன்மிக வளர்ச்சி, சுகாதாரம் முன்னேற்றம், உயிர் ஆகியவற்றுக்கு ஊறுவிளைக்கக்கூடிய தொழில்களில் அவர்களை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட வேண்டும். அரசுகள் குறைந்தபட்ச வயது வரம்பு சட்டங்கள் இயற்றி, அந்த வயதுக்குக் குறைந்தவர்களைப் பணியாளர்களாக நடத்துவதையும் தடைசெய்து தண்டனைக்குரிய குற்றமாக்கவேண்டும்.

விதி 11

1. இந்த உடன்படிக்கையில் சேரும் நாடுகள், உணவு, உடை, உறையுள் உட்பட தனக்கும் குடும்பத்துக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரத்துக்கும் வாழ்நிலைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கும் அனைவருக்கும் உரிமை உண்டென்று அங்கீகரிக்கின்றன. இவ்வுரிமை நடைமுறைப்படுத்தப்படவும் அவை உரிய நடவடிக்கைகள் எடுக்கும். சம்மதத்துடன் கூடிய பன்னாட்டுக் கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் அவை உணர்ந்துள்ளன.

2. தனி ஒருவனுக்கு உணவில்லை எனும் கொடுமையிலிருந்து ஒவ்வொருவனுக்கும் பாதுகாப்பு உரிமை உண்டென்பதையும் ஏற்று இவ்வரசுகள் தன்னளவிலும், பன்னாட்டுக் கூட்டுறவோடும் கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக திட்டவட்டமான நடவடிக்கைகளும் பிற செயல்பாடுகளும் மேற்கொள்ளும்:

அ. தொழில்நுட்ப அறிவியல் கல்வியை முழுதும் பயன்படுத்தி உணவு உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம் ஆகியவற்றின் முறைகளில் முன்னேற்றம் காணுதல், சத்துணவுத் தத்துவங்கள் பற்றிய அறிவினைப் பகிர்ந்து கொள்ளுதல் இயற்கை வளத்தை உயர்ந்தபட்ச அளவு வளப்படுத்தவும் பயன்படுத்தவும் உதவும் வண்ணம் வேளாண்மை முறைகளைச் சீர்திருத்துதல், நவீனமாக்குதல்.

. உணவை ஏற்றுமதி செய்யும் நாடுகள் இறக்குமதி செய்யும் நாடுகள் என்ற இருபாலாருக்கும் சிரமமில்லாத வகையில் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைத் தேவைக்கேற்ப நியாயமாகப் பங்கீடு செய்தல்.

விதி 12

1. ஒவ்வொருவருக்கும் உயர்ந்தபட்ச உடல்நலம், மனநலம் அனுபவிக்க உள்ள உரிமையையும் இவ்வுடன்படிக்கையில் ஈடுபடும் அரசுகள் அங்கீகரிக்கின்றன.
2. அதை மக்கள் அனுபவிக்க இசைவாக இந்த அரசுகள் கீழ்க்கண்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்:

. இறந்து பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைச் சாவுகள் ஆகியவற்றைக் குறைத்தல்- குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி.

. சுற்றுச்சூழல், தொழிற்சாலை, சுகாதாரம் ஆகியவற்றை அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றுதல்

. தொற்றுநோய்கள், கொள்ளை நோய்கள், தொழில் தொடர்பான நோய்கள் முதலியவற்றைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், சிகிச்சை வசதி பெருக்குதல்,

. வியாதிகளுக்கு மருத்துவர் கவனிப்பு உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும் நிச்சயம் கிடைக்கக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல்.

விதி 13

1. இவ்வரசுகள் ஒவ்வொருவருக்கும் உள்ள கல்வி உரிமையை அங்கீகரித்து கல்வி மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கும் மானிட மாண்புக்கும் அடிகோலுவதுடன், மனித உரிமை, அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றன. ஒரு சுதந்திர சமுதாயத்தில் பலனுள்ள முறையில் பங்களிப்புச் செய்யவும் நாடுகளுக்கிடையிலும் எல்லா இன, கலாச்சார, மதப்பிரிவின் மக்களிடையிலும் சகிப்புத்தன்மையும் நட்பும் துளிர்க்கவும், உலக சமாதானத்துக்காகன அய்.நா. முயற்சிகள் வலுப்பெறவும் வையத்து மாந்தருக்கெல்லாம் கல்வி வழி காட்டித்தரவேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கின்றன.

2. மேற்படி உரிமை முழுவதும் செயல்படுத்தப்பட கீழ்க்கண்ட பணிகள் செய்யப்பட வேண்டுமென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன:-

அ. கட்டாய ஆரம்பக் கல்வி எல்லாருக்கும் இலவசமாகக் கிடைக்கவேண்டும் என்பதையும்,
. இரண்டாம் நிலைக்கல்வி- தொழில்நுட்பம், வேலைவாய்ப்புக் கல்வி உள்பட பொதுவாக எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதாயும், செலவு கட்டுப்படியாகக் கூடியதாயும் அமைய வேண்டும். படிப்படியாக இடைநிலைக் கல்வி முழுவதையுமே அரசு செலவில் கிடைக்கச் செய்வது உள்பட இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இ. இதேபோல் உயர்கல்வியும் தகுதிக்கேற்ப எல்லாருக்கும் கிடைக்கச் செய்ய அதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஈ. ஆரம்பக்கல்வி பெறாதவர்கள் அல்லது முடிக்காதவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஆதாரக்கல்வி தீவிரப்படுத்தப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உ. எல்லா நிலையிலும் கல்விக்கூடங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்படவேண்டும். போதுமான ஆசிரியர் குழுக்கள் வேண்டும். தொடர்ந்து ஆசிரியர்களின் பணிநிலைச்சூழல் வலுப்படுத்தப்படவேண்டும்.

3. பெற்றோர் அல்லது காப்பாளர் தம் குழந்தைகளுக்காக, அரசு நடத்தும் பள்ளிகளுக்கு வெளியேகூட பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டென்பதை இவ்வரசுகள் மதிக்கின்றன. அவை அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சக் கல்வித்தரம் உள்ளவையாக இருக்கவேண்டும். தத்தம் மதத்துக்கு ஏற்ற தார்மீகக் கல்விக்காக பெற்றோர் இத்தகைய பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. இவ்விதியின் எந்தப் பகுதியும் தனியாரோ, நிறுவனங்களோ பள்ளிகள் நிறுவவும், நடத்தவும் கொண்டுள்ள உரிமைகளில் குறுக்கிடும் வகையில் பொருள் கொள்ளப்படக்கூடாது.
ஆனால், இவ்விதியின் பகுதி (1)இல் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் கடைப்பிடிக்கப்படவேண்டும்; அரசு விதித்திருக்கக்கூடிய குறைந்தபட்சத் தரம் கொண்டிருக்க வேண்டும்- அவ்வளவுதான்.

விதி 15

1. (அ) கலாச்சார வாழ்வில் பங்கேற்கவும், (அ) அறிவியல் முன்னேற்றம், அதன் விளைவுகள் ஆகியவற்றால் பயன்பெறவும் (இ) தன் பொறுப்பில் உருவான எந்த அறிவியல், இலக்கிய, கலைத்துறை சாதனையிலிருந்தும் பொருளாதார வகையிலோ தார்மிக ரீதியாகவோ பலனடைவதற்கான பாதுகாப்பும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையை இவ்வரசுகள் ஒப்புக்கொள்கின்றன.

2. அறிவியலையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும், வளர்க்கவும், பரப்பவும் தேவையான நடவடிக்கைகள் உள்பட இந்த உரிமையை மெய்ப்படவைப்பதற்கான அனைத்துச் செயல்பாடுகளையும் இவ்வரசுகள் செய்யவேண்டும்.

3. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும், படைப்பு முயற்சிகளுக்கும் இன்றியமையாததான சுதந்திரத்தையும் இவ்வரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

4. அறிவியல்- கலாச்சாரத் தளங்களில் சர்வதேசத் தொடர்பு ஒத்துழைப்பு ஆகியவற்றிலிருந்து பெறப்படக்கூடிய ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடிய நற்பயன்கள் பல உண்டென்றும் இவ்வரசுகள் ஒப்புக் கொள்கின்றன. 

திங்கள், 24 ஜூன், 2024

சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை


அய்.நா. பொதுச்சபையால் 10.12.1984 அன்று ஏற்கப்பட்டு 26.6.1987 அன்று நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்:
இந்த உடன்படிக்கையில் பங்கேற்கும் அரசுகள்: அய்.நா. அமைப்புத் திட்டத்தின் தத்துவங்கள், நோக்கங்கள் ஆகியவை சொல்வது போல மானிடக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தான மாற்ற முடியாத சமானமான உரிமைகளை ஒப்புக்கொள்வதே உலகில் சுதந்திரமும் சமாதானமும் நீதியும் நிலவ வழி என்பதைக் கருத்திலிருத்தியும், மனிதப்பிறவியின் உள்ளார்ந்த மாண்பிலிருந்து அவ்வுரிமைகள் பிறப்பதை ஒப்புக்கொண்டும்,

_அய்.நா. திட்டத்தில் குறிப்பாக விதி 55இன் கீழ் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உலகம் முழுவதிலும் மதிக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் வகை செய்ய அரசுகளின் கடப்பாட்டைக் கருத்திலிருத்தியும்,

_சர்வதேசிய மனிதவுரிமைப் பிரகடன விதி 5, குடியுரிமையும் அரசியலுரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையின் விதி 7 ஆகிய இரண்டுமே எவரும் சித்திரவதை, கொடுமையான மனிதத்தன்மையற்ற அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல், அத்தகைய தண்டனை ஆகிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்று கூறுவதை மதித்தும்,

_அய்.நா. பொதுச்சபை 9.12.1975இல் ஏற்றுக்கொண்ட சித்திரவதை முதலிய கொடுமையான மனிதத்தன்மையற்ற அவமதிக்கும் வகையில் நடத்தப்படுதல் அத்தகைய தண்டனைகள் ஆகியவற்றுக்கு ஆளாக்கப்படுவதிலிருந்து அனைவருக்கும் பாதுகாப்பளிப்பது பற்றிய பிரகடனத்தை மதித்தும்,

_ உலகெங்கும் சித்திரவதை முதலிய கொடுமையான மனிதத் தன்மையற்ற அவமதிக்கும் வகையில்
நடத்தப்பட்டால், அத்தகு தண்டனைகளுக்கெதிரான போராட்டத்தை இன்னமும் வலுவாக்க விரும்பி கீழ்க்கண்டவாறு ஒப்பந்தம் செய்து
கொள்கின்றன.

பகுதி 1

விதி 1

இந்த உடன்படிக்கையைப் பொறுத்த வரையில் ‘சித்திரவதை’ என்ற சொல் ஒருவருக்கு, அவரிடமிருந்தோ, மூன்றாவது ஆளிடமிருந்தோ தகவல்களையோ ஒப்புதல் வாக்குமூலத்தையோ பெறுவதற்காக மனதார தெரிந்தே உடலுக்கோ, மனதுக்கோ கடும் வலியையோ, துன்பத்தையோ ஏற்படுத்தக்கூடிய செயலைச் செய்தல் என்று பொருள். அவரோ, மற்றவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படுகிற ஒரு குற்றத்துக்குத் தண்டனையாக அச்செயல் அமைந்தாலோ, அவரையோ வேறொருவரையோ அச்சுறுத்தவோ கட்டாயப்படுத்தவோ செய்யப்பட்டாலோ அல்லது பாகுபாடு காரணமாக அமைந்தாலோ கூட அது ‘சித்திரவதை’தான். அரசு அதிகாரி அல்லது அரசினால் அதிகாரம் தரப்பட்ட ஒருவரால் அந்த வலியோ, துன்பமோ இழைக்கப்பட்டால் அல்லது அவரது அனுமதி, தூண்டுதல்
அல்லது அவருக்குத் தெரிந்து இழைக்கப்பட்டால் இந்த உடன்படிக்கையின்படி அது ”சித்திரவதை’என்று பொருள். ஆனால், அத்தகைய வலியோ
துன்பமோ சட்டபூர்வ தண்டனைகளாக அமைந்தாலோ, அத்தகைய சட்டபூர்வ தண்டனைகளின் பகுதியாகவோ, தொடர்புடையதாகவோ அமையும்போது அது இந்த வரையறையுள் வராது…

விதி 2

1. ஒவ்வொரு அரசும் தனது கட்டுப்பாட்டில் உள்ள நாட்டில் சித்திரவதைக் கொடுமை நிகழ்வதைத் தடுக்க சட்டமியற்றல், நிர்வாக ஆணை, நீதித்துறை நடவடிக்கை உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளையும் பயனுள்ள வகையில் எடுக்கும்.

2. சித்திரவதையை நியாயப்படுத்துவதற்காக போர், போர் அச்சம் ஏற்படுத்தும் சூழல் எந்தவித பொதுவாழ்வு நெருக்கடி நிலைமையும் உட்பட எந்தவித அசாதாரண சூழ்நிலையையும் காரணம் காட்டக்கூடாது.

3. சித்திரவதையை நியாயப்படுத்த மேலதிகாரியின் ஆணையையோ ஒரு பொது அதிகாரியின் ஆணையையோ காட்ட முடியாது.

விதி 3

1. ஒரு மனிதரை தன் நாட்டிலிருந்து வெளியேற்றவோ, திருப்பியனுப்பவோ, இன்னொரு நாட்டிற்கு விசாரணைக்காக அனுப்பவோ இந்த அரசுகள் நினைக்கும் வேளையில், அவ்வாறு அனுப்பப்படக்கூடிய நாட்டில் அந்த மனிதர் சித்திரவதைக்கு ஆட்படுத்தப்படக்கூடிய ஆபத்திருக்கிறது என்று நம்புவதற்கு வலிய காரணங்கள் இருந்தால் அவர் அப்படி வெளியேற்றப்படக்கூடாது.

விதி 4

1. ஒவ்வொரு அரசும் எல்லா சித்திரவதை நடவடிக்கைகளும் தனது குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றங்கள் என்று நிர்ணயிக்கப்
படுவதை உறுதி செய்யும். சித்திரவதை செய்வதற்கான முயற்சியில் இறங்குவதும், சித்திரவதையில் பங்கேற்றல் அல்லது ஒத்துழைத்தல் ஆகியவையும் அதே விதமாக நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்யும்.

2. இவ்வரசுகள் இக்குற்றங்களின் தீவிரத் தன்மையையும் கணக்கிலெடுத்துக்கொண்டு அதற்குப் பொருத்தமான தண்டனைகளை நிர்ணயிக்கும்.

விதி 10

1. சித்திரவதைக்கு எதிரான தடை பற்றிய கல்வியும் தகவலும் சட்டத்தை நிலைநாட்டும் பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் இருசாராரும் பெறும் பயிற்சிகளில் முழு இடம் பெறும். மருத்துவப்பணியில் உள்ளோர், பொது நிருவாகிகள், மற்றபடி கைது, சிறைவைப்பு- அடைப்பு முதலியவற்றோடு பணி நிலைத் தொடர்புடையோர் அனைவரது பயிற்சிகளும் அப்படியே. இது விடுபட்டு விடாமல் இவ்வரசுகள் பார்த்துக்கொள்ளும்.

2. மேற்கண்ட பணி செய்வோரின் பணி
களும் கடமைகளும் பற்றிய விதிகள் நியதிகள் ஆகியவற்றில் இத்தடைபற்றிக் குறிப்பிடப்படும்.

விதி 11

எவ்வித கைது- _ சிறைவைப்பு அடைக்கப்படல் ஆகியவற்றுக்கு ஆட்படும் நபர்கள் எப்படி
வைத்துக்கொள்ளப்பட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விசாரணை விதிகள், நியமங்கள், முறைகள், பழக்கங்கள், ஏற்பாடு
கள் ஆகியவற்றை தத்தம் நாட்டில் இவ்வரசுகள் சீரான விமர்சனங்களுக்கு உட்படுத்தும்.

விதி 12

தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் எங்கேனும் சித்திரவதைச் செயல் ஏதும் நடந்திருக்கலாம் என்று நம்ப நியாயமான காரணங்கள் இருந்தால் அங்கெல்லாம் இதற்குத் தகுந்த தனது அதிகாரிகள் உடனே, நேர்மையான விசாரணை நடத்துவார்கள் என்பதற்கும் இவ்வரசுகள் உறுதி செய்யும்.

விதி 13

இவ்வரசுகள் ஒவ்வொன்றும் அதன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தான் சித்திர
வதை செய்யப்பட்டதாகக் கூறும் எவருக்கும் அதன்கீழ் பணியாற்றும் தகுந்த அமைப்பிடம் முறையீடு செய்யவும், வழக்கு விரைவாகவும் நியாயமாக விசாரிக்கப்படவும் உறுதி செய்ய வேண்டும். அந்தப் புகாரினாலோ, அதில் சாட்சியாக வந்ததனாலோ அவரோ மூன்றாவது நபரோ அச்சுறுத்தப்படவோ அநியாயமாக நடத்தப்படவோ பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதி 14

1. இவ்வரசுகள் ஒவ்வொன்றும் தனது சட்ட அமைப்புமூலம், சித்திரவதைக்கு ஆளான ஒருவர், பரிகாரம் பெறவும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு மறு சீர்மை உட்பட இழப்பீடு பெறவும் நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய உரிமையை உறுதிப்படுத்தும். சித்திரவதையால் ஒருவர் உயிரிழந்தால் அவரைச் சார்ந்திருந்தவர்கள் இழப்பீடு பெறுவர்.

2. இவ்விதியில் கண்ட எதுவும் பாதிக்கப்பட்டவரோ மற்றவர்களோ தத்தம் தேசியச் சட்டத்தின்கீழ் இழப்பீடு பெறும் உரிமையைப் பாதிக்காது.

விதி 15

சித்திரவதை செய்யப்பட்டு ஒரு வாக்குமூலம் பெறப்பட்டது என்று நிறுவப்பட்டுவிட்டால், அந்த வாக்குமூலம், சித்திரவதை செய்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர்க்கு எதிராக அன்னியில், எந்த விசாரணையிலும் சாட்சியாக ஏற்கப்பட முடியாதென்பதையும் இவ்வரசுகள் உறுதி செய்யும். ♦


உழைக்கும், சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனம்


 டிசம்பர் 1-15, 2023
கி.பி.1917ஆம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் (போல்ஷ்விக்) புரட்சிக்குப் பின்பு ரஷ்யாவில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சோவியத் அரசு பல்வேறு புரட்சிகர நடவடிக்கைகளை எடுத்தது. சமாதான ஆணை, நில ஆணை போன்ற பல ஆணைகளை வெளியிட்டது. ரஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் வெளிவந்தன. அரசியலமைப்புச் சபையில் போல்ஷ்விக் கட்சியினர் உழைக்கும், சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை முன் வைத்தனர். சோவியத் அரசினை ஏற்காததாலும் நில ஆணையையும் இந்தப் பிரகடனத்தையும் ஒப்புக்கொள்ளாததாலும் 1918 ஜனவரி 19ஆம் நாள் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. பிறகு அகில _ ரஷ்ய சோவியத் காங்கிரஸ் வெளியிட்ட இப்பிரகடனத்தின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
I
1. ரஷ்ய தொழிலாளர்கள், போர்வீரர்கள், விவசாயிகள் ஆகியோரது பிரதிநிதிகளின் சோவியத்துகளின் குடியரசாக அறிவிக்கப்படுகிறது. மய்யத்திலும் உறுப்புப் பகுதிகளிலும் எல்லா அதிகாரங்களும் இந்த சோவியத்களுக்கே.
2. சுதந்திர மக்களின் சுதந்திரக் கூட்டமைப்பு என்கிற அடிப்படையில் சோவியத் தேசியக் குடியரசுகளின் ஒன்றியமாக சோவியத் ரஷ்யக் குடியரசு நிறுவப்படுகிறது.
மனிதனை  மனிதன்  சுரண்டும் எந்த முறையையும் அழித்தல், வர்க்க அடிப்படையிலான சமூகப் பிரிவுகளை வேரோடு ஒழித்தல், சுரண்டுகிறவர்களை இரக்கமின்றி ஒடுக்குதல், எல்லா நாடுகளிலும் சோஷலிச வெற்றியை ஏற்படுத்துதலும் சமவுடைமைச் சமுதாய அமைப்பை அங்கெல்லாம் நிறுவுதல் ஆகியவற்றைத் தனது அடிப்படைக் கடமையாக வகுத்துக்கொண்ட அரசியலமைப்புச் சபை கீழ்க்கண்டவாறு மேலும் உறுதி கொள்கிறது.
I I
1. நிலத்தை சமூகத்திற்கு உடைமையாக்-குவதை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிலத்தில் தனியார் உடைமை ஒழிக்கப்படுகிறது. நிலம் முழுதும் மக்களின் பொதுச் சொத்தாக அறிவிக்கப்படுகிறது. சமம் செய்யப்பட்ட பயன்பாடு என்ற தத்துவத்தின் கீழ் விற்றல் _ வாங்குதல் இல்லாமல், பாட்டாளிகட்கு  அது அளிக்கப்படுகிறது. எல்லாக் காடுகளும், தாதுப்பொருள்களும் அரசுக்கு முக்கியமான நீர்நிலைகள், நதிகள் ஆகியவையும், உயிரினங்களும், பொறிகளும், எல்லா நிலங்களும், விவசாயச் சொத்துகளும் தேசியச் சொத்தாக அறிவிக்கப்படுகிறது.
2. ஆலைகள், ரயில் சாலைகள், சுரங்கங்கள் முதலிய எல்லா உற்பத்தி சாதனங்களும், போக்குவரத்துச் சாதனங்களும் சோவியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடையதாக குடியரசின் கரங்களுக்கு மாறுவதன் முதற்படியாக தொழிலாளர்களின் ஆதிக்கம் பற்றிய சட்டமும் உச்சகட்ட பொருளாதாரக் குழு பற்றிய சட்டமும் ஏற்கப்படுகின்றன. இதன்மூலம் சுரண்டல்வாதிகள் மீதான பாட்டாளி வர்க்க ஆதிக்கம் உறுதி செய்யப்படுகிறது.
3. முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து பாட்டாளி வர்க்கம் விடுதலை பெறும் தேவைகளில் ஒன்றாக வங்கிகளனைத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், அரசுக்கு உடைமையாவது உறுதி செய்யப்படுகிறது.
4. சமுதாயத்தை உறிஞ்சும் சக்திகளை அழித்தொழிக்கும் முகமாகவும் பொருளாதார  வாழ்க்கையைக் கட்டிய-மைக்கும் முகமாகவும் உழைத்தாக வேண்டிய கட்டாயக் கடமை அறிமுகப்படுத்தப்படுகிறது.
5. பாட்டாளி மக்களுக்கு சர்வ அதிகாரத்தையும் உறுதி செய்யவும், சுரண்டும் வர்க்கத்தின் அதிகாரம் மீண்டும் வந்துவிடாமல் எல்லா வகையில் உறுதி செய்யவும், உழைக்கும் மக்கள் ஆயுதம் தாங்குவதும், விவசாயிகளும் தொழிலாளர்களும் கொண்ட சோஷலிஸ்ட் செஞ்சேனை அமைக்கப்படுவதும் சொத்துடைய வர்க்கம் முற்றிலும் நிராயுதபாணியாக்கப்படுவதும் சட்டபூர்வமாக்கப்படுகின்றன.
I I I
1. அரசியலமைப்புச் சபை, மூலதனம் ஏகாதிபத்தியம் ஆகிய சக்திகளின் கோர நரகங்களிலிருந்து மனித குலத்தைப் பிரித்தெடுத்துக் காப்பாற்ற வளைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்தும் வண்ணம் சில முடிவுகளை ஏற்கிறது. இந்தச் சக்திகளே படுபாதகத்தனமான இன்றைய கோர யுத்தத்தின் மூலம் மண்ணுலகில் குருதியாறு ஓடச் செய்கின்றன. எனவே சோவியத் அரசின் கொள்கையை ஏற்று ரகசிய உடன்படிக்கைகளைக் கிழித்தெறிவது தம்முள் போராடிக் கொண்டிருக்கும் ராணுவத்தையும் விவசாயி -_ தொழிலாளி வர்க்கத்தையும் இணைத்து அவர்களிடையே பரவலான சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது; இதற்கும் மேலாக புரட்சிகரமான வழிகள் மூலம் எந்த வகையிலும் நாடு சேர்ப்பதும், கப்பங்கட்டுதலுமில்லாததும்
நாடுகளிடையிலான சுயேச்சையான தன்னுரிமை அடிப்படையிலுமான மக்களிடையே ஒரு ஜனநாயக சமாதானத்தை நிறுவவும் உறுதி
கொள்கிறது.
2. அதே லட்சியத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் சுரண்டல்காரர்களின் சுகவாழ்வை அமைப்பதற்காக ஆசியாவிலும் காலனிகளிலும், சிறு நாடுகளிலும் நூறாயிரம் கோடி உழைக்கும் மக்களை அடிமைகளாய் வைத்திருக்கும் பூர்ஷ்வா நாகரிகத்தின் காட்டுமிராண்டித்தனங்களை உடைக்க
வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
மக்கள் கமிசார் குழு பின்லாந்துக்கு முழு சுதந்திரம் என்று அறிவித்துவிட்டது. பெர்ஷியாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது. ஆர்மினியர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று அறிவித்துவிட்டது. இந்தக் கொள்கைகள் அனைத்தையும்  அரசியலமைப்புச் சபை வாழ்த்திப் பாராட்டுகிறது.
ஜார் அரசாங்கமும், நிலப்பிரபுக்களும், பூர்ஷ்வாக்களும் சம்பந்தப்பட்ட கடன்கள் அனைத்தையும் ரத்து செய்த சோவியத் சட்டம் சர்வதேச நிதி _ வங்கித்துறை அமைப்புக்கு முதலடி என்று அரசியலமைப்புச் சபை கருதுகிறது.
முதலாளித்துவ நுகத்தடியை எதிர்த்து அனைத்துலக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி முற்றுமுழுதான வெற்றியடையும் வரை சோவியத் ஆட்சி தொடர்ந்து துணிவோடு இதே பாதையில் பயணத்தைத் தொடரும் என்றும் சபை நம்புகிறது. ♦

மனித உரிமைகள், குடிமக்கள் உரிமைகள் பற்றிய பிரகடனம்

 நவம்பர் 16-30, 2023

பிரெஞ்சுப் புரட்சி 1789இல் நிகழ்ந்தது. பிரான்சின் பழைய ஆட்சியையும் சர்வாதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்ததன் அடையாளமாக அந்த ஆண்டு ஜூலை 15ஆம் நாள் பாரிஸ் மக்கள் பாஸ்டைல் கோட்டை என்ற அரசாங்கச் சிறைச்சாலையை உடைத்து நொறுக்கிய நிகழ்ச்சி அமைந்தது. ஜூன் மாதம் கூடத் துவங்கிய பிரெஞ்சு தேசிய சபை ஆகஸ்ட் 26 ஆம் நாள் மனித உரிமைகள், குடிமக்கள் உரிமைகள் பற்றிய பிரகடனத்தை நிறைவேற்றியது. தங்கள் நாட்டுக்காக அமைக்கத் துவங்கியிருந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக இப்பிரகடனத்தை வெளியிட்டார்கள்.

இப்பிரகடனத்தின் உள்ளடக்கம் வெளிப்படையாகவே சர்வதேசப் பண்புடன் விளங்கியது. அய்ரோப்பா, மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாட்டிலும் _ சில காலம் பிறகு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும்- புரட்சி இயக்கங்களுக்கும், மக்களாட்சி இயக்கங்களுக்கும் உந்து சக்தியாய் அமைந்தது. இந்தப் பிரகடனத்தின் தமிழாக்கம் இதோ-

பிரெஞ்சுப் பொதுமக்கள் தேசிய சபையாக அமர்ந்து மனித உரிமை பற்றிய அறியாமை, வெறுப்பு, உரிமை அவமதிப்பு ஆகியவையே பொதுமக்களின் அனைத்துத் தொல்லைகட்கும் அரசியல் ஊழலுக்கும் காரணம் என்பதைக் கருதிப் பார்த்து மானிடனுடைய இயற்கையானதும் மாற்ற முடியாததும் புனிதமானதுமான உரிமைகளை ஒரு கம்பீரமான பிரகடனமாக முன்வைப்பதென்று தீர்மானித்திருக்கிறோம். சமூகத்தின் உறுப்பினர் அனைவருக்கும் எக்காலமும் நிரந்தரமாக அவற்றைக் கூறிக் கொண்டிருக்கவும். அவர்கள் தத்தம் உரிமைகளையும் கடமைகளையும் எப்போதும் தெரிந்திருக்கவும் சட்டமியற்றும் அமைப்புகளும் நிருவாக அமைப்புகளும் தம் செயல்களை எப்போதும் எல்லா அரசியல் அமைப்புகளுக்குமான நோக்கங்களுடன் ஒப்புமை செய்துகொள்ளவும், அந்த நடவடிக்கைகள் மேலும் மரியாதைக்குரியனவாக அமைய வகை செய்யவும், இனிமேற் கொண்டு எளிய எதிர்க்கப்பட முடியாத தத்துவங்களின் அடிப்படையில் எழும் குடிமக்களின் தேவைகள் என்றென்றும் அரசியல் அமைப்பினை நிலைநிறுத்துவதிலும் பொதுத் தன்மையிலும் நன்முறையில் பங்களிப்புச் செய்யவும் இத்தகைய பிரகடன வெளியீடு தேவையாக இருக்கிறது.

எனவே, இந்தச் சபை தனிமனிதனுடையவும் குடிமகனுடையவுமான பின்வரும் உரிமைகளை, எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் அவன் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டு பிரகடனப்படுத்துகிறது.

1. மனிதர்கள் சுதந்திரமாகவும் தம்முள் சமஉரிமை உடையோராயும் பிறக்கிறார்கள்.
அப்படியே இருக்கிறார்கள். சமூக வேறுபாடுகள் பொதுநன்மை அடிப்படையில் மட்டுமே அமையலாம்.

2. சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய மனித உரிமைகள் இயற்கையானவை. சட்டங்களாலோ வழக்கங்களாலோ மறுக்கவியலாதவை. அத்தகைய இவ்வுரிமைகளைப் பாதுகாப்பதுதான் எல்லா அரசியல் நிறுவனங்களுக்குமான குறிக்கோள்

3. எல்லா இறையாண்மைத் தத்துவங்களும் அடிப்படையில் தேசம் சார்ந்தே எழுகின்றன. நாட்டிடமிருந்து வெளிப்
படையாக எழாத எந்த அதிகாரத்தையும் எந்தத் தனிமனிதனும், எந்த அமைப்பும் கொண்டு செலுத்த முடியாது.

4. அடுத்தவரைத் துன்புறுத்தாத எதையும் செய்வதற்கான சக்தியே சுதந்திரம். எனவே ஒவ்வொரு மனிதனும் தன் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, அவை அதேபோன்று சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் தத்தம் உரிமைகளையும் ஆண்டனுபவிப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதைத் தவிர வரையறை ஏதுமில்லை. இந்த எல்லைகளை சட்டம் ஒன்றே தீர்மானிக்க வேண்டும்.

5. சமூகத்துக்கு ‘ஊறு செய்யக்கூடிய செயல்களை மட்டுமே சட்டம் உரிய முறையில் தடை செய்ய முடியும். சட்ட விரோதமில்லாத எதைச் செய்வதற்கும் தடை இருக்கக் கூடாது. சட்டம் கட்டாயப்படுத்தாத எதைச் செய்யுமாறும் கட்டாயம் இருக்கக் கூடாது.

6. பொது விருப்பத்தின் வெளிப்பாடே சட்டம். ஒவ்வொரு குடிமகனுக்கும் அதை உருவாக்குவதில் நேரடியாகவோ, பிரதிநிதி மூலமோ பங்கு பெற உரிமை இருக்கிறது. அது அளிக்கும் பாதுகாப்பும் சரி, தரும் தண்டனையும் சரி எல்லாருக்கும் ஒன்றுபோல்தான். சட்டத்தின் கண்முன் அனைவரும் சமம் என்பதால் எல்லா பொது மரியாதைகளும் எல்லாருக்கும் உரிமை உள்ளவையே. தகுதியும் திறமையும் தவிர வேறெந்த விதத்திலும் அவர்கள் வித்தியாசப்படுத்தப்படமாட்டார்கள்.

7. சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தவிர எவரும் கைது செய்யப்படுவதோ, சிறைவைக்கப்படுவதோ, குற்றம் சாட்டப்படுவதோ முடியாது. அவர்களும் சட்டம் விதிக்கும் முறைப்படியே இருக்க இயலும். தன்னிச்சையாக ஆணைகளைத் தூண்டுவோர், விரைவுபடுத்துவோர், நிறைவேற்றுவோர், நிறைவேற்றக் காரணமாய் இருப்போர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சட்டப்படி அழைக்கப்பட்டவரோ, பிடிபட்டவரோ உடனே பணிந்து நடக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டுவோர் தம்மையே குற்றவாளியாக்கிக் கொள்வர்.

8. கட்டாயமாகத் தேவைப்படும் தண்டனைகளை மட்டுமே சட்டம் அனுமதிக்க வேண்டும். குற்றநிகழ்வுக்கு முன்பே இயற்றப்பட்டு வெளியிடப்பட்டு நடைமுறைக்கும் வந்து விட்ட சட்டத்தின்கீழ் மட்டுமே யாரும் தண்டிக்கப்படலாம்.

9. ஒவ்வொரு மனிதனும் குற்றவாளி என்று தீர்வு செய்யப்படாதவரை நிரபராதியே என்பதால், ஒருவரைக் கைது செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அப்போது கூட தேவையற்ற கெடுபிடி கடுமைகள் அனைத்தையும் சட்டம் கடுமையாகத் தடை செய்ய வேண்டும்.

9. சட்டம் நிறுவிய பொது அமைதிக்கு ஊறு விளையாத வரையில் யாரும் அவருடைய கருத்துகளுக்காக மத சார்பான கருத்துக்
காகக்கூட தொல்லைப்படுத்தப்படக் கூடாது.

10. சட்டம் நிறுவிய பொது அமைதிக்கு ஊறு விளையாத வரையில் யாரும் அவருடைய கருத்துகளுக்காக மத
சார்பான கருத்துக்காகக்கூட தொல்லைப்படுத்தப்படக்கூடாது.
11. மனிதனின் உரிமைகளில் மிகமிக அருமையானவைகளில் ஒன்று எண்ணத்தையும், கருத்தையும் தடையின்றி வெளியிடும் உரிமை. எனவே ஒவ்வொரு மனிதனும் தவறாகப் பயன்படுத்தியதாக சட்டப்படி நிறுவப்பட்டால், ஏற்க நேரிடக்கூடிய நிலைமைகளுக்கான தன் பொறுப்பில் எதையும் பேசலாம். எழுதலாம். அச்சிடலாம்.

12. மனிதனுடைய, குடிமகனுடைய உரிமைகளைப் பேணிக் காக்க பொதுசக்தி இருக்க வேண்டியது தேவையாகிறது. இதற்கு சக்திகள் யாரிடம் தரப்பட்டுள்ளனவோ, அவர்களின் சொந்த நலங்களுக்கல்லாமல், பொதுமக்கள் அனைவர் நலத்துக்காகவும் செயல்படும்.

13. அத்தகு பொது சக்திகளை நிர்வகிக்கவும், பிற நிருவாகச் செலவுகட்காகவும் பொது வரி விதிப்பு தேவைப்படுகிறது. அவரவர் சக்திக்கேற்ப அனைவருக்கும் அது சமமாகப் பிரித்து விதிக்கப்பட வேண்டும்.
14. ஒவ்வொரு குடிமகனுக்கும், நேரடியாகவோ – பிரதிநிதி மூலமோ வரிக்கான தேவை பற்றி விளக்கம் பெறவும், சுதந்திரமாக அதுபற்றிய தன் வாக்கினை அளிக்கவும், வசூல் எப்படி செலவாகிறது என்றறியவும், அது செலவிடப்படுவதற்கான விகிதங்களை நிர்ணயிக்கவும், வரி அளவு நிர்ணயிப்பு முறைகள், வசூல், காலவரை ஆகியவற்றையும் நிர்ணயிக்கவும் உரிமை உண்டு.

15. பொது நிருவாகப் பிரதிநிதி ஒவ்வொருவரும் சமூகத்துக்குப் பொறுப்பானவர்கள்.

16. உரிமைகளுக்கான உத்திரவாதம் உறுதி செய்யப்படாத அதிகாரப் பங்கீடுகள் நிர்ணயிக்கப்படாத சமுதாயம் ஓர் அமைப்பற்ற சமூகமாகக் கருதப்படும்.

17. சொத்துரிமையும் பறிக்க முடியாததும் புனிதமானதுமான ஒன்றே, ஆகவே, பொதுத் தேவைக்கான வெளிப்படைக் காரணமில்லாமல் ஒருவரது சொத்துரிமை பறிக்கப்படக் கூடாது. அத்தேவைக்கும் சட்ட ஒப்புதல் வேண்டும்.
அப்போதும் ஈட்டுத்தொகை முன்னதாகவே வழங்கப்படவேண்டும். ♦


ஞாயிறு, 23 ஜூன், 2024

மனித உரிமைகள் தொடர்பான இந்தியச் சட்டங்கள்


2023 கட்டுரைகள் நவம்பர் 1-15, உண்மை Unmai
மனித உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் அழுத்தம் தரும் முக்கியமான தேசிய சட்டங்கள் சிலவற்றின் பட்டியல்
1. இந்திய அரசமைப்புச் சட்டம் (முகப்புரை, பாகம் III, IV IVA அத்துடன் பிரிவு 226, 300, 325_326)
2. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 மனித உரிமைகள் இன்னும் திறமாகப் பாதுகாக்கப்படுவதற்காக இச்சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமை நீதிமன்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த வகை செய்கிறது.
3. ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடிமக்கள் (SC, ST) ஆகியோருக்கான தேசிய ஆணையம்
ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகள் இன்னும் திறமாகப் பாதுகாக்கப்படுவதற்காக இந்த தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்று அரசமைப்புச் சட்டத்தின் 338ஆம் பிரிவு கோருகிறது.
4. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 சிறுபான்மையினர் உரிமைகளை திறமாகப் பாதுகாப்பதற்காக ஒரு சிறுபான்மையினர் தேசிய ஆணையம் நிறுவுவதற்காக இயற்றப்பட்ட சட்டம்.
5. பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993
ஷெட்யூல்டு பிரிவினரையும், பழங்குடியினரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒரு தேசிய ஆணையம் நிறுவவும், இது தொடர்பான, இதனால் எழுகிற விஷயங்கள் பற்றி வழிவகை செய்யவும் இயற்றப்பட்ட சட்டம்.
6. மகளிர்க்கான தேசிய ஆணையச் சட்டம், 1990
மகளிர் உரிமைகளை இன்னும் திறமாகப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய மகளிர் ஆணையம் நிறுவுவதற்கான சட்டம்.
7. குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955
அரசமைப்புச் சட்டம் பதினேழாம் பிரிவின்படி தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அதை எந்த வழியில் கடைப்பிடிப்பதும் தடை செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் தீண்டாமையிலிருந்து எழும் எவ்வித இயலாமையையும் நடைமுறைப்படுத்துவது இதன் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
8. ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினருக்கும் எதிராக அக்கிரமங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், அவற்றுக்கு இரையாவோருக்கு உதவியும் மறுவாழ்வும் தருவதற்கும் வகை செய்யும் சட்டம்.
9. மனிதர்களைத் துப்புரவாளராக நியமித்தல், உலர் கழிப்பகம் கட்டுதல் (தடைசெயல்) சட்டம், 1993
அரசமைப்புச் சட்ட முகப்புரையில் முழக்கப்படும் நோக்கங்களில் தனிமனிதனின் கவுரவத்துக்கு உறுதியளிக்கும் சகோதரத்துவமும் ஒன்று. 47ஆம் பிரிவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை அரசு உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் சுகாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் கோருகிறது. அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனிதத் தோட்டியர் நியமனம், உலர் கழிப்பகங்களைக் கட்டுவது, தொடர்ந்து பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடை செய்யவும், நீர்வசதிக் கழிப்பகங்களைக் கட்டுவதையும் நிர்வகிப்பதையும் நெறிப்படுத்தவும் இது வகை செய்கிறது.
10. நெறிகெட்ட வியாபார(தடை) சட்டம், 1956
மனிதர்களை வைத்து நெறிகெட்ட வணிகம் நடத்துவதை அரசமைப்புச் சட்ட 23ஆம் பிரிவு தடைசெய்கிறது. 1950 மே 9 அன்று இந்தியா மாதர்களையும் பெண்களையும் கொண்டு நெறிகெட்ட வணிகம் செய்வதை ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதே இந்தச் சட்டம்.
11. மகளிரை அநாகரிகமாக பிரதிநிதிப்படுத்துதல் (தடை செயல்) சட்டம், 1986
விளம்பரங்கள் மூலமும், வெளியீடுகளிலும், எழுத்திலும், படத்திலும் உருவங்களிலும் இன்னும் வேறு எவ்வழியிலும் மகளிரை அநாகரிகமாக பிரதிநிதிப்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டம்.
12. வரதட்சணை தடைச் சட்டம், 1961
வரதட்சணை தருவதும் பெறுவதுமான தீய பழக்கத்தைத் தடை செய்யும் சட்டம்.
13. உடன்கட்டை ஏறுதல் (தடைச்) சட்டம், 1987.
கைம்பெண்களையோ மாதர்களையோ உயிருடன் எரித்தல், புதைத்தல், சதி என்பது மனித இயற்கையிலான உணர்ச்சிகளுக்கு எதிரானதாகும். அது உள்ளார்ந்த கடமை என்று இந்திய மதம் எதிலும் எங்கும் கூறப்படவில்லை. உடன்கட்டை ஏறுதலையும் அதனைப் போற்றி வணங்குவதையும் வலுவான முறையில் தடுக்கும் சட்டம்.
14. பேறுகால நற்பலன்கள் சட்டம், 1961
தாய்மைக் கால நற்பலன்கள் முதலியவற்றுக்கு வழிவகை செய்யும் சில நிறுவனங்களில் குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் குறிப்பிட்ட காலத்துக்கு மகளிர் பணிமுறைகளை நெறிப்படுத்தும் சட்டம்.
15. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 1929
குழந்தைத் திருமணத்தை அதாவது மணம்புரியும் இருவரில் ஒருவராவது குறிப்பிட்ட வயதுக்குக் கீழே இருக்கும் திருமணத்தை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் இயற்றப்பட்டது.
16. குழந்தைகள் (உழைப்பு அடமானமாக்கும்) சட்டம், 1933
குழந்தைகளின் உழைப்பை அடமானமாக்கு
வதையும், உழைப்பு அடகு வைக்கப்பட்ட குழந்தைகளை வேலைக்கமர்த்துவதையும் தடை செய்யும் சட்டம்.
17. அநாதை இல்லங்களும் தர்ம இல்லங்களும் (மேற்பார்வை கட்டுப்பாடு) சட்டம், 1960
அநாதை இல்லங்கள், புறக்கணிக்கப்பட்ட மாதர்க்கும் மழலையர்க்குமான காப்பகங்கள் மற்றும் அதுபோன்ற மனைகளின் மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அத்தகைய நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் குற்ற நடவடிக்கைகளைத் தண்டிக்கவும் வகைசெய்யும் சட்டம்.
18. குழந்தைகள் சட்டம், 1960
நேரடி மத்திய ஆட்சிப் பகுதிகளில் இளங்குற்றவாளிகளை விசாரித்தல், குழந்தைகளின் மீதான அக்கறை, பாதுகாப்பு, பராமரிப்பு, நல்வாழ்வுப் பயிற்சி, கல்வி மறுவாழ்வு ஆகியவற்றுக்கும் வழிசெய்யும் சட்டம்.
19. குழந்தைத் தொழிலாளர் (தடைசெயலும் நெறிசெயலும்) சட்டம் 1986
குறிப்பிட்ட வேலைகளிலும், தொழில்முறைப் பணிகளிலும் குழந்தைகளைப் பணியமர்த்துவதை இச்சட்டம் தடை செய்கிறது. அத்தகைய வேலைகள்_ பணிகள் என்ற பட்டியலில் ஒரு தொழிலை எப்படி சேர்ப்பது என்ற நடைமுறையை வரைகிறது. தடுக்கப்படாத வேலைகளில் பணியமர்த்தப்படும் குழந்தைகளின் பணிச்சூழல்களை நெறிப்படுத்துகிறது.
20. இளங்குற்றவாளிகள் நீதி சட்டம், 1986
புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், இளங்குற்றவாளிகள் ஆகியோரின்மீது அக்கறை, பாதுகாப்பு, அவர்களை நடத்தும் விதம், அவர்கள் மேம்பாடு, புனர்வாழ்வு இளங்குற்றவாளிகள் நீதிமன்றங்கள் பற்றிய தனி அணுகுமுறை ஆகியவை பற்றிப் பேசும் சட்டம்.
21. இளைஞர்களுக்கு ஊறு விளைவிக்கும் வெளியீடுகள்) சட்டம், 1956
படங்களுடனோ படங்களின்றியோ  குற்றம், வன்முறை, கொடுமைகள், பயங்கரமான அல்லது மனதைப் புரட்டும் நிகழ்ச்சிகள் கொண்ட கதைகளடங்கிய வெளியீடுகள் இளம்வயதினரைக் கெடுக்கும் அத்தகைய செயல்களைச் செய்யுமாறு உற்சாகப்படுத்தத் தூண்டவும் கூடும். இளம்வயதினருக்கு தீங்கிழைக்கக்கூடிய வெளியீடுகளைப் பரப்புவதைத் தடை செய்ய இச்சட்டம் முனைகிறது.
22. ஜாதி தழுவிய இயலாமையை அகற்றும் சட்டம், 1950
இச்சட்டம் வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்களுக்கிடையேயான வழக்குகளில், அவர்களது மதச் சட்டங்கள் புகுந்து மற்றபடி அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சொத்தை அடைய முடியாமல் செய்வதைத் தடுக்கிறது.
23. மனநலச் சட்டம், 1987
இச்சட்டம் பைத்தியமென்று தீர்மானிப்பது எப்படி என்பதை நெறிப்படுத்துகிறது. மனநோயாளிகளை ஏற்பது, அவர்கள் மீதான அக்கறை, சிகிச்சை ஆகியவை பற்றியதாகும்.
24. கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம், 1976
அரசமைப்புச்சட்ட 23ஆம் விதி ‘பெகர்’ மற்றும் அது போன்ற மற்றவகை கட்டாய வேலை வாங்குதலை தடை செய்கிறது. அந்த வகையுரையின் எந்த மீறலும் சட்டப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும் எனவும் கூறுகிறது. சமூகத்தின் நலிந்த பிரிவினரை உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டுவதைத் தடுப்பதற்காக கொத்தடிமை முறையை ஒழிக்கவும் வகை செய்கிறது.
மற்றும் சில முக்கியச் சட்டங்கள்:
1. குழந்தை பிறப்பதற்கு முந்தைய மருத்துவ சோதனை தொழில் நுட்பங்கள் (நெறிப்படுத்தல், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்) சட்டம் 1994
2. மருத்துவபூர்வமான கருச்சிதைவுச் சட்டம், 1971
3. மனித உறுப்புகள் மாற்றுச் சிகிச்சை சட்டம்,
4. தெற்காசிய வட்டாரக் கூட்டுறவு சங்க (சார்க்) உடன்படிக்கை (பயங்கரவாதத்தை அடக்கும்) சட்டம், 1993
5. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986
6. பீடி, சுருட்டு தொழிலாளர் (வேலை) சட்டம், 1966
7. பீடித்தொழிலாளர் நல நிதிச்
சட்டம், 1976
8. தொழிற்சங்கச் சட்டம், 1926
9. தொழில் தகராறுகள் சட்டம், 1947
10. தொழிலாளர்களுக்கான இழப்பீடுச் சட்டம், 1923
11. தொழிலாளர் வேலைகள் நிலையாணைகள் சட்டம், 1946
12. தொழிற்சாலைகள் சட்டம், 1948
13. ஊழியர் அரசுக் காப்பீடு சட்டம், 1948
14. குறைந்தபட்ச சம்பளச் சட்டம், 1948
15. ஊழியர் சேமநல நிதிகள், பல்வகை வகையுரைகள் சட்டம், 1952
16. பயிற்சி பெறுவோர் சட்டம், 1961
17. சம ஊதியச் சட்டம், 1976
18. சம்பளப் பட்டுவாடா சட்டம், 1936
19. வார விடுமுறைகள் சட்டம், 1942 ♦