ஞாயிறு, 20 நவம்பர், 2016

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

தெரிந்து கொள்வீர்!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினருக்கு எதிரான வன்கொடு மைகளை தடுப்பதற்கான சட்டத்தை வலுப்படுத்தும் வகையிலான சட்ட திருத்த மசோதாவை தொடர்பான சட்டதிருத்த அவசரச் சட்டம்
1. சட்ட திருத்தத்தின் விபரங்கள் மற்றும் வசதிகள்  தாழ்த்தப்பட் டவர்கள் மற்றும் பழங்குடியினரை அவமானப்படுத்துவதும் அவர்களைத் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடுவது
தாழ்த்தப்பட்டவர்களை பலவந்தப் படுத்துவது வாக்களிக்க மிரட்டுவது, அவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது
தாழ்த்தப்பட்டவர்களின் சொத்துக் களை மிரட்டி பலவந்தமாக பிடுங் குவது,
2.    தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்களுக்கு எதிரான கொடு மைகள்
பாலியல்வன்கொடுமை மற்றும் துண்புறுத்தல் மேலும் தாழ்த்தப் பட்ட பழங்குடியினப் பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற முயல்வது,
தகாதவார்த்தைகளில் பாலியல் சைகை முறையில் பெண்களை மனம்புண்படும்வகையில் பேசுவது
தலித் பெண்களை தேவதாசி களாக அல்லது கோவிலகளில் அப்பெண்களை அடிமைகளாக  மாற்ற முயலும் கோவில் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை
நவீன சாதனங்களை (மொபைல் மூலம் தகாதவார்த்தை பேசுவது, ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது) பயன்படுத்தி தவறாக வார்த்தை களைப் பயன்படுத்துதல்
3. பொது இடங்களில் செருப்பை அணிவதைத் தடுப்பது, மலம் அள்ள வற்புறுத்துவது, மிரட்டிக் கட்டாயப் படுத்துவது, பொது இடங்களில் ஜாதிரீதியாக பேசி அவமானப்படுத்து வது, மற்றவர்களிடம் அவர்களைப் பற்றி அவமானப்படுத்தும் விதமாக பேசுவது, சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரி மற்றும் சமூக ஆர்வலர்களை ஜாதி குறித்துப் பேசி அவமானப்படுத்துவது மற்றும் அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்லி ஏளனம் செய்வது
4.    வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதி மறுப்பது, பொது இடங்களை பயன்படுத்துவதை தடுப்பது ஆகியவையும் இந்த சட்ட வரம்புக்குள் புதிதாக இணைக்கப்பட் டுள்ளன.
5.    காலதாமதமின்றி வழக்கு விசாரணை நடைபெறுவதற்காக தனி வழக்கறிஞரும் நியமிக்கப்பட இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
6.    தாழ்த்தப்பட்ட பழங்குடியி னரை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் அரசுப் பணியா ளர்களுக்கு பணி நீக்கம் மற்றும் சிறைத் தண்டனை
7.    உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல் மற்றும் வாய்மொழியாக வழங்கபப்ட்ட புகாரை பதிவேட்டில் ஏற்றி புகார் கொடுத்தவரின் கையொப்பத்தைப் பெற்று அதன் நகலை புகார் அளித்தவரிடம் அளிக்கவேண்டும்.
8.    மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் நியமித்தல்
9.    இரண்டு மாதத்திற்குள் வழக்கை விசாரித்து நீதி வழங்க
10.    மூன்று மாதங்களுக்கு மேலாக நீதிமன்றங்களில் இந்த வழக் குகள் தேங்கக் கூடாது,
11.    காலதாமதமின்றி வழக்கு விசாரணை நடைபெறுவதற்காக தனி வழக்கறிஞரும் நியமிக்கப்பட இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்யும்.
•    புகார் அளிப்பவரை பாதுகாத்தல்
•    சாட்சியளிப்பவர்களைப் பாது காத்தல்
• சாட்சியளிப்பவர்களுக்கும் புகார் அளிப்பவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உரிமைகளை வழங்கப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்
-விடுதலை ஞா.ம.12.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக