திங்கள், 7 நவம்பர், 2016

வயது சான்றுக்கு பள்ளிச் சான்றிதழ் போதுமானது உச்சநீதிமன்றத் தீர்ப்பு


உரிமையியல் முறையீடு எண். 2016 இன் 1676
(@விசேஷ விடுப்பு மனு c எண் 2012ன் 37555)HINA
மனுதாரர்கள்
எதிர் யூனியன் ஆஃப் இந்தியா - _ பிறர்பிரதிவாதிகள்
தீர்ப்பு : குரியன், நீதியரசர்
1. விடுப்பு வழங்கப்பட்டது
2. இந்த மனுவின்மேல் எழும் சிறிய கேள்வி மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டம் கலம்னுரி என்னும் இடத்தில் பெட்ரோலியம்/டீசல் வியாபார சில்லறைக் கடை வைக்க ஒதுக்கீடு செய்ய மனுதாரர் கொடுத்த விண்ணப்பத்தை வழக்கப்படி சமர்ப்பிக்க வேண்டிய வயதுச் சான்றிதழ் உயர்நிலைப்பள்ளியுடையது அல்ல; ஆனால் மேல்நிலைப் பள்ளியுடையது என்ற காரணம் காட்டி இரண்டாம் பிரதிவாதி அமைப்பு நிராகரித்தது நியாயமானதா என்பதுதான்.
3. மனுதாரர் சமர்ப்பித்த சான்றளிக்கப்பட்ட நகலான சிறீ ஷாந்தி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, விரட்ஷாபுர், ஹிங்கோலி கொடுத்த பள்ளி விலகல் சான்றிதழ் மேல்நிலைப்பள்ளியுடையது என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. அந்த சான்றிதழ் பள்ளிக்கூட முதல்வர் கொடுத்தார். மனுதாரர்_அதனுடைய சான்றளிக்கப்பட்ட நகலை முன்வைத்தார்
4. உயர்நீதிமன்றத்தின் திருப்தியளிக்காத தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
“அமைப்பு அணுகியமுறை நுணுக்கமானது என்ற போதிலும் அமைப்புக்கு தேவைப்பட்ட விதத்திலும் விளம் பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதத்திலும் மனுதாரர்_வயது அத்தாட்சி சமர்ப்பித்திருக்கலாம் விளம்பரத்தின் நிபந்தனைகளில் சேர்க்கவோ திருத்தவோ அல்லது மாற்றவோ_ அறிவுறுத்துவது உசிதம் அல்ல.
5. தகுதி நிபந்தனை ஷரத்து2(c)ன் படியான தே-வையை மனுதாரர் குறிப்பிட்டபடி அனுசரிக்கவில்லை என்ற காரணத்தால் மனு நிராகரிக்கப்படுகிறது. ஷரத்து 2(c) இவ்வாறு கூறுகிறது:
(c) வயது விண்ணப்ப தேதியன்று (பூர்த்தியான ஆண்டுகள்) 21 ஆண்டுகளுக்குக் குறையக கூடாது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள மெட்ரிகுலேசன் அல்லது உயர்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது PAN கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.
6. அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட_ஆலோசகர் வாதிடுகையில் சான்றளிக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி சான்றிதழ் தேவை என்று கூறினார். அவர்கள் முன்பு சான்றளிக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் அவர்கள் முன்பு இணைக்கப்பட்டதால் அமைப்பு விண்ணப்பத்தை நிராகரித்ததன் மூலம் நியாயமாக_நடந்து கொண்டது. மேலும் குறிப்பிடுகையில் தகுதி நிபந்த னையை பூர்த்தி செய்யாத அப்படிப்பட்ட அனைத்து விண்ணப்பங் களும் அறிந்து கொண்டு அமைப்பு அப்படிப்பட்ட விண் ணப்பங்களை நிராகரித்தது. மனுதாரர். அதே பிரச் சினையை எழுப்பியுள்ளாரா என்பது தெளிவாக இல்லை.
7. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனையி லிருந்து வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் போதுமானது இருந்தபோதிலும், தகுதி நிபந்தனையின் தேவையை உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழின் நகல் பூர்த்தி செய்கிறது என்றால் உயர் நிலைப்பள்ளி விலகல் சான்றிதழுக்கும் மேல்நிலைப்பள் ளியின் விலகல் சான்றிதழுக்கும் என்ன வித்தியாசம்? அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் வாரியம் கொடுக்கிறது. ஆனால் மேல்நிலைப் பள்ளி விலகல் சான்றிதழ் பள்ளிக்கூடம் கொடுக்கிறது. பள்ளி விலகல் சான்றிதழ் என்றாலே பள் ளியை விட்டு மாணவர் போவதால் பள்ளி கொடுக்கிறது. மனுதாரர் அமைப்பின் முன்பு பள்ளி விலகல் சான்றிதழ் தாக்கல் செய்தது இணைப்பு P1 இல் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தேவை வயதின் ஆதாரமாகும். தகுதி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்களை வயது ஆதாரத்திற்காக ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்போது வயது ஆதாரத்திற்கு உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் நகலை ஏற்றுக் கொள்ளும் பொழுது சான்றளிக்கப்பட்ட மேல் நிலைப்பள்ளி விலகல் சான்றிதழின் நகல் வயது ஆதாரத் திற்காக ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது இது ஒரு பொது அறிவு ஆகும். உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை தவறு. நாங்கள் தெளிவுபடுத்தியது நிபந்தனையைத் திருத்தாது.
8. பிரதிவாதி எண் 4_ற்காக ஆஜராகும் மதிப்புக்குரிய சட்ட- ஆலோசகர் திரு.ஷி.வி.ஜாதவ் அமைப்பின் மதிப் புக்குரிய சட்ட ஆலோசகர் முன்வைத்த வாதங்களை ஆத ரித்து மேலும் கூறுகையில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு நிலுவையில் இருக்கும்பொழுது 4 ஆம் பிரதிவாதிக்கு சில்லறைக்கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட-து. அது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மனுதாரர் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட பின்னர் அமைப்பு நடத்திய தேர்வின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும்
9. அதன்படி, நாங்கள் இந்த முறையீட்டை அனு மதிக்கிறோம். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம். இரண்டாம் பிரதிவாதி அமைப்பை மீண்டும் தேர்வு நடத்த உத்தர விடுகிறோம். அமைப்பால் தகுதி பெற்றவர்களுடன் இங்கு மனுதாரராக உள்ளவரையும் அதில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தர விடுகிறோம். இன்று முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாக தேவைப்படி நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
Lawyers Line March 2016
-விடுதலை,ஞா.ம.,16.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக