வெள்ளி, 23 டிசம்பர், 2016

சம வேலைக்கு சம ஊதியம்! தற்காலிகப் பணியாளர்களுக்கும், நிரந்தரப்பணியாளர்களின் ஊதியம்போல் சமமாக வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு


டில்லி, அக்.29 நிரந்தரப் பணி யாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப்போன்றே தற்காலிக பணியாளர்களுக்கும் வழங்க  வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் அரசு சார் துறைகளில்  லட்சக்கணக்கில் தற்காலிகப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரு கிறார்கள். சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கைக் கேற்ப, அரசுப்பணிகளில் நிரந் தரப் பணியாளர்களுக்கு அளிக் கப்படுகின்ற ஊதியத்தைப் போன்றே தற்காலிகப் பணியா ளர்களுக்கும் வழங்கிட வேண் டும் என உச்சநீதிமன்ற நீதி பதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கையின் அடிப் படையில் அனைத்து பணியா ளர்களுக்கும் சம அளவில் ஊதிய விகிதம் அளிப்பதுகுறித்த தெளிவான தீர்ப்பை ஜே.எஸ்.கேகர், எஸ்.ஏ.பாப்டி ஆகி யோரைக் கொண்ட அமர்வு அளித்துள்ளது.

இதில் எங்களுடைய பார் வையில், தொழிலாளர்களுக்கு சேர வேண்டியதைக் கொடுக்க மறுப்பது செயற்கைத்தனமான அளவீடுகளைக் கொண்ட ஒரு தவறான முடிவாகும் என்ப தாகும்.

ஒருவரைவிட அடுத்த வருக்கு குறைவாக ஊதியம்  கண்டிப்பாக வழங்கிடக் கூடாது. ஏனென்றால், இது மக்கள் நலன் காக்கின்ற அரசு ஆகும். இதுபோன்று வேறுபாடுகளு டன் இருப்பது மனிதகுலத்தின் பெருமையை சீர்குலைத்து விடும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.

நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுகுறித்து கொள்கை விளக்கத்தைத் தெளிவுபடுத்தி யுள்ளது.

ஒரேவிதமான பணியை பணியாற்றுவோரிடையே வழங்கப்படுகின்ற ஊதியத்தை ஒப்பிடும்போது குறைத்து வழங்கப்படுகிற செயலானது அடிமைத்தனத்தை கொண்டுள் ளதாக உள்ளது. பணியாற்று வோரிடையே இருவகைகளில் வேறுபடுத்துவதாக உள்ளது. அய்யத்திற்கிடமில்லாமல் அடக்குமுறை, ஒடுக்குமுறை களுடன் கட்டாயப்படுத்தி மக் களின் விருப்பத்துக்கு மாறாக அடிமைப்படுத்தி நிர்ப்பந் திக்கிறது’’ என நீதிபதி கேகர் குறிப்பிட்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் தற் காலிகப் பணியாளர்கள் அளித்த மனுவில் தற்காலிகப்பணியாளர் களின் ஊதியம்  நிரந்தரப் பணியாளர்களின் ஊதியத்துடன் வேறுபாடுகளைக் கொண்டுள் ளதுகுறித்து குறிப்பிட்டார்கள். குறைந்த பட்ச ஊதிய விகிதம் என்பதுகூட நிர்ணயம் செய்யப் படவில்லை என்றுகூறி  நீதி கோரி பஞ்சாப் மாநில தற்கா லிகப் பணியாளர்கள் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம் மற் றும் உச்சநீதிமன்றத்தை நாடி னார்கள்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் குறிப்பிடும்போது பன்னாட்டளவில் பொருளா தாரம், சமூகம், கலாச்சார உரி மைகள் குறித்து  உடன்படிக்கை யில் கையொப்பமிட்டுள்ள நிலையில் சம வேலைக்கு சம ஊதியம்Õ என்பது  பின்பற்றப் படவேண்டும் என்று குறிப் பிட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பல் வேறு நிலைகளைக் குறிப்பிட்டு விட்டு, சம வேலைக்கு சம ஊதியம் என்பதிலிருந்து விலகிச் செல்ல முடி யாது. அரச மைப்புச் சட்டத்தின் பிரிவு 141இன்படி உச்சநீதிமன் றம் ஏற்கெனவே அளித்துள்ள சட்டப் படியான உத்தரவை பின்பற்ற வேண்டும்.

தற்காலிகப் பணியாளர் அல் லது நிரந்தரப்பணியாளர்  இடையே சம வேலைக்கு சம ஊதியம்Õ என்கிற கொள்கையை தெளி வாகவும், குழப்பமில்லாமலும், ஒவ்வொரு பணியாளர்களிடத் திலும் பின்பற்றிட வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது.
-விடுதலை,29.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக