ஞாயிறு, 20 நவம்பர், 2016

கொலை, கடத்தல், பாலியல் வன்முறை வழக்குகளில் சமரசத் தீர்வை ஏற்க முடியாது

உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கொலை, மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை, லஞ்சம், வழிப்பறி, கடத்தல், சிலை திருட்டு, பெண்களைத் தவறாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் போன்ற வழக்குகளில் சமரச உடன் படிக்கையை ஏற்கக் கூடாது என உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
உசிலம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் என்பவரது புகாரின் பேரில் பிரபு, சந்திரமோகன் ஆகி யோர்மீதான வழக்கு, விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் மாரியம்மாள் என்பவர் புகாரின் பேரில் வீரபாண்டியன்மீது பதிவு செய்த வழக்கு, திண்டுக்கல் மாவட் டம், சாணார்பட்டியில் கெம்பையா என்பவரின் புகாரின் பேரில் சாகுல் உட்பட 6 பேர்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆகிய வற்றை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.
இந்த மனுக்களில், புகார் தாரர், எதிர்தரப்பினர் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால், அந்த சமரசத்தை ஏற்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர்கள்மீது பல் வேறு பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அவற்றில் பல குற்றங்கள் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றங் களாக உள்ளன.
சிறப்புச் சட்டங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் மனுதாரர் களின் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாத நிலை நீதி மன்றத்துக்கு ஏற்பட்டுள் ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் பதிவு செய் யப்படும் வழக்குகளைப் பொறுத்தவரை சமரச உடன்படிக்கையை ஏற்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
சொத்து, வணிகம், பங்குதாரர் பிரச்சனை, திரு மணப் பிரச்சினை, வரதட் சணை, குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் சமரசத்தை ஏற்கலாம். அதே நேரத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசத்தை ஏற்க முடியாது.
குறிப்பாக கொலை, கொலை முயற்சி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், பாலி யல் வன்முறை, லஞ்சம், போலி ஆவணம் தயாரித்தல், பொய்சாட்சியம் அளித்தல், வழிப்பறிக் கொள்ளை, கடத்தல், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை, சிலை திருட்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை தவ றாக சித்தரித்தல், கள்ள நோட்டு அச்சடித்தல் உள் ளிட்ட பல குற்றங்களில் சமரச உடன்படிக்கையை ஏற்க முடியாது.
இதுதவிர ஆயுதச் சட்டம், லஞ்ச ஒழிப்பு சட்டம், பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டம், கந்து வட்டி தடைச் சட்டம் போன்ற சிறப்புச் சட்டங் களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சமரச உடன்படிக்கையை ஏற்று ரத்து செய்ய முடியாது.
அதேநேரத்தில் சமரச உடன்படிக்கையை ஏற்கும் முன்பு குற்றவாளியின் முந்தைய நடத்தையையும் கருத்தில் கொள்ள வேண்டும். சமரச உடன்படிக்கையை ஏற்பதில் நீதிமன்றங்கள் இயந்திரத்தனமாக செயல் படக்கூடாது.
ஏனெனில், சமரச உடன் படிக்கை, அந்த வழக்கில் இருந்து குற்றவாளியை தப்பிக்கச் செய்வதாக மட்டும் இருக்கக்கூடாது. இந்த வழக்குகளை பொறுத்தவரை உசிலம்பட்டி காவல் நிலைய வழக்கை ரத்து செய்ய முடியாது. விருது நகர் மற்றும் சாணார்பட்டி காவல் நிலைய வழக்குகள் திருமணப் பிரச்சினை தொடர்பானது.
அந்த வழக்குகளில் சமரச தீர்வை ஏற்கலாம். அதற்காக அந்த வழக்குகளை 28.1.2016- இல் பட்டியலிட்டு சமரச உடன் படிக்கையை ஏற்க வேண்டும். என்றார் நீதிபதி.
-விடுதலை ஞா.ம.,19.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக