புதன், 29 மே, 2019

ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்

சென்னை, மே 27 ஆதிதிரா விடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் கட் டணம் தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன் றத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாகுறிச்சி யில் இயங்கும் பாரதி யார் பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாண விகள் ஜோதிகா, அன்புச் செல்வி, அபர்ணா உள் ளிட்ட 114 பேர் தாக்கல் செய்த மனுவில், "ஆதிதிரா விட வகுப்பைச் சேர்ந்த எங் களுக்கு தமிழக ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மறுக்கப்பட் டுள்ளது.

மேலும், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப் படும் எனவும், அரசு கல்லூரி களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்ட ணமே உதவித் தொகை யாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

உதவித்தொகை வழங்கும் திட்டமே ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுப்பது சட்டவிரோத மாகும். எனவே கல்வி உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், கல்விக் கட்டணம் தொடர்பாக அரசு நிர்ணயம் செய்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள அர சாணையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் அண்மையில் விசா ரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுதாரர்களான மாணவிகள் அனைவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது என கருத்து தெரிவித்ததோடு, கல்வி உதவித் தொகை தொடர்பாக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசா ணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

ஒருவருக்கு நாத்திகன் - மதச்சாராதவன் என சான்றளிக்கக் கூடாதது ஏன்? என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி?

குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் ராஜீவ் உபாத்யா (வயது 35) ஆட்டோ ரித்சா ஓட்டுநர், ஓர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசை, குஜராத் உயர்நீதிமன்றம், ஓர் இந்திய பிரஜைக்கு ‘நாத்திகன் - மதம் சாராதவன்’ என சான்றிதழ் வழங்கக் கூடாதது, ஏன்? என மாநில அரசை, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனுதாரர் உபாத்யாயா, இரண்டு வருடங்களுக்கு மேலாக, மாவட்ட ஆட்சியருக்கு, தன்னை இந்து மதத்திலிருந்து, மதமாற்ற சட்டத்தின்படி தன்னை ஓர் நாத்திகன் - மதம் சாராதவன் என சான்று அளிக்கும்படி விண்ணப்பித்திருந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர், உள்நோக்கத்துடன் 16.05.2017 அன்று அவருக்கு அனுமதி மறுத்ததுடன், நாட்டின் பிரஜைகள் தனது மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தனது மதத்திலிருந்து ‘நாத்திகன் - மதச்சார்பு இல்லாதவன்’ என சான்றளிக்க ‘முகாந்திரம் இல்லை’ என்று மனுவை நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள்

A.S. தவே, மற்றும் பாரேன் வைஸ்னவ் அடங்கிய அமர்வு நீதிமன்றம், மனு தொடர்பாக மாநில அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் விளக்கம் கேட்டுள்ளது.

மனுதாரர், தான் ஓர் கரோடா இந்து பிராமண சமூகத்தை என்றும், இந்த இனம் பட்டியல் இன பிரிவைச் சார்ந்தது என்றும், இதன் காரணமாக தன் வாழ்நாளில் சாதி துவேசத்தால் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகி துன்பப்பட்தாகவும் இதன் விளைவாகவே மதம் மாற்று சான்றிதழ் பெற விளைந்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, மனுதாரர் மத சுதந்திர சட்டத்தின்படி மதம் மாறிக் கொள்ள அனுமதித்து இருந்தும் ஓர் ஆணோ/ பெண்ணோ தன்னை மாற்றிக் கொள்ள முழு சுதந்திரம் உண்டு. எனவே, உயர்நீதிமன்றம் மாநில அரசை மனு தொடர்பாக தேவையான திருத்தம் செய்து தர ஆணையிட வேண்டும் என்கிறார். 

                             (Times of India 19.04.2019)

-  உண்மை இதழ், 1-15.5.19

ஞாயிறு, 5 மே, 2019

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது - உச்சநீதிமன்றம்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மனைவியின் தண்டனையை 10 ஆண்டு களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காத லனும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட் டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய் யப்பட்டனர். அதுதொடர்பாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய் யப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு நீதிபதி கள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கீழமை நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனையையும் குறைத்தார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (ஹாமிசைடு) குற்றமாக கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள். கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவி யையும், மகளையும் விபச்சாரி என்று அழைத் திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் வந்துள்ளார். அவர் கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய் திருக்கிறார்கள். கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார்.
நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலை யில் கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு, தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கி றது. திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார். தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப் பதால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மர ணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும். அந்த வகையில் கீழமை நீதி மன்றம் அளித்த தண்டனையை குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
- சட்டக்கதிர், ஏப்ரல் 2019
-விடுதலை ஞாயிறு மலர்,20.4.19

விருப்பத்துடனான உறவு பலாத்காரம் ஆகாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆணும், பெண்ணும்  மனம்  விரும்பி பாலியல் உறவு கொண்டால், அது பலாத்காரம் ஆகாது என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. மகாராட்டிராவை சேர்ந்த நர்ஸ் ஒருவர், மருத்துவர் ஒருவர் தன்னை பலாத்காரம்  செய்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருமணம்  செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்ந்தபோது, இந்த பலாத்கார  சம்பவம்  நடந்ததாக மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும்  உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டால் அது பலாத்காரமாகவும், பாலியல் வன்கொடுமையாகவும்  கருதப்படாது. சில காலமாக இருவருக்கும்  உறவு நீடித்து வந்தாலும், அது பலாத்காரம்  இல்லை. பாலியல் பலாத்காரத்துக்கும், சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கிறது. ஆணும்  பெண்ணும்  சேர்ந்து வாழும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்கு தருபவர், அதை செய்யத் தவறும் போது அதை பாலியல் பலாத்காரமாக எப்படி கருத முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும், நர்ஸ் மனுவை தள்ளுபடி செய்தனர்.


- நன்றி: சட்டக்கதிர் (மார்ச் -2019)
- விடுதலை ஞாயிறு மலர்,30.3.19

புதன், 1 மே, 2019

ஜாதி மறுப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஏப்.23 ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவு வழங்கி இருக்கிறது.
மகாராட்டிராவை சேர்ந்த அஞ்சால் பட்வாய்க் (19) என்ற எம்பிபிஎஸ் மாணவி, தனது தந்தையின் ஜாதிக்கு பதிலாக தாயாரின் ஜாதி பெயரை பயன்படுத்த அனுமதிக் கோரி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு கமிட்டியிடம் விண்ணப்பித்து இருந் தார். ஆனால், தந்தையின் ஜாதியை வைத்தே மாணவியின் ஜாதியை முடிவு செய்ய முடியும் என்று கமிட்டி கூறியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அஞ்சால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசா ரித்து நீதிபதிகள் நேற்றுமுன்தினம் அளித்த, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு முறை உள்ளது. இப்போது நிலைமை மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி மறுப்பு திருமண தம்பதிக்கு பிறந்த குழந் தைகள், தனது தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.
மாணவி அஞ்சாலும், அவருடைய தாயார் பாரதியும் நாக்பூரில் உள்ள காஞ்சிபேத் பகுதியில் வசித்து வரு கிறார்கள். பாரதி இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு வரை திருமணம் செய்தார். ஆனால், அஞ்சால் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தந்தை அந்த குடும் பத்தை அனாதையாக விட்டுச் சென் றார். இந்த நாள் வரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி பல்வேறு வேலைகளை செய்து கஷ் டப்பட்டு தனது மகளை வளர்த்து ஆளாக்கினார். அஞ்சாலுக்கு மெரிட் அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 - விடுதலை நாளேடு, 23.4.19