ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி

சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்கள் கொடுமைப்-படுத்தப்படுகிறார்கள் என்பது ஒரு கடும் உண்மையாகும். இதில் இந்தியா விதிவிலக்கு இல்லை. பெண்களுக்கான பொருளாதார சதந்திரம் மறுக்கப்படுகிறது.

அவர்களுடைய வாழ்க்கைக்கு அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரை பெண்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதாவது, குடும்பத்துக்குள்ளும், பணிபுரியும் இடங்களிலும், சமுதாயத்திலும் வேறுபாடுகள், இடைஞ்சல்கள், வன்முறை முதலிய கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். இந்தியாவில் (தொழிற்சாலை அல்லது பணிபுரியும் இடத்தில்) பெண்களின் நிலைமையை மேம்படுத்த நாடாளுமன்றம் பெருமளவிலான சட்டதிட்டங்களையும், பெண்களுக்கான விசேஷ ஷரத்துக்களையும் கொண்டுவந்துள்ளது.

அவற்றுள்: தொழிலாளர் நஷ்ட ஈடு சட்டம், 1923; கூலி அளித்தல் சட்டம், 1936; தொழிற்சாலைகள் சட்டம், 1948; பிரசவ ஆதாய சட்டம், 1961; குறைந்தபட்ச கூலி சட்டம், 1948; தொழிலாளர்கள் மாநில ஆயுள் காப்பீடு சட்டம், 1948; மற்றும் ஓய்வூதியங்கள் சட்டம், 1987; முதலியன அடங்கும்.

தொழிலாளர் சட்டம் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஷரத்து.

தொழில்துறை சட்டங்களின்படி பெண்கள் உடலால், மனதால், இயற்கையால் தனிப்பட்ட தன்மைகள் உடையவர்கள் என்பதால் தொழில்முறை சட்டங்களின்படி அவர்களுக்கு  விசேஷ நிலை வழங்கப்படும். பணி சம்பந்தப்பட்ட சில சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தில் அமலானது. சில சுதந்திரத்துக்குப் பின்னானது. இந்தச் சட்டங்கள் அமலாக்கத்திற்-கான முக்கிய இலக்குகள் பெண்களின் திறமையை அதிகரித்தல், அவர்கள் உபயோக-மான சேவைகளில் ஈடுபடுதலை அதிகரித்தல், அவர்களுடைய குழந்தைகளின் நலனை உறுதி செய்தல், சம வேலைக்கு சம சம்பளம் போன்றவைகளாகும். பெண்கள் சம்பந்தப்பட்ட முக்கிய தொழிலாளர் சட்டங்கள் கீழ்க்-கண்டவாறு:

1. தொழிற்சாலைகள் சட்டம், 1948

தொழிற்சாலைகள் சட்டம் என்பது தொழிலாளர் நலமும் ஒரு பகுதியாக சேர்ந்தது. அதன்படி ஆரோக்கியம், பாதுகாப்பு, நலன், வேலை நேரங்கள், விடுப்பு, இளைஞர்களையும் பெண்களையும் வேலையில் சேர்த்தல் குறித்து கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மிருதுவான, இளகிய தோற்றங்கள் காரணமாக பெண்களுக்காக விசேஷ ஷரத்துகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு/ஆரோக்கிய திட்டங்கள்

1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 22(2)இல் பிரைம் மூவர் அல்லது டிரான்ஸ்மிஷன் மெஷினரி வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது அதை சுத்தம் செய்யவோ, அதன் பகுதிகளுக்கு எண்ணெய் ஊற்றுதலோ, ஏதாவது பகுதியைப் பொருத்தவோ பெண்களை அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால், அவ்வாறு சுத்தம் செய்யும்-பொழுதும், எண்ணெய் விடும்பொழுதும், பகுதியைப் பொருத்தும் பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் மெஷின் அல்லது அதனை அடுத்துள்ள மெஷின் மூலம் பெண்களுக்கு அடிபடுவதற்கான ஆபத்து உள்ளது. 1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 27, காட்டன் ஓபனர் பணியில் உள்ளபொழுது தொழிற்சாலையின் எந்தப் பகுதியிலாவது காட்டனை அமிழ்த்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கிறது.

இரவுநேரப் பணிக்குத் தடை

1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 66(1)இன்படி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லாது தொழிற்சாலையின் எந்தப் பகுதியிலும் பெண்களின் தேவையோ அவர்களை பணிபுரிய அனுமதிப்பதோ கூடாது.

¨    பீடி மற்றும் சிகார் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டம், 1966 காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லாது தொழிற்சாலையின் வளாகங்களின் எந்தப் பகுதியிலும் பெண்களின் தேவையோ அவர்-களை பணிபுரிய அனுமதிப்பதோ கூடாது எனக் கூறுகிறது.

¨    1952இன் சுரங்கங்கள் சட்டம் பிரிவு(1)(தீ)  எந்த பெண்களும் சுரங்கத்தின் மேல்பகுதியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லாது பெண்கள் பணிபுரிவதைத் தடுக்கிறது.
பெண்களின் பொது நலனுக்கான நிபந்தனைகள்

¨    இரவு நேரங்களில் பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்தல்.
¨    ஆபத்து விளையும் இடங்களில் பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்தல்.
¨    காட்டன் ஓபனர் பணியில் உள்ள-பொழுது காட்டனை அமிழ்த்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல்.
¨    தினசரி வேலை நேரத்தை நிர்ணயித்தல்.
¨    பராமரிப்பு அமைப்புகள் அமைத்தல்.

சாதாரணமாக 30 பெண்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை ஒவ்வொன்றிலும் அப்பெண்களின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உபயோகத்திற்காக ஒரு உகந்த அறை இருக்க வேண்டும். கழுவுதல். குளித்தல் வசதிகள் இருக்க வேண்டும். பெண்களுக்கு துவைக்கவும், குளிக்கவும் தனி மறைவிடம் இருக்க சட்டம் வற்புறுத்துகிறது. தொழிற்-சாலைகள் சட்டம் ஒரு தொழிற்சாலை முதலாளியை போதுமான எண்ணிக்கையில் கீழ்க்கண்டவைகளைப் பராமரிக்கக் கட்டாயப்-படுத்துகிறது.

¨    பெண்களுக்கு தனி கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம்.
¨    ஓய்வெடுக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதிகள்.
¨    அவசியமான ஆதாயங்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951, சுரங்கங்கள் சட்டம் 1952, பீடி மற்றும் சிகார் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டம், 1966, ஒப்பந்தத் தொழிலாளர் (விதிமுறை மற்றும் நீக்குதல்) சட்டம் 1970, மாநிலங்கள் இடையில் குடியேறும் தொழிலாளர்கள் (பணி விதிமுறை மற்றும் பணிகளின் நிபந்தனைகள்) 1979இல் மேற்கூறிய எல்லா ஷரத்துக்களும் கூறப்பட்டுள்ளன.

2. தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948

இந்தியாவின் ஒரு மிக முக்கியமான சமூக சட்டபூர்வ அமைப்பான தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம் வெவ்வேறு நிகழ்வுகளுக்கான பல்வேறு ஆதாயங்கள் அளிப்பதற்காக அமலாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் காப்பீடு செய்த பெண் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பிணி ஆதாயம், செயலிழப்பு ஆதாயம், மருத்துவ ஆதாயம், இறுதிச் சடங்கு செலவுகள் ஆதாயம் என்பவை காப்பீடு செய்த ஆண் தொழிலாளர்-களுக்கும் கிடைக்கும். இருந்தபோதிலும், இந்த ஆதாயங்கள் அல்லாது, காப்பீடு செய்த பெண் தொழிலாளர்களுக்கு, பிரசவ ஆதாயம், பிரசவ சமயத்தில் ஏற்படும் அவசர சிகிச்சைகள், கருவுறுதல், கருச்சிதைவு, கருவுறுதலின் மூலம் ஏற்படும் வியாதிகளான குறைப்பிரசவம், கருச்சிதைவு அல்லது இறப்பு முதலியவற்றுக்-கான உதவிகள் கிடைக்கும். காப்பீடு செய்த பெண்களுக்கு பேறு காலத்தில் பிரசவ ஆதாயம் 12 வாரங்கள். அதில் எதிர்பார்க்கும் பிரசவ தேதியிலிருந்து 6 வாரங்கள் முன்பு முதல் கிடைக்கும். காப்பீடு செய்த பெண்கள் அந்த நாள்களில் சம்பளத்திற்காக பணிபுரியாமல் இருந்தால் பிரசவ ஆதாயம் கொடுக்கப்படும். ஒரு காப்பீடு செய்த பெண் இறந்துவிட்டால், பிரசவ ஆதாயம் அவரால் நியமிக்கப்-பட்டவருக்கோ சட்டபூர்வ பிரதிநிதிக்கோ குழந்தை உயிருடன் இருந்தால் முழுக்காலத்-திற்கும், குழந்தை இறந்துவிட்டால், அது வாழ்ந்த வரைக்குமான காலத்துக்கும் கொடுக்கப்படும்.
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948இல் கொடுக்கப்பட்டுள்ள திட்டப்படி பணிபுரிபவர்களின் இடங்களில் உள்ள மருந்தகங்கள் மருத்துவமனைகளை நடத்தும் காப்பீட்டுக் கழகத்திற்கு மாதாந்தர சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதம் முதலாளியும் தொழிலாளியும் பங்களிப்பு செலுத்த வேண்டும். இதன் மூலம் புறநோயாளி, உள்நோயாளி கவனிப்பு, இலவச மருந்துகள், மருத்துவமனை தேவைகள், செலவுகள் செய்ய இயலும். உடல்நிலை காரணங்களுக்காக முதலாளிகளுக்கு அனுப்பப்படும் விடுப்பு சான்றிதழ்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் காயங்கள், பணி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, காயத்தின் தன்மை மற்றும் சம்பாதிக்கும் திறனில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பட்டியலிடப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் நஷ்டஈடு வழங்கப்படும். தொழிலாளர்கள் நஷ்டஈடு சட்டம்போல் அல்லாது பணம் மாதாமாதம் கொடுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுவதை மேற்பார்வை செய்ய மும்முனை அங்கங்களின் அமைப்பு இருந்தபோதிலும், மொத்த செயல்திட்டத்திற்கு இலஞ்சம், திறமைக்குறைவு காரணமாக அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மருத்துவ விடுப்புக்காக தாராளமாக இதனை உபயோகிக்கும் தொழிலாளிகள், நியாயமான மருத்துவ சிகிச்சைக்காக இந்த வசதியை அணுகுவதில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர்கள் ஒட்டு-மொத்த பேரம் மூலம் இதைவிட அதிக வசதிகள் பெற இந்த திட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

- நன்றி: லாயர்ஸ் லைன், மார்ச் 2016
-உண்மை இதழ்,1-15.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக