வெள்ளி, 28 அக்டோபர், 2016

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் பெண்களை தண்டிக்க முடியாது

குழந்தை திருமண தடைச் சட்டத்தில்
பெண்களை தண்டிக்க முடியாது  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.11
 சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பாட்டிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதி மன்றம் வெள்ளிக்கிழமை உத்தர விட்டது.
நாமக்கல் மாவட்டம், நாம கிரிபேட்டையைச் சேர்ந்தவர் பார்வதி. இவர் தன் 15 வயது பேத்தியை, மது என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பார்வதி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “குழந் தை திருமண தடுப்புச் சட்டத்தின், 11-ஆவது பிரிவின்படி, குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கில் பெண்களுக்கு தண்டனை விதிக்க முடியாது’ என்றார்.
இந்த வாதத்தை ஏற்று, பார் வதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மனுதார ருக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார். 
விடுதலை,11.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக