வியாழன், 29 டிசம்பர், 2016

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு: திருமணமான மகளுக்கும் உரிமை உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 12-_ கருணை அடிப்படையில் பணி வழங்குவது தொடர் பாக திருமணமான பெண் ணுக்கு காலவரையறை நிர்ணயித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத் தைச் சேர்ந்த பி.உஷா ராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

எனது தந்தையின் பெயர் எஸ்.பரமசிவம். கடந்த 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தமிழக அரசின் வருவாய்த் துறையில் பணியில் சேர்ந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் கிராம உதவியாள ராக பதவி உயர்த்தப்பட் டார். அவர் பணியில் இருக்கும் போது ராஜேந் திரன் என்பவருடன் எனக்கு திருமணம் நடந் தது. இந்த நிலையில் பணி யில் இருக்கும் போது, நெஞ்சு வலியால் கடந்த 2008-ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார்.

இதையடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் தேதி கருணை அடிப்படையில் வேலை வழங்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத் தேன். எனக்கு திருமணம் ஆனதால் கருணை அடிப் படையில் பணி வழங்க முடியாது என 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி எனது விண்ணப்பத்தை நிரா கரித்தார்.

2012- ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த ஆணை யின் அடிப்படையில் எனது வேண்டுகோளை நிராகரித்ததாக அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட் டது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து விட்டு, கருணை அடிப்படையில் எனக்கு வேலை வழங்க உத்தர விட வேண்டும் என மனு வில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன்பு நடந்தது. அப்போது, அரசு தரப் பில் அரியலூர் மாவட் டம், ஜெயங்கொண்டம் தாலுகா வட்டாட்சியர் பதில் மனு தாக்கல் செய் தார். அதில், மனுதாரரின் தந்தை இறப்பதற்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்டார். மனு தாரர் அவரது கணவர் குறித்து எந்தத் தகவலும் அளிக்கவில்லை.

2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதிக்கு முன்பு திரு மணம் முடிந்த பெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள் என 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனு தாரர், எஸ்.ராஜேந்திரன் என்பவரை 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி அவரது தந்தை இறப்பதற்கு முன்பே திரு மணம் செய்து கொண் டார்.

இதனடிப்படையில் மனுதாரர் கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்கு உரிமை வழங்க முடியாது. இந்த காலவரையறையை நிர்ண யித்ததில் எந்த தவறும் இல்லை என அதில் தெரி விக்கப்பட்டது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத் தரவு வருமாறு: ஆணுக்கும்_ பெண் ணுக்கும் எந்தப் பாகு பாடும் இருக்கக்கூடாது. இருவரையும் ஒன்றாகத் தான் கருத வேண்டும். கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக பெண்ணுக்கு எந்தக் காலவரையறையும் நிர்ணயிக்க முடியாது.

அதனால், 2012- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை சட்ட விரோ தமானது. அந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. எனவே, மனுதாரரின் வேண்டுகோளை பரி சீலனை செய்து மூன்று மாதங்களுக்குள் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை,12.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக