திங்கள், 16 நவம்பர், 2015

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!








இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்கா?


உலகத்தில் எங்கும் கேள்விப்பட்டு இருக்க முடியாத அதிசயமான தகவல் இது. 1968 ஜனவரி 17 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் சரி, இனி நடக்கப்போகும் திருமணங்களும் சரி (With retrospective Effect) செல்லுபடியாகும் என்று சட்டம் கூறியது.
இதற்கிடையே சுயமரியாதைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் தந்தை பெரியாரே சாட்சியம் அளித்தார்.  அந்தச் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுண்டு.
ஆடையூர் ரெங்கம்மாள் - சிதம்பரம் திருமணம் (கழகத் தலைவரின் மாமனார் - மாமியார் திருமணம்) 1934 இல் தந்தை பெரியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது- சுயமரியாதை முறையில், அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், அந்தத் திருமணம் அக்னியை வலம் வராமல், சப்தபதி எடுத்து வைக்காமல் நடைபெற்றதால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
‘‘இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் சட்டப்படி யான பிள்ளைகளாகக் கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும் அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்குண்டு; ஆனால், இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டிகளின் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள்’’ என்று ஜஸ்டீஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயண ராவ் என்ற இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வளவு நடந்ததற்குப் பிறகும்கூட சுயமரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டுதானிருந்தன. அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட சம்மதத்தை அளித்தார்கள்.
இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில்கூட சட்ட சம்மதம் பெற்று விட்டது. இந்த நிலையில், சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்குரைஞர் ஒருவர் பொது நல வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது.
சுயமரியாதைத் திருமண முறையில் சடங்குகள் கிடையாது. மோதிரத்தை மாற்றிக் கொள்கிறார்கள் - இந்து மதத்தில் இந்த முறை கிடையாது. ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின்மீது திணிப்பது விதி மீறல் ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் இதைப் புகுத்தி இந்துத் திருமண திருத்த சட்டம் என்று கூறுவது சட்ட விரோதம் என்று மனுதாரர் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் (தலைமை நீதிபதி), நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நடைபெற்றது.
சீர்திருத்த  சுயமரியாதைத் திருமணம் செய்யவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதைத் தவிர வேறு வகையில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்பது வேறு விடயம்.
ஆனாலும் பார்ப்பனப் பழைமையைக் கட்டிக் காப்பதிலும், இந்து மதச் சடங்குகளைக் காப்பாற்றுவதிலும் இன்னும் பார்ப்பனர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
2013 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.எஸ்.கர்ணன் அவர்கள் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. இரு குழந்தைகள் பிறந்ததற்குப் பிறகு - கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.
திருமணம் ஆனதற்குச் சாட்சியமும், சடங்கு முறை களும் இல்லாததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.
கணவன் - மனைவிக்கிடையே பாலுறவு நடந்திருக் கிறது என்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு வரும் திருமணம் செய்துகொள்வதற்கான வயதினையும் எட்டியுள்ளனர்.
திருமணத்திற்குச் சடங்குகள் முக்கியமல்ல; பாலியல் உறவு இருந்தாலே அது திருமணம்தான் என்று தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தின் தாக்கம் எத்தகைய வீறுதன்மை கொண்டது - இந்த நிலை தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களிலும் நினைத்தே பார்க்க முடியாது.
ஆனால், அண்மைக் காலங்களில் சினிமாக்களில் புரோகித கல்யாணங்களுக்கு இடம் அளித்து வருவது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கதும்கூட! சினிமாத் துறை பார்ப்பனீயத்துக்குக் குற்றேவல் செய்கிறதா?
திராவிட இயக்கப் பின்னணியில் நடத்தப்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சியில் கோவில் திருமணம்பற்றி சிலாகித்து, ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு அளிக்கப்பட்டது - வெட்கப்படத்தக்கது, கண்டிக்கத்தக்கதுமாகும்.
-விடுதலை வலைப் பூ
1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு



1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு
Logo
சென்னை, நவ.12-

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் ஒரு கொள்கையாக சுயமரியாதை திருமணம் உள்ளது. அந்த வழியில் வந்த அண்ணா, 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். இதற்காக இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து திருமண சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை. மாறாக, நண்பர், உறவினர் முன்னிலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொண்டாலே அது திருமணமாக கருதப்படும் என்று சுயமரியாதை திருமணச் சட்டம் கூறியுள்ளது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.அசுவத்தாமன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்து மதம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதன்படி, வெவ்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றபடி திருமண சடங்குகளை வைத்துக்கொண்டு திருமணங்களை நடத்துகின்றனர்.

அந்த வகையில் இந்துக்களிடையே மேலும் ஒரு திருமண முறையாக சுயமரியாதை திருமணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை நோக்கம் இருக்க கூடாது. அந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணம் என்பது புரோகிதர் முன்னிலையில் நடந்தால்தான் அது செல்லும் என்ற நிலையை மாற்றுவதுதான். அவர்கள் இல்லாமலேயே, மற்றவர்கள் முன்னிலையில் நடப்பதும் செல்லக்கூடிய திருமணம்தான் என்பதுதான் அந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

உறவினர், நண்பர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது அல்லது தாலி கட்டிக் கொள்வது ஆகிய நிகழ்வோடு திருமணம் முழுமையாக நடந்துவிடுகிறது. இது சட்டப்படி செல்லக்கூடிய திருமணமாகும்.

சுயமரியாதை திருமணங்கள் செல்லக்கூடியவை அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.
    

திங்கள், 9 நவம்பர், 2015

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு






ஆந்திராவைச் சேர்ந்தவர் கந்தூரி கோடிஸ்வரம்மா இவர் தனது குடும்ப சொத்தில் சம உரிமை ஆண் வாரிசுகளுக்கு இணையாக பங்கு கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் லோதா, ஜெகதீஸ் சிங்கேகர் ஆகியோர் தீர்ப்பில் 2005ஆம் ஆண்டில் இந்து வாரிசு சட்டத் திருத்தத்தின் 6ஆவது பிரிவின்படி குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. இந்தப் புதிய சட்டம் பெண் வாரிசுதாரர்களுக்கு உண்மையான நிரந்தரமான உரிமையைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்கு முன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால் சொத்தில் பெண்கள் சம உரிமை கேட்க முடியாது எனக் கூறினர்.
25.3.1989 அன்று திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்தார். இது தமிழ்நாட்டில் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் உரிமையாகும்.
அ. இனியன் பத்மநாதன், ஈரோடு

முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்

2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.
எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.
- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர்  பக்கம், 59
-விடுதலை,14.12.13

வெள்ளி, 6 நவம்பர், 2015

விவாகரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு ஜீவனாம்சம்

விவாகரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு ஜீவனாம்சம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


விவாகாரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு கண்டிப்பாக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு 1991ல் திருமணம் நடைபெற்றது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மனைவியிடம் விவாகரத்து கேட்டு மதியழகன் மதுரை குடும்பநல கோர்ட்டில் 2007ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு சந்திரிகா தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மதியழகனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் சந்திரிகாவுக்கு மாதம் 750 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும் 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
பின்னர், சந்திரிகாவின் கோரிக்கையை ஏற்று ஜீவனாம்சத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதியழகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். அதில், சந்திரிகா என்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் விவாகரத்து வழங்கப்பட்டது.
என்னுடன் சேர்ந்து வாழாதவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி எஸ். நாகமுத்து விசாரித்தார். முடிவில், நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாதவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே சட்டத்தில் விவாகரத்து பெற்று மறுமணம் செய்யாமல் தனியாக வாழும் மனைவிக்கு, கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்திரிகா, மனுதாரரிடம் இருந்து விவகாரத்து பெற்ற பின்பு மறுமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார்.
இதனால், அவருக்கு மனுதாரர் கண்டிப்பாக ஜீவனாம்சம் தர வேண்டும். மனுதாரர் ஜோதிடராக இருப்பதாகவும், அவரது மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்றும் கணக்கீட்டு 2 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க கீழ்கோர்ட்டு உத்தர விட்டது சரியல்ல. மனுதாரர் மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,24.10.15

வியாழன், 29 அக்டோபர், 2015

சர்க்கரை நோய் காரணமாக வேலை வழங்க மறுக்கக் கூடாது


தெற்கு ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக்.28_  சர்க்கரை நோயை காரணம் காட்டி, வேலை வழங்க மறுத்த, தெற்கு ரயில்வேக்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை வேலை வழங்க பரிசீலிக்கும்படியும், ரயில் வே நிர்வாகத்துக்கு உத்தர விடப்பட்டுள்ளது.பு துக்கோட்டை மாவட்டத் தைச் சேர்ந்தவர், பாக்கிய ராஜ்; இவரது தந்தை, மணி என்பவர், ரயில்வேயில் பணியாற்றி வந்தார்; 2010 ஜனவரியில் இறந்தார். கருணை வேலை கேட்டு, பாக்கியராஜ் விண் ணப்பித்தார்.
'சர்க்கரை நோய் இருப்பதால், வேலைக்கு தகுதியில்லை' என, காரணம் கூறப் பட்டது.மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், பாக்கியராஜ், வழக்கு தொடுத்தார். கருணை வேலை வழங்க பரி சீலிக்கும்படி, தெற்கு ரயில் வேக்கு, தீர்ப்பாயம் உத்தர விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தெற்கு ரயில்வே சார்பில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் மணிகுமார், சொக்கலிங்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், 'சர்க்கரை நோய் காரணமாக, வேலை வழங்க மறுக்க கூடாது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக, வேலை வாய்ப்பு வழங்கும் படி, பாக்கியராஜ் கேட்டு வருகிறார். அதற்கு, 'சர்க் கரை நோய்' என, ஒரே காரணத்தை கூறி, நிரா கரித்து வருகின்றனர். சர்க்கரை நோய் உள்ளது என்பதற்காக, வேலை வழங்குவதை மறுக்கக் கூடாது. வேலை கேட்ட மனுதாரரை, அலைக் கழித்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்த ரவை, சரியான முறையில், ரயில்வே அதிகாரிகள் பரிசீ லிக்கவில்லை. அதனால், சட்ட ரீதியான தீர்வு காண, தீர்ப்பாயம், நீதிமன்றத்தை அணுகும்படி, தேவையில் லாமல் பாக்கியராஜ் தள்ளப்பட்டுள்ளார். எனவே, ரயில்வேயின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ரயில்வேக்கு, 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. 15 நாட்களுக்குள், பாக்கியராஜ்க்கு தகுந்த பணி வழங்க, ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து, நவ., 16இல் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தர விட்டுள்ளது
-விடுதலை,28.10.15

சனி, 17 அக்டோபர், 2015

முதல் மனைவிக்கு மட்டுமே முழு உரிமை குடும்ப ஓய்வூதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, மே 7- குடும்ப ஓய்வூதியம் பெற முதல் மனைவிக்கே முழு உரிமை உள்ளது என்று கூறி 3 ஆவது மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மண்டல வானிலை ஆராய்ச்சி மய்யத்தில் தொழில் முறை உதவியாளராக பணியாற்றிவர் எம். ஹேமாத்திரி. இவருக்கு திருமணமாகி நதாகுமாரி என்ற மனைவியும், 2 மகன் கள், ஒரு மகளும் உள்ளனர். இதற்கி டையில் மேலும் 2 பெண்களை ஹேமாத்திரி திருமணம் செய்துள் ளார்.
1992 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஹேமாத்திரி, 1996 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இதையடுத்து, அவரது மூன்றாவது மனைவி எம். சூரியகுமாரி, குடும்ப ஓய்வூதியத்தில் 50 சதவீதம் தனக்கு வழங்கவேண்டும் என்று சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், சூரிய குமாரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மா ராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆராய்ச்சி மய் யத்தில் 1956 ஆம் ஆண்டு ஹேமாத்திரி பணியில் சேர்ந்தார். அவர், ஓய்வு பெறுவதற்கு முன்பு, குடும்ப ஓய்வூ தியம் படிவத்தில் மனைவி என்று நதாகுமாரி பெயரைத்தான் குறிப்பிட் டுள்ளார். சூரியகுமாரி பெயரை எங்கும் குறிப்பிடவில்லை.
எனவே முழு குடும்ப ஓய்வூதியத் தையும் நதாகுமாரிக்கு வழங்கப்படு கிறது. மேலும், ஹேமாத்திரி தன் மீது ஒழுங்கு நடவடிக்கை அரசு எடுத்து விடக்கூடாது என்பதற்காக சூரிய குமாரியை 3 ஆவது திருமணம் செய் துள்ளதை ரகசியமாக வைத்துள்ளார். எனவே சூரியகுமாரிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று வாதம் செய்தார்.
இந்து திருமணம் சட்டத்தின்படி, இரண்டாவது திருமணம் செல்லாது என்பது எங்களது கருத்தாகும். மேலும் இந்து வாரிசு சட்டத்தின்படி, எம்.ஹேமாத்திரியின் முதல் மனைவி நாதகுமாரியும், அவரது பிள்ளை களும்தான், அனைத்து உரிமைகளை யும் கொண்ட முதல் வாரிசுகள் ஆவார்கள். எனவே மனுதாரர் சூரிய குமாரி, ஹேமாத்திரியின் மனைவியாக ஏற்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
- இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்
.விடுதலை,7.5.13