புதன், 22 மார்ச், 2023

தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு

 

 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,டிச.16-  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏமாநில இயக்குநர் ஆர்.சுதன்அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2017 மகப்பேறு நலச்சட்ட திருத்தத்தின் அடிப் படையில் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்காக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகளின் பிரசவத்துக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும்அதில்பிரசவ தேதிக்கு முன் 6 வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்கருச்சிதைவு ஏற்பட்டால் 6 வாரங்கள் வரை விடுப்பு அளிக்கலாம்எதிர்பாரா சேவை அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க குறைந்தபட்சம் ஓராண்டு கால பணிக்காலத்தை (விடுமுறை நாட்கள் உட்படமுடித்திருக்க வேண்டும்பெண் ஊழியர்சட்டப்பூர்வமாக 3 மாதத்துக்குள்ளான குழந்தையை தத்தெடுப்பதாக இருந்தால்அந்தக் குழந்தை தத்து கொடுக்கப்படும் நாளில் இருந்து 12 வாரம் மகப்பேறு விடுப்பு பெற தகுதியுடையவர் ஆவார்ஒருவேளை வீட்டில் இருந்து பணிபுரியக் கூடிய பெண்ஊழியராக இருந்தால் முதலில் அவருக்கு உரிய மகப்பேறு விடுப்புவழங்கிவிட்டுவிடுமுறைக்காலம் முடிந்ததும் அவரை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தலாம்மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக