புதன், 22 மார்ச், 2023

அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு தவறாம்!

 


 

சென்னை,செப்.9- தமிழ்நாட்டில் அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு பிரத்யேகமாக 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2016ஆம் ஆண்டு சட்டம் இயற்றியது. அதன்படி, 30 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். எஞ்சிய 70 விழுக்காடு இடங்களிலும் தகுதியான பெண்களை தேர்வு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம்: 

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப் படையிலேயே பெண்களுக்கு இடஒதுக் கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்க அரச மைப்பு சட்டமும் வழிவகை செய்துள் ளது. எனவே, தமிழ்நாடு அரசு பணி யாளர் (பணி நிபந்தனை) சட்டத்தின்படி 30 விழுக்காடு இடங்களை பெண் களுக்கு ஒதுக்குவதில் எந்த தவறும் இல்லை. அது சட்டவிரோதமும் இல்லை.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சிங்கார வேலன், நளினி சிதம்பரம், வழக்குரைஞர் தாட்சாயினி ரெட்டி:

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதனுடன் இந்த 30 விழுக்காடும் சேர்ந்தால், மொத்த இடஒதுக்கீடு 99 விழுக்காடு ஆகிவிடும். ‘இடஒதுக்கீடு என்பது 50 விழுக்காட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரிதாக கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என்று உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த தீர்ப்புதான் தற்போதுவரை அமலில் உள்ளது.

அதன் அடிப்படையில், தமிழ்நாட் டில் நடைமுறையில் உள்ள சமூக ரீதி இடஒதுக்கீடான 69 விழுக்காடுத்தி லேயே, பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் வழங்க முடியும். ஆனால், இந்த இடஒதுக்கீட்டை தனி யாக வழங்க முடியாது. வேலைவாய்ப் பில், பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண் களுக்கு மெரிட் அடிப்படையில் 2 இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்றால், 30 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப் படையிலும் பெண்களுக்கு 2 இடங்கள் ஒதுக்கினால் மொத்தம் அவர்களுக்கு 4 இடங்கள் ஆகிவிடும். இது சட்ட விரோதம் என்பதால், 30 விழுக்காடு ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாதங்களை கேட்ட பிறகு நீதி பதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு: ‘சமூக ரீதியான இடஒதுக்கீட்டுக்குள்தான் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதை தாண்டி இடஒதுக்கீடு வழங்க கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இதற்கு எதிராக தமிழ்நாடு அரசும், டிஎன்பிஎஸ்சியும் பெண் களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது கெட்ட வாய்ப்பானது தவறானது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முதலில் இந்த 30 விழுக்காடு இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்துவிட்டு, அதன் பிறகுசமூக ரீதியிலான இடஒதுக்கீட்டுக்குள் சென்றுள்ளது. இதனால்,அரசுத் துறை களில் ஏராளமான பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதே நேரம், தகுதியானவர்களுக்கான வேலை வாய்ப்பை ஒருபோதும் மறுக்க கூடாது.

முதலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நீங்கலாக உள்ள 31 விழுக்காடுபொது பிரிவில் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த 69 விழுக்காட்டுக்குள்தான் பெண் களுக்கான 30 விழுக்காடு இடஒதுக்கீடும் இருக்க வேண்டுமே தவிர, தனியாக கொடுக்க கூடாது.

30 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் இதுவரை பணியில் சேர்ந்த பெண்களின் பணி நியமனத்தை ரத்துசெய்ய விரும் பவில்லை. 

இனிமேல்,இடஒதுக்கீடு தொடர் பாக உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கேற்ப, திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு, வழக்கு களை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக