திங்கள், 9 ஜனவரி, 2017

ஜாதி மதத்தின் பெயரில் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பது

இந்து ராஜ்ஜியம் அமைப்போம் எனும் பி.ஜே.பி.,க்கு நெருக்கடி

ஜாதி மதத்தின் பெயரில் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பது

சட்ட விரோதமானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜன.3 தேர்தலில் மதத்தை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இது பி.ஜே.பி.,க்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

தேர்தல்களில் ஜாதி, மதம், இனம், சமூகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளைக் கோருவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஊழல் நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சாந்தாகுருஸ் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் கடந்த 1990-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அபிராம்சிங். அவர் மதத்தின் பெயரால், வாக்குச் சேகரித்ததாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என்றும் அந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அபிராம் சிங் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவு தொடர்பாக அபிராம்சிங் மனுவில் கேள்வி எழுப் பப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.

இதேபோன்று, மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்த தாக பாஜக நிர்வாகி சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக நாராயண் சிங் என்பவர் தொடுத்திருந்த மனுவும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த 5 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், அபிராம் சிங்கின் மனுவும் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்ற பிற மனுக்களோடு சேர்த்து, அபிராம் சிங்கின் மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் அனைத்து மனுக்களையும், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன் றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மதம், இனம், ஜாதி, சமூகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளை கேட்பது அல்லது அதன் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுப்பது, ஊழல் நடவடிக்கை என்று மக்கள் பிரதிநிதித்துவ சட் டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஷரத்து மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், எம்.பி. லோக்குர், எஸ்.ஏ. பாப்தே, எல்.என். ராவ், யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகிய 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை திங்கள்கிழமை அளித்தது. அந்த 7 நீதிபதிகளில் டி.எஸ். தாக்குர், எம்.பி. லோக்குர், எஸ்.ஏ. பாப்தே, எல்.என். ராவ் ஆகிய 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், நீதிபதிகள் யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் மற்றோர் கருத்தையும் வெளியிட்டனர்.

அதாவதுடி.எஸ்.தாக்குர்உள்ளிட்ட4நீதிபதி கள் கூறியபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின் 123(3) ஆவது பிரிவில் “அவரது மதம்‘ என்ற தெரிவிக்கப்பட்டிருப்பது, வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தனர். அதாவது, ஹிந்துத்துவா தொடர்பாக கடந்த 1995-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவில் “அவரது’ என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, வேட் பாளரின் ஜாதி, மதம், மொழி, இனத்தையே குறிக் கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற் போது, வேட்பாளர்கள் மட்டுமல்ல, முகவர்கள், வாக்காளர்களுக்கும் இவை பொருந்தும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:

தேர்தல் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கை, அதில் மதம், ஜாதி, இனம், சமூகம், மொழி அடிப்படையில் வாக்குகளைக் கோர முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவில், அது ஊழல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் இறைவனுக்கு இடையேயான உறவு என்பது, தனி நபர்களின் விருப்பு வெறுப்பு தொடர்புடையது. மதத்தை நாட்டோடு தொடர்புபடுத்தக் கூடாது. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை.

யார்வேண்டுமானாலும்எந்தமதத்தையும் பின் பற்றவும், அதுதொடர்பான பிரச்சாரத்தில் ஈடு படவும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் அதைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

3 நீதிபதிகள் கருத்து

யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகளும், 123(3) ஆவது பிரிவில் “அவரது மதம்‘ என்று குறிப்பிடப்பட்டிருப்பது வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, 7 நீதிபதிகள்  கொண்ட அமர்வில் 4 நீதிபதிகளின் கருத்து பெரும்பான்மையானதாக இருந்ததால், அது தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

உத்தரப்பிரதேசம்,பஞ்சாப்உள்ளிட்ட5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற வுள்ளது. இதில் உத்தரப் பிரதேச தேர்தலின்போது ராமர்கோயில் விவகாரம் உள்ளிட்டவை எழுப்பப் படுவது வழக்கம். இதேபோன்று பஞ்சாப் தேர்தலிலும் மதம் தொடர்பான விவகாரங்கள் பிரச்சாரத்தில் முன் வைக்கப்படும்.

இந்நிலையில், மதம், ஜாதி, இனம், மொழி ஆகிய வற்றை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தத் தீர்ப்பையடுத்து அரசியல் கட்சியாக உரு வெடுத்துள்ள இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு காவிக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.a
-விடுதலை,3.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக