புதன், 11 ஜனவரி, 2017

மணமான மகள்- அவள் பெற்றோர் குடும்பத்தின் அங்கத்தினரே ஆவார் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு




மும்பை, ஆக.21_ மும்பை உயர்நீதிமன்றத்தில் ரஞ்சனா அனிராவ் என்பவரின் வழக்கில் நீதிபதிகள் அபய் ஒகா, ஏ.எஸ்.சந்துர்கர் தீர்ப்பில் கூறும்போது, திருமண மானாலும் பெண்களை பெற்றோர் வீட்டின் அங் கத்தினர்களாகவே பார்க்க வேண்டும் என்று  கூறி யுள்ளனர்.

பெற்றோரின் குடும் பத்தின் அங்கத்தினர் களாக திருமணமான மகள்கள் இருக்கக்கூடாது என்று பாலியல்ரீதியில் பாகுபாடுடன் பார்ப்பது அரசமைப்புக்கும், அரச மைப்பு வரையறுத்துக் கொடுத்துள்ள அடிப் படை உரிமைகளுக்கும் எதிரானது என்று நீதி பதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ரஞ்சனா அனிராவ் என்பவர் தம்முடைய தாயார் பெயரில் இயங்கி வந்த மண்எண்ணெய் சில்லறை விற்பனை உரிமையை, அவர் மறைந்த காரணத்தால், தம்முடைய பெயரில் மாற்றித் தருமாறு மாநில அரசிடம் கோரி உள்ளார். ரஞ்சனா அனிராவுக்கு திருமணமாகிவிட்டதால், அவர் தாயார் பெயரில் வழங்கப்பட்டிருந்த மண் எண்ணெய் சில்லறை விற்பனை உரிமையை அவர் பெயரில் மாற்றித் தர முடியாது என்று மறுத்துவிட்டது.

2007 ஆம் ஆண்டு

மகாராட்டிர மாநிலத் தின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கும் துறை அமைச்சர் கூறும் போது, திருமணமான பெண் அவர் தாயாரின் குடும்பத்தில் ஓர் அங்கத் தினராக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ரஞ்சனா அனிராவ் மாநில அரசை எதிர்த்து கடந்த 2007ஆம் ஆண் டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ரஞ் சனா அனிராவ் முறையீட் டின்பேரில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதிகள் அபய் ஒகா, ஏ.எஸ்.சந்துர்கர் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறும்போது, மகாராட்டிர மாநில அரசின்சார்பில் 2004ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி திருமணமான  காரணத் தால் ஒரு பெண்ணை அவர் பெற்றோர் குடும் பத்தின் அங்கத்தினராக எடுத்துக்கொள்ள முடி யாது என்று கூறுவது, பாலியல் ரீதியில் பாகு பாடுடன் பார்ப்பதாகவும், அரசமைப்பை மீறுவதாக வும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாநில அரசு விதியின் படி, குடும்பம் என்பது கணவன், மனைவி, வயது வந்த மகன், வயது வந்த திருமணம் ஆகாத மகள், மருமகள், சார்புநிலையில் பெற்றோர், சட்ட வாரிசு மற்றும் தத்தெடுக்கப் பட்ட மகன் ஆகியோ ரைக் குறிப்பிடுவதாகும்.

மாநில அரசின் வழக் குரைஞர்கள் அந்த சட்டத்தின்படியே செயல்படுகிறார்கள். அவர் கள் தரப்பில் கூறும்போது, மகள் திருமணமாகி விட்டால், அந்த குடும் பத்தைவிட்டே வெளி யேறிவிடுகிறாள். ஆகவே, அவள் பெற்றோரின் குடும்பத்துக்குள் கொண்டு வரப்பட மாட்டாள் என்று கூறுகிறார்கள்.

உயர்நீதிமன்றம் மாநில அரசின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிக் கூறும் போது,

வயதுவந்த பெண் திருமணத்துக்குமுன்பாக குடும்பத்தின் உறுப்பின ராக இருப்பதற்கு தகுதி உள்ளவராக இருக்கிறார். அவள் பெற்றோரின் அனுமதியுடன் சில்லறை விற்பனை உரிமையையும் பெற முடிகிறது. அதே போல், மணவிலக்கு பெற்ற பெண்ணுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், மணமான பெண் வயது முதிர்ந்த பெற் றோரைப் பேணுபவளாக இருந்தாலும்கூட, அவர்கள் மறைவுக்குப் பிறகு சில்லறை விற்பனை உரிமையை வழங்க முடி யாது என்று கூறுகிறது.

அப்படி திருமணமான பெண்ணை நீக்குவது என்பது எந்த அடிப் படையிலும் நியாயமில் லாததாக, பிறவகையிலும் விவாதிக்க முடியததாகவே உள்ளது. திருமணமான மகள் சில்லறை விற்பனை உரிமையில் சட்டரீதியி லான பிரதிநிதியாக இருப் பதைத் தடுப்பது, மறைந்த சில்லறை விற்பனை உரிமையாளரின் பெயரில் உள்ள  உரிமையை அவர் பெயருக்கு மாற்றித்தரக் கோருவதைப் பாதிக்கச் செய்துவிடும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப் பில் குறிப்பிட்டனர்.

பாகுபாடுடன் கூடிய விதிகளைத் தகர்க்கும் விதமாகத் தீர்ப்பு அளித் துள்ள மும்பை உயர்நீதி மன்றம் மாநில அரசை ரஞ்சனா அனிராவ் விண் ணப்பித்தவாறு, அவர் பெயருக்கு மண்எண் ணெய் சில்லறை விற் பனை உரிமையை மாற்றித் தருமாறு கூறியுள்ளது. அரசுப் பணிகளிலிருக்கும் போது மறைந்தவர்களின் வாரிசுகளுக்கு   கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு வழங்கப் படுவதுபோன்று இதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், இதுபோன்று பாகுபாடுகளுடன் உள்ள திருமணமான பெண்கள், அவர்கள் பெறக்கூடிய உரிமைகள், நன்மைகள் என்று அவள் பெற்றோர் வீட்டினரிடமிருந்து பயன்களைப் பெற்றுத் தரக் கூடியவகையில் பிற வழக்குகளிலும் அதன் தாக்கம் இருக்கும்.
-விடுதலை,21.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக