செவ்வாய், 24 ஜூலை, 2018

ஆக்கிரமிப்புக் கோவில்களை அகற்றுக!

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு




சென்னை, ஜூலை 23 ஆக்கிரமிப்புகள் கோவில்களாகஇருந்தாலும்அகற்றப் பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னைமாநகராட்சியில் சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழகஅரசு2வாரத்தில்தகுந்தநட வடிக்கைஎடுக்கவேண்டும்என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னைநுங்கம்பாக்கத்தில்மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக் கிரமித்து, ஆலய வழிபாடு நடத்தப் படுவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ் ணன் ராமசாமி அமர்வில் இந்த வழக்கு கடந்த 17.7.2018 அன்று  விசாரணைக்கு வந்தது.

மாநகராட்சி ஆணையர் கார்த்திகே யன், சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் ஆஜராகி, விதிமீறல் கட்டடங்களை இடிக்க எடுக் கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

பிறகு நீதிபதிகள் கூறியதாவது:

விதிமீறல் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், அதிகாரிகள் அதை செயல்படுத்துவது இல்லை. எனவே, இதுவரை அமல்படுத்தப்பட்ட, அமல் படுத்தப்படாத உத்தரவுகள் எத்தனை என்று 2 அதிகாரிகளும் அடுத்த விசார ணையின்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கான சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து மாநகராட்சிஆணையர்அறிக்கைதாக் கல் செய்துள்ளார். அதைப் பரிசீலித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் 2 வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

கடந்த 1998ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை, சென்னையின் விரி வாக்கத்துக்கு ஏற்ப சொத்து வரி மாற்றி அமைக்கப்படவில்லை. அடுக்குமாடிகள் பெருகிவிட்ட சென்னையில் அதற்கேற்ப கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் இல்லை.ஒவ்வொருஅடுக்குமாடிகுடி யிருப்பிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட் டிகள் அமைக்க தனியாக கட்டணம் வசூலிக்க மாநகராட்சி, சிஎம்டிஏ, கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் குறித்து தனியாக வலைதளம் ஏற்படுத்தி ஆன்லைன் மூலமாக தெரியப்படுத்த வேண்டும். விதிமீறல் கட்டடங்களை ஆரம்பத்திலேயே தடுக்க ஏன் தனியாக சிறப்பு படைகளை உருவாக்கக்கூடாது? இதுதொடர்பாக 2 அதிகாரிகளும் பதில் அளிக்கவேண்டும்.

விதிமீறல் கட்டடங்களுக்கு எவ்வாறு மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் அடுத்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகி தெரிவிக்கவேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைக்கு எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.

கோவில்களை அகற்றுக!


வழிபாடு நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், நுங்கம்பாக்கத் தில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு இடையூறாக வழிபாடு நடத்துவதை ஏற்க முடியாது. அந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறையினரின் துணையுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 3 ஆ-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

- விடுதலை நாளேடு, 23.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக