புதன், 11 மே, 2016

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (1948 டிசம்பர் 10)


- இர.செங்கல்வராயன்

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை 6 ஆண்டுகள் நடை பெற்றன. இந்தப்போர் ஜெர்மனியின் இட்லராலும், இத்தாலியின் முசோலினி யாலும் தொடங்கப்பட்டது. இவ்விரு கொடுங்கோலர்களும் நேச நாடுகளான அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டு  நடவடிக்கையால் தோற்கடிக்கப்பட்டு 1945 ஜூலையில் போர் முடிந்து அனுமதி திரும்பியது. இந்தப்போரில் உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு போர்க் களங்களில் 5 கோடி மக்கள் மாண்டனர்!
போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நேச நாடுகள் ஒன்றுகூடி எதிர்காலத்தில் இதைப்போன்ற போர் நிகழாமல் தடுக்க அய்க்கிய நாடுகள் சபையை நிறுவின.  உலக நாடுகளிடையே ஒற்றுமையையும், நட் பையும் வளர்ப்பதும், மனித உரிமை களைப் பாதுகாத்தல் ஆகியவற்றைத் தனது முக்கிய இலட்சியமாகக் கொண்டு அய்.நா.சபை. செயல்பட்டு வருகின்றது.
1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அய்.நா.வின் பொதுச்சபை அனைத் துலக மனித உரிமைகள் பற்றிய விதிகளை வெளியிட்டது. இப்பிரகடனம் மனித குலத்தின் வாழ்வியல், அரசியல், பொரு ளாதார உரிமைகளைத் தன்னுள் கொண்டு விளங்குகிறது. இப்பிரகடனம் அய்க்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து நாடுகளா லும் எவ்வகைக் கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பிரகடனம் 30 விதிகளைக் கொண்டது. முதல் 21 விதிகள் வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பற்றியும், 6 விதிகள் பொரு ளாதார மற்றும் சமூக உரிமைகளையும் 3 விதிகள் பொதுவான கருத்துக்களைப் பற்றியும் கூறுகின்றன. இப்பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டில் 58 நாடுகள் இவ்வமைப்பில் அடங்கி இருந்தன.
1968 இல் அய்.நா.வின் பொதுச் செய லாளர் யு.தாண்ட், 43 நாடுகளின் அரசி யல் சட்ட அமைப்புகள் பிரகடனத்தின் முக்கிய இலட்சியங்களை உள்ளடக்கி உள்ளன என்ற கருத்தை வெளியிட்டார். இந்திய அரசியல் சட்டம் தனது குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளது.
பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள 1) வாழ்வியல் உரிமைகள் 2) அரசியல் உரிமைகள் 3) பொருளாதார உரிமைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் வரும் உரிமைகளைப்பற்றி மட்டும் சுருக்கமாக விளக்கி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
வாழ்வியல் உரிமைகள்
1) வாழும் உரிமை: மனிதன் உயிர் வாழும் உரிமை என்பது மகத்தானது. வாழும் உரிமை என்பது மற்ற உரிமை களுக்கெல்லாம் அடிப்படையானதாகும். மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நெறிமுறைகளின் படி வாழ்தலே வாழும் உரிமை ஆகும்.
2) வேலை செய்யும் உரிமை: ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் திறமைக்கேற்ப வேலையைத் தேடிக்கொள்ளும் உரிமை உண்டு.
3) சொத்துரிமை: சொத்துரிமை மற்றைய உரிமைகளுக்கெல்லாம் ஊற் றாகும்; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பது வள்ளுவரின் பொய்யாமொழி.
4) கல்வி கற்கும் உரிமை, மனிதன் தன் உரிமைகளை அனுபவிக்க கல்வி அடிப்படை.த் தேவையாகிறது. எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்பது வள்ளுவரின் பொன்மொழி.
5) பேச்சுரிமை: மனிதன் உயிர்வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே மக்களாட்சி வலிவுடன் செயல் பட பேச்சுரிமை இன்றியமையாததாகும்.
6) பத்திரிக்கைச் சுதந்திரம்: பத்திரி கைகள் மக்களாட்சியின் நான்காவது தூண் என்று போற்றப்படுகிறது. குடி மக்களின் கருத்தை உருவாக்குவதற்கும், அரசின் குறைபாடுகளை எடுத்துக்கூறி அவற்றைக் களைவதற்கும் பத்திரிகைகள் சிறந்த தொண்டு புரிகின்றன.
7) சமய (மத) உரிமை: ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாறிக்கொள்ளவும் உரிமை உண்டு. அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலுள்ள சாதிக்கொடுமைகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகள் இவற்றை வெறுத்து 14.10.1956 இல் நாகபுரியில் 4 இலட்சம் தொண்டர்களுடன் புத்த நெறியில் இணைந்தார். எம்மதத்திலும் சேராமல் ஒரு மனிதன் பகுத்தறிவு வாதியாக செயல்படவும் உரிமை உண்டு.
8) சங்கங்கள் அமைக்க உரிமை: கருத்துரிமை பெற்ற மனிதன் அதைச் செயல்படுத்த ஒத்த கருத்துடைய பலருடன் கூடி அளவளாவும் முறை தோன்றியது. தொழிலாளர் நலச்சங்கம், மனித உரிமைகள் மன்றம், ரோட்டரி சங்கம், தமிழ் வளர்ச்சி மன்றம் ஆகியவை இவ்வுரிமையில் அடங்கும்.
9) கூட்டம் கூடும் உரிமை: மக்களாட் சியில் அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற அவ்வப்போது பொதுக் கூட்டங்கள் நடத்தித் தங்கள் கொள் கைகளை பொதுமக்களின் முன்னால் எடுத்து வைக்கும் உரிமை உண்டு. இதைப் போலவே தொழிலாளர் சங்கங்கள், சமூகத்தொண்டு மன்றங்கள் போன்றவை கூட்டங்கள் நடத்த உரிமை பெற் றுள்ளன.
10) இல்லற வாழ்வில் ஈடுபடும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடு வதற்கும், குழந்தைச் செல்வங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் குடும்பத்தை பரா மரிப்பதற்கும் உரிமை பெற்றவனாவான்.
அரசியல் உரிமைகள்:
மக்களாட்சியில் அரசியல் உரிமைகள் என்பவை குடிமக்களுக்கு மிகவும் இன்றியமையாதவை. இந்திய அரசியல் சட்டத்தில் சில அரசியல் உரிமைகளை அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. அரசியல் உரிமைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
1) தேர்தலில் வாக்களிக்கும் உரிமை: மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் ஆட்சியாகும். ஆண், பெண் இரு பாலரும் 18 வயது அடைந்திருப்பின் அவர்கள் வாக்குரிமை பெற்றவராவர். இந்திய அரசு தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல்களை சுதந்திரமாக நடத்தி வருகிறது
2) தேர்தலில் போட்டியிடும் உரிமை: இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்டவர் களே தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றவர்கள், அரசு ஊதியம் பெறு பவர்கள், குற்றவாளிகள் என்று நீதிமன்றத் தால் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் தேர் தலில் போட்டியிடத் தகுதி அற்றவர்கள்.
3) அரசு அலுவலகங்களில் பணி செய்யும் உரிமை: தகுதி உள்ள ஒவ்வொரு குடிமகனும் அரசு அலுவலகத்தில் பணி புரியும் உரிமை பெற்றவன் ஆகிறான்.
4) அரசை விமர்சிக்கும் உரிமை: அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், மக்கள் நலனைப் புறக்கணிக்கும் போதும், லஞ்ச ஊழலில் ஈடுபடும் போதும் அரசைக் கண்டனம் செய்ய ஒவ் வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
5) புகார் மனு தாக்கல் செய்யும் உரிமை: குடிமகனுடைய உரிமைகள் பறிக்கப்படும் போது அவன் நீதி மன்றத்தை அணுகித் தன் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளலாம்.
பொருளாதார உரிமைகள்:
இன்றைய மக்களாட்சிகள் அனைத் தும் குடிமக்களின் பொருளாதார உரிமைகளும், வாழ்வியல் உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. பொருளாதார உரிமைகள் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.
1) வேலை செய்யும் உரிமை: இவ்வுரிமை அனைத்துப் பொருளாதார உரிமைகளுக்கும் அடிப்படை ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 41 வேலை செய்யும் உரிமையை வலியுறுத் துகிறது.
2) தகுந்த ஊதியம் பெறும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் உரிமை பெற்றுள்ளான். அனைவருக்கும் சமவேலை, சம ஊதியம் என்பது பொது நியதியாக அமைய வேண் டும்.
3) குறிப்பிட்ட நேரம் வேலை செய்யும் உரிமை: ஒவ்வொரு மனிதனும் குறிப் பிட்ட கால அளவே வேலை செய்ய முடியும். மனிதன் வேலை செய்யும் இடங்களில் அவன் வேலை செய்ய வேண்டிய நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
4) தொழிற் சாலைகளில் தன்னாட்சி செய்யும் உரிமை: உலகில் தொழிற் புரட்சிக்குப்பின் இவ்வுரிமை செயல்படத் தொடங்கியுள்ளது. தொழிற்சாலை நிருவாகத்தில் பங்கு பெறும் உரிமையும், லாபத்தில் பங்குபெறும் உரிமையும் ஒவ்வொருவரும் பெற்றுள்ளார்கள்.
5) பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள்: 1948 ஆம் ஆண்டு அனைத்துலக ஒப்பந்தம் பெண்கள் அதிக நேரம் இரவில் வேலை செய்வதைத் தடை செய்துள்ளது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
குழந்தைகளை கட்டாய வேலைக்கு உட்படுத்தக்கூடாது. அய்.நா.சபை வலியுறுத்தியுள்ள குழந்தைகளின் உரிமைகளை இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் மறைவு எய்திய குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டின் துணைவியார் ரூஸ்வெல்ட் இப்பிர கடனம் மனித இனத்தின் மகா சாசனம் என்றும் முதன் முதலாக அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான விதிகள் அடங்கிய பிரகட னம் இதுவே என்றும் புகழ்ந்துள்ளார்.
-விடுதலை,31.1.15,ப5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக