வியாழன், 22 ஜூலை, 2021

மருத்துவ படிப்புகளில் அ.இ.ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்

 

 சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னைஜூலை 19 மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 69 சதவீதத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுகஉள்ளிட்ட கட்சி களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த  வேண் டும் என 2020 ஜூலையில் உத்தரவிட்டதுஅதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுதமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என பரிந்துரை அளித்தும்உச்சநீதிமன் றத்தில்  நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டிசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போதுதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன்உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும்உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத் தரவு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்தும்அதை அமல்படுத்த வில்லை எனவும்இது  நீதிமன்ற  அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார்.

ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் மற்றும் ஒன்றிய அரசு வழக் குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர்மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டுதற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும்இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்

மேலும்எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும்இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஒன்றிய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டதுஇதையடுத்துஉயர்நீதிமன்ற உத்தர வின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள்தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் எப்படி அமல் படுத்தப்படும்இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுவிசார ணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக