திங்கள், 16 ஏப்ரல், 2018

பார்ப்பான் கற்பழிக்க மாட்டான்?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் இலட்சணம்

இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தினை செயலற்றதாக்கியவர்கள் பார்ப்பன, உயர் ஜாதியினர், படித்த கூட்டமும்கூட!

சில எடுத்துக்காட்டுகள்:

1. வடநாட்டில் (உ.பி.யில்) முன்பு பிளாக் டெவலப்மண்ட்   (BDO) ) அலுவலகத்தில் கீழ்நிலை வேலை பார்த்த ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்தனர் - அங்குள்ள அலுவலக உயர்ஜாதி அதிகாரிகள். இதன்மீதான வழக்கு வராமல் தடுத்து விட்ட நிலையில், மகளிர் அமைப்பினர் போராட்டத்திற்குப் பிறகு வழக்கு முதற் கட்டத்தில் குற்றமிழைத்தோருக்குத் தண்டனை கிடைத்தது; மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் அத்தண்டனைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆயினர். காரணம் அத்தீர்ப்பில் கூறப் பட்டது என்ன தெரியுமா?

"இவர்கள் உயர்ஜாதியினர், பாதிக்கப் பட்ட பெண் தாழ்த்தப்பட்டவர், அவருடன் வன்புணர்ச்சி செய்திருக்கவே மாட்டார்கள்" என்பதுதான்! என்னே விசித்திரம்! (மகாபாரதத்தின் பராசரர் - மச்சகந்தி கதை கூடவா அந்த நீதிபதிக்கு தெரியாது?)

2. மற்றொன்று, உ.பி.யில் மாற்றப்பட்ட ஒரு மாவட்ட நீதிபதிக்குப் பதிலாக வந்தவர் உயர் ஜாதி நீதிபதி, மாற்றப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர்; அந்த நாற்காலியைக் கழுவி சுத்தம் செய்து, பிறகே அதன் மீது அமர்ந்து நீதி விசாரணையைத் துவக்கினார். இதுதான் சட்டத்தின் லட்சணம்!

-விடுதலை நாளேடு, 15.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக