வெள்ளி, 27 நவம்பர், 2015

சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம்


மணவிலக்குப் பெறாமல் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களும் சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை  உண்டு: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, நவ.23_ விவாகரத்து பெற வில்லை என்றாலும், கணவரைப் பிரிந்து வாழும் பெண்களுக்கு சீதனங்களைத் திரும்பக் கேட்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் சீதனமாகக் கொண்டு வந்த தங்க நகைகள், பிற சொத்துகளைத் தனது கணவர் திருப்பித்தர மறுப்பதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந் தார்.
அதில், கணவரைப் பிரிந்து வாழும் பெண், சீதனத்தை திரும்பத் தருமாறு வலியுறுத்த முடியாது என்று, திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை யடுத்து, அந்தப் பெண் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதீபதிகள் தீபக் மிஸ்ரா, பிரஃபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் கூறியதாவது: விவாகரத்து பெறவில்லை என்றா லும்கூட கணவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட பெண்களுக்கு சீத னங்களைத் திரும்பக் கேட்கும் உரிமை உண்டு. திருமணத்தின்போது அளித்த சீதனங்கள் என்று மட்டுமல்ல பண்டி கைகள் போன்ற நிகழ்வுகளின்போது பரிசாக அளிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் அப்பெண் திரும்பப் பெறலாம். இது சீதனமாக அளிக்கப்பட்ட அசையும், அசையா சொத்துகளுக்கும் பொருந்தும்.
கணவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அந்த சீதனங்களில் உரிமை கிடையாது. சீதனங்களுக்கு பராமரிப்பாளராக வேண்டுமானால் அவரது கணவர் இருக்கலாம்; அதன் மீது முழு உரிமை கொண்டாட முடியாது என்று நீதி பதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித் துள்ளனர்.
-விடுதலை,23.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக