வியாழன், 2 ஜூலை, 2015

பாலியல் வன்முறை வழக்குகளில் சமரச முயற்சியை ஊக்குவிப்பது சட்ட விரோதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு



புதுடில்லி, ஜூலை, 2-_ பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரு தரப்பினருக்கு மிடையில் சமரசம் செய்து வைக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவது சட்ட விரோ தமானது என்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி, 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கிய மதன்லால் என்ப வருக்கு கீழ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதற்கு எதி ரான அப்பீல் வழக்கை மத்திய பிரதேச உயர்நீதி மன்றம் விசாரித்தது.
குற்றவாளிக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் இடையே சமரசம் உருவானது. அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றவாளி என்ற தீர்ப்பையும், 5 ஆண்டு சிறை  தண்டனையையும் நீதிபதி ரத்து செய்தார். சிறுமியை மான பங்கம் செய்த வழக்குக்காக மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மத்திய பிரதேச மாநில அரசு, உச்சநீதிமன் றத்தில் மேல் முறையீடு செய்தது. அம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத் தில் தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணை நடத்து மாறு உத்தரவிட்டது. குற்றவாளியை கைது செய் யுமாறும் அறிவுறுத்தியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதா வது: பாலியல் வ கொடுமை புரிந்த குற்றவாளி, பாதிக் கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து வைக்க சமரசம் ஏற்பட்டதை அடுத்து அந்தக் குற்ற வாளியை விடுதலை செய்து உத்தரவு பிறப் பித்து இருப்பது உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள முடி வாகும்.
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிரான வழக்குகளில் எவ்வகை யான மென்மையான அணுகுமுறையும் எடுக்க முடியாது. சில உயர் நீதிமன்ற நீதிபதிகளே மென்மை யான அணுகு முறையை கடைபிடிப்பது வேதனை அளிக்கிறது. அப்படி கடை பிடிப்பது, பட்டவர்த்தனமான தவறாகி விடும். பாலியல் வன்கொடுமை குற்றங் களுக்கு எதிரான வழக்கு களில் குற்றவாளி தரப்புக் கும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்புக்கும் சமாதானம்

-விடுதலை,2.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக