வியாழன், 7 ஜூன், 2018

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி


புதுடில்லி, ஜூன் 7- அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) இடஒதுக்கீட் டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனு மதியளித்துள்ளது. சட்டவிதிக ளுக்கு உட்பட்டு அந்த நடை முறையைச் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதன் மூலம் இந்த விவ காரத்தில் இவ்வளவு நாள்களாக மத்திய அரசு எதிர்கொண்டு வந்த சிக்கல்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

பொதுவாக, அரசுத் துறை களில் உள்ள காலிப் பணியி டங்கள் இடஒதுக்கீட்டு முறை யில் நிரப்பப்பட்டு வருகின் றன. அதேவேளையில் ஊழியர் களுக்கும், அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கும்போது அந்த நடைமுறை பின்பற்றப் படுவதில்லை. மாறாக, சம் பந்தப்பட்டவர்களின் செயல் திறன் மற்றும் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இருப்பினும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மட்டும் அதில் விதிவிலக்கு வழங்கப் பட்டிருந்தது. அதாவது, அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு காரணமாக, எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் அடிப்படை யில் பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதனிடையே, அந்த நடை முறைக்கு எதிராகவும், ஆதரா கவும் வெவ்வேறு நீதிமன்றங் களில் பல்வேறு தரப்பில் மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மும்பை,  பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன. இதற்கு நடுவே டில்லி உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பான மனு ஒன்று தாக் கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக் கும் முறையை ரத்து செய்தது. இத்தகைய முரண்பட்ட தீர்ப் புகளால் அந்த வகுப்பினருக்கு பதவி உயர்வு அளிப்பதில் மத் திய அரசுக்கு சிக்கல் எழுந்தது.

இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்யப்பட்டது. அது, நீதி பதிகள் ஏ.கே. கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங், இந்த விவகாரம் தொடர்பாக ஏற் கெனவே நடைபெற்ற வழக்கு களையும், அவற்றின் தீர்ப்புக ளையும் மேற்கோள் காட்டி னார். அரசமைப்பு அதிகாரப் படி பதவி உயர்வு வழங்குவ தில், மத்திய அரசு, தாம் விரும் பிய நடைமுறையைப் பின் பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் சட்ட விதிகளுக் குட்பட்டு இடஒதுக்கீடு அளிக் கலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

-  விடுதலை நாளேடு, 7.6.18

வெள்ளி, 18 மே, 2018

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600



திருவனந்தபுரம், மே 18 சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகை யில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள அமைச்சரவை நேற்று (17.5.2018) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப் பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் வங்கி களை விரிவடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழி லாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக் கும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்து கேரளாவில் பணி புரியும் தொழிலாளர் களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப் பட்டுள்ளன. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு, 18.5.18

செவ்வாய், 15 மே, 2018

ஆயுதங்களின்றி அமைதியாக பொது இடத்தில் கூடுவது மக்களின் அடிப்படை உரிமை : டில்லி நீதிமன்றம் தீர்ப்பு



புதுடில்லி, மே 15 பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்திய எழுவரை வழக்கிலிருந்து விடுவித்த டெல்லி நீதிமன்றம், ஆயுதங் களின்றி  அமைதியான வழி யில் பொது இடத்தில் கூடுவது மக்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்துள்ளது. ஊழ லுக்கு எதிரான இந்தியா அமைப்பைச்  சேர்ந்த 30 தன் னார்வலர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 144 தடை உத்தரவை மீறி கூடியதாகவும்,  கலைந்து செல்ல மறுத்ததாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த எழுவர் மீது காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்தனர். இந்த  வழக்கிலிருந்து தங்களை விடு விக்கக் கோரி, அந்த எழுவரும் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை விசாரித்த கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட நாளன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட  விரோதமாக கூடியதாக கருத் தில் கொள்ள முடியாது. அவர்கள் எந்த  ஒரு குற்றத் தையும் செய்யவில்லை. அமை தியான முறையில் ஆர்ப்பாட் டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இது 144 தடை உத்தரவை மீறி யதாக எடுத்துக் கொள்ள முடி யாது. ஆயுதங்களின்றி அமை தியான முறையில் பொது இடத்தில்  கூடுவது மக்களின் அடிப்படை உரிமையாகும். எனவே, குற்றம் சாட்டப்பட்ட எழு வரையும் வழக்கிலிருந்து விடுவிக்கிறேன் என உத்தர விட்டார்.


ஏற்கெனவே, நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தொடர் பான வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்றம், அமைதி யான வழியில்  போராட்டம் நடத் துவதில் தவறில்லை. இது சட்டம்- - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதில் இருந்து மாறு பட்டது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும்,  அமைதியான வழியில் போராட்டம் நடத் துவதற்கும், எதிர்ப்பை வெளிப் படுத்துவதற்கும் அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அது வன்முறையாக அல்லது  சட் டம்-- ஒழுங்கை கெடுக்கிற வகையில் அமையக் கூடாது என தீர்ப்பளித்தது குறிப்பிடத் தக்கது.

-  விடுதலை நாளேடு,15.5.18

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது பச்சை அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

காவிரி நதிநீர்ப் பங்கீடு உரிய முறையில் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கவேண்டி நாம் (தமிழ்நாடு) வற்புறுத்தியதை ஏற்று, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது (1989_-1990) காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தினார்.

அந்த நடுவர் மன்றம், இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர ஆணையிட்டது.

தீர்ப்புகளை மதிக்காத கருநாடக அரசு

இதற்கிடையில், காவிரி நடுவர் மன்ற நியமனத்தை எதிர்த்து கருநாடக மாநிலம் அவசரச் சட்டம், வல்லடி வழக்குகள், குறுக்கு சால் ஓட்டிய நிகழ்வுகள்மூலம் தொடர்ந்து, காவிரியே தங்களுக்குத்தான் சொந்தம் என்ற அடாவடித்தனத்தை அன்றாடப் போக்கு களாக்கி, ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்ற ஆணைகளையும், தீர்ப்புகளையும்கூட மதிக்க மறுத்தே வந்துள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தும்கூட கடந்த பல ஆண்டுகளாக மதிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கினால், உச்சநீதிமன்றம் தரும்படிக் கூறிய நீரின் அளவைக்கூட தரத்தயார் இல்லாததோடு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைக் கூட ஏற்க முடியாது என்ற பிடிவாத, அரசியல் சட்ட விரோதப் போக்கையே தனது நிலைப்பாடாகக் கொண்டு வருகிறது!

உச்சநீதிமன்றத்தின் திட்டவட்ட தீர்ப்பு

இவைகளைத் தாண்டி, உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு 16.2.2018 அன்று வெளிவந்தது! 15 ஆண்டுகளுக்கு இத்தீர்ப்பு நிலைத்த தீர்ப்பு; காவிரி நதி எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல என்று கூறி, நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு அளித்த இறுதிப் பங்கீடான 187 டி.எம்.சி., என்பதில், 10 டி.எம்.சி. பெங்களூரு மற்றும் கருநாடக குடிநீர் தேவைக்கு என்று கூறி, குறைத்து, கருநாடகா 177.25 டி.எம்.சி.யைத் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும். இந்த மாற்றத்தைத் தவிர, கருநாடகம் _ நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறிய எதிலும் குறுக்கிடத் தேவையில்லை என்று கூறி, எப்படி மாதாமாதம் நீர்ப் பங்கீடு தரவேண்டும் என்ற அட்டவணை உள்பட தெளிவாக்கியது.

அத்துடன் மிக முக்கியமாக, நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கூறியபடி, திட்டத்தின் (ஸ்கீம்)படி,

இத்தீர்ப்பு கிடைத்த 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் (Cauvery Water Management Board- CMB), நீர்ப் பங்கீடுகளை 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் ஒழுங்காற்றுக் குழுவையும் (Regulatory Commission அமைக்கவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது!

அத்துடன் இத்தீர்ப்பில் இதனை அமல்படுத்துவது சட்டக் கட்டாயம் என்பதைத் திட்டவட்டமாக அதன் 465 பக்கத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தத் தவறுவது உச்சநீதிமன்ற அவமதிப்பே!

இதனை செயல்படுத்தவேண்டிய கடமை, பொறுப்பு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு என்பதால், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு கட்டாயமாகும்.

அமல்படுத்தத் தவறினால், அது உச்சநீதிமன்ற அவமதிப்பு  (Contempt of Supreme Court) என்பதோடு, மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பிலிருந்து தவறிய குற்றம்; இந்திய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு என்ற பழியை ஏற்றாக வேண்டும்!

இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டின் கோடானகோடி விவசாயிகளின் (குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள்) வாழ்வாதாரத்தைப் பறித்த மாபெரும் மனிதநேய விரோதப் போக்கும் ஆகும்!

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, வேண்டுமென்றே தமிழ் நாட்டினை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டிற்குச் சலுகை செய்ய நாம் கேட்கவில்லை. உரிமையைத்தான் கேட்கிறோம்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று ஒரு மனதாகப் பிரதமரிடம் வற்புறுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், சந்திப்பதற்கும் பிரதமர் மறுத்துக் கொண்டிருப்பது, ஜனநாயக தத்துவத்திற்கே முரணாகும்!

மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் முதலமைச்சர், காவிரி நீர் மேலாண்மை வாரியம்பற்றிக் கூறுகிறார், அரசு பொது நிகழ்ச்சியில்;  அதைச் சிறிதும் கண்டு கொள்ளாது பிரதமர் அலட்சியம் காட்டிப் போனது நியாயம்தானா? தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கு இதைவிட மிகப்பெரிய இழுக்கு வேறு உண்டா?

வெந்த புண்ணில் வேலைச் செருகுவது போல, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி (நீர்வளத்துறை அமைச்சுப் பொறுப்பு) உச்சநீதிமன்றத் தீர்ப்பினை காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் நியமிக்க முடியாது என்று பகிரங்கமாக பேட்டி தருகிறார்.

இதற்கு ஒரே காரணம்!

அரசியல்! அரசியல்!! அரசியல்!!!

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

கருநாடக மாநிலத்திற்குத் தேர்தல் சில மாதங்களில் வரவிருப்பதால், காங்கிரசு ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த, இதைச் செய்யாவிட்டால்,  கருநாடக தேர்தலில்  மக்கள் ஆதரவு தங்கள் கட்சிக்கு _ பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்பதற்காகவே இப்படி, உச்சநீதி மன்றத்தால் தரப்பட்ட 6 வாரத்தில், ஏறத்தாழ 3 வாரங்கள் ஓடிவிட்ட நிலையில், கூச்சநாச்ச மின்றி சட்ட அவமதிப்பு என்பதைப்பற்றிக் கூட கவலைப்படாது, குறுக்கு வழி யோசனைகளைக் கருநாடகாவுக்குச் சொல்லித் தருவது மகாமகா வெட்கக்கேடு அல்லவா!

முன்னாள் முதல்வர் (பிரதமரும் கூட) தேவகவுடா, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் போடும்படி கருநாடகாவுக்கு ஆலோசனை கூறினார் என்று கூறியிருப்பதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே!.

இது எவ்வகையில் நியாயம்? தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழைக்கும் பச்சைத் துரோகம் அல்லவா?

தீர்ப்பு கூறுவது என்ன?

The Report of the Commission as the language would suggest, was to make the final decision of the Tribunal binding on both the States and once it is treated as a decree of this Court, then it has the binding effect. It was suggested to make the award effectively enforceable.

ஆணையத்தின் அறிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி முடிவுகளை இரண்டு மாநிலங்களும் ஏற்க வேண்டும். சட்டம் _ ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதை நீதிமன்றம் ஏற்காது. ஆணையம் தனது தீர்ப்பை செயல்படுத்த உறுதியுடன் இருக்க வேண்டும்.

Keeping that in view, we direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the Tribunal is smoothly made functional and the rights of the States as determined by us are appositely carried out. When we say so, we also categorically convey that the need based monthly release has to be respected. It is hereby made clear that no extension shall be granted for framing of the scheme on any ground.

இதனடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் நியமிக்கவேண்டும். மேலும் மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை மாநிலங்கள் நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நீர் குறித்து மாதம் தோறும் கண்காணித்து வரவேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மேலும் கால அவகாசம் எடுக்காமல், காரணங்களைக் கூறி இழுத்தடிக்காமல் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கும் கால அவகாசத்திற்குள் (6 வாரங்களுக்குள்) அமைக்கவேண்டும்.

இதனைச் செய்ய தமிழ்நாடே மீண்டும் ஒரே குரலில், ஒன்றாக எழுந்தாகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது!

ஆயத்தமாவீர்!

மத்திய அரசினை செயல்படுத்த வைக்க, கட்சி, ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபடுவோம்!

வென்று முடிப்போம்! வாரீர்!! வாரீர்!!!

- கி.வீரமணி,

ஆசிரியர்

- உண்மை இதழ், 16-31.3.18

கொத்தடிமையை ஒழிக்க கைகோக்கும் தொழிலாளர்கள்

அனுராதா நாகராஜ்

தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தொழி லாளர்கள் தமிழகம் முழுவதிலும் உள்ள செங்கற் சூளைகளிலும், அரிசி ஆலைகளிலும், தொழிற்சாலை களிலும் கொத்தடிமை நிலையில் உழலும் மற்றவர்களை விடுவிக்க ஒன்று சேர்கின்றனர்.

அடிமைத்தனத்திற்கு எதிரான ஒரு குழுவான இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷனின் கூற்றுப்படி தமிழ்நாட்டிலுள்ள 11 தொழில்களில் சுமார் அய்ந்து லட்சம் தொழிலாளர்கள் கடனுக்காக கொத்தடிமை நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர். முதலாளி களிடமும், வட்டிக்காரர்களிடமும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர்கள் உழைக்க வேண்டியுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தி உட்பட மற்றபல தொழில்களில் இத்தகைய அடிமை உழைப்பு பொதுவாக நிலவுகிறது என்ற போதிலும் இவர்களில் பெரும் பாலோர் செங்கற்சூளைகளில் வேலை செய்து வருகின்றனர் என 2017ஆம் ஆண்டில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அய்ஜேஎம் கூறியுள்ளது. 45 வயதான வரலட்சுமி கோபால் 2004ஆம் ஆண்டில் அவர் விடுவிக் கப்படுவதற்கு முன்பாக திருத்தணி நகருக்கு அருகே ஓர் அரிசி ஆலை யில் கொத்தடிமை தொழிலாளியாக ஏழு ஆண்டுகளைக் கழித்துள்ளார்.

2014ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட கொத் தடிமைத் தொழிலாளர்கள் சங்கத்தில் (ஆர்பிஎல்ஏ) சேர்ந்ததில் இருந்து அவர் இத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து மற்றவர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

"பெரும்பாலான நேரங்களில் வேலை தேடிச் செல்பவராக நான் இந்த ஆலைகளில் நுழைவதுண்டு. அல்லது சில நேரங்களில் எனது ஆலையிலிருந்து தப்பித்துச் சென்ற தொழிலாளர்களை தேடும் செங்கற் சூளை அதிபராகவும் நான் வேடம் புனைவதுண்டு."

"இது அபாயகரமான ஒன்றுதான் என்பதும் எனக்குத் தெரியும். என்றாலும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது."

இவ்வாறு கொத்தடிமைகள் இருப்பதற்கான ஆதா ரத்தைக் கண்டுபிடித்தவுடன் அவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிவிடுவார். குறைந்தபட்சம் இதுவரையில் இத்தகைய பத்து மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்று இருப்பதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய நான்கு ஆர்பிஎல்ஏக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறிப்பாக பருவமழை துவங்குவதற்கு முன்பாக ஏப்ரல், மே மாதங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கும் செங்கற் சூளைகள், அரிசி ஆலைகள் ஆகியவற்றில் வேலை செய்து வரும்  கொத்தடிமைகளை கண்டுபிடிப்பதற்காக மாநிலம் முழுவதிலும் பரவியுள் ளனர் என ஆர்.பி.எல்.ஏ.வின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்

முதல் ஆர்பிஎல்ஏ 2014ஆம் ஆண்டில் துவங்கப் பட்டது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதிலும் இதுவரை மேலும் மூன்று சங்கங்கள் இணைந்துள்ளன.

கடந்த ஆண்டில் இதன் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது கொத்தடிமை முறைக்கு முடிவு கட்டுவதற்கான இயக்கம் வலுவாகி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் என வரலட்சுமி கூறினார்.

1976ஆம் ஆண்டில் இந்த கொத்தடிமை முறை தடை செய்யப்பட்டு விட்ட போதிலும் தொடர்ந்து இது பரவலாக நீடித்து வருகிறது. இத்தகைய நிலைமையானது 2030ஆம் ஆண்டிற்குள்  ஒரு கோடியே 80 லட்சத் திற்கும் மேற்பட்டவர்களை மீட்பதற்கான திட்டங் களுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற் சிகளை மேலும் தீவிரப்படுத்த அரசை தூண்டியுள்ளது. "இதற்கான சட்டத்தை அமல்படுத்துவதில் இடை வெளிகளும் சவால்களும் நிலவுகின்றன" என இந்த ஆர்.பி.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அய்ஜேஎம் அமைப்பைச் சேர்ந்த குறளமுதன் தாண்ட வராயன் கூறினார்.

எனினும் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த, இதிலிருந்து மீண்டவர்களின் குரலை அதிகாரி களால் புறக்கணித்துவிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். "இந்த சங்கங்களை உருவாக்கியதானது இதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மேடையை அவர்களுக்கு வழங்கியுள்ளது."

ஆர்.பி.எல்.ஏவின் மற்றொரு உறுப் பினரான அருள் ஏகம்பவன் என்பவர் கூறுகையில் தனக்கு எட்டு வயதாக இருக்கும்போது தனது தாத்தா வீட்டிலிருந்து ஒரு கல் குவாரியில் வேலை செய்வதற்காக தன்னை எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்றார். அவரது தந்தை வாங்கியிருந்த ரூ. 10,000 கடனை திருப்பிச் செலுத்துவதற்காக, பத்து ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீட்கப்படும் வரை அந்தக் கல்குவாரி யிலேயே அவர் வேலை செய்ய வேண்டி யிருந்தது.

என்னை அந்த இடத்திலிருந்து மீட்ட போது, வெளியுலகத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என தாம்ஸன் ராய்ட் டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் ஏகம்பவன் தெரிவித்தார்.

"அரசின் நிதியுதவிக்கு மனு செய்வதிலிருந்து வேறு எங்கே வேலை தேடலாம் என்பது வரை எல்லாவற் றிற்குமே எனக்கு முன்பு விடுவிக்கப்பட்டவர்களிடம் தான் நான் உதவி கேட்டுச் செல்ல வேண்டி யிருந்தது. இப்போது அந்த உதவியைத்தான் நான் மற்றவர் களுக்குச் செய்ய விரும்புகிறேன்" என அவர் கூறினார்.

-  விடுதலை நாளேடு, 23.4.18

வியாழன், 19 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது பச்சை அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

காவிரி நதிநீர்ப் பங்கீடு உரிய முறையில் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கவேண்டி நாம் (தமிழ்நாடு) வற்புறுத்தியதை ஏற்று, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது (1989_-1990) காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தினார்.

அந்த நடுவர் மன்றம், இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர ஆணையிட்டது.

தீர்ப்புகளை மதிக்காத கருநாடக அரசு

இதற்கிடையில், காவிரி நடுவர் மன்ற நியமனத்தை எதிர்த்து கருநாடக மாநிலம் அவசரச் சட்டம், வல்லடி வழக்குகள், குறுக்கு சால் ஓட்டிய நிகழ்வுகள்மூலம் தொடர்ந்து, காவிரியே தங்களுக்குத்தான் சொந்தம் என்ற அடாவடித்தனத்தை அன்றாடப் போக்கு களாக்கி, ஒரு சொட்டு தண்ணீர்கூட கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்ற ஆணைகளையும், தீர்ப்புகளையும்கூட மதிக்க மறுத்தே வந்துள்ளது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தும்கூட கடந்த பல ஆண்டுகளாக மதிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் போட்ட வழக்கினால், உச்சநீதிமன்றம் தரும்படிக் கூறிய நீரின் அளவைக்கூட தரத்தயார் இல்லாததோடு, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைக் கூட ஏற்க முடியாது என்ற பிடிவாத, அரசியல் சட்ட விரோதப் போக்கையே தனது நிலைப்பாடாகக் கொண்டு வருகிறது!

உச்சநீதிமன்றத்தின் திட்டவட்ட தீர்ப்பு

இவைகளைத் தாண்டி, உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு 16.2.2018 அன்று வெளிவந்தது! 15 ஆண்டுகளுக்கு இத்தீர்ப்பு நிலைத்த தீர்ப்பு; காவிரி நதி எந்த ஒரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல என்று கூறி, நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு அளித்த இறுதிப் பங்கீடான 187 டி.எம்.சி., என்பதில், 10 டி.எம்.சி. பெங்களூரு மற்றும் கருநாடக குடிநீர் தேவைக்கு என்று கூறி, குறைத்து, கருநாடகா 177.25 டி.எம்.சி.யைத் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும். இந்த மாற்றத்தைத் தவிர, கருநாடகம் _ நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறிய எதிலும் குறுக்கிடத் தேவையில்லை என்று கூறி, எப்படி மாதாமாதம் நீர்ப் பங்கீடு தரவேண்டும் என்ற அட்டவணை உள்பட தெளிவாக்கியது.

அத்துடன் மிக முக்கியமாக, நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் கூறியபடி, திட்டத்தின் (ஸ்கீம்)படி,

இத்தீர்ப்பு கிடைத்த 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை வாரியம் (Cauvery Water Management Board- CMB), நீர்ப் பங்கீடுகளை 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் ஒழுங்காற்றுக் குழுவையும் (Regulatory Commission அமைக்கவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது!

அத்துடன் இத்தீர்ப்பில் இதனை அமல்படுத்துவது சட்டக் கட்டாயம் என்பதைத் திட்டவட்டமாக அதன் 465 பக்கத் தீர்ப்பில் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தத் தவறுவது உச்சநீதிமன்ற அவமதிப்பே!

இதனை செயல்படுத்தவேண்டிய கடமை, பொறுப்பு உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு என்பதால், பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு கட்டாயமாகும்.

அமல்படுத்தத் தவறினால், அது உச்சநீதிமன்ற அவமதிப்பு  (Contempt of Supreme Court) என்பதோடு, மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பிலிருந்து தவறிய குற்றம்; இந்திய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு என்ற பழியை ஏற்றாக வேண்டும்!

இவை எல்லாவற்றையும்விட, தமிழ்நாட்டின் கோடானகோடி விவசாயிகளின் (குறிப்பாக காவிரி டெல்டா விவசாயிகள்) வாழ்வாதாரத்தைப் பறித்த மாபெரும் மனிதநேய விரோதப் போக்கும் ஆகும்!

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, வேண்டுமென்றே தமிழ் நாட்டினை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டிற்குச் சலுகை செய்ய நாம் கேட்கவில்லை. உரிமையைத்தான் கேட்கிறோம்.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று ஒரு மனதாகப் பிரதமரிடம் வற்புறுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், சந்திப்பதற்கும் பிரதமர் மறுத்துக் கொண்டிருப்பது, ஜனநாயக தத்துவத்திற்கே முரணாகும்!

மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் முதலமைச்சர், காவிரி நீர் மேலாண்மை வாரியம்பற்றிக் கூறுகிறார், அரசு பொது நிகழ்ச்சியில்;  அதைச் சிறிதும் கண்டு கொள்ளாது பிரதமர் அலட்சியம் காட்டிப் போனது நியாயம்தானா? தமிழ்நாட்டின் சுயமரி யாதைக்கு இதைவிட மிகப்பெரிய இழுக்கு வேறு உண்டா?

வெந்த புண்ணில் வேலைச் செருகுவது போல, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி (நீர்வளத்துறை அமைச்சுப் பொறுப்பு) உச்சநீதிமன்றத் தீர்ப்பினை காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் நியமிக்க முடியாது என்று பகிரங்கமாக பேட்டி தருகிறார்.

இதற்கு ஒரே காரணம்!

அரசியல்! அரசியல்!! அரசியல்!!!

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

கருநாடக மாநிலத்திற்குத் தேர்தல் சில மாதங்களில் வரவிருப்பதால், காங்கிரசு ஆட்சியை வீழ்த்தி, பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்த, இதைச் செய்யாவிட்டால்,  கருநாடக தேர்தலில்  மக்கள் ஆதரவு தங்கள் கட்சிக்கு _ பா.ஜ.க.வுக்கு கிடைக்காது என்பதற்காகவே இப்படி, உச்சநீதி மன்றத்தால் தரப்பட்ட 6 வாரத்தில், ஏறத்தாழ 3 வாரங்கள் ஓடிவிட்ட நிலையில், கூச்சநாச்ச மின்றி சட்ட அவமதிப்பு என்பதைப்பற்றிக் கூட கவலைப்படாது, குறுக்கு வழி யோசனைகளைக் கருநாடகாவுக்குச் சொல்லித் தருவது மகாமகா வெட்கக்கேடு அல்லவா!

முன்னாள் முதல்வர் (பிரதமரும் கூட) தேவகவுடா, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் போடும்படி கருநாடகாவுக்கு ஆலோசனை கூறினார் என்று கூறியிருப்பதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே!.

இது எவ்வகையில் நியாயம்? தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழைக்கும் பச்சைத் துரோகம் அல்லவா?

தீர்ப்பு கூறுவது என்ன?

The Report of the Commission as the language would suggest, was to make the final decision of the Tribunal binding on both the States and once it is treated as a decree of this Court, then it has the binding effect. It was suggested to make the award effectively enforceable.

ஆணையத்தின் அறிக்கையில் அறிவுறுத்தப் பட்டுள்ளதாவது:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி முடிவுகளை இரண்டு மாநிலங்களும் ஏற்க வேண்டும். சட்டம் _ ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதை நீதிமன்றம் ஏற்காது. ஆணையம் தனது தீர்ப்பை செயல்படுத்த உறுதியுடன் இருக்க வேண்டும்.

Keeping that in view, we direct that a scheme shall be framed by the Central Government within a span of six weeks from today so that the authorities under the scheme can see to it that the present decision which has modified the award passed by the Tribunal is smoothly made functional and the rights of the States as determined by us are appositely carried out. When we say so, we also categorically convey that the need based monthly release has to be respected. It is hereby made clear that no extension shall be granted for framing of the scheme on any ground.

இதனடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் நியமிக்கவேண்டும். மேலும் மேலாண்மை வாரியத்தின் முடிவுகளை மாநிலங்கள் நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நீர் குறித்து மாதம் தோறும் கண்காணித்து வரவேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மேலும் கால அவகாசம் எடுக்காமல், காரணங்களைக் கூறி இழுத்தடிக்காமல் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கும் கால அவகாசத்திற்குள் (6 வாரங்களுக்குள்) அமைக்கவேண்டும்.

இதனைச் செய்ய தமிழ்நாடே மீண்டும் ஒரே குரலில், ஒன்றாக எழுந்தாகவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது!

ஆயத்தமாவீர்!

மத்திய அரசினை செயல்படுத்த வைக்க, கட்சி, ஜாதி, மத, பேதமின்றி ஒன்றுபடுவோம்!

வென்று முடிப்போம்! வாரீர்!! வாரீர்!!!

- கி.வீரமணி,

ஆசிரியர்

- உண்மை இதழ், 16-31.3.18