வெள்ளி, 18 மே, 2018

கேரளாவில் புதிய தொழிலாளர் கொள்கை இனி குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600



திருவனந்தபுரம், மே 18 சமீபத்தில் கேரள அரசு தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகை யில், தொழிலாளர் நலத் திட்டங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதற்கு கேரள அமைச்சரவை நேற்று (17.5.2018) ஒப்புதல் அளித்துள்ளது. அந்த புதிய திட்டத்தில் மிக முக்கிய அம்சமாக, தனிநபரின் ஒரு நாள் குறைந்தபட்ச வருவாயை ரூ.600 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், கூலித்தொழிலாளிகள் உள்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் என கூறப் பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் வங்கி களை விரிவடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழி லாளர்களுக்கு பணி உத்திரவாதம் கிடைக் கும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

இடம் பெயர்ந்து கேரளாவில் பணி புரியும் தொழிலாளர் களுக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் விடுதி சேவைகளும் இந்த புதிய கொள்கையில் சேர்க்கப் பட்டுள்ளன. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் காப்பீட்டுத் திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு, 18.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக