சனி, 2 ஜூலை, 2022

மதம் மாறுவது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது! -டில்லி உயர்நீதிமன்றம்


புதுடில்லி, ஜூன் 4 மதம் மாறு வது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடை யில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 

பாஜகவைச் சேர்ந்த வழக் குரைஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரி மைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி கள் விசாரித்தனர். 

அப்போது மனுவை பரி சீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற் கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். 

மேலும் சமூக வலைதளங் களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும், கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என் றும், ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின் பற்ற அரசமைப்புச் சட்டத்தில் உரிளமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விரி வான விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து எந்தவித அறிவிக்கையையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள் ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக