புதன், 2 அக்டோபர், 2019
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய், 24 செப்டம்பர், 2019
ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, செப்.13 இந்து மதத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட முசுலீம் இளைஞர் ஒரு நம் பிக்கையான கணவனாக, சிறந்த அன்பு செலுத்துவோ ராக இருந்திட வேண்டும். பெண்ணின் எதிர்காலத்தை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மத மறுப்பு அல்லது ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள் ளது.
இப்ராகிம் சித்திக்கி என் பவர் பிறப்பால் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஆரிய சமாஜ முறையைப் பின்பற்றுவோரின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை விரும்பிய காரணத்தால், பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மதமாற்றத்தை ஒரு சர்ச் சையாகவே ஆக்கி வந்தனர். சத்தீஸ்கர் உயர்நீதிமன் றத்தில் பெண்ணின் குடும்பத் தின் சார்பில் கடந்த ஆண் டில் தங்கள் மகளைக் காண வில்லை என்று வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றத்தில் அப்பெண் பெற்றோரிடமே செல்வதா கக் கூறினார். அதன்பின்னர் குடும்பத்தினருடன் அப் பெண் அனுப்பிவைக்கப்பட் டாள்.
பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உச்சநீதிமன்றத்தை அணுகி னார். உச்சநீதிமன்ற அமர் வின் தலைவர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெண் அவள் பெற்றோருடனே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டில் பெண் பெற்றோரிடம் சென்றாலும், இப்ராகிம் மீண்டும் அப் பெண் தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தன் னுடைய சட்டப் போராட் டத்தைத் தொடர்ந்தார்.
தான் விரும்பும் பெண் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்ராகிம் மீண்டும் இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, அப்பெண்ணும் தன் கணவனுடன் சேர்ந்து வாழப் போவதாக நீதிமன்றத்தில் கூறினாள். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை இப்ராகிமுடன் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
அதன்பிறகும், பெண் ணின் தந்தை உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில், மதம் மாறிய இப்ராகிம் மீண்டும் இசுலாம் மதத்துக்கே மாறிவிட்ட காரணத்தால், தன் மகளை திரும்பவும் தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தார்.
11.9.2019 அன்று நடை பெற்ற வழக்கு விசாரணையில், இப்ராகிம் மதமாற்றம் செய்துகொண்டார் என் றால், பெயர் மாற்றம் உள் ளிட்ட நடைமுறை ஆவணங் கள் குறித்து உறுதிமொழி ஆவணத்தை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு உத்தரவிட்டது.
மேலும், மத மறுப்பு திரு மணம், ஜாதி மறுப்பு திரு மணங்களுக்கு உச்சநீதிமன் றம் எதிரானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.
திருமணத்தை எதிர்க்க வில்லை. அதே நேரத்தில் பெண்ணின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். சில நேரங்களில் இதுபோன்ற திருமணங்கள் தவறான நோக்கத்துடன் நடைபெறு கின்றன. அதனால் பெண் கள்தான் பாதிக்கப்படுகிறார் கள் என்று நீதிபதி அரண் மிஸ்ரா கூறினார். இவ்வழக்கின் விசாரணை 24.9.2019 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 13. 9 .19
சனி, 14 செப்டம்பர், 2019
மதம், ஜாதி அடையாளங்களை வாகனங்களில் வைத்திருந்தால் அபராதம்!
ஜெய்ப்பூர், செப். 7 ராஜஸ்தானில் வாகனங்களில் ஜாதி, மத அடை யாளங்களைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டோ, அல்லது படமாக ஒட்டியிருந்தால் அபராதம் வசூ லிக்க போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப் புகளை தடுக்கவும், பழைய சட்டத் தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான திருத்த மசோதா, அண் மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட் டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஓட்டுநர் உரிமம் காலாவதி யாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடை முறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட் டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், போக்கு வரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந் ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட் டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத் துறையினர் வாகனங்களில் மத, சாதிய குறியீடுகள் பெயர்கள், படங்கள் இருந்தால் அந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, ராஜஸ்தான் மாநிலத் தில் வாகனங்களில் ஜாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொள்ளும் நடைமுறை மக்கள் மத்தியில் உள் ளது. சிலர் அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி விதிமீறலில் ஈடு படுவதால் அவற்றை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்ற அடை யாளங்கள் கொண்ட நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் வாகனங் களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்ச ரித்துள்ளனர். மேலும் வன்முறை களை ஏற்படுத்தும் விதமாக வாசகம் எழுதியிருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. வாகனத்தில் பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. படங்கள் ஒட்டும் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முக்கியக் காரணமே அவை வாகன ஓட்டியின் பாது காப்பைக் கேள்விக்குறி ஆக்குவது தான் என்றும் கூறப்படுகிறது.
- விடுதலை நாளேடு, 7.8. 19
திங்கள், 9 செப்டம்பர், 2019
மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் சிறைத் தண்டனை
சென்னை, செப்.9 சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு மாநகராட்சியால் பராமரிக் கப்பட்டு வருகிறது. இம்மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் வளர வளமான மண், தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை முக்கிய காரணி ஆகும். எனினும், இயற் கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக் கப்பட வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.
இந்நிலையில், சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் நிறுவனத்தின் விளம் பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற தேவையற்ற பொருட்களின் மூலம் மரங்களில் ஆணி அடித்து அல்லது கயிற்றால் கட்டி விளம்பரம் செய்து வருகிறார்கள்.
மேலும் மரங்களில் பெயின்ட் அடித்தல், மின்சார அலங்கார விளக்குகள் அமைத்தல், கம்பிகள், கேபிள் ஒயர்கள், மற்றும் இதர பொருட்கள் மரங்களில் அமைக் கப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற இயற்கைக்கு மாறான நடவடிக்கைகளினால் மரங்கள் பட்டுப்போவதுடன் அதனுடைய வாழ்நாள் குறைந்து போகும்.
எனவே, மரங்களில் அமைக் கப்பட்டுள்ள தேவையற்ற விளம் பர பலகைகள், மின்சார அலங் கார விளக்குகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருட்களை 10 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அவர்களாகவே அகற்ற வேண்டும். தவறும்பட்சத் தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசி பில் சட்டம் 1919ஆம் ஆண்டு 326 விதியின்படி, ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்ச அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. இது குறித்த புகார்களை பொதுமக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
- விடுதலை நாளேடு, 9 .9 .19
வெள்ளி, 6 செப்டம்பர், 2019
மதச்சார்பின்மை கோட்பாட்டை எந்த அரசு வந்தாலும் நீக்க முடியாது! உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து
புதுடில்லி, செப்.2 மதச்சார்பின்மை என்ற அம்சம்,இந்திய அரசியல் சாசனத் தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பதால், அதில் அரசாங்கத்தால் திருத்தம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:
இந்திய அரசியல் சாசனத்தில், மதச்சார்பின்மை என்ற வார்த்தை முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இதுதான், இந்திய அரசியல் அமைப் பின் அடிப்படைக் கட்டுமானம். அதை ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தால் மாற்றிவிட முடி யாது.
இதனை உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துள்ளது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
எனவே, இந்த வார்த்தையை அரசியல் சட்டத்தின் முன்னுரை தவிர வேறு எந்த இடத்திலும் காணமுடியாது. சட்டப் பிரிவு 370-அய் நீக்கியதுபோல, இதை நீக்கிவிட முடியாது.அப்படியே செய்ய வேண் டுமானாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம்செய்ய 15 நீதிபதிகள் அடங் கிய அமர்வு வேண்டும்.
இந்தியாவின் கட்டுமானம், இறை யாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதனால்தான் இவற்றை நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது.
ஆகவே, ஒரு பெரும்பான்மை பலம்பெற்ற அரசாலும் இதில் திருத்தம் செய்ய முடியாது. இவற்றையெல்லாம் கருதித்தான், குறிப்பிட்ட அம்சங்களை நாடாளு மன்றத்தால் திருத்த முடியும்; குறிப்பிட்ட அம்சங்களை நாடாளு மன் றத்தால் கூட திருத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
நல்வாய்ப்பாக, மதச் சார்பின்மை என்பது அடிப்படை அம்சமாக இடம்பெற்றிருப்பதால், அதை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு குரியன் ஜோசப் பேசியுள்ளார்.
- விடுதலை நாளேடு, 2. 9 .19
திங்கள், 1 ஜூலை, 2019
சுயமரியாதை திருமணம் சட்டப்படியானதுதான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூன் 22, -ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மூன்று தம்பதிக ளுக்கு சாதி மறுப்புத் திருமண ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்ட மன்ற முன்னாள் உறுப் பினரும் வழக்குரைஞருமான ஆர்.கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது: திருநெல்வேலி மாவட்டம் கம்மங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் நிவேதா வையும், சாத்தூரைச் சேர்ந்த செல்வின் தியாகராசன் என்பவர் சரண்யா கனிமொழி யையும், நாகர்கோவிலைச் சேர்ந்த நடேஷ் -மணி கண்டீஸ் வரியையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். மத்திய அரசின் சமுகநீதித் துறையின் சார்பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நிறு வனம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுகத் தைச் சேர்ந்தவர் என்றால் அந்தத் இணையருக்கு ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்குகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இணையர்களும் முறை யாக சான்றுகள் பெற்று ஊக்கத்தொகை பெறுவதற்கு மனு செய்திருந்தனர். ஆனால் அந்தத் திரும ணங்கள் சாத்திர, சம்பிரதாயங் களுடன் உள்ள இந்து முறை திருமணம் அல்ல என்று டாக்டர் அம்பேத்கர் நிறுவ னத்தால் அவர்களது கோ ரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டன.
எனவே, இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு, இந்து திருமணம் சாத்திர, சம் பிரதாயங்களுடன்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லையென சட்டத் திருத்தம் செய்துள்ளது. மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் அணிந்து கொள் வது, தாலி கட்டுவது போன்ற முறைகளில் சீர்திருத்த திரு மணம், சுயமரியாதை திரு மணமும் இந்து சட்டப் படியான திருமணம்தான் என்பதை சுட்டிக்காட்டி சம் பந்தப்பட்ட மூன்று இணை யர்களுக்கும் ஊக்கத் தொகை யை எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இவ்வாறு கடந்த ஜூன் 4- ஆம் தேதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
- விடுதலை நாளேடு 22. 6 .19
புதன், 29 மே, 2019
ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்
சென்னை, மே 27 ஆதிதிரா விடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் கட் டணம் தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன் றத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாகுறிச்சி யில் இயங்கும் பாரதி யார் பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாண விகள் ஜோதிகா, அன்புச் செல்வி, அபர்ணா உள் ளிட்ட 114 பேர் தாக்கல் செய்த மனுவில், "ஆதிதிரா விட வகுப்பைச் சேர்ந்த எங் களுக்கு தமிழக ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மறுக்கப்பட் டுள்ளது.
மேலும், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப் படும் எனவும், அரசு கல்லூரி களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்ட ணமே உதவித் தொகை யாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
உதவித்தொகை வழங்கும் திட்டமே ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுப்பது சட்டவிரோத மாகும். எனவே கல்வி உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
மேலும், கல்விக் கட்டணம் தொடர்பாக அரசு நிர்ணயம் செய்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள அர சாணையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் அண்மையில் விசா ரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுதாரர்களான மாணவிகள் அனைவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது என கருத்து தெரிவித்ததோடு, கல்வி உதவித் தொகை தொடர்பாக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசா ணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
- விடுதலை நாளேடு 27. 5 .2019