செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, செப்.13 இந்து மதத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட முசுலீம் இளைஞர் ஒரு நம் பிக்கையான கணவனாக, சிறந்த அன்பு செலுத்துவோ ராக இருந்திட வேண்டும். பெண்ணின் எதிர்காலத்தை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மத மறுப்பு அல்லது ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று  வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள் ளது.

இப்ராகிம் சித்திக்கி என் பவர் பிறப்பால் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஆரிய சமாஜ முறையைப் பின்பற்றுவோரின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை விரும்பிய காரணத்தால், பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மதமாற்றத்தை ஒரு சர்ச் சையாகவே ஆக்கி வந்தனர்.  சத்தீஸ்கர் உயர்நீதிமன் றத்தில் பெண்ணின் குடும்பத் தின் சார்பில்  கடந்த ஆண் டில் தங்கள் மகளைக் காண வில்லை என்று வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றத்தில் அப்பெண் பெற்றோரிடமே செல்வதா கக் கூறினார். அதன்பின்னர் குடும்பத்தினருடன் அப் பெண் அனுப்பிவைக்கப்பட் டாள்.

பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உச்சநீதிமன்றத்தை அணுகி னார். உச்சநீதிமன்ற அமர் வின் தலைவர்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெண் அவள் பெற்றோருடனே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டில் பெண் பெற்றோரிடம் சென்றாலும், இப்ராகிம் மீண்டும் அப் பெண் தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தன் னுடைய சட்டப் போராட் டத்தைத் தொடர்ந்தார்.

தான் விரும்பும் பெண் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்ராகிம் மீண்டும் இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, அப்பெண்ணும் தன் கணவனுடன் சேர்ந்து வாழப் போவதாக நீதிமன்றத்தில் கூறினாள். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை இப்ராகிமுடன் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

அதன்பிறகும், பெண் ணின் தந்தை உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில், மதம் மாறிய இப்ராகிம் மீண்டும் இசுலாம் மதத்துக்கே மாறிவிட்ட காரணத்தால், தன் மகளை திரும்பவும் தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தார்.

11.9.2019  அன்று நடை பெற்ற வழக்கு விசாரணையில், இப்ராகிம் மதமாற்றம் செய்துகொண்டார் என் றால், பெயர் மாற்றம் உள் ளிட்ட நடைமுறை ஆவணங் கள் குறித்து உறுதிமொழி ஆவணத்தை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று   நீதிபதி அருண் மிஸ்ரா  தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு உத்தரவிட்டது.

மேலும், மத மறுப்பு திரு மணம், ஜாதி மறுப்பு திரு மணங்களுக்கு உச்சநீதிமன் றம் எதிரானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

திருமணத்தை எதிர்க்க வில்லை. அதே நேரத்தில் பெண்ணின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். சில நேரங்களில் இதுபோன்ற திருமணங்கள் தவறான நோக்கத்துடன் நடைபெறு கின்றன. அதனால் பெண் கள்தான் பாதிக்கப்படுகிறார் கள் என்று நீதிபதி அரண் மிஸ்ரா கூறினார். இவ்வழக்கின் விசாரணை 24.9.2019 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 13. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக