சனி, 19 ஆகஸ்ட், 2017

வாகன விபத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?



நம் நாட்டில் தினமும் சுமார் 400 நபர்கள் வாகன விபத்துகளினால் இறக்கின்றனர். 2015ஆம் ஆண்டு சுமார், 1,46133 நபர்கள் வாகன விபத்துகளினால் இறந்துவிட்டனர். இந்தப் புள்ளிவிபரம் நம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய அறிக்கையில் உள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1939 939 Motor Vehicles Act பல்வேறு மாற்றங்களுடன் 1988ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஜூலை 1989 முதல் அமலுக்கு வந்தது. இது 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 269 சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வழங்குதல் வாகனங்கள் பதிவு செய்தல், தகுதிச் சான்று வழங்குதல், இன்ஸூரன்ஸ், வாகன விபத்திற்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்குதல் போன்ற எல்லா அம்சங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கிட 1959ஆம் ஆண்டு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையோர் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவல்துறை, விசாரணை, நீதிமன்றம் என்று அலைய வேண்டி வரும் என்று தவறாக எண்ணி, முறையாக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் தகுந்த நிவாரணம் பெற்றிட சட்டம் எல்லா வழிகளிலும் நமக்குத் துணை புரிகிறது.

இதுபற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள டெல்லியில் நடந்த ஒரு வாகன விபத்தின் வழக்கு பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

காஜல் சர்மா என்பவர் தனது கணவருக்குச் சொந்தமான வாகனத்தை புதுடெல்லி பெருநகர ரெயில்வே நிலையம் அருகே அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி வந்து வாதிகள் அம்ரஜித் / நஹித் மாலிக் மற்றும் அப்ரஷ் அகமது ஆகியவர்கள் வந்த ஆம்னி வாகனத்தின்மேல் மோதி காயமடையச் செய்தார். இது பற்றிய வழக்கு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்திற்கு வந்தது.

பொதுவாக இதுபோன்ற வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய சட்டவிதிகள்: வாகனத்தை ஓட்டி வந்த நபர் அலட்சியமாக அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மோதியது பற்றி பாதிக்கப்பட்ட நபர் எந்த வகையிலும் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. ஒரு வேளை வாகனத்தை ஓட்டிவந்தவரும் நீதிமன்றத்தில் தான் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிடவில்லை என்று வாதாட முடியாது.

காவல்துறை முறையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் பிரதிவாதியின் குற்றத்தை நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற வழக்குகளைப் போல் குற்றம் நடந்ததா என்பதை முழுமையாக விசாரணை நடத்த வேண்டியத் தேவையும் இல்லை. இதுபற்றிய முழு விளக்கத்தை இன்ஸுரன்ஸ் நிறுவனம் (எதிர்) புஷ்பா ராணி என்ற வழக்கில் தெளிவான தீப்பினை வழங்கி உள்ளது.

அதாவது வாகன விபத்துகளின் வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை முழுமையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்ட பிறகு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரின் குற்றத்தை பாதிக்கப்-பட்டவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை.

நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் R.D. HATTAGADI Vs. PEST CONTROL (INDIA) PVT LTD. AR 1995/SC/755 என்ற வழக்கின் தீர்ப்பின் மூலம் விபத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த முறையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

வாகன விபத்தின் பாதிப்புகளை 2 வகையாகப் பிரிக்கலாம்:

பொருளாதார ரீதியான பாதிப்பு: (Pecuniary Damage): பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவுகள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை மாத வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவைகள் Pecuniary Damage என்று அழைக்கப்படும். Non Pecuniary Damage (மனரீதியான பாதிப்பு): மனரீதியான பாதிப்புகள், உடல் ஊனமடைவதால் ஏற்படும் பாதிப்புகள், அதாவது நடக்கமுடியாமை, கைகள் செயல்பட முடியாமை போன்ற பாதிப்புகள் Non Pecuniary Damage என்று அழைக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு பாதிக்கப்பட்டவருக்கு முறையான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதிபட அறிவுறுத்தி உள்ளது.

கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வழக்கில் மோட்டார் வாகன விபத்தில் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது.

அதாவது விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் 4 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 120 நாட்கள் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு ஓரளவிற்கு குணமடைந்து உள்ளார்.

மருத்துவமனையில் செலுத்திய தொகை ரூ.5242/_க்கு முறையாக ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார்.

தன்னுடைய ஓட்டுநர் பணி செய்திடாமல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தன்னுடைய மாத வருமானம் 20,000 ரூபாய் நஷ்டமடைந்துள்ளது என்று கூறியுள்ளார். அதற்குச் சரியான ஆதாரத்தை அவர் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, அவரது மாத வருமானத்தை 12,000 ரூபாயாகக் கணக்கிட்டு வாகன உரிமையாளர் பிரதிவாதி ரவி சர்மா விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் என்பவருக்கு 1,98,000/_ ரூபாய் நஷ்ட ஈடு வழங்கிட மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. வழக்குப் பதிவு செய்த நாளில் இருந்து மேற்கூறிய தொகையை 9 சதவீத வட்டியுடன் அளித்திட உத்தரவிட்டது.

நஷ்ட ஈட்டுத் தொகையை முறைப்படி கட்டத் தவறினால் 12 சதவிகித வட்டியும் சேர்த்து செலுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

SOUTH DISTRICT,
SAKET COURTS - NEW DELHI,
Suit No. 107/15

சில சமயங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிடும் வாகனங்கள் உண்டு அல்லவா!

அதுபோன்ற சமயங்களில் விபத்து பற்றி முழு விபரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்து நிச்சயமாக 25,000/_ நஷ்டஈடு பெற்றிடலாம். அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று தோன்றினால் உயர் நீதிமன்றத்தில் அதுபற்றி மறுஆய்வு மனுதாக்கல் செய்திடலாம்.
நன்றி: ‘லாயர்ஸ் லயன்’, ஜூலை 2017

 -உண்மை,16-31.7.17


வியாழன், 20 ஜூலை, 2017

ஷரியா சட்டத்தில்...


According to Sharia law:
• Theft is punishable by amputation of the right hand (above).
• Criticizing or denying any part of the Quran is punishable by death.
• Criticizing Muhammad or denying that he is a prophet is punishable by death.
• Criticizing or denying Allah is punishable by death (see Allah moon god).
• A Muslim who becomes a non-Muslim is punishable by death (compulsion in religion).
• A non-Muslim who leads a Muslim away from Islam is punishable by death.
• A non-Muslim man who marries a Muslim woman is punishable by death.
• A man can marry an infant girl and consummate the marriage when she is 9 years old.
• Girls' clitoris should be cut (Muhammad's words, Book 41, Kitab Al-Adab, Hadith 5251).
• A woman can have 1 husband, who can have up to 4 wives; Muhammad can have more.
• A man can beat his wife for insubordination (see Religion of Peace).
• A man can unilaterally divorce his wife; a woman needs her husband's consent to divorce.
• A divorced wife loses custody of all children over 6 years of age or when they exceed it.
• Testimonies of four male witnesses are required to prove rape against a woman.
• A woman who has been raped cannot testify in court against her rapist(s).
• A woman's testimony in court, allowed in property cases, carries ½ the weight of a man's.
• A female heir inherits half of what a male heir inherits (see Errors in Quran).
• A woman cannot walk along with a man, as it leads to fitnah (upheaval).
• A woman cannot speak alone to a man who is not her husband or relative.
• Meat to eat must come from animals that have been sacrificed to Allah - i.e., be "Halal".
• Muslims should engage in Taqiyya and lie to non-Muslims to advance Islam.
-முகநூல் பதிவு(இரத்னவேல் சேர்வை)

வியாழன், 29 ஜூன், 2017

சட்டம் - முக்கிய குறிப்புகள்...

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

-முகநூல்

புதன், 7 ஜூன், 2017

ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கும் வாரிசுரிமை இருக்கிறதா?



சொத்துக்களைப் பிரிக்கும்போதும் பெண்கள் ஏமாற்றப்பட்டு வந்தார்கள். பல்வேறு காலகட்டங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) உருவாக்கப்பட்டு ஆண்களுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டு பெண்ணுக்கு சொத்துக்களில் உரிய வகையில் பங்கு கிடைக்காத நிலையே இருந்தது. இறுதியாக ஒரு சரித்திரப் புரட்சியாக 50 வருடங்களுக்குப் பிறகு இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005இல் புதிய திருத்தங்களுடன் அமலுக்கு வந்தது.

விவசாய நிலங்கள்.

இந்துக் கூட்டுக் குடும்பத்தின் சொத்துக்கள்.

பெற்றோர்கள் வாழும் வீடு

விதவைகளுக்கான உரிமைகள்.

ஆகியவைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாரிசுரிமை உண்டு என்பதை புதிய இந்து வாரிசுரிமைச் சட்டம் உறுதி செய்கிறது.

திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் (2005) எந்த வகையில் பெண்களுக்கு உரிமை அளிக்கிறது. அதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

விவசாய நிலங்கள்

விவசாய நிலங்களிலும் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பது ஒரு அற்புதமான சட்டத்திருத்தம். முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 4(2) விதியை ரத்து செய்து புதிய வாரிசுரிமைச் சட்டம் பெண்களுக்கு முழு உரிமையை அளிக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு வகையான சட்டவிதிகள் அமைந்து இருந்தன. அவைகள் அனைத்தையும் ஒருங்கிணைந்து புதிய சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின்படி பெண்களுக்கு விவசாய நிலத்தில் பங்கு கிடைத்தவுடன் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரம் உருவானது. கேரளாவில் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கின்படி கணவன், மனைவிகளை கொடுமைப்படுத்துவது 48 சதவீதமாக இருந்தது 18 சதவிகிதம் குறைந்துள்ளது.

விவசாய நிலங்கள் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் என பல பாகங்களாகப் பிரித்தால் அது விவசாயத் தொழிலைப் பாதிக்கும். கூட்டுறவுப் பண்ணை என்பது முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என ஒரு சிலர் இந்தச் சட்டத்தைக் குறை கூறுகின்றனர். இது தவறான வாதம். ஆண் வாரிசுகளுக்கு, விவசாய நிலங்களைப் பிரிக்கும்பொழுதுகூடத்தான் நிலங்களின் அளவு குறைத்திட வாய்ப்புண்டு.

கூட்டுக் குடும்பச் சொத்துகளில் பெண்களுக்குரிய உரிமை

கூட்டுக் குடும்பச் சொத்தில் ஒரு குடும்பத் தலைவரின் மகன்களுக்கு முழு உரிமை இருந்து வந்தது. பெண்களுக்கும் அதிலும் திருமணமான பெண்களுக்கும் குடும்பச் சொத்தில்பங்கு உண்டு என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நிச்சயமாக நல்லதொரு தன்னம்பிக்கையை பெண்களுக்கு கொடுத்திடும். அதாவது முந்தைய இந்து வாரிசுரிமைச் சட்டப்படி மகனுக்கு நேரடியாக வாரிசுரிமையில் ஒரு பங்கு கிடைத்து வந்தது. ஆனால், பெண்களுக்கும் தற்போது வாரிசு உரிமை கிடைக்கிறது.

இது நிச்சயம் அவளுக்கு ஒரு பொருளாதாரப் பாதுகாப்பை அளித்திடும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு குடும்பச் சொத்தை சம பங்காக ஆணுக்கு இணையாக பெண் வாரிசுக்கும் கொடுத்திட வேண்டும் என்பது சரியான சட்ட விதியாகும். நிச்சயம் கள்ளிப் பால் கொடுத்து பெண் சிசுவைக் கொல்லும் செயலும் அரிதாகிவிடும். ஆக ஒரு பெண்ணுக்கு தான் பிறந்த வீட்டிலும் சொத்தில் பங்கு உண்டு. கணவன் வகையில் வரும் சொத்துக்கும் உரிமை உண்டு.

குடும்பச் சொத்தான பரம்பரை வீட்டில் பெண்ணுக்குரிய பங்கு

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 பிரிவு 23இல் குறிப்பிட்ட சட்ட விதிகளை ரத்து செய்து குடும்பத்தின் சொத்தான ஒரு பொது வீட்டில் ஆண்மகனைப் போலப் பெண் மகளுக்கும் முழு உரிமை உண்டு என திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம் வழி வகுத்துள்ளது. திருமணம் ஆகாமல் இருந்தாலும், திருமணம் ஆகி இருந்தாலும் சம்பந்தப்பட்ட வீட்டில் பெண்கள் வாழ்ந்திட முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் உரிமை உண்டு.

ஒரு சிலர் இதனால் இறந்துவிட்ட குடும்பத் தலைவரின் விதவை மனைவி, அவளின் தாயாருக்கு வீட்டில் உள்ள சொத்தின் பல மடங்கு குறைந்துவிடும் என வாதாடுகின்றனர். ஆனால், இந்தப் புதிய விதியின்படி ஒரு வீட்டில் பிறந்து, வளர்ந்து ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு தன் சகோதரர் அனுமதித்தால்தான் அந்த வீட்டிற்கு வந்து வாழ வேண்டிய தர்மசங்கடம் இப்போது இல்லை. உரிமையுடன் தன் பிறந்த வீட்டிற்கு இந்த சட்டத்தினால் வந்து வாழ முடியும் அல்லவா?

பெண்ணுக்கு வாரிசுரிமை சமமாக வழங்கப்பட வேண்டும் என்பது திடீரென்று அமல்படுத்தப்படவில்லை. நெடுங்கால போராட்டத்திற்குப் பின் முதலில் 2004ஆம் ஆண்டு சட்டக் கமிஷன் 174ஆவது பரிந்துரைகள், ராஜ்ய சபையில் சமர்ப்பிக்கப்-பட்டு நீண்ட விவாதங்களும், கூச்சல்களும், ஒத்திவைப்புகளும் நடந்தும் ஒரு முடிவு பிறக்கவில்லை. மக்கள் இயக்கங்கள் பலவித-மாகப் போராடியது. பல்வேறு மாதர் சங்கங்கள், மனித உரிமைக் கழகம், மாண்புமிகு முன்னாள் நீதியரசர்கள், நாட்டின் பல்வேறு சிறந்த வழக்குரைஞர்கள் ஆகியோர்களின் தொடர் போராட்டத்தால் ஒரு வழியாக 2005 இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.

 -உண்மை,1-15.17


வியாழன், 4 மே, 2017

இஎஸ்ஐ புதிய விதிமுறை: ஜன.1 முதல் அமல்



பதிவு செய்த நேரம்:2016-12-30 21:39:41


நெல்லை: இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர் சேர்க்கைக்கான ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத் திட்டம் புத்தாண்டு முதல் அமலுக்கு வருவதாக இஎஸ்ஐ நெல்லை மண்டல துணை இயக்குனர் அருள்ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.15 ஆயிரம் ஆக இருந்த ஊதிய உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக வருகிற ஜன.1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அடிப்படை மருத்துவம் மற்றும் வேலையின்போது ஏற்படும் விபத்திற்கான மருத்துவம் மற்றும் இதர பலன்களை பெற முடியும்.

மேலும் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் இதுவரை பதிவு செய்யாமல் உள்ள பழைய மற்றும் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் 2017 மார்ச் 31ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் ெதரிவிக்கும் தேதி முதல் அவர்களது தொழிற்சாலை மற்றும் நிறுவனத்திற்கு இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தப்படும். 

இச்சிறப்பு சலுகை திட்டத்தின்கீழ் மார்ச்சுக்குள் வரும் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதன்பிறகு ஆய்வின்போது சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தது கண்டறியப்படால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இஎஸ்ஐ திட்டத்தில் பல்வேறு பணப்பலன் திட்டங்களும் உள்ளன. தற்காலிக நிரந்தர ஊனம் உள்ள தொழிலாளர்களுக்கு உதவித்தொகை, இறந்தோர் உதவித்தொகை திட்டம் உள்ளிட்டவை உள்ளன.
 இவ்வாறு அவர் கூறினார்.

-தினகரன்நாளேடு

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பிடிஆணை இல்லாமல் கைது செய்யலாமா?



பிடி ஆணை (Warrant) இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று காவலில் வைப்பது, சிறைப்படுத்துவது. மற்றொன்று ஒரு வழக்கை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி, மறு விசாரணைக்கு உத்தரவிடுவது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுதான் வாரண்ட்.

குற்றமிழைத்தவர்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல்துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.

குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும்வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவர் தப்பித்து ஓடிவிடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்திர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்துவிட முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன், இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை. ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக் கூடாது.

காவல்துறையினரேகூட எல்லாவிதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable Offence அதாவது பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல்துறையால் சம்பந்தப்பட்ட குற்றவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. இதுவே Non-Cognizable Offence அதாவது, காவல்துறை, அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Judicial Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்ய முடியும்.

எவையெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது, பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப் பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி என்ன குற்றங்களுக்கு, என்ன தண்டனை என்பதும் விதிக்கப் பட்டிருக்கிறது. பிடி ஆணை குற்றம் எது, பிடி ஆணை இல்லாக் குற்றம் எது, ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் எது, அல்லது ஜாமீனில் விடமுடியாதக் குற்றம் எது என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் எல்லாம் Cognizable Offence  என்று  வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குக் கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் Non-Cognizable Offence என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்திற்கு மூன்றாண்டுகளுக்கு குறைவாகத்தான் சிறைத் தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் Cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள் (Adultery) போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அய்ந்தாண்டு களுக்கு மேலான சிறைத் தண்டனை வழங்கப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை Non-Cognizable  குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.

முக்கியமாக காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்பதில்லை. பொதுமக்களில் யாரேனும் ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். எனவே, கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திர மாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதேயாகும்.

குற்றவாளியைக் கைது செய்கிறேன் என்ற பேரில், குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இவை பொது மக்களுக்கு மட்டும் அல்ல, காவல் துறைக்கும் உள்ள வரைமுறை. ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைத்தான் பிரயோகிக்க வேண்டும். யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்லாமல் பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்.

காவல்துறையினர் வாரண்ட்டை நிறை வேற்றும்போது, குற்றம் சாட்டப் பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாரண்டை நிறைவேற்றவிடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகக் கருதப்படும்.

 -உண்மை,1-15.1.17