சனி, 15 ஆகஸ்ட், 2015

ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும்


வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை தொகையைத்தான் முன்பணமாக பெற வேண்டும்
சென்னை, ஆக.9 சென்னை 13-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், நியமித் துல்லா என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ஹரிகரராஜன் என்பவர் தன் வீட்டில் வாடகைக்கு இருப்பதா கவும், கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் முதல் 2008-ஆம் ஆண்டு ஜனவரி வரை வேண்டுமென்றே வாடகை கட்டணத்தை தராமல் இருந்து வருகிறார். எனவே, ஹரிகரராஜனை என் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தர விடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு, ஹரிகரராஜன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் கூறுவது தவறு என்றும், வீட்டு வாடகை பணத்தை மணியார்டர் மூலம் அனுப்பியதை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சி.சசிகுமார் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:-
மனுதாரர் வீட்டில் எதிர்மனுதாரர் ஹரிகர ராஜன் வாடகைக்கு இருந்து வருகிறார். இதற் காக மாதம் ரூ.2,500 வாடகை கட்டணமும், 10 மாத வாடகைக் கட்டணமான ரூ.25 ஆயிரத்தை முன் தொகையாகவும் வீட்டின் உரிமையாளருக்கு, அவர் கொடுத்து வந்துள்ளார். தற்போது, 11 மாத வாடகை தரவில்லை என்று வீட்டின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால், 9 மாத வாடகை கொடுத்துள்ள தற்கான ஆதாரங்களை ஹரிகரராஜன் தாக்கல் செய்துள்ளார். 2 மாதம் வாடகை கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்ப தால், வீட்டின் உரிமையா ளருக்கு அவர் 2 மாத வாடகை கொடுக்க வேண்டும்.
அதே நேரம், 1996-ஆம் ஆண்டு கே.நரசிம்மராவ் - டி.எஸ்.நசிமூதீன் அகமது ஆகியோரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வீட்டை வாடகைக்கு கொடுக்கும் உரிமை யாளர்கள், வாடகைதாரர் களிடம் இருந்து ஒரு மாத வாடகை கட்டணத்தைத் தான் முன்பணமாக பெற வேண்டும். ஒருவேளை அதிக தொகை வசூலித்து இருந்தால், அந்த கூடுதல் தொகையை திருப்பிக் கொடுக்கவேண்டும். அல்லது வாடகை கட்டணத்தில் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், மனு தாரர் நியமியத்துல்லா, ரூ.25 ஆயிரம், அதாவது 10 மாத வாடகைத் தொகையை முன்பணமாக வாங்கி யுள்ளார்.
எனவே, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரூ.2,500-அய் முன்பணமாக வைத்துக் கொண்டாலும், மனுதார ரிடம் கூடுதலாக ரூ.22,500 உள்ளது. அதில், 2 மாத வாடகை கட்டணத்தை, (ரூ.5 ஆயிரத்தை) கழித் தாலும் ரூ.17,500 வீட்டின் உரிமையாளரிடம் உள்ளது. எனவே, வீட்டின் உரிமை யாளரிடம் இவ்வளவு பெரிய  தொகை இருக்கும் போது, ஹரிகரராஜன் வேண்டுமென்றே வாடகை தொகையை கொடுக்காமல் உள்ளார் என்று கூறுவதை ஏற்கமுடியாது. அவரை வீட்டை விட்டு வெளி யேற்றக்கோரி தாக்கல் செய் யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
விடுதலை,9.8.15

வியாழன், 30 ஜூலை, 2015

மணமான பிறகும் மனைவியுடன் கட்டாய உடலுறவு குற்றமே! நீதிமன்றம் தீர்ப்பு


புதுடில்லி, ஜூலை 17_ டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மணமான பின் னர் மனைவியுடன் கட் டாய உறவு கொள்ளும் பாலியல் வன்செயலைக் குற்றமாக அறிவித்திட வேண்டும் என்று கோரப் பட்டது.
அவ்வழக்கில் மனைவி யிடம் பாலியல் வன்செய லில் ஈடுபடும் கணவன்மீது இந்திய தண்டனைச் சட் டத்தின்படி குற்றமாகக் கருதி தண்டனை அளிக் கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது
தன்னைவிட வயதில் குறைவான மனைவியிடம் உறவு கொள்வதை பாலி யல் வன்செயலாகக் கருதிட முடியாது என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாது ரையில் குறிப்பிட்டுள்ளார்.
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ரோகினி மற்றும் ஜயந்த் நாத் ஆகியோர் கூறுகையில், இந்தப்பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையே இவ்வழக் கிலும் தொடருகிறது. ஆகவே, இவ்வழக்கினுள் நாங்கள் நுழைய விரும்ப வில்லை. உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது போன்றே இப்போது இம் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப்பாலியல் வன் கொடுமைகுறித்த வழக்கைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு திருத்தப் பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375இன்கீழ் விதிவிலக்கினை அளிப்ப தற்கானத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து ரிட் பவுண் டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பொதுநல வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக் குத் தொடுக்கப்பட்டது. அம்மனுவில், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375 15வயதுக்கு மேற்பட்ட மனைவியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் கணவனைக் காப்பதாகவே உள்ளது. இது அரசமைப் புக்கு விரோதமானது. அரசமைப்பின் பிரிவு 14இன்கீழ் மணமான ஒரு பெண்ணுக்கு உறுதி அளிக் கப்பட்டுள்ள சம உரிமை யினை மீறுவதாக இருக் கிறது. பாலியல் வன்செயல் களில் அரசமைப்பு பாகு பாடுகளைக் கொண்டுள் ளதாக இருக்கக் கூடாது. பாதிக்கப்படுபவர் மண மான மனைவி என்பதா லேயே கணவன் தப்பிக்கக் கூடாது.
மத்திய அரசின்சார்பில் வாதுரைத்த அரசு வழக் குரைஞர் சஞ்சய் ஜெயின் கூறும்போது, இதே போன்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவில் மண மானபின்னர் தம்பதியரில் கட்டாயமான உறவுகொள் வது என்கிற பாலியல் வன்செயல் குற்றமே என்று குறிப்பிட்ட ஜெ.எஸ். வர்மா குழுவின் பரிந் துரை, மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 16.12.2012 அன்று டில்லியில் கொடுமையான கூட்டுப் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள்குறித்து விசா ரணை மேற்கொள்வதற் காக வெர்மா குழு அமைக் கப்பட்டது.
மணமான பின்னர் பாலியல் வன்செயல் என்பதைக் குற்றம் என்று அமெரிக்க அய்க்கிய நாடு கள், அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து, தென்னாப் பிரிக்கா மற்றும் கனடா உள்-ளிட்ட பல்வேறு நாடு களில் பன்னாட்டளவில்  குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரின் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டது.

-விடுதலை,17.7.15

.

புதன், 29 ஜூலை, 2015

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை
உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 8_ பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப் பதை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு  பிறப் பித்துள்ளது. இது தொடர் பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசு களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில்  கூறப்பட்டுள்ளதாவது: திருமண உறவைத் தாண்டியும் சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர்.
அல்லது சில பெண்கள் தாங்கள் மட்டுமே குழந் தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது. அதனால் தாயின் அடை யாளம் கண்டிப்பாக தெரியும்.  சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை சேர்க்க தாய் விரும்பாமல் இருக்கலாம்.
இதுபோன்ற  கார ணங்களால் ஒரு குழந்தை யின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பி டப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. சட்டங்கள் மிகவும் வலு வானவை, அடிப்படையா னவை. அதே நேரத்தில் மாறி வரும் காலசூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை. நாட்டில்  பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப் பட வேண்டும்.
எந்தக் கார ணம் கொண்டும் பிறப்பை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது. இதை  அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். குழந் தையின் பிறப்பு சான்றித ழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று  கட்டாயப்படுத்தக் கூடாது. அது அக்குழந்தையின் தாயின் விருப்பமாகவே இருக்க வேண்டும். இவ் வாறு உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
-விடுதலை,8.7.15

சனி, 25 ஜூலை, 2015

33ஆயிரம் கோடி கடவுள்கள்- உச்ச நீதி மன்றம் கருத்து



-தினத்தந்தி,25.7.15

கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை உயர்நீதிமன்றம் தீர்ப்பு



சென்னை, ஜூலை 24- கொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை யிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.சந்தோஷ் யாதவ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சட்டப்படிப்பை முடித்து விட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக் குரைஞராக பதிவு செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் விண்ணப்பம் செய்தேன். ஆனால் என் மீது விழுப்புரம் மாவட்டத்தில் கொடும்பாவி எரித்த வழக்கு நிலுவையில் உள்ளது என்று காரணம் கூறி என் விண்ணப்பத்தை பார் கவுன்சில் நிராகரித்துவிட்டது. ஆகை யால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-இன் கீழ் மனுதாரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, தீ மற்றும் எரிபொருட் கள் மூலம் பொதுமக்களுக்கு காயத்தை உருவாக்குதல் அல்லது அபாயத்தை ஏற்படுத்தல் குற்றம் என்று கூறுகிறது. இந்த சட்டப்பிரிவை கவனத்துடன் பரிசீலிக்கும்போது, கொடும்பாவியை எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்பது தெளி வாகிறது. எனவே கொடும்பாவி எரிப்பதற்கு தண்டனை எதுவும் இல்லாததால், தீ மற்றும் எரிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு காயம், அபாயம் ஏற்படுத்துதல் என்ற சட்டப்பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். கொடும்பாவி எரிப்பது என்பது இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே, கொடும்பாவி எரிப்பது என்பது சட்டப்படி குற்றம் இல்லை. அதனால், மனுதாரர் மீதான வழக்கின் அடிப்படையில் அவர் குற்றப் பின்னணி கொண்ட நபர் என்று கூற முடியாது. இந்த மனுவை ஏற்றுக் கொள்கிறோம். அவரது விண்ணப் பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள் ளனர்.
-விடுதலை,24.7.15

திங்கள், 20 ஜூலை, 2015

பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு

பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தது என்ன?
ராஜஸ்தான் மகளிர் வளர்ச்சித் திட்டத்தில் சத்தீன் திருமதி பன்வாரிதேவி குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ராம்கர்ன் குர்ஜார் என்பவரின் ஒரு வயதுக் குழந்தையின் திருமணத்தை பன்வாரி தடுத்து நிறுத்தினார். அந்த ஆசாமியோ அந்தப் பகுதியில் பிரபலமானவர், விளைவு, பன்வாரி தன் கணவரின் எதிரிலேயே கொடுரமான முறையில் அய்ந்து கொடியவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். (1992  செப்டம்பர்). பி.ஜே.பி. ஆட்சி இதனைக் கண்டுகொள்ளவேயில்லை. கடும் எதிர்ப்புக் கிளர்ந்து எழுந்த பிறகே அய்ந்து மாதங்கள் கழித்தே குற்றவாளிகள் கைது செய்யப்-பட்டனர். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும், பன்வாரி கிராமத்திலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டார்.
வழக்குத் தொடுக்கப்பட்டதோ 1994 அக்டோபரில். டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் சொன்னது என்ன தெரியுமா? பான்வாரியை  உயர்ஜாதி பிராமணர்கள் எப்படிக் கற்பழித்திருக்க முடியும்? என்பதுதான் அந்தக் கேள்வி. வழக்கு தள்ளுபடியும் செய்யப்-பட்டது. (Economic Political Weekly 25.11.1995)
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. (10.1.1996)

வெள்ளி, 10 ஜூலை, 2015

அறிவோம் சட்டம் - (4) மணக்கொடை (வரதட்சணை) தடுப்புச் சட்டம், 1961



விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர். அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்ற வைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள். 
4. மணக்கொடை (வரதட்சணை) தடுப்புச் சட்டம், 1961
மணக்கொடை கொடுப்பதையோ, வாங்குவதையோ தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. மணக்கொடை என்பது திருமணம் தொடர்பாக தரப்படும் சொத்து அல்லது மதிப்பு மிக்க கடனீட்டு ஆவணங்கள் ஆகும், ஆனால் பரம்பரை பரம்பரையாக மணமகளின் பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ திருமணத்தின்போது அளிக்கும் அன்பளிப்புகள் மணக்கொடை என கருத முடியாது. முகம்மதியர் கொடுக்கும் டோவர் அல்லது மஹர் மணக்கொடை ஆகாது.
யாரேனும் ஊடகங்களின் வாயிலாகவோ அல்லது மணமகள் உறவினர் வேறு வகையிலோ, திருமணத்திற்காக சொத்தோ அல்லது பணமோ கேட்டு விளம்பரம் செய்தால் ஆறுமாதத்திலிருந்து அய்ந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து தண்டனைக்குள்ளாவார்கள். அவ்வாறு விளம்பரம் செய்தது தண்டனைக்குரிய குற்றமாகும். மணக்கொடை தர அல்லது பெற ஏதேனும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் சட்டத்தின் பார்வையில் அது செல்லாததாகும். எனவே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மணக்கொடையாக கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பித்தரக்கோரி வழக்குப் போட முடியாது. திருமணம் நடைபெறவில்லையென்றாலும் கூட அப்பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
மணக்கொடையாக பெறப்பட்ட பணத்தை வாங்கிய நாளிலிருந்து அல்லது திருமண நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வாங்கியவர் மணப்பெண்ணிடம் தந்து விட வேண்டும். மணக்கொடை என்பது மணப்பெண் அல்லது அவளது வாரிசுகளின் நலனுக்காகத்தான் இருக்க வேண்டும்., அவ்வாறு திருப்பித்தராவிட்டால் சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டனைக்குள்ளாக நேரிடும். அவ்வாறு தண்டனை அளிக்கப்பட்ட பின்னரும் கூட மணக்கொடை பொருட்களை கேடடு உரிமையியல் வழக்கு தொடரலாம். அவ்வாறு மணக்கொடையை திரும்பப் பெற உரிமையுள்ள மணப்பெண்.
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குள் இயற்கைக்கு மாறான முறையில் இறக்க நேரிட்டால், மணக்கொடை அவளின் குழந்தைகளுக்கோ குழந்தைகள் இல்லையென்றால் அவளின் பெற்றோருக்கோ அளிக்கப்படவேண்டும். மணக்கொடை பெற்றதாக அல்லது அதற்குத் துண்டியதாக எவர்மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டால் அந்த நபர், தான் குற்றவாளி அல்ல என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டவராவார்.
மணக்கொடை தடுப்புச் சட்டம் 1961-ல் இயற்றப்பட்டாலும் கூட அதன் பின்னரும், கணவனாலும், அவனது உறவினராலும் பெண்ணுக்கு வன்கொடுமைகள் அதிகரித்த தாலும், பரிதாபத்திற்குரிய பெண்கள் தற்கொலை செய்ய நேரிட்டதாலும், அவ்வாறான மணக்கொடை மரணங்களை தடுப்பதற்காகவும் கணவனின் உறவினர்களால் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுப்பதற்காகவும், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாடசியச் சட்டம் ஆகியவற்றில் பொருத்தமான திருத்தங்களை அரசு கொண்டு வந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304(ஆ) மற்றும் பிரிவு 498 (அ) ஏற்படுத்தப்பட்டது. பிரிவு 304(ஆ) என்பது ஒரு பெண் திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தீக்காயங்கள் அல்லது உடலில் காயங்கள் ஏற்பட்டு அசாதாரணமான சூழலில் இறக்க நேரிட்டால் அது மணக்கொடையால் ஏற்பட்ட மரணம் எனக் கருதப்படும். கணவன் அல்லது அவனது உறவினர்களால் அம்மரணம் ஏற்பட்டதாகவும் கருதப்படும். இயற்கைக்கு மாறான சூழலில் மரணம் ஏற்பட்டிருந்தாலும் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியமல்ல. தற்கொலையாக இருந்தாலும் கூட அது பிரிவு 306(ஆ)-ன் படி மணக்கொடை மரணம்என்றே கருதப்படும். அப்பிரிவு 1896-இல் புதிதாக இணைக்கப்பட்ட சட்டத்திருத்தமாகும்.
ஒரு கர்ப்பிணிபெண் 100% தீக்காயங்களால் நடு இரவில் கணவன் வீட்டில் எவ்வித அலறல் சத்தமும் இல்லாமல் இறக்க நேரிட்டால் அது தற்கொலையல்ல கொலையே என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரு பெண்ணை அவளது மாமியாரோ, நாத்தனாரோ மணக்கொடை குறைவாக கொண்டு வந்ததாகவோ பெண் குழந்தை பெற்றதற்காகவோ அவமானப்படுத்தி தற்கொலைக்குத் துண்டினால் அது மணக்கொடை மரணம் என்றே கருதப்படும்.
ஒரு பெண் மரண வாக்குமூலம் தரும்போது நீதித்துறை நடுவரிடம் வாய் பேச முடியாத நிலையில் தலையசைப்பு மூலமோ செய்கைகளின் மூலமாகவோ, தான் கணவனால் எரிக்கப்பட்டதாகவும் விபத்து அல்ல என்றும் தெரிவித்தால் அந்த மரண வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு எதிரிக்குத் தண்டனை வழங்கலாம்.
அப்பெண்ணின் மரணவாக்குமூலம் தன்னிச்சையாகவும் நம்பும் வகையிலும் இருந்தால், அதனடிப்படையிலேயே தண்டனை வழங்க முடியும். திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் இயற்கைக்கு மாறான வகையில் தண்ணீரில் மூழ்கியோ, விஷமருந்தியோ, தீக்காயங்களாலோ, துக்கிலிட்டோ, கழுத்து நெரிக்கப்பட்டோ இது போன்ற முறைகளில் இறந்தால் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது முக்கியமல்ல, அது பிரிவு 304 ஆ-ன் படி மணக்கொடை மரணம் என்றே கருதப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (அ) என்பது 1983-இல் செய்யப்பட்ட சட்டத்திருத்தமாகும்.
இப்பிரிவின்படி ஒரு பெண்ணை அவளது கணவரோ அல்லது கணவரின் உறவினரோ மணக்கொடை தொடர்பாக வன்கொடுமை செய்தால் அவர்கள் மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.
குடிபோதையில் இருப்பது, தாமதமாக வீட்டிற்கு வருவது போன்ற பழக்கங்களோடு, மனைவியை அடிப்பதும் மணக்கொடை கேட்பதும் வன்கொடுமையாகும்.
ஆனால் கணவன் குடிப்பழக்கம் உள்ளவர் மற்றும் தாமதமாக வீட்டிற்கு வருபவர் என்பது மட்டுமே வன்கொடுமை ஆகாது. கணவர் அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்யத் தூண்டினார் அல்லது மணக்கொடைக்காக வற்புறுத்தினார் என்பதை குற்ற முறையிடுவோர் தெளிவாக நிரூபிக்க வேண்டும். திருமணம் ஆகாமலேயே ஒரு ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்ணுக்கும் இது போன்ற வன்கொடுமையோ துன்புறுத்தலோ ஏற்பட்டால் பிரிவு 304(ஆ) இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாம்.
வன்கொடுமைக்கோ, துன்புறுத்தலுக்கோ, ஆளான பெண் தன் கணவனோடு இணைந்தபின் புகாரைத் திரும்பப் பெற்று சமரசமாகப் போவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கலாம். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (அ) தவறாகவும் முறைகேடாகவும் பயன்படுத்துகிற சந்தர்ப்பங்களும் உண்டு. பிரிவு 498(அ)-ம் பிரிவு 304(ஆ) தனித்தனியான வேறுபட்ட சட்டப்பிரிவுகளாகும்.
திருமணத்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் ஏற்படும் வன்கொடுமை பற்றி இருபிரிவுகளும் விவரித்தாலும், பிரிவு 304(ஆ) பிரிவின் கீழ விடுதலையான நபர் 498(அ) பிரிவின் கீழ் தண்டனை பெற வாய்ப்பு உண்டு. 304(ஆ) பிரிவின் கீழான குற்றசசாட்டிற்கு மணக்கொடை கேட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
 (தொடரும்)