ஞாயிறு, 2 அக்டோபர், 2016

144 #தடைஉத்தரவு #என்றால்

144 #தடைஉத்தரவு #என்றால்
#என்ன
அந்த சட்டப்பிரிவு என்னசொல்கிறது என்பதைஇப்போது பார்க்கலாம்.
மக்களின் உயிருக்கு ஆபத்து
ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு, பொதுஅமைதி,கலவர தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும்
குற்றவியல் நடைமுறைச்சட்டப்பட்டி 144தடை
உத்தரவுப் பிறப்பிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும்,
குறிப்பிட்ட பகுதியிலும் 144
தடை உத்தரவைப் பிறப்பிக்கலாம்.
#மாவட்ட_ஆட்சியர், தமது
ஆளுகைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் 144 தடைஉத்தரவை பிறப்பிக்க முடியும்.
144 தடை அமலில் உள்ள
பகுதியில், பொது இடங்களில் 5பேருக்குமேல் கூடுவது குற்றம். பொதுஅமைதிக்குகுந்தகம் ஏற்பட்டால்,
கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள்.
நட்புடன் உங்கள் தோழி. ..!!!
ராஜநந்தினி. .பி.ஏ.பி.எல்.எம். எல்

#யாரெல்லாம் #வாரிசு



சட்டம் அறிவோம்
வாரிசுகள் யார் என்பதை தனியாக வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த கட்டுரை. ஒருவருக்குப் பிறகு அவரது பிள்ளைகள், மனைவி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வாரிசாக இருக்கலாம்.
இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா? ஆனால் யாரெல்லாம் வாரிசாக முடியாது அல்லது வாரிசு என்பதற்கான சட்ட அனுமதிகள் ஏன் வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டால் வாரிசு சான்றிதழின் அவசியம் புரிந்து விடும்.
அரசுப் பணியிலிருந்து ஒருவர் இறந்துவிடுகிறார்.
முன்னுரிமை அடிப்படையில் அந்த வேலைக்கு அவரது மகனோ/ மகளோ வாரிசு என்கிற அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
இப்போது அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களின் மூலமோ மட்டும் உறுதிபடுத்த முடியாது.
சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப் படுகிறது.
நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும், சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை / உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது.
இந்த வாரிசு சான்றிதழ் வட்டாட்சியர் மூலமாக வாங்க வேண்டும்.
வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை, குடும்ப உறுப்பினர்கள், சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார்.
ஆனால் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன.
எந்தெந்த சூழ்நிலைகளில் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது
ஒரு ஆண் இறந்துவிட்டார் அல்லது காணாமல் போனவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் என்றால் அவர் மூலமான சொத்துக்கள் மற்றும் பண பலன்களை பெறுவதற்கு சட்டபூர்வமான சான்றிதழ் தேவை.
தங்களது சொத்துகள் குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்துகொள்ளும் வாரிசுகள் அதன் மீதான உரிமை பெறுவதற்கு வாரிசு சான்றிதழ் தேவை
#யாரெல்லாம் #வாரிசுகள்
ஒரு ஆண் இறந்துவிட்டால் அவரது அப்பா, அம்மா, மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வாரிசுகளாக கருதப்படுவார்கள்.
இறந்தவரின் இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் இருப்பின் அந்த குழந்தைகளும் வாரிசாக கருதப்படுவர். இந்த வகையில் நேரடி வாரிசுகள் இல்லாதவர்களுக்கு அவர்களது நெருங்கிய ரத்த உறவுமுறை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வாரிசு உரிமை கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.
இறந்தவரின் பெயரிலுள்ள முதலீடுகள், வங்கி சேமிப்பு, மற்றும் பண பலன்களை வங்கி அல்லது சம்பந்தபட்ட நிறுவனங்கள் நீதிமன்ற உத்தரவு பெறாத வாரிசுகளுக்கு அவற்றை உரிமை மாற்ற தயங்குவார்கள்.
ஒருவருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கும்பட் சத்தில் இவர்களில் யாரேனும் ஒருவரிடம் கொடுக்க முடியாது.
அல்லது பிற்காலத்தில் வேறு நபர்கள் உரிமை கோரி வந்தால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் நிறுவனங்களுக்கு ஏற்படும்.
இதனால் சம்பந்தப்பட்ட வாரிசுகள் நீதிமன்றத்தை அணுகி சட்டபூர்வ உரிமை வாங்கி வருவது இறங்குரிமை சான்றிதழ் எனப்படுகிறது .
இதனைப் பெறுவதற்கு 20 ரூபாய் பத்திரத்தாளில் இறந்தவருடைய வாரிசுகள்
அனைவரும் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பண
பலன்களை அல்லது வேலையை கொடுப்பதற்கு தங்களுக்கு எந்தவித
ஆட்சேபணையும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட்டு
சம்பந்தப்பட்ட வட்டாட்சி அலுவலர் அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இறந்தவரின் வாரிசுகள் நேரடியாக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து வாரிசு சான்றிதழ் வாங்கலாம்.
இதற்கு சட்டபூர்வமான குடும்ப ஆவணங்களே சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் குறிப்பிட்ட நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருந்து அவர்களுக்குள் வாரிசு குழப்பங்கள் ஏற்பட்டால் வட்டாட்சியர் விண்ணப்பத்தை நிராகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
அதுபோல காலம் கடந்து வாரிசு சான்றிதழ் கேட்கிறபோதும், சொத்துக்கான உரிமையாளர் இறந்த தேதி தெரியாமல் இருந்தாலும் வட்டாட்சியர் வாரிசு சான்று விண்ணப்பித்தை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற நிலைமைகளில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருபவருக்கு வாரிசு சான்றிதழை வட்டாட்சியர் வழங்குவார்.
குறிப்பிட்ட சொத்தின் உரிமையாளருக்கு பல வாரிசுகள் இருந்து அவர்கள் தனித்தனியாக நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும் போது ஒரே உத்தரவின் மூலமும் நீதிமன்றம் வாரிசுகளை அறிவிக்கச் செய்யும்.
குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் குடும்பத்தின் மூத்த நபர் வாரிசாக அறிவிக்கப்படுவார்.
போலியான ஆவணங்கள் மூலம் வாரிசு சான்றிதழ் பெறப்பட்டிருப்பின் அந்த சொத்துக்களின் உண்மையான வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றதை அணுகி அந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.
நட்புடன் உங்கள் தோழி. ..!!
ராஜநந்தினி பி.ஏ.பி.எல்

கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?



#சட்டம் #அறிவோம்

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1) கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.

2) கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும்.

3) கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

4) கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5) தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

6) காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்.

7) கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

8) கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும்.

10) கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

11) கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

நட்புடன் உங்கள் தோழி. ...!!!👇திருவாரூர் ராஜநந்தினிி #திருமாவளவன்
-முக நூல்,2.10.16

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:
20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள்படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.
1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-
வழக்கு தொடர தேவையான தகுதிகள் :
1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.
- tnpgtakarur.in

Consumer Protection Act 1986
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது.
- tnpgtakarur.in

சனி, 3 செப்டம்பர், 2016

தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி

சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்கள் கொடுமைப்-படுத்தப்படுகிறார்கள் என்பது ஒரு கடும் உண்மையாகும். இதில் இந்தியா விதிவிலக்கு இல்லை. பெண்களுக்கான பொருளாதார சதந்திரம் மறுக்கப்படுகிறது.

அவர்களுடைய வாழ்க்கைக்கு அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரை பெண்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதாவது, குடும்பத்துக்குள்ளும், பணிபுரியும் இடங்களிலும், சமுதாயத்திலும் வேறுபாடுகள், இடைஞ்சல்கள், வன்முறை முதலிய கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். இந்தியாவில் (தொழிற்சாலை அல்லது பணிபுரியும் இடத்தில்) பெண்களின் நிலைமையை மேம்படுத்த நாடாளுமன்றம் பெருமளவிலான சட்டதிட்டங்களையும், பெண்களுக்கான விசேஷ ஷரத்துக்களையும் கொண்டுவந்துள்ளது.

அவற்றுள்: தொழிலாளர் நஷ்ட ஈடு சட்டம், 1923; கூலி அளித்தல் சட்டம், 1936; தொழிற்சாலைகள் சட்டம், 1948; பிரசவ ஆதாய சட்டம், 1961; குறைந்தபட்ச கூலி சட்டம், 1948; தொழிலாளர்கள் மாநில ஆயுள் காப்பீடு சட்டம், 1948; மற்றும் ஓய்வூதியங்கள் சட்டம், 1987; முதலியன அடங்கும்.

தொழிலாளர் சட்டம் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஷரத்து.

தொழில்துறை சட்டங்களின்படி பெண்கள் உடலால், மனதால், இயற்கையால் தனிப்பட்ட தன்மைகள் உடையவர்கள் என்பதால் தொழில்முறை சட்டங்களின்படி அவர்களுக்கு  விசேஷ நிலை வழங்கப்படும். பணி சம்பந்தப்பட்ட சில சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தில் அமலானது. சில சுதந்திரத்துக்குப் பின்னானது. இந்தச் சட்டங்கள் அமலாக்கத்திற்-கான முக்கிய இலக்குகள் பெண்களின் திறமையை அதிகரித்தல், அவர்கள் உபயோக-மான சேவைகளில் ஈடுபடுதலை அதிகரித்தல், அவர்களுடைய குழந்தைகளின் நலனை உறுதி செய்தல், சம வேலைக்கு சம சம்பளம் போன்றவைகளாகும். பெண்கள் சம்பந்தப்பட்ட முக்கிய தொழிலாளர் சட்டங்கள் கீழ்க்-கண்டவாறு:

1. தொழிற்சாலைகள் சட்டம், 1948

தொழிற்சாலைகள் சட்டம் என்பது தொழிலாளர் நலமும் ஒரு பகுதியாக சேர்ந்தது. அதன்படி ஆரோக்கியம், பாதுகாப்பு, நலன், வேலை நேரங்கள், விடுப்பு, இளைஞர்களையும் பெண்களையும் வேலையில் சேர்த்தல் குறித்து கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மிருதுவான, இளகிய தோற்றங்கள் காரணமாக பெண்களுக்காக விசேஷ ஷரத்துகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு/ஆரோக்கிய திட்டங்கள்

1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 22(2)இல் பிரைம் மூவர் அல்லது டிரான்ஸ்மிஷன் மெஷினரி வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது அதை சுத்தம் செய்யவோ, அதன் பகுதிகளுக்கு எண்ணெய் ஊற்றுதலோ, ஏதாவது பகுதியைப் பொருத்தவோ பெண்களை அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால், அவ்வாறு சுத்தம் செய்யும்-பொழுதும், எண்ணெய் விடும்பொழுதும், பகுதியைப் பொருத்தும் பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் மெஷின் அல்லது அதனை அடுத்துள்ள மெஷின் மூலம் பெண்களுக்கு அடிபடுவதற்கான ஆபத்து உள்ளது. 1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 27, காட்டன் ஓபனர் பணியில் உள்ளபொழுது தொழிற்சாலையின் எந்தப் பகுதியிலாவது காட்டனை அமிழ்த்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கிறது.

இரவுநேரப் பணிக்குத் தடை

1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 66(1)இன்படி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லாது தொழிற்சாலையின் எந்தப் பகுதியிலும் பெண்களின் தேவையோ அவர்களை பணிபுரிய அனுமதிப்பதோ கூடாது.

¨    பீடி மற்றும் சிகார் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டம், 1966 காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லாது தொழிற்சாலையின் வளாகங்களின் எந்தப் பகுதியிலும் பெண்களின் தேவையோ அவர்-களை பணிபுரிய அனுமதிப்பதோ கூடாது எனக் கூறுகிறது.

¨    1952இன் சுரங்கங்கள் சட்டம் பிரிவு(1)(தீ)  எந்த பெண்களும் சுரங்கத்தின் மேல்பகுதியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லாது பெண்கள் பணிபுரிவதைத் தடுக்கிறது.
பெண்களின் பொது நலனுக்கான நிபந்தனைகள்

¨    இரவு நேரங்களில் பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்தல்.
¨    ஆபத்து விளையும் இடங்களில் பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்தல்.
¨    காட்டன் ஓபனர் பணியில் உள்ள-பொழுது காட்டனை அமிழ்த்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல்.
¨    தினசரி வேலை நேரத்தை நிர்ணயித்தல்.
¨    பராமரிப்பு அமைப்புகள் அமைத்தல்.

சாதாரணமாக 30 பெண்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை ஒவ்வொன்றிலும் அப்பெண்களின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உபயோகத்திற்காக ஒரு உகந்த அறை இருக்க வேண்டும். கழுவுதல். குளித்தல் வசதிகள் இருக்க வேண்டும். பெண்களுக்கு துவைக்கவும், குளிக்கவும் தனி மறைவிடம் இருக்க சட்டம் வற்புறுத்துகிறது. தொழிற்-சாலைகள் சட்டம் ஒரு தொழிற்சாலை முதலாளியை போதுமான எண்ணிக்கையில் கீழ்க்கண்டவைகளைப் பராமரிக்கக் கட்டாயப்-படுத்துகிறது.

¨    பெண்களுக்கு தனி கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம்.
¨    ஓய்வெடுக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதிகள்.
¨    அவசியமான ஆதாயங்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951, சுரங்கங்கள் சட்டம் 1952, பீடி மற்றும் சிகார் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டம், 1966, ஒப்பந்தத் தொழிலாளர் (விதிமுறை மற்றும் நீக்குதல்) சட்டம் 1970, மாநிலங்கள் இடையில் குடியேறும் தொழிலாளர்கள் (பணி விதிமுறை மற்றும் பணிகளின் நிபந்தனைகள்) 1979இல் மேற்கூறிய எல்லா ஷரத்துக்களும் கூறப்பட்டுள்ளன.

2. தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948

இந்தியாவின் ஒரு மிக முக்கியமான சமூக சட்டபூர்வ அமைப்பான தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம் வெவ்வேறு நிகழ்வுகளுக்கான பல்வேறு ஆதாயங்கள் அளிப்பதற்காக அமலாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் காப்பீடு செய்த பெண் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பிணி ஆதாயம், செயலிழப்பு ஆதாயம், மருத்துவ ஆதாயம், இறுதிச் சடங்கு செலவுகள் ஆதாயம் என்பவை காப்பீடு செய்த ஆண் தொழிலாளர்-களுக்கும் கிடைக்கும். இருந்தபோதிலும், இந்த ஆதாயங்கள் அல்லாது, காப்பீடு செய்த பெண் தொழிலாளர்களுக்கு, பிரசவ ஆதாயம், பிரசவ சமயத்தில் ஏற்படும் அவசர சிகிச்சைகள், கருவுறுதல், கருச்சிதைவு, கருவுறுதலின் மூலம் ஏற்படும் வியாதிகளான குறைப்பிரசவம், கருச்சிதைவு அல்லது இறப்பு முதலியவற்றுக்-கான உதவிகள் கிடைக்கும். காப்பீடு செய்த பெண்களுக்கு பேறு காலத்தில் பிரசவ ஆதாயம் 12 வாரங்கள். அதில் எதிர்பார்க்கும் பிரசவ தேதியிலிருந்து 6 வாரங்கள் முன்பு முதல் கிடைக்கும். காப்பீடு செய்த பெண்கள் அந்த நாள்களில் சம்பளத்திற்காக பணிபுரியாமல் இருந்தால் பிரசவ ஆதாயம் கொடுக்கப்படும். ஒரு காப்பீடு செய்த பெண் இறந்துவிட்டால், பிரசவ ஆதாயம் அவரால் நியமிக்கப்-பட்டவருக்கோ சட்டபூர்வ பிரதிநிதிக்கோ குழந்தை உயிருடன் இருந்தால் முழுக்காலத்-திற்கும், குழந்தை இறந்துவிட்டால், அது வாழ்ந்த வரைக்குமான காலத்துக்கும் கொடுக்கப்படும்.
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948இல் கொடுக்கப்பட்டுள்ள திட்டப்படி பணிபுரிபவர்களின் இடங்களில் உள்ள மருந்தகங்கள் மருத்துவமனைகளை நடத்தும் காப்பீட்டுக் கழகத்திற்கு மாதாந்தர சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதம் முதலாளியும் தொழிலாளியும் பங்களிப்பு செலுத்த வேண்டும். இதன் மூலம் புறநோயாளி, உள்நோயாளி கவனிப்பு, இலவச மருந்துகள், மருத்துவமனை தேவைகள், செலவுகள் செய்ய இயலும். உடல்நிலை காரணங்களுக்காக முதலாளிகளுக்கு அனுப்பப்படும் விடுப்பு சான்றிதழ்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் காயங்கள், பணி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, காயத்தின் தன்மை மற்றும் சம்பாதிக்கும் திறனில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பட்டியலிடப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் நஷ்டஈடு வழங்கப்படும். தொழிலாளர்கள் நஷ்டஈடு சட்டம்போல் அல்லாது பணம் மாதாமாதம் கொடுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுவதை மேற்பார்வை செய்ய மும்முனை அங்கங்களின் அமைப்பு இருந்தபோதிலும், மொத்த செயல்திட்டத்திற்கு இலஞ்சம், திறமைக்குறைவு காரணமாக அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மருத்துவ விடுப்புக்காக தாராளமாக இதனை உபயோகிக்கும் தொழிலாளிகள், நியாயமான மருத்துவ சிகிச்சைக்காக இந்த வசதியை அணுகுவதில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர்கள் ஒட்டு-மொத்த பேரம் மூலம் இதைவிட அதிக வசதிகள் பெற இந்த திட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

- நன்றி: லாயர்ஸ் லைன், மார்ச் 2016
-உண்மை இதழ், 1-15.7.16

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வயதுச் சான்றுக்கு பள்ளிச் சான்றிதல் போதுமானது! -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

உரிமையியல் முறையீடு எண்: 2016ன் 1676
வயதுச் சான்றிதழ் உயர்நிலைப் பள்ளியுடையது அல்ல. ஆனால், மேல்நிலைப் பள்ளியுடையது என்ற காரணம் காட்டி இரண்டாம் பிரதிவாதி அமைப்பு நிராகரித்தது நியாயமானதா என்பதுதான்.
3. மனுதாரர் சமர்ப்பித்த சான்றளிக்கப்பட்ட நகலான சிறீஷாந்தி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, ஷிரட்ஷாபுர், ஹிங்கோலி கொடுத்த பள்ளி விலகல் சான்றிதழ் மேல்நிலைப் பள்ளியுடையது என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. அந்தச் சான்றிதழ் பள்ளிக்கூட முதல்வர் கொடுத்தார். மனுதாரர் அதனுடைய சான்றளிக்கப்பட்ட நகலை முன்வைத்தார்.
4. உயர்நீதிமன்றத்தின் திருப்தியளிக்காத தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
“அமைப்பு அணுகியமுறை நுணுக்கமானது என்றபோதிலும், அமைப்புக்கு தேவைப்பட்ட விதத்திலும் விளம்பரத்தில் கொடுக்கப்-பட்டுள்ள விதத்திலும் மனுதாரர் வயது அத்தாட்சி சமர்ப்பித்திருக்கலாம். விளம்-பரத்தின் நிபந்தனைகளில் சேர்க்கவோ/திருத்தவோ அல்லது மாற்றவோ அமைப்பை அறிவுறுத்துவது உசிதம் அல்ல.
5. தகுதி நிபந்தனை ஷரத்து 2(C)ன் படியான தேவையை மனுதாரர் முன்பே குறிப்பிட்டபடி அனுசரிக்கவில்லை என்ற காரணத்தால் மனு நிராகரிக்கப்படுகிறது. ஷரத்து 2(C) இவ்வாறு கூறுகிறது:
“(c) வயது விண்ணப்ப தேதியன்று (பூர்த்தியான வருடங்கள்) 21 வருடங்களுக்குக் குறையக் கூடாது. பிறந்த தேதி குறிப்பிடப்-பட்டுள்ள மெட்ரிகுலேஷன், அல்லது உயர்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ், அல்லது வாக்காளர் அடையாள அட்டை, அல்லது PAN கார்டு, அல்லது பாஸ்போர்ட், அல்லது வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்க வேண்டும்.’’
6. அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் வாதிடுகையில் சான்றளிக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் தேவை என்று கூறினார். அவர்கள் முன்பு சான்றளிக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழ் அவர்கள் முன்பு இணைக்கப்-பட்டதால் அமைப்பு விண்ணப்பத்தை நிராகரித்ததன் மூலம் நியாயமாக நடந்து கொண்டது. மேலும் சமர்ப்பிக்கையில் தகுதி நிபந்தனையை பூர்த்தி செய்யாத அப்படிப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் அறிந்து கொண்டு அமைப்பு அப்படிப்பட்ட விண்ணப்-பங்களை நிராகரித்தது. மனுதாரர் அதே பிரச்சினையை எழுப்பியுள்ளாரா என்பது தெளிவாக இல்லை.
7. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனையிலிருந்து வயது ஆதாரத்திற்கு உறுதிமொழி ஆவணம் சான்றளிக்கப்பட்ட நகல் போதுமானது. இருந்தபோதிலும், தகுதி நிபந்தனையின் தேவையை உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழின் நகல் பூர்த்தி செய்கிறது என்றால் உயர்நிலைப் பள்ளி விலகல் சான்றிதழுக்கும் மேல்நிலைப்பள்ளியின் விலகல் சான்றிதழுக்கும் என்ன வித்தியாசம். அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் வாரியம் கொடுக்கிறது. ஆனால், மேல்நிலைப் பள்ளி விலகல் சான்றிதழ் பள்ளிக்கூடம் கொடுக்கிறது. பள்ளி விலகல் சான்றிதழ் என்றாலே பள்ளியை விட்டு மாணவர் போவதால் பள்ளி கொடுக்கிறது. மனுதாரர் அமைப்பின் முன்பு ‘பள்ளி விலகல் சான்றிதழ்’ தாக்கல் செய்தது இணைப்பு றி1இல் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பின் தேவை வயதின் ஆதாரமாகும். தகுதி நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்களை வயது ஆதாரத்திற்காக ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்போது வயது ஆதாரத்திற்கு உயர்நிலை பள்ளி விலகல் சான்றிதழ் நகலை ஏற்றுக் கொள்ளும்பொழுது சான்றளிக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி விலகல் சான்றிதழின் நகல் வயது ஆதாரத்திற்காக ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது இது ஒரு பொது அறிவு ஆகும். உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை தவறு. நாங்கள் தெளிவுபடுத்தியது நிபந்தனையைத் திருத்தாது.
8. பிரதிவாதி எண் 4குக்காக ஆஜராகும் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் திரு.ஷி.வி.ஜாதவ் அமைப்பின் மதிப்புக்குரிய சட்ட ஆலோசகர் முன்வைத்த வாதங்களை ஆதரித்து மேலும் கூறுகையில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு நிலுவையில் இருக்கும்பொழுது, 4ஆம் பிரதிவாதிக்கு சில்லறைக்கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. அது இங்கு குறிப்பிடப்-பட்டுள்ள மனுதாரர் பங்கேற்க அனுமதிக்கப்-பட்ட பின்னர் அமைப்பு நடத்தும் தேர்வின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும்.
9. அதன்படி, நாங்கள் இந்த முறையீட்டை அனுமதிக்கிறோம். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம். இரண்டாம் பிரதிவாதி அமைப்பை மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிடுகிறோம். அமைப்பால் தகுதி பெற்றவர்களுடன் இங்கு மனுதாரராக உள்ளவரையும் அதில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிடுகிறோம். இன்று முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாக தேவைப்படி நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
-உண்மை,16-30.6.16

சொத்துக்கள் வாங்க சட்டபடியான வழிமுறைகள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தமக்கென்று சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவ்வாறு நிலம் வாங்கும்போது நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நிலத்தைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் நாம் என்னென்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். அது தமிழ்நாடு அரசின் எந்தெந்தத் துறைகளின் கீழ் வருகிறது என்பது பற்றிய விவரங்கள் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நிலத்தை வாங்கும்போது ஆவணங்களை சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக இருக்கிறது. அதைப்பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படையான விஷயமான புல எண் (ஷிuக்ஷீஸ்மீஹ் ழிஷீ) என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
புல எண் (Survey No)
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும், வட்டங்கள் பல உள்வட்டங்களாகவும், உள் வட்டங்கள் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எண் இடப்பட்டுள்ளது. அதற்கு புல எண் (Surve No) என்று பெயர்.
நிலம் தொடர்பான விவரங்கள் பதிவுத்துறை, வருவாய்த்துறை என இரண்டு துறைகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பதிவுத்துறை
ஒரு சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது கிரயப் பத்திரத்தை (Sale Dead) சார்பதிவாளர் (Sub-registrar Office) அலுவலகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும்.
வருவாய்த்துறை
வருவாய்த்துறையில் நிலத்திற்கான அனைத்து விவரங்களும், அரசுப் பதிவேட்டில் பதியப் பட்டிருக்கும். அவை முறையே 1. பட்டா (Patta), 2. சிட்டா (Chitta), 3. அடங்கல் (Adangal), 4. ‘அ’ பதிவேடு ('A' Register), 5. நிலத்திற்கான வரைபடம் FMP ஆகும்.
பட்டா (Patta):
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா. பட்டாவை வைத்துத்தான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பது உறுதி செய்யப்படுகிறது.
மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண், உரிமையாளரின் பெயர், புல எண்ணும் மற்றும் உட்பிரிவும், நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா, நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை _ போன்றவை பட்டாவில் அடங்கியிருக்கும்.
சிட்டா
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட அந்த கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு சிட்டா ஆகும். இதில் சொத்தின் உரிமையாளர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வைக் கட்டிய விவரங்கள் அனைத்தும் இதில் அடங்கும்.
அடங்கல்
கிராமத்தில் இருக்கின்ற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது. பட்டா எண், நிலத்தின் பயன்பாடு போன்ற விவரங்கள் இருக்கும்.
‘அ’ பதிவேடு
பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், ரயத்துவாரி(ர), சர்க்கார்(ச), அல்லது இனாம்(இ), நன்செய்(ந), புன்செய்(பு), மானவாரி(மா), தீர்வு ஏற்படாத தரிசு, புறம்போக்கு, பட்டா எண், மற்றும் பதிவு பெற்ற உரிமையாளரின் பெயர், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை போன்ற விவரங்கள் ‘அ’ பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும்.
நிலத்திற்கான வரைபடம்
நிலத்திற்கான வரைபடம், நிலம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
கிரையப் பத்திரம்
சொத்து வாங்கும்போது அல்லது விற்கும்போது அந்தக் கிரையப் பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். கிரையப் பத்திரத்தில் முக்கியமான பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
எவ்வளவு அளவு
எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது.
சொத்து விவரம்
போன்றவை சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது. பட்டா எண், அது எந்த கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இதில் இருக்கும். நிலம் வீட்டுமனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பற்றிய விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும். கிரையப்பத்திர முதல் தாளின் பின்பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
பதிவு எண் மற்றும் வருடம்
சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
புகைப்படங்களில் சார்பதிவாளரின் கையொப்பம்
பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தின் விவரம்
இரண்டு சாட்சியங்களின் கையொப்பம் மற்றும் முகவரி
மொத்தம் எத்தனைப் பக்கங்கள்,
மொத்தம் எத்தனை தாள்கள்
தமிழ்நாடு அரசின் முத்திரை போன்றவை
1.7.2006ஆம் ஆண்டுதான் கிரையப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும்முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும், சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்-பட்டிருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படம் இருக்காது. 18.05.2009 முதல் இந்த முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு, சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்கு பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
(தொடரும்)
-உண்மை,16.-30.5.16
இது தவிர, ஒவ்வொரு தாளின் இரு பக்கமும், இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனைப் பக்கங்கள் கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும்போது அதன் முன்பக்கம் மட்டும்தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1லிருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும். அதனால் தாள்களின் எண்ணிக்கையும், பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால், சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார் பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக்கொண்டு இலக்கம் கொடுப்பார்கள். அதனால், மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால், பக்கங்கள் மட்டுமே 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை

நாம் வாங்கும் இடம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும்.

நாம் பத்திரம் பதிவு செய்யும்போது அதற்கு முத்திரைத் தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத் தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு  மீதித் தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் டிமான்ட் டிராப்டாக செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் அயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்திவிடலாம். அதற்கு மேல் இருக்கும்பட்சத்தில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும். வங்கி வரைவோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்-பட்டிருக்கும்.

மேலும், பதிவுக் கட்டணமாக மற்றும் கனினி கட்டணம் ரூ.100ம் பதிவு செய்யப்படும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூ.1000 வரையில் பணமாகவும் அதற்கு மேல் வங்கி வரைவோலை-யாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒருபுறம் சொத்து வாங்குபவரும், மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளாடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

பின்னர், சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரிபார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் இருவர் கையொப்பமிடுவர். தற்போது இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில், வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் அனைவரையும் கணினியின் உதவியுடன் நேரடியாக புகைப்படமெடுத்து அவற்றுடன் கைரேகை பதிவினையும் நேரடியாக பதிவு  செய்வதுடன், அலுவலக கோப்பிலும் ரேகை பதிவு செய்யப்பட்டு பின்னர் முறையாக ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையானது மிகவும் பாதுகாப்பானது மற்றும் வரவேற்கத்தக்கது.

பிறகு, பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இடவேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாள்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின்போது வழிகாட்டு மதிப்பிற்கு (Guide line value) 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு மதிப்பு (Guide line value) அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு நிலுவை ஆவணம் (Pending Document) என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (Collector Office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து வழிகாட்டு மதிப்பு (Guide Line Value) சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

வழிகாட்டு மதிப்பு (Guide Line Value) சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide Line Value விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த ஆவணம் (Document) நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

நிலம் வாங்குவதற்கு முன் நாம் நேரடியாக தரகரிடம் சென்று பத்திரங்களைப் பதிவு செய்யாமல், ஒரு வழக்குரைஞரை அணுகி, ஆவணங்களை சரிபார்த்து வாங்கினால், பிற்காலத்தில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் நாமும், நமது வாரிசுகளும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும். ஸீ
-உண்மை,1.-16.6.16