சனி, 18 மே, 2024

மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்



விடுதலை நாளேடு
Published April 30, 2024

புதுடில்லி,ஏப்.30- மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏஅய்) ரத்து செய்துள்ளது.
முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை (பாலிசி) எடுக்க முடியும். ஆனால், புதிய நடைமுறைபடி, வயது வித்தியாசமின்றி யார் வேண்டு மானாலும் புதிய மருத்துவக் காப் பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.
மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று அய்ஆர்டிஏஅய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் கெயில் கூறிய தாவது:
“குறிப்பிட்ட வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெறுவதில் இருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், அதி களவில் பாதிப்புக்குள்ளாகும் முதிய வர்கள் வயது அடிப்படையிலான தடைகளின்றி முக்கிய சுகாதார சேவையை அணுகவும், நிதிப் பாதுகாப்பு அளிக்கவும் உதவும். இந்த மாற்றத்தால் காப்பீட்டு சந்தைகளில் நுகர்வோருக்கு மேம்பட்ட சலுகைகள் மற்றும் புதிய சேவைகள் கொண்டுவரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பால் சிக்னா மருத்துவக் காப்பீட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசுன் சிக்தர் கூறுகையில், “வயது வரம்பு ரத்து செய்யப்பட்டது மூத்த குடிமக்களுக்கு முழுமையான மன அமைதியை அளிக்கும். சமீபத்தில் நாங்கள் கொண்டு வந்த ‘ப்ரைம் சீனியர்’ திட்டம் மூலம் 91ஆவது நாள் முதல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கவரேஜ் வழங்கி வருகிறோம்.
அதிகரிக்கும் முதியவர்களுக்கான தேவைகள் மற்றும் மருத்துவ பண வீக்கத்தை புரிந்து கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றத்தின் மூலம் வயதான வர்களின் உடல்நலம் மற்றும் நல வாழ்வை பாதுகாப்பதில் எங்களின் ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிசி பஜார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் வணிக தலைவர் சித் தார்த் சிங்கால் கூறுகையில், “வயது வரம்பு நீக்கப்பட்டாலும் காத்திருப்பு காலம் போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும். புதிய பாலிசி பெறும் நபர்கள் அறை வாடகை, சிகிச்சை மீதான கட்டுப்பாடுகள், பிற கட்டண கவரேஜுகளை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும்.
வயதானவர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமைகளை காப்பீடு நிறுவனங் கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

காப்பீட்டு திட்டத்தை
எவ்வாறு தேர்வு செய்வது?
ஒரு திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு காப்பீட்டு கட்டணத் தொகை, கவரேஜ் தொகை, காத்திருப்பு காலம், திட்டத்தில் பயன்பெறக் கூடிய நோய் கள் உள்ளிட்டவை தெளிவாக கவனிக்க வேண்டும்.
குறுகிய காத்திருப்பு காலங்கள் கொண்ட திட்டங்களை தேர்வு செய் வது மிக அவசியமான ஒன்று. அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் காத் திருப்பு காலங்கள் குறைவாக இருக்கும் திட்டங்களும் நிறுவனங்களால் வடி வமைக்கப்பட்டிருக்கும். அதையும் கருத் தில் கொள்ள வேண்டும்.

நோ-கிளைம் போனஸ் போன்ற பல் வேறு அம்சங்கள் கொண்ட திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இறுதி செய் வதற்கு முன்னதாக இணையத்தில் பிற நிறுவனங்களின் திட்டத்துடன் ஒப் பிட்டு பார்க்க வேண்டும்.
கூடுதல் கவரேஜ் தேவைப்படும் போது டாப்-அப் செய்து கொள்ளும் வகையிலான திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதியவர்கள் ஒரு ஆண்டுக்கான தொகையை முழுமை யாக செலுத்துவதில் சிரமம் இருப்பின், காலாண்டு அல்லது மாதாந்திர திட் டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
முதியவர்களுக்கான திட்டங்களில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக் கான சிகிச்சைகள், வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்கும் அம்சங்கள் மற்றும் நர்சிங் சேவைகள் போன்றவற்றை கருத் தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக