செவ்வாய், 21 மே, 2019

ஒருவருக்கு நாத்திகன் - மதச்சாராதவன் என சான்றளிக்கக் கூடாதது ஏன்? என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி?

குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் ராஜீவ் உபாத்யா (வயது 35) ஆட்டோ ரித்சா ஓட்டுநர், ஓர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசை, குஜராத் உயர்நீதிமன்றம், ஓர் இந்திய பிரஜைக்கு ‘நாத்திகன் - மதம் சாராதவன்’ என சான்றிதழ் வழங்கக் கூடாதது, ஏன்? என மாநில அரசை, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனுதாரர் உபாத்யாயா, இரண்டு வருடங்களுக்கு மேலாக, மாவட்ட ஆட்சியருக்கு, தன்னை இந்து மதத்திலிருந்து, மதமாற்ற சட்டத்தின்படி தன்னை ஓர் நாத்திகன் - மதம் சாராதவன் என சான்று அளிக்கும்படி விண்ணப்பித்திருந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர், உள்நோக்கத்துடன் 16.05.2017 அன்று அவருக்கு அனுமதி மறுத்ததுடன், நாட்டின் பிரஜைகள் தனது மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தனது மதத்திலிருந்து ‘நாத்திகன் - மதச்சார்பு இல்லாதவன்’ என சான்றளிக்க ‘முகாந்திரம் இல்லை’ என்று மனுவை நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள்

A.S. தவே, மற்றும் பாரேன் வைஸ்னவ் அடங்கிய அமர்வு நீதிமன்றம், மனு தொடர்பாக மாநில அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் விளக்கம் கேட்டுள்ளது.

மனுதாரர், தான் ஓர் கரோடா இந்து பிராமண சமூகத்தை என்றும், இந்த இனம் பட்டியல் இன பிரிவைச் சார்ந்தது என்றும், இதன் காரணமாக தன் வாழ்நாளில் சாதி துவேசத்தால் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகி துன்பப்பட்தாகவும் இதன் விளைவாகவே மதம் மாற்று சான்றிதழ் பெற விளைந்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, மனுதாரர் மத சுதந்திர சட்டத்தின்படி மதம் மாறிக் கொள்ள அனுமதித்து இருந்தும் ஓர் ஆணோ/ பெண்ணோ தன்னை மாற்றிக் கொள்ள முழு சுதந்திரம் உண்டு. எனவே, உயர்நீதிமன்றம் மாநில அரசை மனு தொடர்பாக தேவையான திருத்தம் செய்து தர ஆணையிட வேண்டும் என்கிறார். 

                             (Times of India 19.04.2019)

-  உண்மை இதழ், 1-15.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக