புதன், 6 பிப்ரவரி, 2019

சபாஷ் சரியான தீர்ப்பு: தேர்வுகளில் தவறான விடைகளுக்காக மதிப்பெண்களைக் குறைக்கக்கூடாது: நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி உத்தரவு கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வாதிட்ட வழக்கில் வெற்றி

சென்னை, பிப்.4 கலக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் நெல்சன் பிரபாகரன் கடந்த 2013ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப் படிப்புக்காக அய்.அய்.டி.யில்  நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தேர்வெழுதினார். முதன்மைத் தேர்வில் 50 மதிப்பெண் கள் பெற்றால் தேர்ச்சி என்கிற நிலையில், மாணவன் நெல்சன் பிரபாகரன் 47 மட் டுமே பெற்றதாக குறிப்பிட்டு, முதன் மைத் தேர்வில் பங்குபெற்ற நிலையில், அட்வான்ஸ்டு தேர்வில் அவரைத் தேர்வு செய்யவில்லை. அவர் முதன்மைத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

அதுகுறித்து நெல்சன் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் தான் எழுதிய எழுத்துத் தேர்வின் விடைத்தாளை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

நீதிபதிகே.கே.சசீதரன்30.5.2013 தேதியிட்ட உத்தரவில் தேர்வெழுதுவ தற்கு  மாணவன் நெல்சன் பிரபாகரனுக்கு  அனுமதி அளிக்கவில்லை.

2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை 2018இல் நீதிமன்றத்தில்வந்தது.அப்போது,மாண வர்நெல்சன்பிரபாகரனின்விடைத் தாள்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட் டன. அதன்படி, அம்மாணவன் சரியான விடைகளை எழுதி பெற்ற மதிப்பெண்கள் 72 என்றும், தவறான பதில்களுக்காக நெகட்டிவ் மதிப்பெண்கள் என்று தவறாக அளிக்கப்பட்ட பதில்களுக்கு குறைக்கப்பட்ட மதிப்பெண்களின் எண் ணிக்கை  25 என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் வாதிட்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி நெகட்டிவ்  மதிப் பெண்கள் முறை சட்டப்படி கிடையாது  என்றும், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள் ளிட்ட வளர்ந்த நாடுகளிலெல்லாம் இதுபோன்று நெகட்டிவ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதற்கான ஆதா ரங்கள் கிடையாது என்றும், இளம் மாணவர்களைஅடக்குமுறைக்குஉள் ளாக்கும்வகையில் இதுபோன்ற நெகட் டிவ்மதிப்பெண்முறை மிகவும்கொடுங் கோன்மையுடன் உள்ளது என்று குறிப் பிட்டார்.

சிபிஎஸ்இ தரப்பில் வழக்குரைஞர் ஜி.நாகராஜன் வழக்கில் நெகட்டிவ் மதிப் பெண் முறையை ஆதரித்து வாதிட்டார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பில் கூறுகையில், சிபிஎஸ்இ அல்லது தேர்வு நடத்துகின்ற எந்த அமைப்பாக இருந்தாலும் நெகட்டிவ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

- விடுதலை நாளேடு, 4.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக