ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

ஒரு குழந்தைக்கு பெற்றோர் மூவர்-முதல் சட்டம்

ஒரு குழந்தைக்கு பெற்றோர் மூவர் என்பதற்கான முதல் சட்டம், பிரிட்டனில் நிறைவேற்றம்


லண்டன், பிப் 8- ஒரு குழந்தை பிறப்பதில் தொடர்புடையவர்களாக உள்ள  பெற்றோர் என் றால் தாய்,தந்தை என இருவர் மட்டுமே கருதப் பட்டு வந்துள்ளனர். ஆனால் தற்போது கருத் தரிப்பில் மூன்றாவது நபரின் உதவியுடன்  பிறக்கும் பிள்ளைகளுக்கு மரபணுவில் தொடர் புள்ள வகையில் (டிஎன்ஏ) பெற்றோர் மூவர் என்று கூறும் சட்டத்தை முதல் முறையாக பிரிட்டன் நிறைவேற்றி உள்ளது. வெல்கம் டிரஸ்ட் எனும் மருத்துவ அறக் கட்டளையின் இயக்குநர் ஜெரெமி ஃபாரர் கூறும் போது, குழந்தையின் நலத்தில் அக்கறை கொண்டுள்ள குடும்பத் தினர் தெரிந்து கொள்ள வேண்டியது குழந்தையை பாதிக்கக்கூடிய கடும் நோய்குறித்து முடிவு செய்திட மைட்டோகாண் டிரியல் கொடை எனும் கரு வளர்ச்சிக்கான கொடையை சரியான வகையில் தேர்வு செய்ய ஏதுவாகும். ஆகவே, இந்த சட்டத்துக்கு ஆதரவளிப் பதன்மூலம் சரியான வகையில் தேர்வு செய் வதை வரவேற்கிறோம் என்றார். மருத்துவத்துறையினர் கூறும்போது, பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஏறக்குறைய 125 குழந் தைகள் குறைபாடுகளு டன் பிறப்பதாகக் கூறு கின்றனர்.
மதிப்பிட முடியாத தேர்வு
பிரிட்டனில் செயற் கைக் கருத்தரித்தல் மற் றும் கருவியல் நிபுணர்கள் அங்கீகரித்துள்ள முறை யில் ஆய்வு மய்யம் நியூ காஸ்ட்டல் நகரில் முதல் முறையாக அமைக்கப்பட உள்ளது.
பாரம்பர்ய நோய்களுக் கான நிறுவனங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சட்ட வரைவை ஆதரிக்கிறார்கள். மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் ஜான் டூக் என்பவர் கூறும்போது, மிகுந்த மகிழ்வடைந்துள்ளோம். இதுபோன்ற சிகிச்சை முறைகள்மூலமாக கரு விலேயே நோய் ஏற்படும் குழந்தைகளின் எண் ணிக்கையைக் குறைக்க ஏதுவாகும். பல குடும் பங்களின் மகிழ்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் வழிவகுக் கும். இன்று அளிக்கும் ஆதரவு வாக்கு என்பது பல ஆண்டுகளாக அறிவி யல் மற்றும் பொது மக்களின் வாதங்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது என்றார். நேர்மறை வாழ்வுக் கான நிறுவனத்தின் சார்பில் ஜோசப்பைன் குயூன்டாவாலி என்பவர் குழந்தைகளைப்பெறுவதில் உள்ள முறைகுறித்து கருத் தாகத் தெரிவிக்கும்போது, குணப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். மனிதவாழ் வின் ஆரம்பத்திலேயே அழிவு முறையைக் கையா ளக் கூடாது என்றார்.
ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் சார்பில் இச் சட்ட மாற்றத்தை எதிர்த் துக் கூறும்போது, கரு விலேயே மனித இனத்தை அழிப்பதற்கான செயலின் ஒரு பகுதியாக இது உள்ளது என்று கூறப் பட்டுள்ளது.

இங்கிலாந்து சர்ச் சார்பில் நெறிசார்ந்த கவலையாகக் கூறும் போது, போதுமான வகையில் ஆராயப்பட வில்லை என்று கூறப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக