வியாழன், 8 பிப்ரவரி, 2018

எந்தக் கடவுள் தனக்குக் கோயில் கட்ட சொன்னது? இடித்துத் தள்ளுக ஆக்கிரமிப்புக் கோயிலை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!



சென்னை, பிப்.8 தலைமைச் செயலகத்துக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை 15 நாட்களில் இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே வருவாய் துறைக்குச் சொந்தமான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை காலி செய்து அந்த இடத்தை ஒப்படைக்குமாறு கூறி கோயில் பூசா ரிக்கு புரசை வாக்கம் வட்டாட்சியர் தாக்கீது அனுப்பியிருந்தார்.

இந்த தாக்கீதை ரத்து செய் யக்கோரி கோயில் பூசாரியான குரு சாமி என்ற அப்பு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வில், “500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோயிலை கடந்த 50 ஆண்டு களாக பராமரித்து வருகிறேன். கோயி லுக்கு தினமும் பூஜைகள் உள்ளிட்ட அன்றாட பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்த கோயிலை அகற்ற பிறப்பிக்கப் பட்ட தாக்கீதை ரத்து செய்ய வேண் டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்யநாதன் ஆகியோர், “இந்த கோயில் வருவாய்த் துறைக்கு சொந்த மான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோயிலுக்குள் ஓம் சர்வ சக்தி சாய் ஆலயம் என்ற மற்றொரு ஆலயமும் உள்ளது. எந்தக் கடவுளும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனக்கு கோயில் கட்ட வேண்டுமென்று கேட்பதில்லை. உண்மையான பக்தி உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் கட்ட மாட்டார்கள். ஏனென் றால் அந்த கோயில் என்றாவது ஒரு நாள் இடிக்கப்படும் என்பது அவர் களுக்கு தெரியும். சாலை யோரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெரும் பாலான கோயில்கள் அந்த கோயில் நிர்வாகிகளின் சுயநலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்த கோயிலை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் இடித்து அப்புறப் படுத்த வேண்டும்’’ என்று உத்தர விட்டனர்.
- விடுதலை நாளேடு, 8.2.18

ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட பஞ்சாயத்தார்- ஜாதி, மத அமைப்பினர்- பெற்றோருக்குக்கூட உரிமையில்லை!

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க கருத்து



புதுடில்லி, பிப்.6 திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாதி ஆணவக் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து கூறியுள்ளது.

பெற்றோரே தங்கள் பிள்ளைகளை..

பெற்றோரின்சம்மதம் இல் லாமல் வேறு ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை திரு மணம் செய்து கொள்பவர்கள் கொலை செய்யப்படுவது, ஊரைவிட்டுஅடித்து விரட் டப்படுவது, ஒதுக்கி வைக்கப் படுவது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகரித்துள்ளன. முக்கியமாக,அரியானாஉள் ளிட்ட சில வடமாநிலங் களில்செயல்படும்காப்பு பஞ்சாயத்துகள்போன்ற அமைப் புகள் இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில இடங்களில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்து வந்த டில்லியைச் சேர்ந்த அங்கித் சக்சேனா (23) என்ற இளைஞர், அந்தப் பெண்ணின் தந்தை, தம்பி மற்றும் உறவினர்களால் கடந்த வாரம் சாலையில் நடந்து சென்றபோது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஜாதி, மத ஆண வக் கொலைகளைத் தடுத்து நிறுத் தக்கோரியும், காப்பு பஞ்சாயத்துகளுக்குத் தடை விதிக்க வேண்டியும் சக்தி வாஹினி என்ற சமூகநல அமைப்பு சார் பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி தீபக் மிஸ்ரா

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந் திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன்செய்துகொள் ளும் திருமணத்தில் மூன்றாவது நபர் யாரும் தலையிட உரிமையில்லை. அவர்கள் வாழ் விணையர்களின் பெற்றோராக இருந்தாலும் கூட தலையிட முடியாது. இந்த நிலையில், பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் ஜாதி, மத அமைப்பினருக்கு அதில் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களை யாரும் துன்புறுத்த முடியாது. அந்த உரிமை யாருக் கும் இல்லை. மனம் ஒத்த இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்தது கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத் துவது என்பது அடிப்படை உரிமை ஆகும் என்றார் அவர்.

ஜாதி,மதஆணவக்கொலை களைத்தடுத்துநிறுத்தஎடுக் கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து மத்திய அரசு உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூத்த காவல்துறைஅதிகாரிகள் அடங் கிய உயர்நிலைக் குழுவை அமைப்பது குறித்து விரைவில் உத்தரவிடப்படும் என்று நீதி பதிகள் கூறினர்.

இது தொடர்பாக உரிய பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்பிங்கிஆனந்த்தெரி வித்தார்.இதையடுத்துவழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட் டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ‘காப்பு பஞ்சாயத்து குறித்து நீதிமன்றத்துக்கு எந்தக் கவலையும் இல்லை. பாரம்பரியம்,குடும்பப் பெருமை குறித்து கட்டுரை எழுத நாங்கள் இங்கே அமர்ந்திருக்கவில்லை. மன விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு உரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதைப்பற்றிதான் நாங்கள் கவலைப்படுகிறோம்‘ என்றார்.

- விடுதலை நாளேடு, 6.2.18

எந்தக் கடவுள் தனக்குக் கோயில் கட்ட சொன்னது? இடித்துத் தள்ளுக ஆக்கிரமிப்புக் கோயிலை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!



சென்னை, பிப்.8 தலைமைச் செயலகத்துக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை 15 நாட்களில் இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே வருவாய் துறைக்குச் சொந்தமான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை காலி செய்து அந்த இடத்தை ஒப்படைக்குமாறு கூறி கோயில் பூசா ரிக்கு புரசை வாக்கம் வட்டாட்சியர் தாக்கீது அனுப்பியிருந்தார்.

இந்த தாக்கீதை ரத்து செய் யக்கோரி கோயில் பூசாரியான குரு சாமி என்ற அப்பு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வில், “500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோயிலை கடந்த 50 ஆண்டு களாக பராமரித்து வருகிறேன். கோயி லுக்கு தினமும் பூஜைகள் உள்ளிட்ட அன்றாட பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்த கோயிலை அகற்ற பிறப்பிக்கப் பட்ட தாக்கீதை ரத்து செய்ய வேண் டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்யநாதன் ஆகியோர், “இந்த கோயில் வருவாய்த் துறைக்கு சொந்த மான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோயிலுக்குள் ஓம் சர்வ சக்தி சாய் ஆலயம் என்ற மற்றொரு ஆலயமும் உள்ளது. எந்தக் கடவுளும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனக்கு கோயில் கட்ட வேண்டுமென்று கேட்பதில்லை. உண்மையான பக்தி உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் கட்ட மாட்டார்கள். ஏனென் றால் அந்த கோயில் என்றாவது ஒரு நாள் இடிக்கப்படும் என்பது அவர் களுக்கு தெரியும். சாலை யோரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெரும் பாலான கோயில்கள் அந்த கோயில் நிர்வாகிகளின் சுயநலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்த கோயிலை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் இடித்து அப்புறப் படுத்த வேண்டும்’’ என்று உத்தர விட்டனர்.
-விடுதலை நாளேடு, 8.2.18

ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட பஞ்சாயத்தார்- ஜாதி, மத அமைப்பினர்- பெற்றோருக்குக்கூட உரிமையில்லை!

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க கருத்து



புதுடில்லி, பிப்.6 திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன் செய்து கொள்ளும் திருமணத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாதி ஆணவக் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து கூறியுள்ளது.

பெற்றோரே தங்கள் பிள்ளைகளை..

பெற்றோரின்சம்மதம் இல் லாமல் வேறு ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களை திரு மணம் செய்து கொள்பவர்கள் கொலை செய்யப்படுவது, ஊரைவிட்டுஅடித்து விரட் டப்படுவது, ஒதுக்கி வைக்கப் படுவது போன்ற நிகழ்வுகள் இப்போது அதிகரித்துள்ளன. முக்கியமாக,அரியானாஉள் ளிட்ட சில வடமாநிலங் களில்செயல்படும்காப்பு பஞ்சாயத்துகள்போன்ற அமைப் புகள் இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சில இடங்களில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்து வந்த டில்லியைச் சேர்ந்த அங்கித் சக்சேனா (23) என்ற இளைஞர், அந்தப் பெண்ணின் தந்தை, தம்பி மற்றும் உறவினர்களால் கடந்த வாரம் சாலையில் நடந்து சென்றபோது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஜாதி, மத ஆண வக் கொலைகளைத் தடுத்து நிறுத் தக்கோரியும், காப்பு பஞ்சாயத்துகளுக்குத் தடை விதிக்க வேண்டியும் சக்தி வாஹினி என்ற சமூகநல அமைப்பு சார் பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி தீபக் மிஸ்ரா

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந் திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

திருமண வயதை எட்டிய ஆணும், பெண்ணும் சுய விருப்பத்துடன்செய்துகொள் ளும் திருமணத்தில் மூன்றாவது நபர் யாரும் தலையிட உரிமையில்லை. அவர்கள் வாழ் விணையர்களின் பெற்றோராக இருந்தாலும் கூட தலையிட முடியாது. இந்த நிலையில், பஞ்சாயத்து செய்பவர்கள் மற்றும் ஜாதி, மத அமைப்பினருக்கு அதில் தலையிட எவ்வித உரிமையும் கிடையாது. தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களை யாரும் துன்புறுத்த முடியாது. அந்த உரிமை யாருக் கும் இல்லை. மனம் ஒத்த இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்தது கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத் துவது என்பது அடிப்படை உரிமை ஆகும் என்றார் அவர்.

ஜாதி,மதஆணவக்கொலை களைத்தடுத்துநிறுத்தஎடுக் கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்து மத்திய அரசு உரிய விதிகளை வகுக்கவேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மூத்த காவல்துறைஅதிகாரிகள் அடங் கிய உயர்நிலைக் குழுவை அமைப்பது குறித்து விரைவில் உத்தரவிடப்படும் என்று நீதி பதிகள் கூறினர்.

இது தொடர்பாக உரிய பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்பிங்கிஆனந்த்தெரி வித்தார்.இதையடுத்துவழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட் டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், ‘காப்பு பஞ்சாயத்து குறித்து நீதிமன்றத்துக்கு எந்தக் கவலையும் இல்லை. பாரம்பரியம்,குடும்பப் பெருமை குறித்து கட்டுரை எழுத நாங்கள் இங்கே அமர்ந்திருக்கவில்லை. மன விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் முழு உரிமை இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதைப்பற்றிதான் நாங்கள் கவலைப்படுகிறோம்‘ என்றார்.

- விடுதலை நாளேடு, 6.2.18

திங்கள், 30 அக்டோபர், 2017

விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் பார்வையில்...




சமீப காலங்களில் பரஸ்பர புரித லின் பேரில் ஒருவருக்கு ஒருவர் விட் டுக் கொடுத்து வாழ வேண்டிய கண வன் மனைவி, விவாகரத்து என்ற மாயச் சூழலில் சிக்கி சிதைந்து விடு கின்றனர்.

இந்து திருமணச் சட்டப்பிரிவு 13 விவாகரத்து பெறுவதற்கென்று பல் வேறு விதிகளை வகுத்துள்ளது. இதன்படி தன்னுடைய வாழ்க்கைத் துணையின் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். உதாரணத்திற்கு ராஜா - மீனா (கற் பனை பெயர்கள்) திருமணமான ஆரம் பத்தில் இருந்தே எலியும் பூனையுமாக வாழ்ந்து வருகின்றனர். ராஜா தன் மனைவியை கடுமையான முறையில் கொடுமைப்படுத்துகின்றார். மீனா ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திடும் அள விற்கு மனதளவில் கொடுமைப்படுத் துகிறார். நன்றாக கவனியுங்கள். அவன் செய்யும் கொடுமைகள் எல்லாம் மீனாவை மனதளவில்தான் தாக்கு கின்றன. சரியான உணவுகூட தன் மனைவிக்கு கொடுப்பதில்லை. ஆனால் அவன் வெளி உலகத்தில் ஏழைக ளுக்கு உதவிடும் ஒரு சமூக சிந்தனை உள்ளவனாக ஒரு பசுத்தோல் போர்த் திய புலியாக விளங்குகின்றான். அவ னைச் சார்ந்த நண்பர்களோ, உறவினர் களோ ராஜா தன் மனைவியை கொடு மைப்படுத்துகிறான் என்பதை நிச்சயமாக நம்பிட மாட்டார்கள். இந்த நிலையில் மீனா தன் கணவனுக்கு எதிராக விவா கரத்து வழக்கு தொடர்கிறார்.

நீதிமன்றத்தில் அதற்குரிய காரணங் களை கணவன் செய்யும் குற்றங்களை நிரூபித்திட வேண்டும் அல்லவா? பல் வேறு விசாரணைகளுக்கு பிறகு மீனாவால் தன் கணவனுக்கு எதிரான குற்றச்சாட்டு களை நிரூபிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்து திருமணச்சட்டம் பிரிவு 13 விதிகளின்படி விவாகரத்து மனு நிராகரிக் கப்பட்டால் மீனா தன் கணவனுடன் வாழ்ந்தே ஆகவேண்டும். சட்டத்தின் பார்வையில் அந்த தீர்ப்பு நியாயமானதே. ஆனால் நடைமுறையில் மறுபடியும் மீனா சரியாக உணவுகூட அளித்திடாத அந்த இரக்கமற்ற மனித மிருகத்துடன் வாழ்ந்திட முடியுமா. இந்த பிரச்சினைக் குத்தான் உச்சநீதிமன்றம் RAJIV.R. HIRENATH VS. UMA (2000) 10 SCC 303 என்ற வழக்கில் கீழ்க்கண்டவாறு தீர்ப் பளித்துள்ளது. அதாவது இந்து திருமணச் சட்டம் 13 பிரிவின்படி விவாகரத்து கிடைக்கபெறாத கணவன் - மனைவி - இந்து திருமணச் சட்டம் 13தீ பிரிவின்படி பரஸ்பரசம் மதத்தின் பேரில் விவாகரத் துக்கு மனுச் செய்து விவாகரத்து பெற்றி டலாம். இதனால் நடைமுறைச் சிக்கல் கள் குழப்பங்கள் இல்லாத வகையில் இருவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என உச் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

- தகவல்: ‘லாயர்ஸ் லைன்’
-விடுதலை ஞாயிறு மலர், 28.10.17

வெள்ளி, 20 அக்டோபர், 2017

வழக்குரைஞர்கள் முன்பாக நடைபெறும் திருமணங்கள் சட்டப்படி செல்லும்


சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக்.20 வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்களின் முன்னிலையில் நடைபெறும் திருமணங்களும் சட்டப்படி செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் ஒருவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் வைத்து என்னிடம் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். அதை வைத்து ஒருவருடன் எனக்கு பதிவுத்திருமணம் நடந்துள்ளதாகக் கூறி போலியாக ஆவணங்களை தயாரித்துள்ளனர். எனவே எனக்கும் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது வழக்குத் தொடர்ந்த அந்த பெண், ‘வழக்குரைஞர் அலுவலகத்தில் தனது விருப்பப்படி தான் அந்த நபருடன் திருமணம் நடந்தது’ என முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்தார்.

இதனால் அப்பெண் தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அப்பெண்ணின் கணவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ‘இந்து திருமணச் சட்டத்தின்படி ஒரு ஆணும், பெண்ணும் இந்து பாரம்பரியத்தின் அடிப்படையில் 2 நபர்களின் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டாலும் அது சட்டப்படி செல்லும். அந்த 2 நபர்கள் நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு சிலராக இருக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. 

அந்த வேறு சிலரில் வழக்குரைஞர்களும் அடக்கம். அப்படியிருக்கும்போது வழக்குரைஞர் அலுவலகத்தில் வழக்குரைஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் செல்லாது என மனுதாரர் கோர முடியாது’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் வழக்குரைஞர் அலுவலகத்தில் வைத்து வழக்குரைஞர்கள் முன்னிலையில் மனுதாரருக்கும், எதிர் மனுதாரருக்கும் திருமணம் நடந்துள்ளது.

அதனடிப்படையில் பின்னர் அந்த திருமணம் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டுள்ளது. எனவே மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. திருமணம் நடந்ததாக வழக்குரைஞர் பதிவுத்துறை அலுவலகத்துக்கு கொடுத்த கடிதமும் சட்டப்படி செல்லும்’’ என உத்தரவிட்டனர்.

- விடுதலை நாளேடு,20.10.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

வாகன விபத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?



நம் நாட்டில் தினமும் சுமார் 400 நபர்கள் வாகன விபத்துகளினால் இறக்கின்றனர். 2015ஆம் ஆண்டு சுமார், 1,46133 நபர்கள் வாகன விபத்துகளினால் இறந்துவிட்டனர். இந்தப் புள்ளிவிபரம் நம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய அறிக்கையில் உள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1939 939 Motor Vehicles Act பல்வேறு மாற்றங்களுடன் 1988ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஜூலை 1989 முதல் அமலுக்கு வந்தது. இது 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 269 சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வழங்குதல் வாகனங்கள் பதிவு செய்தல், தகுதிச் சான்று வழங்குதல், இன்ஸூரன்ஸ், வாகன விபத்திற்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்குதல் போன்ற எல்லா அம்சங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கிட 1959ஆம் ஆண்டு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையோர் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவல்துறை, விசாரணை, நீதிமன்றம் என்று அலைய வேண்டி வரும் என்று தவறாக எண்ணி, முறையாக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் தகுந்த நிவாரணம் பெற்றிட சட்டம் எல்லா வழிகளிலும் நமக்குத் துணை புரிகிறது.

இதுபற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள டெல்லியில் நடந்த ஒரு வாகன விபத்தின் வழக்கு பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

காஜல் சர்மா என்பவர் தனது கணவருக்குச் சொந்தமான வாகனத்தை புதுடெல்லி பெருநகர ரெயில்வே நிலையம் அருகே அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி வந்து வாதிகள் அம்ரஜித் / நஹித் மாலிக் மற்றும் அப்ரஷ் அகமது ஆகியவர்கள் வந்த ஆம்னி வாகனத்தின்மேல் மோதி காயமடையச் செய்தார். இது பற்றிய வழக்கு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்திற்கு வந்தது.

பொதுவாக இதுபோன்ற வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய சட்டவிதிகள்: வாகனத்தை ஓட்டி வந்த நபர் அலட்சியமாக அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மோதியது பற்றி பாதிக்கப்பட்ட நபர் எந்த வகையிலும் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. ஒரு வேளை வாகனத்தை ஓட்டிவந்தவரும் நீதிமன்றத்தில் தான் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிடவில்லை என்று வாதாட முடியாது.

காவல்துறை முறையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் பிரதிவாதியின் குற்றத்தை நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற வழக்குகளைப் போல் குற்றம் நடந்ததா என்பதை முழுமையாக விசாரணை நடத்த வேண்டியத் தேவையும் இல்லை. இதுபற்றிய முழு விளக்கத்தை இன்ஸுரன்ஸ் நிறுவனம் (எதிர்) புஷ்பா ராணி என்ற வழக்கில் தெளிவான தீப்பினை வழங்கி உள்ளது.

அதாவது வாகன விபத்துகளின் வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை முழுமையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்ட பிறகு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரின் குற்றத்தை பாதிக்கப்-பட்டவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை.

நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் R.D. HATTAGADI Vs. PEST CONTROL (INDIA) PVT LTD. AR 1995/SC/755 என்ற வழக்கின் தீர்ப்பின் மூலம் விபத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த முறையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

வாகன விபத்தின் பாதிப்புகளை 2 வகையாகப் பிரிக்கலாம்:

பொருளாதார ரீதியான பாதிப்பு: (Pecuniary Damage): பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவுகள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை மாத வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவைகள் Pecuniary Damage என்று அழைக்கப்படும். Non Pecuniary Damage (மனரீதியான பாதிப்பு): மனரீதியான பாதிப்புகள், உடல் ஊனமடைவதால் ஏற்படும் பாதிப்புகள், அதாவது நடக்கமுடியாமை, கைகள் செயல்பட முடியாமை போன்ற பாதிப்புகள் Non Pecuniary Damage என்று அழைக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு பாதிக்கப்பட்டவருக்கு முறையான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதிபட அறிவுறுத்தி உள்ளது.

கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வழக்கில் மோட்டார் வாகன விபத்தில் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது.

அதாவது விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் 4 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 120 நாட்கள் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு ஓரளவிற்கு குணமடைந்து உள்ளார்.

மருத்துவமனையில் செலுத்திய தொகை ரூ.5242/_க்கு முறையாக ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார்.

தன்னுடைய ஓட்டுநர் பணி செய்திடாமல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தன்னுடைய மாத வருமானம் 20,000 ரூபாய் நஷ்டமடைந்துள்ளது என்று கூறியுள்ளார். அதற்குச் சரியான ஆதாரத்தை அவர் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, அவரது மாத வருமானத்தை 12,000 ரூபாயாகக் கணக்கிட்டு வாகன உரிமையாளர் பிரதிவாதி ரவி சர்மா விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் என்பவருக்கு 1,98,000/_ ரூபாய் நஷ்ட ஈடு வழங்கிட மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. வழக்குப் பதிவு செய்த நாளில் இருந்து மேற்கூறிய தொகையை 9 சதவீத வட்டியுடன் அளித்திட உத்தரவிட்டது.

நஷ்ட ஈட்டுத் தொகையை முறைப்படி கட்டத் தவறினால் 12 சதவிகித வட்டியும் சேர்த்து செலுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

SOUTH DISTRICT,
SAKET COURTS - NEW DELHI,
Suit No. 107/15

சில சமயங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிடும் வாகனங்கள் உண்டு அல்லவா!

அதுபோன்ற சமயங்களில் விபத்து பற்றி முழு விபரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்து நிச்சயமாக 25,000/_ நஷ்டஈடு பெற்றிடலாம். அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று தோன்றினால் உயர் நீதிமன்றத்தில் அதுபற்றி மறுஆய்வு மனுதாக்கல் செய்திடலாம்.
நன்றி: ‘லாயர்ஸ் லயன்’, ஜூலை 2017

 -உண்மை,16-31.7.17