வியாழன், 3 செப்டம்பர், 2015

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை

ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப்.3_- ஜாதி மறுப்பு திருமணம் செய் பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள் ளது.
கடலூர் மாவட்டம், முத்தாண்டிகுப்பம் பகுதி யைச் சேர்ந்த விஜய லெட்சுமி_- சிவராமகிருஷ் ணன் இருவரும் காத லித்து ஜாதி மறுப்பு திரு மணம் செய்து கொண் டனர். விஜயலெட்சுமி யின் உறவினர்கள், சிலர் இணையரை கொலை செய்யும் நோக்கோடு தேடி வந்தனர். இதுகுறித்து விஜயலெட்சுமி தனது கணவருடன் காவல்துறை யில் புகார் அளித்தார். அந்தப் புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கை யும் மேற்கொள்ளவில்லை.
இதற்கிடையே, விஜய லெட்சுமி_- சிவராமகிருஷ் ணன் இணையருக்கு பாது காப்பு அளித்த அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செய லாளர் சுகந்திக்கு தொடர்ந்து தொலைபேசி யில் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் 27.5.2015 அன்று காவல்துறை கூடுதல் இயக்குநர், மற்றும் கட லூர் மாவட்ட கண் காணிப்பாளர் ஆகியோரி டம் புகார் அளித்தார். சிவராமகிருஷ்ணனது உற வினர்களும் தொடர்ந்து மிரட்டப்பட்டனர்.
சிவராமகிருஷ்ணனது உறவினர் கடத்தி செல்லப் பட்டது குறித்து சிவ ராமகிருஷ்ணனது தாயார் புகார் கொடுத்திருந்தார். பின்னர் அவரை மிரட்டி புகாரை திரும்பப் பெறச் செய்தனர். சிவராமகிருஷ் ணனது தந்தை மாயவனை சிலர் தாக்கினர். நெய் வேலி காவல் நிலையத்தில் 20.8.2015 அன்று புகார் கொடுத்த பின்னரும் நடவடிக்கை மேற்கொள் ளப்படவில்லை. இத்த கைய கொலை மிரட்டல் தொடர் கதையாக இருந் தது.
இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், டிஜிபியிடம் புகார் அளித்தார். மேலும், மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல் வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இது தொடர்பாக விஜயலெட் சுமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தில், நீதிபதி பி.என்.பிர காஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட லூரில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் சி.ராம கிருஷ்ணன், பிற்படுத்தப் பட்ட சமூக பெண் விஜய லெட்சுமியை திருமணம் செய்ததாகவும், பெண் ணின் வீட்டார் இருவரை யும் பிரிக்க முயல்வதாக வும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாது காப்பளிப்பது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை என சுட்டிக்காட் டினார். இந்த வழக்கில், ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையரை மிரட் டுபவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நீதிபதி உத்தர விட்டார். வழக்கு தொடர் பாக, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட காவல் துறைக் கண் காணிப்பாளருக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
-விடுதலை,3.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக