புதன், 13 மார்ச், 2024

முசுலிமாக மாறுபவருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

 Published March 13, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 13- ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை என்றும், இவர்களுக்கும் முசுலிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் பேசினார்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இசுலாத்தை தழுவும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், ‘அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஜாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத் தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

வீடு கட்டும் முறைகளில் திருத்த சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு

Published March 13, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 13- தமிழ்நாட்டில் 750 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் வரை கட்டப்படும்போது அதற்கு பணி முடிப்பு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் கட்ட டத்தின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த கட் டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒருங்கி ணைந்த கட்டட விதிகளின் அடிப் படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வரு கின்றன.

மேலும், கட்டி முடிக்கப் பட்ட கட்டடத்துக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால்தான் மின் சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப் புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த விதிகளை திருத்த வேண் டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இது தவிர, அதிக உயரமில்லாத அடுக்கு மாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக உரிய விதி களில் திருத்தம் செய்யப் படும் என்று வீட்டு வசதித்துறை அமைச் சர் சு.முத்துசாமி தெரிவித்தி ருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒருங் கிணைந்த கட்டிட விதிகளில் திருத் தம் செய்து அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விதிகளில், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றி ருந்ததை, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எளிதாக குடிநீர் இணைப்பு: எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. இதன் மூலம், எளிதாக மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு களை பெற இயலும்.அதே போல், அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட் டுள்ளது. இதன் மூலம், அக்குடியிருப்புகளில் அமையும் வீடுகளில் தேவையான வசதிகளை மேற் கொள்ள இயலும்.

வெள்ளி, 8 மார்ச், 2024

ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் – ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்கள் – குடந்தை கருணா

 


விடுதலை நாளேடு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோ பாத்யாய் (வயது 62).

மே 2, 2018 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கோ பாத்யாயா ஜூலை 30, 2020-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நீதிபதி பதவியிலிருந்து நான் இன்று விலகி விட்டேன். வரும் 7-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். நான் பாஜகவில் இணைந்த பிறகு எந்த மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவில் தொடர்வேன். திரிணமூல் காங்கிரஸ் போன்ற குற்றவாளிகள் நிறைந்த கட்சிக்கு எதிராக பாஜக மட்டுமே போராடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந் திருக்கலாம். ஆனால், எனக்கு ஸநாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்கட்சிக்கு ஸநாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் போன்ற குடும்பம் ஆளும்கட்சியில் சேர்வதில் எந்தப் பயனும்இல்லை என்று நான் அறிந்துகொண்டேன்.

2009-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்ததுதான் 2024இல் திரிணமூல் காங்கிரஸுக்கு நடக்கப் போகிறது. மக்களுக்கான கட்சியாக பாஜக இருக்கிறது. பாஜகவின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கட்சியில் இணைய உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் சாசனத்தின் பிரிவு 217(1)(a)-ன்படி அவ ரது பதவி விலகல் உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது.
தனது நடவடிக்கைகள் மூலம் நீதிபதி கங்கோ பாத்யாயா, தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். சென்ற ஆண்டு ஏ.பி.பி ஆனந்தாவுக்கு அளித்த நேர்காணலைக் கவனத்தில் கொண்டு, மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையைப் பற்றி விவாதித்தது குறித்து, “நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டி கொடுப்பது நீதிபதியின் வேலையில்லை” என்று உச்சநீதிமன்றம் 2023இல் குட்டு வைத்துள்ளது.

நீதிபதிகளின் அறையிலிருந்து – நீதிபதிகள் நேராக அரசியல் அறைகளுக்குள் நுழைவது இந்தியா வில் தொடர்ச்சியான அம்சம் அல்ல. குறைந்தபட்சம் இதுவரை இல்லை. சில கவுரவமான விதிவிலக்குகள் உள்ளன, இதில் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் பதவிக்கு நியமனம் ஆன ஒரு நீதிபதி, ஓய்வு பெற்றவுடன் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒருவர். (அயோத்தியா வழக்கின் தீர்ப்பு அமர்வில் இருந்த நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்ளவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.)

அதிகாரத்துவத்தில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளவர்கள், அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் வேறு இடத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பு, குறிப்பாக அவர்களின் முடிவுகள் சாத்தியமான முதலாளிகளின் நலனைப் பாதிக்கக் கூடிய நிறுவனங்களில் பணியாற்ற சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்கிற விதி, நீதிபதிகளுக்கு பொருந்தாதா?
பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) மேனாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியிட்டது.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸில்’ முதன்முதலில் அறி விக்கப்பட்டபடி, மிஸ்ராவை பிரதமராக நியமித்தது TRAI சட்டம், 1997 இன் பிரிவு 5 (8) அய் மீறுவதாகும், இது (தலைவர் அல்லது வேறு எந்த உறுப்பினருக்கும்) ஓய்வுக்குப் பிந்தைய அரசாங்க வேலைகளைத் தடை செய்தது. உடனடியாக அவசர சட்டம், நாடாளு மன்றத்தில் வைத்து வேகமாக நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய மேனாள் சட்ட அமைச்சர் ஒருவர், “ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் ஓய்வுக்குப் பிந்தைய பணி நியமனங்களால் பாதிக்கப்படுகின்றன” என்று பதிவு செய்துள்ளார். ஆனால் நீதிபதிகள் ஓய்வுக்காக காத்திருக்காத காலகட்டத்தை நாம் தற்போது அடைந்துள்ளோம்.

இது போன்ற செயல்கள் ”இந்தியாவில் மட்டுமே நடக்கும், அதுவும் இந்தக் காலத்தில் மட்டுமே நடக்கும்.” என ‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது சரியே.

செவ்வாய், 5 மார்ச், 2024

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!


ஞாயிறு, 3 மார்ச், 2024

கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும் : நீதிபதிகள் உத்தரவு


திருமணமான பெண்ணுக்கு வாரிசு வேலை பெற தகுதி இல்லை என்ற உத்தரவு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு




Published March 20, 2023, விடுதலை நாளேடு

சென்னை,மார்ச் 20- -‘திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை’  என்ற தனி நீதிபதியின் உத்த ரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார், சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல்காரராக வேலை செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அவர் இறந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு சரஸ்வதி அதே ஆண்டு ஜூன் 5ஆம் தேதி மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், மீண்டும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி மனு கொடுத்தார். இந்த மனுவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி நிராக ரித்தார். வாரிசு வேலை கேட்டு 3 ஆண்டுக்குள் விண்ணப் பிக்கவில்லை என்று காரணமும் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சரஸ்வதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில், மனுதாரர் திருமணஆம் ஆனவர் என்பதால், அவர் வாரிசு வேலை பெற தகுதியானவர் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சரஸ்வதி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதி மன்றம் நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகி யோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அகிலேஷ் ஆஜராகி, கருணை அடிப் படையில் திருமணமான பெண்கள் வாரிசு வேலை பெற தகுதியில்லை என்று கருநாடகா மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை செல்லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் சத்துணவு உதவியாளர் மற்றும் சமையல்காரர் பதவிக்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற நிலை யில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஜி.நன்மாறன் ஆஜராகி, திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், விதி களின்படி வேலை கேட்டு 3 ஆண்டுக ளுக்குள் அவர் விண்ணப்பிக்க வில்லை என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருமணமான பெண்கள் வாரிசு வேலை கோர முடியாது என்று கருநாடகா அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய் துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மனுதாரர் திருமணமானவர் என்பதால், அவர் வாரிசு வேலை கேட்க முடியாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை ஏற்க முடியாது. தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 4 மாதத்துக்குள் வேலை வழங்க வேண்டும் என்று கூறினர்.


வியாழன், 22 பிப்ரவரி, 2024

அத்தை, மாமன் – மகன், மகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்ளக் கூடாது உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்

 



டேராடூன், பிப். 11- இந்தியா சுதந்திரம் அடைந் தது முதலே விவாதிக் கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்ட மாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப் பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றா கவே கருதுகிறார்கள். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவா கரத்து, சொத்துரிமை, குழந்தைக ளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர் பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது.

இதனிடையே, உத்த ராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீண்டும் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத் தப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுக ளுக்கு முன் உத்தராகண்ட் மாநி லத்தில் நடைபெற்ற முதல் அமைச் சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த தீர் மானிக்கப் பட்டது.

அதன் அடிப்படை யில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற மேனாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட் டது. இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப் பணி களை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதலமைச் சரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதா வுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதனையடுத்து, இந்த மசோ தாவை நிறைவேற் றுவதற்காக கடந்த 5 ஆம் தேதி உத்தராகண்ட் சிறப்பு சட்டமன்றக் கூட் டம் கூடியது. இதை யடுத்து, பொது சிவில் சட்ட மசோதாவை உத்த ராகண்ட் சட்டசபையில் முதலமைச் சர் புஷ்கர் சிங் தாமி 6-.2.-2024 அன்று தாக்கல் செய்தார்.
இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வரும் நிலையில், உத்தரா கண்ட் சட்ட சபை வளாகப் பகுதி யில் 144 தடை உத்தரவு பிறப் பிக் கப்பட்டும், வளா கத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டும் இந்த பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய் யப் பட்டது. மேலும், மசோதா மீது உத்தராகண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வந்தது.

3 நாள் விவாதத்துக்குப் பின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ.க அரசு உத்தராகண்ட் மாநி லத்தில் பொது சிவில் சட்ட மசோதா 7-2-2024 அன்று நிறை வேற்றியது. இதன் மூலம், நாட்டின் முதல் மாநிலமாக உத்தர காண்டில் பொது சிவில் சட்டம் நிறை வேற்றப் பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு உத்தராகண்ட் மாநிலத் தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மறு மணம், விவாகரத்து குறித்து பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது. திருமணங்களை போன்று, லிவ்-இன் உற வில் இருக்க விரும்புவோர், மாநில அரசிடம் பதிவு செய்து கொள்வது கட் டாயமாக்கப்பட்டு உள் ளது. அப்படி பதிவு செய்யத் தவறுவோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்/மகள் (அத்தை மகன்/மகள்) மற்றும் தாய் சகோ தரரின் மகன்/மகள் (தாய்மாமன் மகன்/மகள்) என்ற உறவு முறை யும் இடம்பெற்றுள்ளது.
இந்த உறவு முறையில் திருமணம் செய்வோர் மீது கடும் சட்ட நடவ டிக்கை மேற் கொள்ளப் படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.